Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24ஆம் திகதி அஜ்மலுக்கு அக்கினிப் பரீட்சை

Featured Replies



24ஆம் திகதி அஜ்மலுக்கு அக்கினிப் பரீட்சை

விதிமுறைகளுக்கு முரணாகப் பந்துவீசுகிறார் என்பது நிரூபிக்கப்பட்டதால் பந்துவீசுவதற்கு தடைசெய்யப்பட்டிருக்கும் பாகிஸ்தான் அணி வீரர் சயிட் அஜ்மல், வரும் 24ஆம் திகதி சென்னையில் நடைபெறவிருக்கும் ஐ.சி.சி.யின் பந்துவீச்சுப் பரிசோதனையில் பங்குகொள்கிறார்.

இந்தப் பரிசோதனைக்கு கடந்த டிசெம்பர் மாதம் 7ஆம் திகதி முதலில் நிர்ணயிக்கப்பட்டிருந்தபோதிலும் அஜ்மல் முழுமையாகத் தயாராகாததால், திகதியை பின்போடுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கோரிக்கை விடுத்திருந்தது. அதனையடுத்து ஐ.சி.சி.யினால் ஜனவரி 24 இற்கு பரிசோதனை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

 

இந்தப் பரிசோதனையில் அஜ்மல் தனது புதிய பந்துவீச்சுமுறை, விதிகளுக்கு அமைவானது என நிரூபிப்பாராகவிருந்தால் அவர்மீதான தடை நீக்கப்படும். அவ்வாறு அவர் பரிசோதனையில் வெற்றிபெறாத பட்சத்தில், தனது பந்துவீச்சு முறையை நிரூபிப்பதற்கு மேலும் ஒரு காலக்கெடு ஐ.சி.சி.யினால் வழங்கப்படும்.

 

அதேவேளை, 24ஆம் திகதி நடைபெறும் பரிசோதனையின் முடிவில் அஜ்மல் மீதான தடை நீக்கப்பட்டு, அவர் போட்டிகளில் பங்குபெற ஆரம்பித்த பின்னர், மறுபடியும் நடுவர்களால் அவரது பந்துவீச்சு முறையற்றதாக அடையாளம் காணப்படுமாயின் 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் வரை அவர் பந்துவீசுவதற்கு ஐ.சி.சி.யினால் தடை விதிக்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/137642#sthash.CApweHR4.dpuf

  • தொடங்கியவர்

பந்துவீச்சு பாணி குறித்த உத்­தி­யோ­கப்­பற்­றற்ற ஆய்வு சயீட் அஜ்­ம­லுக்கு சாதகம்
 

 

சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வை­யினால் சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­களில் பந்­து­வீ­சு­வ­தற்கு தடை­செய்­யப்­பட்­டுள்ள சயீத் அஜ்­மலின் பந்­து­வீச்­சுப்­பாணி நேர்த்­தி­யா­னது என உத்­தி­யோ­கப்­பற்­றற்ற பரி­சோ­த­னை­யின்­போது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.


இங்­கி­லாந்தின் எஜ்­பஸ்­டனின் அமைந்­துள்ள ஆய்­வு­கூ­டத்தில் பிரத்­தி­யேக முறையில் அஜ்­மலின் பந்­து­வீச்சு பரீட்­சிக்­கப்­பட்­டுள்­ளது. இந்தப் பரீட்­சிப்­பின்­போது அவ­ரது பந்­து­வீச்­சுப்­பாணி நேர்த்­தி­யா­னது என கண்­ட­றி­யப்­பட்­ட­தாக தகவல் வெளி­யா­கி­யுள்­ளது.

ஆனால், சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை­யினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்ள சென்னை ஆய்­வு­கூ­டத்தில் எதிர்­வரும் 24ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள பரி­சோ­த­னை­யின்­போதே அஜ்­மலின் பந்­து­வீச்­சுப்­பாணி நியா­ய­மா­னதா? தவ­றா­னதா? என்­பது உறு­தி­செய்­யப்­படும். 37 வய­தான அஜ்­மாலின் பந்­து­வீச்­சுப்­பாணி விதி­க­ளுக்கு மாறா­னது எனத் தெரி­வித்து சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை கடந்த செப்­டெம்பர் மாதம் அவ­ருக்கு தடை விதித்­தி­ருந்­தது.


இதனை அடுத்து அவுஸ்­தி­ரே­லி­யா­விலும் நியூஸிலாந்­திலும் பெப்­ர­வரி 14ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­க­ளுக்­கான குழாமில் இடம்­பெ­று­வதை அவர் தவிர்த்­துக்­கொண்­டி­ருந்தார்.

பாகிஸ்­தானின் முன்னாள் சுழல்­பந்­து­வீச்­சாளர் சக்லெய்ன் முஷ்­தாக்கின் கண்­கா­ணிப்பில் பந்­து­வீச்­சுப்­பா­ணியை திருத்­திக்­கொள்­வ­தற்­கான சீர­மைப்பு பயிற்­சி­களில் ஈடு­பட்ட பின்­னரே அவர் உலகக் கிண்ணப் போட்­டி­களைத் தவிர்ப்­ப­தற்கு தீர்­மா­னித்தார்.


''பிரத்­தி­யேக ஆய்­வின்­போது எனது பந்­து­வீச்­சுப்­பாணி சரி­யென்­ப­தற்­கான ஆதா­ரத்தைப் பெற்­றுக்­கொண்டேன். எஜ்­பஸ்­டனின் இந்த ஆய்வு நடத்­தப்­பட்­டது. ரூஸ்ரா உட்­பட எனது சகல பந்­து­வீச்­சு­களும் 15 பாகை விதி­க­ளுக்கு உட்­பட்­ட­தாக அமைந்­தி­ருந்­தது'' என அஜ்மால் குறிப்­பிட்டார்.

''எனது பந்­து­வீச்­சுப்­பா­ணியில் நான் முழு­மை­யான நம்­பிக்கை கொள்­ள­வேண்டும். தடைக்கு முன்னர் நான் எவ்­வாறு இருந்­தேனோ அதே­போன்று சிறப்­பாக பந்­து­வீச வேண்டும். எனவே என்னால் உலகக் கிண்ணப் போட்­டி­களில் விளை­யா­ட­மு­டி­யுமா இல்­லையா என்­பதை பொறுத்­தி­ருந்து பார்க்க வேண்டும்'' என்றார்.

''நான் எனது நாட்டிற்காகவும் அணிக்காவும் திறமையாக செயற்படவேண்டும்'' என அவர் கூறினார். அஜ்மாலின் பந்துவீச்சுப்பாணி கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட போது அவரது முழங்கை 43 பாகை வரை வளைந்தமை கண்டறியப்பட்டிருந்தது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=8524#sthash.3yzsBkfx.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

அஜ்மல் திரும்பவும் தடை நீங்கி சர்வதேச தரத்தில் விளையாட வரவேண்டும்

அஜ்மல் இங்கிலாந்தில் சக்லைன் முஸ்தாக் அவர்களிடம் பயிற்சி பெறும் போது எனக்கும் எனது மகனுக்கும் இவர்களை சந்தித்து, இவர்களுடன் எனது மகனுக்கு போட்டோ எடுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இவர் பந்து வீசும் போது முன் இடது காலை கொஞ்சம் அகட்டி வைக்கிறார். ஆதலால் அவரது நெஞ்சு முன்னுக்கு வந்து இவர் பந்து வீசுவதற்கு தேவையான முழு பலமும் கிடைக்காத பட்சத்தில் 15 பாகைக்கு மேல் கையை மடக்குகிறார் (doosara வில் மட்டுமே ) என்று சொன்னார்கள் . இப்போது இதை திருத்தி விட்டார் என்று நினைகின்றேன்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

மீண்டும் பந்துவீச முடியும்: அஜ்மல்
25-01-2015

 

 

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் சைட் அஜ்மல், நேற்று இந்தியாவின் சென்னையில் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் பந்து வீச்சு சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த சோதனையை தொடர்ந்து தனது தூஸ்த்ரா பந்துவீச்சு அடங்கலாக அனைத்துவித பந்துவீச்சுகளும் கடுப்பாட்டுக்குள் இருப்பதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளார். எனவே, தான் மீள பந்துவீச முடியும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுளார். தான் நம்பிக்கையோடு இருப்பதாகவும் முடிவு அவர்களின் கைகளிலேயே இருப்பதாகவும் சைட் அஜ்மல் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

சைட் அஜ்மலின் பந்துவீச்சு விதிமுறைகளை தாண்டி இருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் எந்திர உயிரியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதன் படி விதிமுறைகளை தாண்டி அவர் பந்துவீசுவது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக சர்வதேசப் போட்டிகளில் இவர் பந்துவீச முடியாமல் தடைசெய்யப்பட்டார். பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் உதவியுடன் பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் சக்லைன் முஸ்டாக்கின் உதவியுடன் தனது பந்துவீச்சில் மாற்றங்களை செய்து கொண்டார் அஜ்மல். இதற்கு முதல் ஒருதடவை சர்வதேசக் கிரிக்கெட் சபையிடம் பரிசோதனைக்கு கோரி பின்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அந்த திகதியை பிற்போட்டுக் கொண்டது.

 

இந்த நிலையில் நேற்று சோதனை செய்துகொண்ட அஜ்மலின் பந்துவீச்சு மாற்றங்கள் அடைந்து 15 பகை கோணத்திற்கு உட்பட்டு இருந்தால், அவர் மீண்டும் பந்துவீச அனுமதி வழங்கப்படும். தவறும் பட்சத்தில் ஒரு வருடம் தொடக்கம் இரண்டு வருடங்கள் வரை அஜ்மல் பந்துவீச முடியாத நிலை ஏற்படும். அவ்வாறு நடைபெற்றால் 37 வயதான அஜ்மலின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவடையும் என்ற எதிர்பார்ப்புகளும் உள்ளன.

 

- See more at: http://www.tamilmirror.lk/138441#sthash.bm5woMnb.dpuf

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

சயீத் அஜ்மல் மீதான பந்துவீச்சு தடை நீக்கம்: சர்வதேச போட்டிகளில் வீச ஐசிசி அனுமதி
 

 

த்ரோ செய்வதாக தடை செய்யப்பட்ட பாகிஸ்தான் ஆஃப் ஸ்பின்னர் சயீத் அஜ்மல் தனது பந்துவீச்சை சரி செய்துகொண்டதால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வீச ஐசிசி அனுமதி அளித்துள்ளது.

அதே போல் வங்கதேச ஸ்பின்னர் சொஹாக் காஜி என்பவருக்கும் தடை நீங்கியது.

சயீத் அஜ்மல் மற்றும் சோஹாக் காஜி பல பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதில் அவர்களது முழங்கை மடங்குவது ஐசிசி கட்டுப்பாடான 15 டிகிரிக்கும் குறைவாக இருந்தது.

இதனையடுத்து அவர்கள் இருவரது மீதான தடை நீக்கப்பட்டது.

 

ஆனாலும், மீண்டும் அவர்கள் போட்டிகளில் பந்துவீசும் போது 15 டிகிரிக்கு மேல் முழங்கை மடங்குவதாக நடுவர்கள் உணர்ந்தால் உடனடியாக புகார் அளிக்கலாம் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

சயீத் அஜ்மல் மற்றும் சோஹாக் காஜி ஆகியோர் மீது நடத்தப்பட்ட பந்துவீச்சு சோதனைகள் அடங்கிய படங்கள், வீடியோக்கள் நடுவர்களிடம் அளிக்கப்பட்டுள்ளன. இதில் அவரது மாறிய பந்துவீச்சு ஆக்சன் இடம்பெற்றுள்ளது.

 

இருவரது பந்துவீச்சும் சென்னையில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக் கழகத்தில் இறுதி சோதனைக்குட்படுத்தப்பட்டது.

முன்னதாக சயீத் அஜ்மல் வீசிய அனைத்துப் பந்துகளும் வேறுபாடின்றி த்ரோ என்று ஐசிசி சோதனைகளில் தெரியவந்தது. 42 டிகிரி முழங்கையை மடக்கி அவர் அனைத்து பந்துகளையும் வீசினார்.

 

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சயீத் அஜ்மல் உலகக்கோப்பை அணியின் தேர்வுகளிலிருந்து விலக்கப்பட்டார். காரணம் பாகிஸ்தான் அவரது கிரிக்கெட் வாழ்க்கை மீது ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அஜ்மலின் பந்துவீச்சை சரி செய்ததில் முன்னாள் பாக். ஸ்பின் மேதை சக்லைன் முஷ்டாக்கின் பங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A-%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF/article6868881.ece

  • தொடங்கியவர்

சர்வதேச போட்டிகளில் பந்து வீச சயிட் அஜ்மல்,சொஹாக் காஸிக்கு ஐ.சி.சி. அனுமதி
 

 

பந்து வீச தடை செய்யப்பட்ட பாகிஸ்தான் ஓப் ஸ்பின்னர் சயீட் அஜ்மல் தனது பந்துவீச்சுப் பணியை சரி செய்துகொண்டதால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீச ஐ.சி.சி. அனுமதியளித்துள்ளதுடன்  பங்களாதேஷ் சுழற்பந்து வீச்சாளர்  சொஹாக் காஸிக்கும் தடைநீக்கியுள்ளது.

பாகிஸ்தானின் சயீட் அஜ்மல் மற்றும் பங்களாதேஷின் சோஹாக் காஸி  ஆகியோர் பல பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதில் அவர்களது முழங்கை மடங்குவது ஐ.சி.சி. விதிமுறையின் படி 15 பாகைக்கும் குறைவாக இருந்தது. இதனையடுத்து அவர்கள் இருவர் மீதான தடை நீக்கப்பட்டது.

ஆனாலும், மீண்டும் அவர்கள் போட்டிகளில் பந்துவீசும் போது 15 பாகைக்கு மேல் முழங்கை மடங்குவதாக நடுவர்கள் உணர்ந்தால் உடனடியாக முறையிடலாம் என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

 

 

சயீட் அஜ்மல் மற்றும் சோஹாக் காஸி ஆகியோர் மீது நடத்தப்பட்ட பந்துவீச்சு சோதனைகள் அடங்கிய புகைப்படங்கள், வீடியோக்கள் நடுவர்களிடம் அளிக்கப்பட்டுள்ளன. இதில் அவர்களிருவரினதும் புதிய பந்துவீச்சுப் பாணி இடம்பெற்றுள்ளது.

இருவரது பந்துவீச்சும் சென்னையில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக் கழகத்தில் இறுதிச் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

முதலிர் சயீட் அஜ்மல் வீசிய அனைத்துப் பந்துகளும் வேறுபாடின்றி த்ரோ செய்வதாக ஐ.சி.சி. சோதனைகளில் தெரியவந்தது. 42 பாகை முழங்கையை மடக்கி அவர் அனைத்து பந்துகளையும் வீசினார்.

 

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சயீட் அஜ்மல் உலகக் கிண்ண அணியின் தேர்வுகளிலிருந்து விலக்கப்பட்டார்.

இதேவேளை, அஜ்மலின் பந்துவீச்சுப் பாணியை சரி செய்ததில் முன்னாள் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் சக்லைன் முஷ்டாக்கின் பங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/articles/2015/02/07/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.