Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1975 முதல் உலகக் கோப்பை: கவாஸ்கரின் காலடியில் கொட்டப்பட்ட உணவு

Featured Replies

1975 முதல் உலகக் கோப்பை: கவாஸ்கரின் காலடியில் கொட்டப்பட்ட உணவு
 

முதல் உலகக் கோப்பைப் போட்டித் தொடர் ஒரு விதத்தில் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு திருப்புமுனை என்று சொல்ல வேண்டும். கிரிக்கெட்டை மக்களிடையே பரவச் செய்வதில் ஒரு நாள் ஆட்டங்கள் பெரும் பங்கு வகித்தன என்றால் அந்த ஒரு நாள் ஆட்டங்களுக்கு வரவேற்பைப் பெற்றுத் தந்தது 1975-ல் நடந்த முதல் உலகக் கோப்பைப் போட்டித் தொடர்தான்.

j0idc2.jpg

இந்தத் தொடருக்கு முன்பாக 18 ஒருநாள் சர்வதேச போட்டிகளே நடைபெற்றிருந்தன. ஒரு நாள் கிரிக்கெட் என்ற அம்சமே புதுமையாகப் பார்க்கப்பட்டது.

ஆட்டம் என்னமோ அதே பாணியில்தான் நடந்தது. கிட்டத்தட்ட டெஸ்ட் அணியே ஒரு நாள் போட்டியிலும் ஆடியது. டெஸ்ட் பாணியிலேயே இதுவும் ஆடப்பட்டது. போட்டியில் ஒவ்வொரு அணிக்கும் தலா 60 ஓவர்கள், தொழில்நுட்பத்தின் பங்கு எதுவும் இல்லாத போட்டிகள் என்று முயலும் ஆமையும் கலந்த ஆட்டங்களாகத்தான் தொடக்கத்தில் அரங்கேறின. குறிப்பாக இந்தியா இத்தகைய வடிவத்திற்குத் தயாராகாத அணியாகவே அப்போது இருந்தது.

டெஸ்ட் கிரிக்கெட் அதன் தரத்தில் உச்சத்தில் இருந்த காலம். மட்டையாளர்கள் ஹெல்மெட் அணியாமல் உலகின் தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டார்கள். மேற்கிந்தியத் தீவுகளின் ஆன்டி ராபர்ட்ஸ், ஜூலியன் கீத்பாய்ஸ், ஹோல்டர், ஆஸ்திரேலியாவின் டெனிஸ் லில்லி, ஜெஃப்தாம்சன் ஆகிய வேகப் பந்து வீச்சாளர்கள் தங்களது ஆக்ரோஷத்தைக் காட்டி மட்டையாளர்களை மிரட்டிய காலகட்டம் அது.

 

யார் பெரியவர்?

மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து முன்னணியிலும் அடுத்த வரிசையில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளும் அதற்கு அடுத்த வரிசையில் இந்தியா, இலங்கை, கிழக்கு ஆப்பிரிக்கா போன்ற அணிகளும் இருந்தன. மே.இ. தீவுகள், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளில் புகழ் பெற்ற வீரர்கள் இருந்தனர். நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளில் பிரபலமான வீரர்கள் இருந்தனர்.

இந்தியாவை எடுத்துக் கொண்டால் சுனில் கவாஸ்கர், ஜி.ஆர்.விஸ்வநாத் தவிர உலக அரங்கில் மட்டையாளர்கள் பெயர் எடுக்கவில்லை. ஆனால் இந்திய சுழல் பந்து வீச்சு உலகப் பிரசித்தி பெற்றது. மே.இ.தீவுகளின் மாபெரும் ஆட்டக்காரரான கேரி சோபர்ஸ் புகழ்ந்த வெங்கட்ராகவன் தலைமையில் இந்தியா 1975 உலகக் கோப்பை போட்டியில் அடியெடுத்து வைத்தது.

 

ஆனாலும், இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் ஏதோ மே.இ.தீவுகள், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையேயான போட்டியாகவே கருதப்பட்டது. இதற்குக் காரணம் மற்ற அணிகளின் பலவீனம். மூன்று அணிகளுக்குள் நடக்கும் பலப் பரீட்சையை உலகக் கோப்பை என்று ஏன் சொல்ல வேண்டும் என்ற கேள்வி எழுந்தாலும் புதிய தொடர் நடைபெற்றதால் இதன் மீது கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் திரும்பியது.

மிகவும் பெருந்தன்மையாக புருடென்ஷியல் காப்பீட்டு நிறுவனம் இந்த உலகக் கோப்பையை ஸ்பான்ஸராக இருந்து நடத்தியது. அப்போதே 1,00,000 பவுண்டுகள் தொகையை அளித்தது. விளையாட இலங்கை, கிழக்கு ஆப்பிரிக்க அணியை அழைத்தார்கள். கிழக்கு ஆப்பிரிக்கா என்பது கென்யா, தான்சானியா, உகாண்டா மற்றும் ஜாம்பியா நாடுகளின் கிளப் கிரிக்கெட் வீரர்கள் அடங்கிய அணி.

 

இந்தியாவின் மோசமான தொடக்கம்

ஜூன் 7-ம் தேதி இந்தியாவும் இங்கிலாந்தும் லார்ட்ஸ் மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. இங்கிலாந்தின் கேப்டன் மைக் டென்னஸ். இந்தியாவுக்கு வெங்கட்ராகவன்.

இந்திய அணியில் 4 ஸ்விங் பவுலர்கள்: மதன்லால், அமர்நாத், அபிட் அலி, கர்சன் காவ்ரி (இவர் வேகம், ஸ்பின் இரண்டும் வீசுவார்). 2 ஸ்பின்னர்கள்: வெங்கட்ராகவன், ஏக்நாத் சோல்கர். பேட்டிங்கில் கவாஸ்கர், சோல்கர், கெய்க்வாட், விஸ்வநாத், பிரிஜேஷ் படேல், அமர்நாத். விக்கெட் கீப்பர் பரூக் இன்ஜினியரும் நன்கு ஆடக்கூடியவர்.

 

இங்கிலாந்து 60 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்தது. டென்னிஸ் அமிஸ் 137 ரன்கள் எடுத்தார். இந்திய பவுலர்களில் வெங்கட் ராகவன் மட்டுமே சிக்கனமாக வீசி 12 ஓவர்களில் 41 ரன்களை விட்டுக் கொடுத்தார். கர்சன் காவ்ரி 11 ஓவர்களில் 83 ரன்களை வாரி வழங்கினார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன் கொடுத்ததற்கான சாதனையாக இது நீண்ட காலத்திற்கு நிலைத்திருந்தது.

335 ரன் என்னும் இலக்கை எதிர்கொண்டு இந்தியா களமிறங்கியது. மாபெரும் மட்டையாளரான சுனில் கவாஸ்கர் மீது பெரிய எதிர்பார்ப்பு. தொடக்கத்தில் கிறிஸ் ஓல்ட், ஜான் ஸ்னோ வீசிய டொக்…டொக்… என்று தடுத்தாடினார். புதிய பந்து என்பதால் நிதானமாக ஆடுகிறார் என்றே பலரும் நினைத்தனர். ஆனால் அவர் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் போலவே ஆடினார். இன்னும் சொல்லப்போனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட அவர் கொஞ்சம் வேகமாக ரன்களை எடுத்திருப்பார். 174 பந்துகளைச் சந்தித்து 36 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதில் ஒரே ஒரு பவுண்டரி. ஜி.ஆர்.விஸ்வநாத் 59 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். கவாஸ்கர் அன்று ஆடிய ஆட்டம் இன்று வரையிலும் புரியாத புதிர்தான். 60 ஓவர்களில் 132/3 எடுத்த இந்தியா முதல் உலகக் கோப்பையின் முதல் போட்டியில் மோசமாகத் தோற்றது.

 

ரசிகர்கள் ஆத்திரம்

போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது மைதானத்தில் இந்திய ரசிகர்கள் இறங்கி கவாஸ்கரைக் கேலி செய்தார்கள். ஒரு ரசிகர் ஆத்திரத்துடன் கவாஸ்கரின் காலடியில் தனது மதிய உணவைக் கொட்டினார் என்று செய்தி வந்தது. வெங்கட்ராகவனுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது அவரை இதுபோல ஆடச் செய்தது என்ற விமர்சனங்களும் எழுந்தன. கவாஸ்கரே பின்னர் தனது அந்த ஆட்டத்தைத் தன் வாழ்நாளின் மோசமான ஆட்டம் என்று கூறியது தனிக் கதை.

 

அடுத்தடுத்த போட்டிகளில் இவ்வளவு மோசமாக இந்தியா ஆடவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா 230 ரன்கள் எடுத்தது. அபித் அலி 98 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 70 ரன்களை அதிகபட்சமாக எடுத்தார். தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 58.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. பிஷன் பேடி 12 ஓவர்களில் 6 மெய்டன்களுடன் 28 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் எனச் சிக்கனம் காட்டினார். அபித் அலி பந்துவீச்சிலும் (12 ஓவர் 2 மெய்டன்கள் 35 ரன்கள் 2 விக்கெட்) திறமையை வெளிப்படுத்தினார்.

2d8hlhi.jpg

(1975-ன் கதை தொடரும்)

http://tamil.thehindu.com/sports/1975-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81/article6797328.ece

  • தொடங்கியவர்

1975 முதல் உலகக்கோப்பை - வலியவர்களின் ஆட்டம்
 

 

இந்தியாவும் இங்கிலாந்தும் மோதிய அதே தினத்தில் ஆஸ்திரேலியா இயன் சாப்பல் தலைமையில் ஆசிப் இக்பால் தலைமையிலான பாகிஸ் தானை 73 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அப்போதெல்லாம் பாகிஸ்தானின் மிகப் பெரிய வீரர், அந்த அணியின் தொடக்க வீரர் மஜீத் கான். 279 ரன்கள் இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் 205 ரன்களுக்குச் சுருண்டது. மஜீத் கான் 76 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஆசிப் இக்பால் 53, வாசிம் ராஜா 31. கடைசி 6 விக்கெட்டுகளை 25 ரன்களில் பறிகொடுத்து பாகிஸ்தான் 205 ரன்களுக்கு சுருண்டது.

தொடக்க ஆட்டங்களில் இங்கிலாந்து எளிதில் வென்றது. நியூசிலாந்துக்கு எதிரான ஒரு போட்டி சற்றே இழுபறியாக அமைந்தாலும், இங்கிலாந்து 80 ரன் வித்தியாசத்தில் வென்றது.

 

 

சுதாரித்த மே.இ. தீவுகள்

மே.இ. தீவுகள் அணி வலு வானது. கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த அணி, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் திணறியது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் மஜித் கான் (60), முஷ்டாக் மொகமது (55) வாசிம் ராஜா (58) ஜாகீர் அப்பாஸ் (31), ஜாவேத் மியாண்டட் (24) ஆகியோரது பங்களிப்பினால் 266 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய மே.இ. தீவுகளை சர்பராஸ் நவாஸ் தனது வேகம் மற்றும் ஸ்விங்கினால் 36/3 என்று திணறவைத்தார். பிரெடிரெக்ஸ், கார்டன் கிரீனிட்ஜ், ஆல்வின் காளிச்சரண் ஆகியோரைச் சொற்ப ரன்களில் வெளியேற்றினார். பாகிஸ்தானின் சிறந்த விக்கெட் கீப்பர் வாசிம் பாரி 2 கேட்ச்களை அபாரமாகப் பிடித்திருந்தார்.

ஆனால் ரோஹன் கன்ஹாய் (24), கிளைவ் லாய்ட் (52) இணைந்து ஸ்கோரை 86 வரை கொண்டு சென்றனர். பகுதி நேர பவுலரான ஜாவேத் மியாண்டட் பந்தில் கிளைவ் லாய்ட் வெளியேற, அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய, மே.இ.தீவுகள் 166/8 என்று தோல்வி முகம் காட்டியது.

விக்கெட் கீப்பர் டெரிக் முர்ரே, வான்பன் ஹோல்டர் இணைந்து 37 ரன்களைச் சேர்க்க ஸ்கோர் 203/9 என்று ஆனது. டெரிக் முர்ரேயுடன் இணைந்த ஆண்டி ராபர்ட்ஸ் வெற்றிக்கு இட்டுச் சென்றனர். ராபர்ட்ஸ் 24 ரன்கள் எடுத்தும் முர்ரே 61 ரன்கள் எடுத்தும் நாட் அவுட்டாகத் திகழ்ந்தனர். உலக சாம்பியனை வீழ்த்தும் அரிய வாய்ப்பை பாகிஸ்தான் கோட்டைவிட்டது.

 

 

அதன் பிறகு மே.இ.தீவுகள் அதிரடியாக முன்னேறியது. ஆஸ்தி ரேலியாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஊதித் தள்ளியது. ஆல்வின் காளிச்சரண் 78 ரன்களை விளாசினார். டெனிஸ் லில்லியை அவர் அன்று ‘கவனித்த’ விதம் கிரிக்கெட் அரங்கில் மகிழ்ச்சிகரமான ஒன்றாகப் பார்க்கப்பட்டது. லில்லி பந்துகளை ஒன்றுமில்லாமல் செய்த ஒரே மட்டையாளர் (அப்போதைக்கு) ஆல்வின் காளிச்சரண்தான் என்ற பெருமையையும் அவருக்குப் பெற்றுத்தந்தது.

 

 

அரையிறுதிப் போட்டிகள்

ஒரு அரையிறுதியில் இங்கி லாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோத, மற்றொரு அரையிறுதியில் மே.இ.தீவுகள், நியூசிலாந்தை எதிர்கொண்டது.

ஹெடிங்லியில் ஜூன் 18-ம் தேதி நடைபெற்ற முதல் உலகக் கோப்பை முதல் அரையிறுதி ஆட்டத்தின் தரம் அபாரம். ஹெடிங்லீயில் பசுந்தரையில், மேகமூட்டமான வானிலையில் பந்துகள் தாறுமாறாக ஸ்விங் ஆகிக்கொண்டிருந்தன. டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் இயன் சாப்பல் யோசிக்காமல் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். அணியில் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்ட கேரி கில்மர் என்ற ஸ்விங் பவுலர் அன்று இங்கிலாந்து அணிக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். டெனிஸ் லில்லியுடன் தொடங்கிய அவர் 12 ஓவர்களை இடைவிடாமல் வீசினார். 14 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை அவர் கைப்பற்ற, இங்கிலாந்து 36.2 ஓவர்களில் 93 ரன்களில் சுருண்டது.

 

 

ஆஸ்திரேலியாவின் அதிர்ச்சி

கிரெக் சாப்பல், அல்லது இயன் சாப்பல் ஒரு காலில் பேடைக் கட்டிக் கட்டிகொண்டு வந்து இந்த இலக்கை ஊதி விடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்தது வேறு.

டர்னர், மெக்காஸ்கர், இயன் சாப்பல், கிரெக் சாப்பல், எட்வர்ட்ஸ், ராட்னி மார்ஷ் ஆகியோர் ஜான் ஸ்னோ, கிறிஸ் ஓல்ட் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களிடம் வீழ்ந்து நடையைக் கட்ட, ஆஸ்திரேலியா 39/6 எனத் தடுமாறியது. 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இங்கிலாந்தை நொறுக்கிய கேரி கில்மர் 28 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்தும், வால்டர்ஸ் 20 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருக்க 29 ஒவரில் ஆஸ்திரேலியா 94 ரன்கள் எடுத்து முதல் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

 

 

2-வது அரையிறுதி

இந்த 2-வது அரையிறுதி ஜூன் 18-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற கிளைவ் லாய்ட் முதலில் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். மேற்கிந்திய தீவுகளின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜூலியன் இரு பக்கமும் ஸ்விங் செய்தார். ஹோல்டர், ராபர்ட்ஸ், கீத் பாய்ஸ் ஆகியோர் அவ்வப்போது பவுன்சர்களை வீச 2 சதங்களைக் கண்டிருந்த நியூசி. கேப்டன் கிளென் டர்னர் அன்று ஒன்றும் செய்ய முடியாமல் திணறினார். ஆனாலும் அவரும் ஜெஃப் ஹவர்த் என்ற வீரரும் உணவு இடைவேளை வரை சேதமில்லாமல் 29 ஓவர்களில் 92/1 என்று சற்றே பலமான நிலையில் இருந்தனர்.

 

 

ஆனால் நல்ல இலக்கை நிர்ணயிக்கும் முயற்சி பலிக்காமல் அடுத்த 9 விக்கெட்டுகளை 60 ரன்களுக்குப் பறிகொடுத்து 53-வது ஓவரில் 158 ரன்களுக்கு சுருண்டது நியூசிலாந்து. இலக்கைத் துரத்திய போது அதிரடித் தொடக்க வீரர் ராய் பிரெடெரிக்ஸ் சொற்ப ரன்களில் வெளியேறினார். ஆல்வின் காளிச்சரண் இருந்த பார்மில் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவரும் கிரீனிட்ஜும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 125 ரன்களைச் சேர்த்தனர். 40.1 ஓவரில் மே.இ.தீவுகள் 159/5 எடுத்து வெற்றி பெற்றது. இறுதியில் அனைவரும் எதிர்பார்த்த ஆஸ்தி ரேலியா-வெஸ்ட் இண்டீஸ் பலப் பரீட்சைக்கான களம் தயாரானது.
 

http://tamil.thehindu.com/sports/1975-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article6799593.ece

  • தொடங்கியவர்

1975.. உலகக் கோப்பையின் முதல் மகுடம்!

2zxwllz.jpg

1975 ஜூன் 21. லார்ட்ஸ் மைதானம். முதல் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி. ரசிகர்கள் வெள்ளத்தில் மைதானம் களை கட்டியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் இயன் சாப்பல் முதலில் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார்.

தொடக்கமே நாடகம்போல அமைந்தது. மே.இ.தீவுகள் அதிரடி தொடக்க வீரர் ராய் பிரெடெரிக்ஸ், 7 ரன்கள் எடுத்திருந்தபோது டெனிஸ் லில்லி வீசிய பந்தை மைதானத்திற்கு வெளியே அடித்தார். ஆனால் ஷாட்டை முடிக்கும்போது பேலன்ஸ் தவறி ஸ்டம்ப்களை மிதிக்க, ஹிட் விக்கெட் ஆகி வெளியேறினார். கார்டன் கிரீனிட்ஜ், ஆல்வின் காளிச்சரன் ஆகியோரும் சொற்ப

ரன்களில் தாம்சன், கில்மர் ஆகியோர் பந்தில் வெளியேற, 50/3 என்று ஆட்டம் ஆஸ்திரேலியாவுக்குச் சாதகமாகத் திரும்பியது.

 

 

லாயிட் என்னும் நாயகன்

அப்போது களமிறங்கினார் கிளைவ் லாய்ட். ரோஹன் கன்ஹாயும் இவரும் இணைந்து 4வது விக்கெட்டுக்காக 149 ரன்களைச் சேர்த்தனர். லாய்ட் இறங்கிய சில ஓவர்களுக்குப் பிறகு டெனிஸ் லில்லியைப் பந்து வீச அழைத்தார் இயன் சாப்பல். மிட்விக்கெட்டில் பவுண்டரி அடித்தார் லாய்ட். அதற்கு பதிலடியாக எகிறு பந்தை லில்லி வீச, லாயிடின் ஆவேசமான அடி அந்தப் பந்தை ஸ்கொயர் லெக்கில் டேவார்ன் ஸ்டாண்டுக்கு அனுப்பிவைத்தது.

26 ரன்களில் இருந்தபோது லில்லி வீசிய எகிறு பந்தை ஹூக் செய்தார் லாயிட். அது கேட்சாகச் சென்றது அதனை ராஸ் எட்வர்ட்ஸ் பிடிக்க முயன்று தோற்றார். அதன் பிறகு லாய்டை ஒன்றும் செய்ய முடியவில்லை. கன்ஹாயும். லாய்டும் 49 பந்துகளில் அரைசதக் கூட்டணி அமைத்தனர். அதில் கன்ஹாயின் பங்களிப்பு வெறும் 6 ரன்கள்.

ஆஸ்திரேலிய வீச்சாளர் மேக்ஸ் வாக்கர் முதல் 7 ஓவர்களில் 22 ரன்கள் கொடுத்து சிக்கனம் காட்டினார். பின்பு லாய்டிடம் சிக்கியதில் அடுத்த 5 ஓவர்களில் 49 ரன்களைக் கொடுத்தார். 89 நிமிடங்களில் 100 ரன்கள் சேர்க்கப்பட்டன. இப்போது தோனி அடித்தால் எப்படி பந்துகள் சீறிப் பறக்கின்றனவோ அப்போது லாய்ட் அடித்த பந்துகள் அப்படிச் சீறிப் பாயும். லாய்ட் 82 பந்துகளில் சதம் கண்டார். 12 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 102 ரன்களை எடுத்து கில்மர் பந்தில் லெக் திசையில் விக்கெட் கீப்பர் ராட் மார்ஷ் கேட்ச் பிடிக்க அவுட் ஆனார். ஆனால் அவரது மட்டைக்கும் பந்துக்கும் சம்பந்தமேயில்லை என்பது வேறு கதை.

இந்த இன்னிங்ஸ் பற்றி பிற்பாடு வர்ணித்த லாய்ட், “முதல் பந்திலிருந்தே பந்து நடு மட்டையில் வாகாகப் படத் தொடங்கியது. இது ஒரு அரிதான நிகழ்வு, இதனால் இது என்னுடைய தினம் என்று முடிவெடுத்து ஆடினேன்” என்றார். மேற்கிந்தியத் தீவுகள் 60 ஓவர்களில் 291/8. ஆஸ்திரேலியாவின் கேரி கில்மர் 48 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

 

நிலைகுலைந்த ஆஸ்திரேலியா

இலக்கைத் துரத்த ஆஸ்திரேலியா களமிறங்கியது. ஆலன் டர்னர், ரிக் மெக்காஸ்கர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால் மெக்காஸ்கர் 7 ரன்களில் வெளியேறினார். டர்னர் (40) இயன் சாப்பல் (62) ஸ்கோரை 81 ரன்களுக்கு உயர்த்தினர். அப்போது விவியன் ரிச்சர்ட்ஸின் அபார த்ரோவுக்கு ஆலன் டர்னர் வீழ்ந்தார்.

பிறகு இயன் சாப்பல், கிரெக் சாப்பல் ஆகியோரையும் தனது அசாத்திய ஃபீல்டிங் மற்றும் த்ரோவினால் ரிச்சர்ட்ஸ் ரன் அவுட் செய்தார். பேட்டிங்கில் சாதித்த கிளவி, லாய்ட் பந்து வீசி 12 ஓவர்களில் 38 ரன்களையே விட்டுக் கொடுத்தார். அதில் டக் வால்ட்டர்ஸ் (35) விக்கெட்டையும் கைப்பற்றினார்.

கீத் பாய்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஆஸ்திரேலியா ஸ்கோர் 233/9 என்று ஆனது. ஆனால் முதல் உலகக் கோப்பையை அவ்வளவு எளிதாக வெல்ல விடுமா ஆஸி.?

அப்போது ஜோடி சேர்ந்தனர் லில்லியும் தாம்சனும். 59-வது ஓவரில் 2 பந்துகள் மீதமிருக்கையில் ஸ்கோர் 274/9 என்று த்ரில் முடிவுக்காக காத்திருந்தது. ஆனால் 21 ரன்கள் எடுத்த தாம்சனும் ரன் அவுட் ஆனார். 274 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆட்டமிழக்க, இங்கிலாந்தின் புகழ்பெற்ற காட்சியாக ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து மேற்கிந்திய வீரர்களைச் சூழ்ந்தனர். எங்கும் ரசிகர்களின் மகிழ்ச்சி வெள்ளம். மே.இ.தீவுகள் வீரர்களிடத்தில் மகிழ்ச்சிக் கொண்டாட்டம்.

ஆட்ட நாயகனாக கிளைவ் லாய்ட் தேர்வு செய்யப்பட்டார். ஆஸ்திரேலிய வீரர்களில் 5 பேர் ரன் அவுட். இது பற்றி இயன் சாப்பல் ஓய்வறையில் அன்று பாடம் எடுத்ததாக மே.இ.தீவுகள் வர்ணனையாளர் டோனி கோசியர் பிற்பாடு குறிப்பிட்டார்.

 

 

உலகக் கோப்பையை இழந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் இயன் சாப்பல் கூறுகையில், உலகக் கோப்பை முடிந்தவுடன் நடைபெற்ற ஆஷஸ் தொடரே தனது கவனம் என்று கூறினார். ஒரு நாள் கிரிக்கெட் அதன் மழலைப் பருவத்தில் இருந்த காலகட்டம் என்பதால் இயன் சாப்பல் தோல்வியைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறினார்.

ஆனாலும்... ஆஸ்திரேலிய மனநிலை தோல்வியை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனம் அல்ல என்பது நமக்கு இப்போது நன்றாகவே பழக்கமான ஒரு விஷயம். அபாரமாக நடத்தப்பட்ட இந்த 1975 உலகக் கோப்பை அதன் பிறகு நடத்தப்பட்ட உலகக் கோப்பை போட்டிகளுக்கான எடுத்துக்காட்டாக அமைந்தாலும் அதில் ஒரு பெரிய குறை இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ரசிகர்கள் பார்க்க விரும்பி ஏங்கிய வீரர் மே.இ.தீவுகளின் கேரி சோபர்ஸ். அவர் இதில் காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது கிரிக்கெட்டிற்குப் பேரிழப்பே.

 

மொத்தம் 15 போட்டிகளுக்கு வந்த பார்வையாளர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 58 ஆயிரம். இரண்டு லட்சம் பவுண்டுகளுக்கு மேல் வசூல். இறுதிப் போட்டியை மட்டும் 26 ஆயிரம் பேர் கண்டுகளித்தனர். 66 ஆயிரம் பவுண்டுகள் வசூல். வெற்றி பெற்ற மேற்கிந்திய அணிக்குப் பரிசுத் தொகை 4 ஆயிரம் பவுண்டுகள். தோற்ற ஆஸ்திரேலியாவுக்கு 2 ஆயிரம் பவுண்டுகள் பரிசுத் தொகை. அரையிறுதி வந்த அணிகளுக்குத் தலா ஆயிரம் பவுண்டுகள்.

1975 உலகக் கோப்பைப் போட்டிகளின் ஆட்டத்தின் தரம் ஒருநாள் கிரிக்கெட்டிற்கான பொதுமையான தரமாக இருக்க வேண்டும் என்பதே லட்சியம். அதன் பிறகு ஏகப்பட்ட மாற்றங்களைக் கடந்து வந்து விட்டது ஒருநாள் போட்டிகள். ஆனால் தரம்...?

 

(தொடர்ந்து பயணிப்போம்…)
 

http://tamil.thehindu.com/sports/1975-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article6802745.ece

  • தொடங்கியவர்

1979 உலகக் கோப்பை.. மீண்டும் பின்தங்கிய இந்திய அணி
 

 

முதல் உலகக் கோப்பைப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி மேலும் பலம் அடைந்தது. ஆனால், அந்த அணிக்குக் கடுமையான சவாலாக விளங்கிய ஆஸ்திரேலிய அணி எதிர்பாராத காரணத்தால் பலவீனம் அடைந்தது. ஆஸ்திரேலியாவில் கெர்ரி பேக்கர் தொடங்கிய தனியார் உலக சீரிஸ் கிரிக்கெட் போட்டிகளுக்குப் பிரபல ஆஸ்திரேலிய வீரர்கள் விளையாடச் சென்றுவிட்டார்கள். முக்கியமான ஆட்டக்காரர்கள் இல்லாமல் பலவீனமான ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. கேப்டன் கிம் ஹியூஸ். இதனால் மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சவால் அளிக்கும் அணிகளாக இங்கிலாந்தும் பாகிஸ்தானும் திகழ்ந்தன.

 

 

ரிச்சர்ட் ஹேட்லி, லான்ஸ் கெய்ன்ஸ் உள்ளிட்ட ஆல்ரவுண்டர்கள் அதிகம் இருந்த நியூசிலாந்து அணிக்கும் ஒரு வாய்ப்பு இருப்பதாக அப்போது கருதப்பட்டாலும், மே.இ. தீவுகள் - பாகிஸ்தான் அணிகளின் இறுதிப் போட்டியையே ரசிகர்கள் பெரும்பாலும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் வெற்றி வாய்ப்பைத் தனக்கேயுரிய பாணியில் பாகிஸ்தான் கோட்டைவிட்டது தனிக்கதை.

 

 

1975 உலகக் கோப்பை நடத்தப்பட்ட அதே விதிமுறை தொடர்ந்தது. பிரிவு பி-யில் இந்தியா, மே.இ.தீவுகள், நியூசிலாந்து, இலங்கை; பிரிவு ஏ-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், கனடா.

 

சற்றே மேம்பட்ட இந்திய ஆட்டம்

முதல் போட்டி ஜூன் 9ஆம் தேதி. பர்மிங்ஹாமில் இந்திய அணி பலமான மே.இ.தீவுகளை எதிர்கொண்டது. இந்திய அணிக்கு வெங்கட் ராகவன் கேப்டன், மே.இ.தீவுகளுக்கு கிளைவ் லாய்ட்.

 

1975 போல் அல்லாமல் இந்திய அணி கொஞ்சம் புத்துணர்வுடன் இருந்தது. காரணம் அணியில் திலிப் வெங்சர்க்கார், கபில்தேவ் ஆகிய புதுமுகங்கள் இருந்ததே.

 

இந்திய அணி: கவாஸ்கர், கெய்க்வாட், வெங்சர்க்கார், விஸ்வநாத், பிரிஜேஷ் படேல், மொகீந்தர் அமர்நாத், கபில்தேவ், கே.சி.கன்னா (வி,கீ), கர்சான் காவ்ரி, வெங்கட்ராகவன், பிஷன் சிங் பேடி.

 

வெஸ்ட் இண்டீஸ் அணி: கார்டன் கிரீனிட்ஜ், டெஸ்மாண்ட் ஹெய்ன்ஸ், விவியன் ரிச்சர்ட்ஸ், காளிச்சரண், கிளைவ் லாய்ட், காலின்ஸ் கிங், டெரிக் முர்ரே, ஆன்டி ராபர்ட்ஸ், ஜொயல் கார்னர், மைக்கேல் ஹோல்டிங், காலின் கிராஃப்ட்.

 

களத்தில் கொஞ்சம் ஈரப்பதம் இருந்ததால், டாஸ் வென்ற கிளைவ் லாய்ட் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். பிட்சில் பந்துகள் கடுமையாக ஸ்விங் ஆனதோடு எழும்பவும் செய்தன. இதனால் கவாஸ்கரே திணறினார். அவர் 8 ரன்களில் வெளியேறினார். கெய்க்வாட்-11, வெங்சர்க்கார்-7 ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற 29/3 என்று ஆனது.

 

ஆனால் ஒரு முனையில் ஜி.ஆர்.விஸ்வநாத் மட்டும் மே.இ.தீவுகள் வேகத்தையும் ஸ்விங்கையும் எதிர்கொண்டு அபாரமாக விளை

யாடினார். அவர் 134 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்து 9-வது விக்கெட்டாக அவுட் ஆனார். கபில்தேவ் 12 ரன்கள், வெங்கட்ராகவன், கர்சன் காவ்ரி, பிஷன் பேடி ஆகியோர் தைரியமாக ஆடி இரட்டை இலக்கம் கடக்க இந்தியா 190 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

 

விஸ்வநாத்தின் இந்த இன்னிங்ஸ் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வர்ணனையாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆட்டக்களத்தில் சிறந்த வேகப்பந்து வீச்சை எப்படி ஆட வேண்டும் என்று விஸ்வநாத் அன்று பாடம் எடுத்ததாகவே வர்ணனையாளர்கள் கூறினார்கள்.

 

கபில், காவ்ரியின் முயற்சி

தொடர்ந்து ஆடிய மே.இ. தீவுகள் அணிக்கு கிரீனிட்ஜ் (106 நாட் அவுட்), ஹெய்ன்ஸ் (47) ஆகியோர் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். ஆனால் அனுபவம் அற்ற இளம் வீச்சாளர்களான கபில்தேவ், காவ்ரி ஆகியோர் துல்லியமாக வீசியதாகப் பாராட்டப்பட்டனர். கேப்டன் வெங்கட்ராகவன் 12 ஓவர்களில் 30 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். கர்சன் காவ்ரி, 10 ஓவர்களில் 25 ரன்களையே விட்டுக் கொடுத்தார். விழுந்த ஒரே விக்கெட்டை (ஹெய்ன்ஸ்) கபில்தேவ் கைப்பற்றினார். கபில் 10 ஓவர்களில் 46 ரன்களைக் கொடுத்தார். 191 ரன்கள் இலக்கை எட்ட மே.இ.தீவுகள் 51.3 ஓவர்களை எடுத்துக் கொண்டது.

 

அதன் பிறகு இந்தியா மீதமுள்ள லீக் ஆட்டங்களிலும் தோல்வியைத் தழுவியது. நியூசிலாந்து அணிக்கு எதிராக 182 ரன்களையே எடுத்தது. காரணம், நியூசிலாந்தின் கள வியூகம். நியூசிலாந்து கேப்டன்கள் சதுரங்கக் காய்களை நகர்த்துவது போல் பீல்டர்களை நகர்த்துவதற்குப் பேர்போனவர்கள்.

இந்தியப் பந்து வீச்சாளர்கள் சிக்கனமாக வீசியதில் நியூசிலாந்து 57 ஓவர்களில்தான் வெற்றி இலக்கை எட்ட முடிந்தது. இந்தியாவின் அடுத்த போட்டி கற்றுக்குட்டியான இலங்கையுடன். இதில் இந்தியா வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 

ஆனால், இலங்கை அணியில் ராய் டயஸ், துலிப் மெண்டிஸ், சிதாத் விட்டுமனி, ரஞ்சன் மதுகல்ல போன்ற திறமை மிக்க வீரர்கள் இருந்தனர். இதில் விட்டுமனி, டயஸ், மெண்டிஸ் அரை சதம் எடுக்க அந்த அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது. கபில், அமர்நாத், காவ்ரி ஆகியோர் பந்துகளில் 3 சிக்சர்களை அடித்தார் மெண்டிஸ்.

இலங்கை அணியில் அப்போது பள்ளி மாணவரான இடது கை பேட்ஸ்மென் பாஸ்குவல் என்பவர் ஆடினார். அவரும் மெண்டிசும் இணைந்து 7 ஓவர்களில் 52 ரன்கள் விளாசினர். பாஸ்குவெல் 23.

 

காத்திருந்து பெற்ற தோல்வி

இலக்கைத் துரத்த இந்தியா ஒரு நாள் காத்திருக்க வேண்டியிருந்தது. சனிக்கிழமை இலங்கை இன்னிங்ஸ் தாமதமாகத் தொடங்கியதால் இந்திய இன்னிங்ஸ் திங்கள்கிழமையே நடந்தது. கவாஸ்கரும் கெய்க்வாடும் 60 ரன்களைச் சேர்த்தனர். உணவு இடைவேளையின் போது இந்தியா 117/2. 25 ஓவர்களில் வெற்றிக்கு 122 ரன்கள் தேவை என்ற நிலையில், விஸ்வநாத் (22) ரன் அவுட் ஆனார்.

இதுவே திருப்பு முனையாக அமைந்தது. இந்திய அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. படு ஏமாற்றமான உலகக் கோப்பையாக இது அமைந்தாலும், 1975 அளவுக்கு மோசமில்லை என்றே உணரப்பட்டது.

 

இத்தனை மோசமாக ஆடிய இந்தியா அடுத்த 4 ஆண்டுகளில் அசகாய சூரர்களையும் வீழ்த்திக் கோப்பையை வெல்லும் என்று அப்போது யார்தான் நினைத்திருப்பார்?

(1975-ன் கதை தொடரும்)
 

http://tamil.thehindu.com/sports/1979-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/article6805934.ece

Edited by நவீனன்

தொடர்ந்து பதியுங்கள் .வானொலியும் கையுமாக நித்திரைகொள்ளாமல் இருந்த காலங்கள் நினவுவருகின்றது .

  • தொடங்கியவர்

1979 உலகக் கோப்பை.. காலிங்ஸ், ரிச்சர்ட்ஸ் ஆடிய தாண்டவம்
 

 

இறுதிப் போட்டி லார்ட்ஸில் மே.இ.தீவுகள் இங்கிலாந்து அணிகளுக்கிடையே 25,000 ரசிகர்கள் முன்னிலையில் ஜூன் 23, 1979 அன்று நடந்தது.

இங்கிலாந்து கேப்டன் மைக் பிரியர்லி எடுத்த எடுப்பில் ஒரு தவறு செய்தார். டாஸ் வென்ற அவர் மே.இ.தீவுகளை பேட் செய்ய அழைத்தார். மே.இ.தீவுகளின் மட்டையாளர்களின் அபார ஃபார்மைக் கணக்கில் கொள்ளாமல் அவர்களை பேட் செய்ய அழைத்தார். இந்த முடிவு இங்கிலாந்துக்கு எதிராக முடியும் என்று ஒருவரும் நினைத்திருக்க மாட்டார்கள்.

இங்கிலாந்தின் அபாய வீச்சாளர் பாப் வில்லிஸ் காயம் காரணமாக இறுதிப் போட்டியில் விளையாட முடியாமல் போனதும் இங்கிலாந்துக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது. லார்கின்ஸ் என்ற கூடுதல் மட்டையாளரைச் சேர்த்ததால் பாய்காட், கூச், லார்கின்ஸ் ஆகியோரையும் பந்து வீச்சாளர்களாகப் பயன்படுத்த நேரிட்டது. இவர்கள் போட்ட 12 ஓவர்களில் மே.இ. தீவு மட்டையாளர்கள் 86 ரன்களைக் கதறக் கதறக் கறந்தார்கள்.

 

 

கார்டன் கிரீனிட்ஜ் 9 ரன்கள் எடுத்த நிலையில் ராண்டலின் அபாரமான பீல்டிங் மற்றும் த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார். மிட்விக்கெட்டில் பந்தை சட்டென பீல்ட் செய்த அவர், அரைக் கணமும் தாமதிக்காமல் அப்படியே பவுலர் முனையில் இருந்த ஸ்டெம்பைப் பார்த்துப் பந்தை எறிந்தார். கிரீனிட்ஜ் கோட்டைத் தொடுவதற்குள் குச்சிகள் சரிந்தன. ஹெய்ன்ஸ் 20 ரன்களில் ஓல்டின் ஸ்லிப் கேட்சிற்கு ஹெண்ட்ரிக்சிடம் அவுட் ஆனார்.

ஆல்வின் காளிச்சரணின் ஸ்டெம்பை லெக் ஸ்டம்ப் திசையில் பந்து வீசிச் சாய்த்தார் ஹெண்ட்ரிக்ஸ். கிளைவ் லாய்டும் கிறிஸ் ஓல்டின் அபாரமான டைவிங் கேட்சிற்கு வெளியேற மே.இ.தீவுகளின் இன்னிங்ஸ் 99/4 என்று ஆட்டம் கண்டது.

 

 

அப்போதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. வேளை வரும்போது வீரன் வெளிப்படுவான் என்பார் களே அது நடந்தது. கிரிக்கெட் வட்டாரத்தில் புழங்கிவரும் சுவாரஸ்யமான கதைகளில் ஒன்றாக மாறிய ஆட்டம் அரங்கேறியது. விவ் ரிச்சர்ட்ஸ், காலின்ஸ் கிங் கூட்டணி இங்கிலாந்தின் பந்து வீச்சைச் சிதற அடித்தார்கள். ஆட்டத்தின் போக்கை மாற்றிய ஆட்டம் அது.

துணிச்சலான ஹிட்டர் கிங். எதைப் பற்றியும் அவர் கவலைப் படுவதாக இல்லை. ரிச்சர்ட்ஸும் அவரும் இணைந்து 5-வது விக்கெட்டுக்காகச் சேர்த்த 139 ரன்களில் 86 ரன்களை கிங் மட்டுமே எடுத்தார். 66 பந்துகளில் 10 பவுண்டரி 3 சிக்சர்களை அவர் விளாசியிருந்தார்.

 

 

அப்போதெல்லாம் பீல்டிங் கட்டுப்பாடுகள் இல்லை. லெக் திசையில் பந்து போனாலே வைட் என்னும் விதியும் இல்லை. எகிறு பந்துகளுக்கான கட்டுப்பாடும் இல்லை. அந்த விதிமுறைகளுக்குட்பட்டு கிங்கும் ரிச்சர்ட்ஸும் ஆடிய ஆட்டம் கிரிக்கெட்டின் மறக்க முடியாத காவியங்களில் ஒன்றாக மாறியதில் ஆச்சரியம் இல்லை.

அதிரடிக்குப் பேர்போன ரிச்சர்ட்ஸ் அன்று கிங்குக்கு வழிவிட்டு அடக்கி வாசித்தார். கிங் ஆட்டமிழந்த பிறகே ரிச்சர்ட்ஸ் தனது சதத்தை 52-வது ஓவரில் எடுத்து முடித்தார். பிறகு அதிரடியைத் தொடர்ந்த ரிச்சர்ட்ஸ் 157 பந்துகளில் 11 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 138 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ மே.இ.தீவுகள் 60 ஓவர்களில் 286 ரன்கள் எடுத்தது.

 

 

இங்கிலாந்தைச் சாய்த்த கார்னர்

தொடக்கத்தில் பாய்காட், பிரியர்லி நிதானமாகத் தொடங்கி 2 மணி நேரம் தாக்குதல் பவுலிங் கைச் சமாளித்தனர். பாய்காட் அநியாயத்துக்கு நிதானமாக ஆடினார். இரட்டை இலக்கத்தை எட்டவே 17 ஓவர்கள் எடுத்துக் கொண்டார். பிரியர்லியும் பாய் காட்டும் இணைந்து 38 ஓவர்களில் 129 ரன்களைச் சேர்த்தனர்

(பிரியர்லி 64, பாய்காட் 57). இருவரையும் மைக்கேல் ஹோல்டிங் வீழ்த்தினார்.

இப்போது கடைசி 22 ஓவர்களில் 158 ரன்கள் தேவை என்ற நிலை. கூச் (32 ரன்கள், 28 பந்துகள் 4 பவுண்டரிகள்), ராண்டல் (15) கொஞ்சம் தாக்குதல் ஆட்டம் ஆட முயன்றனர். ஆனால் மாடியிலிருந்து வீசுவது போன்ற உயரத்திலிருந்து வீசும் ஜொயல் கார்னர் 11 பந்துகளில் 4 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதில் இருமுறை அவர் ஹாட்ரிக் வாய்ப்பைப் பெற்றார்.

 

 

38-வது ஓவரில் 129/1 என்ற நிலையிலிருந்த இங்கிலாந்து, 51-வது ஓவரில் 194 ரன்களுக்குச் சுருண்டு, உலகக் கோப்பையை நழுவ விட்டது. இன்று வரை அந்த அணிக்குச் சாம்பியனாகும் வாய்ப்பு வரவேயில்லை. 1984-ஆம் ஆண்டு டெஸ்ட் தகுதி பெற்ற இலங்கை அணிகூட உலகக் கோப்பையை வென்றுவிட்டது. கிரிக்கெட்டின் தொட்டிலான இங்கிலாந்தால் இன்றும் அது முடியவில்லை. 1987, 1992 என்று வாய்ப்புகள் வந்தும் இங்கிலாந்து கோப்பையைக் கோட்டைவிட்டுக் கொண்டிருக்கிறது.

 

 

இங்கிலாந்தைக் கவிழ்த்த பாய்காட்!

தங்கள் அணி வெற்றிக்கான இலக்கை (287) எட்டவிடாமல் செய்ததில் இங்கிலாந்தின் தொடக்க வீரர்களான ஜெஃப் பாய்காட் மற்றும் மைக் பிரியர்லி ஆகியோரின் பங்களிப்பு மிக அதிகம்.

விவ் ரிச்சர்ட்ஸ் மகத்தான மட்டையாளர். ஆனால் பந்து வீச்சில் சூரப்புலி அல்ல. அவரது மென்மையான ஆஃப் ஸ்பின் பந்தைக்கூட பாய்காட்டும், பிரியர்லியும் லொட்டு வைத்து ஆடி இங்கிலாந்தின் பதற்றத்தை அதிகரித்தனர்.

பாய்காட் தேநீர் இடைவேளைக்குப் பிறகு விவ் ரிச்சர்ட்ஸ் பந்தை மேலேறி வந்து அடிக்க முயன்று கிளைவ் லாய்டிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால் லாய்ட் அதனைத் தவறவிட்டார். ஏற்கெனவே மற்றொரு மந்த ஆட்டக்காரரான பிரியர் லிக்கும் ஒரு கேட்சை அவர் விட்டிருந்தார். லாய்ட் அபாரமான பீல்டர். அவர் வேண்டுமென்றே இவர்கள் கேட்சுகளைத் தவறவிட்டார் என்று சொல்லப்பட்டது. இவர்களுக்குப் பிறகு கூச், ராண்டல், போத்தம் வந்து அடித்து ஆடத் தொடங்கி விட்டால்…? எனவேதான் லாய்ட் கேட்சை விட்டார் என்பதாகப் பேசப்பட்டது.

 

“அவர்கள் இருவரும் ஆடுவதை நாள் முழுவதும் பார்க்கவே விரும்பினேன். ஏனென்றால் ஒவ்வொரு ஓவரையும் அவர்கள் கடக்கக் கடக்க இங்கிலாந்து சவப்பெட்டியின் மீது ஒவ்வொரு ஆணியாக அடிக்கப்படும் என்பது எனக்குத் தெரியும்” என்று போட்டி முடிந்த பிறகு சொன்ன லாயிட், “வேண்டுமென்றே நான் கேட்சை விட்டதாகப் பலரும் நினைத்தனர். அது உண்மையல்ல என்றாலும் அது ஒரு மோசமான உத்தி என்று சொல்வதற்கிடமில்லை” என்று முத்தாய்ப்பு வைத்தார்.

 

 

ரிச்சர்ட்ஸ் கண்டுபிடித்த ஷாட்

கம்பீரமும் நளினமும் பொருந்திய மட்டையாளர் விவியன் ரிச்சர்ட்ஸின் ஆட்டத்தைப் பார்ப்பதே கண்கொள்ளாக் காட்சி. மே.இ.தீவுகள் இன்னிங்ஸில் கடைசி வரை நின்ற ரிச்சர்ட்ஸ் 132 ரன்களில் இருந்த போது 60-வது ஓவரை மைக் ஹெண்ட்ரிக் வீசினார். கள வியூகத்தில் கட்டுப்பாடுகள் இல்லாததால் அனைவரும் எல்லைக் கோட்டில் நிறுத்தப்பட்டனர்.

 

ஹெண்ட்ரிக் ஆஃப் திசையில் பந்து வீசினார். ஆஃப் திசையில் அதிகத் தடுப்பாளர்கள் இருந்தார்கள். ஸ்டெம்பை விட்டு ஆஃப் திசையில் நன்றாக நகர்ந்து வந்த ரிச்சர்ட்ஸ், பந்த லெக் திசையில் வீசப்பட்ட பந்தாக மாற்றிக்கொண்டார். ஸ்கொயர் லெக் திசையில் ஸ்டைலாக ஃபிளிக் செய்தார். பந்து எல்லைக் கோட்டைத் தாண்டிப் பறந்தது. அன்றுவரை யாரும் அப்படி ஒரு ஷாட்டை அடித்ததில்லை. பிறகு 1983-ம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியாவின் யாஷ்பால் சர்மா அதேபோன்ற ஷாட் ஒன்றை ஆடி சிக்சர் அடித்தார்.

(நாளை… வரலாறு படைத்த இந்தியா)
 

 

http://tamil.thehindu.com/sports/1979-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/article6814648.ece

  • தொடங்கியவர்

1983 உலகக் கோப்பை: "நடக்கக் கூடாதது" நடந்துவிட்டது

 

111i5j9.jpg

 

    இறுதி ஆட்டத்தில் ரிச்சர்ட்ஸை கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்த கபில் தேவை பாராட்டும் ரசிகர்கள்
   
  

இனி இதுபோல நடக்கக் கூடாது என்று கண்டிப்பாகச் சொன்னார் கிளைவ் லாயிட்ஸ். ஆனால் அது மீண்டும் நடந்தது. ஒரு முறை அல்ல. இரு முறை. அதிலும் அந்த இரண்டாவது முறை நடந்ததை லாயிட்ஸால் வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாது.

1983-ல் இந்தியா உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தது. உலகக் கோப்பைப் போட்டிகள் தொடங்கி மூன்றாவது தொடரிலேயே இந்தியா இந்தச் சாதனையைப் புரிந்தது. அந்தச் சாதனைதான் உலகின் மிகச் சிறந்த அணியாக அன்று கருதப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேதனையாக மாறியது.

 

 

இரண்டு உலகக் கோப்பைப் போட்டிகளில் படுதோல்வி அடைந்த இந்தியாவை மூன்றாவது உலகக் கோப்பைப் போட்டியில் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்தியாவிலும் யாருக்கும் பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் இல்லை. சொல்லப்போனால் அணியினருக்கும் அந்த நம்பிக்கை இருந்திருக்க வாய்ப்பில்லை. தன்னம்பிக்கையோடு முன்னணியில் நின்று தலைமை ஏற்ற கபில்தேவும்கூட இதைக் கற்பனை செய்திருப்பார் என்று நிச்சயமாகச் சொல்ல முடியாது. ஆனால் அந்த அதிசயம் நடந்தது. உலகமே இந்தியாவை வியப்புடன் பார்த்தது. இந்திய கிரிக்கெட்டையும் உலக கிரிக்கெட்டையும் நிரந்தரமாக மாற்றிய திருப்பமாக அது அமைந்துவிட்டது.

 

 

அரங்கேறிய அதிசயங்கள்

லாயிட்ஸின் கண்டிப்பான வார்த்தைகளுக்கு வருவோம். உலகக் கோப்பை தொடங்குவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு இந்திய அணி, மே.இ. தீவுகளை எதிர்த்து ஒருநாள் போட்டித் தொடர் ஒன்றில் ஆடியது. 1983-ம் ஆண்டின் தொடக்கத்தில் மே.இ. தீவுகளில் நடந்த அந்தத் தொடரில் ஒரு போட்டியின் முடிவில்தான் லாயிட்ஸ் இந்த வார்த்தைகளைச் சொன்னார்.

மூன்று போட்டிகள் கொண்ட அந்தத் தொடரின் இரண்டாவது போட்டியில் (மார்ச் 29) இந்தியா வெற்றிபெற்றது. மே.இ. தீவுகளுக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் இந்தியா பெற்ற முதல் வெற்றி அது. அந்தத் தோல்வி மே.இ. தீவுகள் அணிக்குக் கடும் அதிர்ச்சியையும் ரோஷத்தையும் ஏற்படுத்தியது. அதனால்தான் அணித் தலைவர் லாயிட்ஸ் “இனி ஒருபோதும் இப்படி நடக்கக் கூடாது” என்று தன் அணியினரை எச்சரித்தார்.

 

 

அப்படி ரோஷம் வருமளவுக்கு அது வலுவான அணியாக இருந்தது. கார்டன் கிரீனிட்ஜ், டெஸ்மாண்ட் ஹெய்ன்ஸ், விவியன் ரிச்சர்ட்ஸ், லாயிட்ஸ் போன்ற அபாரமான மட்டையாளர்கள்; மால்கம் மார்ஷல், மைக்கேல் ஹோல்டிங், ஆன்டி ராபர்ட்ஸ், ஜோயல் கார்னர் ஆகிய வேகப் பந்து வீச்சாளர்கள், லாரி கோம்ஸ் என்னும் ஆல் ரவுண்டர், மட்டையாட்டத்திலும் சிறந்து விளங்கிய ஜெஃப் துஜோன் என்னும் விக்கெட் காப்பாளர் ஆகியோரைக் கொண்ட அந்த அணி உலகின் எந்த அணிக்கும் சவாலாக விளங்கிய காலம் அது. அந்த அணியை இந்தியா அதன் மண்ணிலேயே வீழ்த்தினால் ரோஷம் வராதா?

ஆனால் தோற்கக் கூடாது என்னும் எச்சரிக்கை பலிக்கவில்லை. அதே ஆண்டில் மேலும் இரண்டு முறை அதே இந்திய அணியிடம் மே.இ. தீவுகள் அணி தோற்றது. அதில் ஒன்று உலகக் கோப்பை இறுதிப் போட்டியாக அமைந்துவிட்டது.

 

 

இது வேறு அணி

கடந்த இரு போட்டிகளைப் போல அல்லாமல் இந்த முறை இந்தியா ஒப்பீட்டளவில் வலிமையான அணியாக இருந்தது. கபில் தேவின் தலைமையில் புதிய வேகம் பெற்றிருந்தது.

 

முதல் உலகக் கோப்பைப் போட்டியில் டெஸ்ட் இன்னிங்ஸை ஆடிய சுனில் கவாஸ்கர் சுதாரித்துக்கொண்டு ஒரு நாள் போட்டிக்கேற்பத் தன்னைத் தகவமைத்துக்கொண்டிருந்தார். கவாஸ்கருடன் இன்னிங்ஸைத் தொடங்கிய கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் டெஸ்ட் போட்டியையே ஒரு நாள் போட்டிபோல ஆடுபவர்.

இடை நிலையில் மொஹீந்தர் அமர்நாத், யாஷ்பால் ஷர்மா ஆகிய அருமையான மட்டையாளர்களுடன் சந்தீப் பாட்டீல் என்னும் அதிரடி இளம் ஆட்டக்காரரும் இருந்தார். இவர்களை அடுத்து அதிரடிக்குப் பேர்போன கபிலும் நேர்த்தியாக மட்டையைச் சுழற்றக்கூடிய விக்கெட் காப்பாளர் சையது கிர்மானியும் இருந்தார்கள்.

 

 

பந்து வீச்சைப் பொறுத்தவரை கபில் தேவ் உலகத் தரமான வீச்சாளர். பல்வீந்தர் சிங் சந்து, ரோஜர் பின்னி, மதன்லால் போன்றவர்கள் வேகத்தில் பின்தங்கினாலும் ஸ்விங் பௌலிங்கில் தேர்ந்தவர்கள். பந்தை வீசும் அளவிலும் வரிசையிலும் கட்டுக்கோப்புக் கொண்டவர்கள். இங்கிலாந்து ஆடுகளங்கள் இவர்களது பந்து வீச்சுக்கு உறுதுணையாக இருந்தன.

 

 

போதாக்குறைக்கு யாராலும் புரிந்துகொள்ள முடியாத விதத்தில் பந்து வீசும் அமர்நாத்தும் திறமையான சுழல் பந்து வீச்சாளர் ரவி சாஸ்திரியும் இருந்தார்கள். மேற்கிந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற அணிகளுக்கு இணையான பந்து வீச்சாக இல்லை என்றாலும் அலட்சியப்படுத்த முடியாத வலிமை கொண்டதாகவே இந்தியப் பந்து வீச்சு இருந்தது.

 

 

என்றாலும் உலகக் கோப்பையை வெல்லக்கூடிய அணி என்று யாரும் இதைச் சொல்லவில்லை. காரணம், மே.இ. தீவுகள் தவிர, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் பலம் பொருந்திய அணிகளாக இருந்தன. இந்த அணிகளைத் தாண்டி அரை இறுதியை எட்டுவதே கஷ்டம் என்னும் நிலை இருந்தது. இந்த எண்ணத்தைத் தகர்த்து கோப்பையைக் கைப்பற்றி உலகை வாயடைக்கவைத்தது இந்தியா.

 

 

இந்தச் சாதனைக்கு மொத்த அணியினரும் காரணம் என்றாலும் கபில் தேவுக்கு அந்தப் பெருமையைக் கூடுதலாக வழங்க வேண்டும். முன்னுதாரணமாக விளங்கும்தலைமைப் பண்பு, எத்தகைய நிலையிலும் மனம் தளராத உறுதி, பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்திய விதம், தடுப்பு வியூகத்தில் காட்டிய மதிநுட்பம், சிறப்பான பந்துவீச்சாலும் தேவைப்படும் சமயங்களில் மட்டையாலும் பங்களித்த விதம் ஆகியவற்றால் அந்த வெற்றியின் ஆணி வேர் என்று கபில் தேவைச் சொல்லலாம்.

 

கடந்து வந்த பாதை

ஒரு பிரிவில் இருந்த நான்கு அணிகளும் ஒவ்வொன்றையும் எதிர்த்து இரு முறை விளையாடும். இதில் எடுத்த எடுப்பில் இந்தியா உலக சாம்பியனுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இரண்டு அணிகளுக்கும் அதுதான் முதல் போட்டி. முதலில் ஆடிய இந்தியா யாஷ்பால் (89), பாட்டீல் (36), பின்னி (27) ஆகியோரின் மட்டையாட்டத்தால் 262 ரன்களைக் குவித்தது. ஆகச் சிறந்த வேகப் பந்து வீச்சை எதிர்த்து முதல் போட்டியிலேயே இந்தியா இத்தனை ரன்கள் அடித்தது.

 

ஆனால் மேற்கிந்திய அணியின் மட்டை வலுவுக்கு இது பிரமாதமான இலக்கு அல்ல. எனினும் இந்தியாவின் சிக்கனமான பந்து வீச்சும் பின்னி, சாஸ்திரியின் திறமையான வீச்சும் (இருவருக்கும் தலா 3 விக்கெட்) சேர்ந்து எதிரணியை 54.1 ஓவர்களில் 228 ரன்களுக்குச் சுருட்டின. எது நடக்கக் கூடாது என்று லாயிட்ஸ் சொன்னாரோ அது நடந்துவிட்டது.

 

 

இதைக் கெட்ட கனவாக நினைத்து மறக்கவே மேற்கிந்திய அணி நினைத்திருக்கும். அதற்கேற்ப அடுத்த ஐந்து போட்டிகளிலும் அது வென்றது. அடுத்து வந்த அரை இறுதியையும் வென்றது. ஆனால் இறுதிப் போட்டியில் மீண்டும் இந்தியாவிடம் தோற்றது. எது நடக்கக் கூடாது என்று லாயிட்ஸ் எச்சரித்தாரோ அது மீண்டும் ஒரு முறை நடந்தது. வரலாறு மாற்றி எழுதப்பட்டது.

 

(1983-ன் மந்திரக் கணங்கள் தொடரும்..)

 

 

http://tamil.thehindu.com/sports/1983-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81/article6818475.ece
 

  • தொடங்கியவர்

1983 உலகக்கோப்பை: திருப்புமுனைத் தருணங்கள்
 

 

முதல் அரையிறுதி இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும். இங்கிலாந்து மேற்கிந்தியத் தீவுகளோடு ஒப்பிடப்படும் அளவுக்கு வலுவான அணியாக விளங்கியது. ஆல் ரவுண்டர் இயான் போத்தம் அணியின் பெரும் வலிமையாக விளங்கினார். க்ரீம் ஃப்ளவர், டேவிட் கோவர், ஆலன் லேம்ப், மைக் கேட்டிங், போத்தம் என்று வலுவான மட்டையாளர்களைக் கொண்ட அந்த அணியைக் கபில் தலைமையிலான இந்தியப் பந்து வீச்சு திணறவைத்தது. இந்தியா அரையிறுதிக்கு வந்தது அதிருஷ்டம் என்று நினைத்தவர்களை வாயடைக்க வைத்த பந்து வீச்சு அது.

 

 

தாக்குதல் வியூகத்தின் முன்னணியில் நின்ற கபில் 11 ஓவர்களில் 35 ரன் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி னார். 12 ஓவர்களில் 43 ரன் கொடுத்த ரோஜர் பின்னி 2 விக்கெட்களை வீழ்த்தினார். கீர்த்தி ஆசாதும் மொஹீந்தர் அமர்நாத்தும் மிகவும் சிக்கனமாகப் பந்துவீசினர். ஆசாத் 12 ஓவர்களில் 28 ரன் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டை எடுத்தார். அமர்நாத் 12 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 60 ஓவர்களில் இங்கிலாந்து 213 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கடைசிப் பந்தில் கடைசி விக்கெட்டை (ஆலன் லேம்ப்) கபில் எடுத்தார்.

 

 

214 என்பது அவ்வளவு கடினமான இலக்கு அல்ல என்றாலும் ஓல்ட் ட்ரஃபோர்ட் ஆடுகளத்தின் தன்மையும் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் திறமையும் அதைக் கடினமான இலக்காக உணரவைத்தன. ஆனால் இந்திய மட்டையாளர்கள் அசரவில்லை. எடுக்க வேண்டிய ரன் விகிதம் குறைவு என்பதை நன்கு உணர்ந்த அவர்கள் பதற்றமில்லாமல் இலக்கைத் துரத்தினார்கள். கவாஸ்கரும் காந்தும் வலுவான அடித்தளம் (முதல் விக்கெட்டுக்கு 46) அமைத்துக்கொடுத்தார்கள். 25 ரன் எடுத்து கவாஸ்கர் ஆட்டமிழக்க, அணியின் எண்ணிக்கை 50 ஆக இருக்கும்போது ஸ்ரீகாந்த் (19) ஆட்டமிழந்தார். ஆனால் அமர்நாத்தும் யாஷ்பால் ஷர்மாவும் இன்னிங்ஸை ஸ்திரப்படுத்தினார்கள். 146 ரன்னில் அமர்நாத் ஆட்டமிழக்க, சந்தீப் பாட்டீ லுடன் சேர்ந்து யாஷ்பால் அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார்.

 

 

எடுக்க வேண்டிய ரன் விகிதம் குறைவு என்பதால் யாஷ்பாலும் அமர்நாத்தும் நிதானமாகவே ஆடினார்கள். அமர்நாத் 92 பந்துகளில் 46 எடுத்தார். யாஷ்பால் 115 பந்துகளில் 61. இங்கிலாந்தின் பந்து வீச்சை இவர்கள் இருவரும் கையாண்ட விதம் இந்திய ரசிகர்களுக்குச் சிலிர்ப்பூட்டும் அனுபவமாக இருந்தது. இந்திய நேரப்படி இரவுவரை நீடித்த இந்தப் போட்டியைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அது அமைந்தது. சந்தீப் பாட்டீல் தன் இயல்புக்கேற்ப அடித்து ஆடினார். 32 பந்துகளில் 51 ரன் எடுத்தார். 54.4 ஓவர்களில் இந்தியா இலக்கை எட்டி வரலாற்றின் பக்கங்களில் நுழைந்தது.

முதல் அரையிறுதி நடந்த அதே ஜூன் 22 அன்று இரண்டாவது அரையிறுதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது. இதில் மே.இ. தீவுகள் அணி பாகிஸ்தானை துவம்சம் செய்தது. மோஷின் கான் (70), ஜாகீர் அப்பாஸ் (30), இம்ரான் கான் (17) ஆகியோரைத் தவிர பிறர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள். 8 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களைத்தான் பாகிஸ்தானால அடிக்க முடிந்தது.

 

சாம்பியன்களின் ஆட்டம் என்றால் என்ன என்று காட்டும் வகையில் மே.இ. தீவுகளின் ஆட்டம் அமைந்தது. 48.4 ஓவரில் (188-2) வென்றது. விவியன் ரிச்சர்ட்ஸ் (80), லாரி கோம்ஸ் (50) இருவரும் ஆட்டமிழக்கவில்லை.

பாகிஸ்தான் பந்து வீச்சை ஊதித் தள்ளிய தெம்புடன் மே.இ. தீவுகள் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. கவனமான ஆட்டத்தின் மூலம் இந்தியா பதற்றமில்லாமல் வந்து சேர்ந்தது. இறுதிப் போட்டியில் இந்தியா என்றதுமே மே.இ. தீவுகள் அணியினர் உலகக் கோப்பை ஹாட்ரிக் பற்றிய கனவில் மிதக்க ஆரம்பித்தார்கள். ஆனால் ஹாட்ரிக் அடிக்க முடியவில்லை என்பது மட்டுமல்ல. அதன் பிறகு உலகக் கோப்பையை அவர்களால் இன்றுவரை வெல்லவே முடியவில்லை.

 

 

ஒரு நாயகன் உதயமான தருணம்

இந்திய அணி கோப்பையை வென்றதில் அணியினர் அனைவருக்கும் பங்கு இருந்தது என்றாலும் அணித் தலைவர் கபில் தேவின் பங்கு தனித்து நிற்கிறது. அவரது தன்னம்பிக்கை, தலைமை உத்திகள், பந்து வீச்சு, மட்டை வீச்சு ஆகியவை அணிக்குப் பெரிதும் உதவின. ஜிம்பாப் வேக்கு எதிராக அவர் அடித்த 175 உலகக் கோப்பையின் திருப்புமுனைத் தருணங்களில் தலையாய இடம் வகிப்பது என்று சொல்லலாம்.

கபில் தேவ் களம் இறங்கியபோது அணியின் ஸ்கோர் 9 ரன்களுக்கு 4 விக்கெட். மேலும் 8 ரன்கள் எடுப்பதற்குள் இன்னொரு விக்கெட்டும் விழுந்தது. 17-5. அதன் பிறகு ரோஜர் பின்னி கை கொடுக்க, கபில் இந்திய இன்னிங்ஸை மீட்டெடுத்தார். ஸ்கோர் 78ஆக இருக்கும்போது பின்னியும் ஆட்டமிழந்தார் (22). அடுத்து ரவி சாஸ்திரி ஒரே ரன்னில் வெளியேறினார்.

 

 

மனம் தளராத கபில் அசராமல் நின்று ஆடினார். மைதானத்தின் எல்லா மூலைகளிலும் பந்துகள் பறக்க ஆரம்பித்தன. மதன்லால் (39 பந்துகளில் 17), கிர்மானி (56 பந்து களில் 24) ஆகியோர் துணையுடன் கபில் அணியின் எண்ணிக்கையை 266க்குக் கொண்டுவந்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 138 பந்துகளை எதிர்கொண்டு 175 ரன்களைக் கபில் அடித்தார். 16 ஓவர்களில் கிர்மானியுடன் இணைந்து 126 ரன் எடுத்தார். இதுதான் இன்றுவரை உலகக் கோப்பைப் போட்டிகளில் 9-வது விக்கெட்டுக்கு அதிகபட்ச ஸ்கோர். கபிலின் மிகவும் துல்லியமாகவும் கவனமாகவும் அவர் ரன் குவித்தார். 49-வது ஓவரில் சதம் அடித்த அவர் அடுத்த 11 ஓவர்களில் 75 ரன் அடித்தார். தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே 235 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது.

 

 

கபிலின் கிரிக்கெட் வாழ்வில் மட்டுமின்றி உலகக் கோப்பை வரலாற்றிலும் ஒரு நாள் பந்தயங்களிலும் மறக்கவே முடியாத ஆட்டமாக அது அமைந்துவிட்டது. அந்த இன்னிங்ஸ் இல்லாவிட்டால் இந்தியாவுக்கு உலகக் கோப்பை கிடைத்திருக்காது என்று உறுதியாகச் சொல்லலாம். இரண்டு வெற்றி, இரண்டு தோல்விகளுடன் ஜிம்பாப்வேயை எதிர்கொண்ட இந்தியா அந்தப் போட்டியில் தோற்றிருந்தால் அரை இறுதிக்குச் செல்லும் வாய்ப்பு மிகவும் குறைந்திருக்கும்.

அந்த ஆட்டமும் அதன் பிறகு பெற்ற கோப்பையும் இந்தியாவை உலகின் முக்கியமான அணிகளுள் ஒன்றாகத் தலைநிமிரவைத்தன. இன்றளவிலும் அந்த நிலை தொடர்கிறது. அதற்கு அஸ்திவாரம் போட்டது கபிலின் அந்த ஒரு நாள் ஆட்டம் என்று சொன்னால் அதில் மிகை இருக்காது.

 

அணிகள் கடந்து வந்த பாதைகள்

இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற முதல் சுற்று ஆட்டங்களில் ஒவ்வொரு அணிக்கும் ஆறு ஆட்டங்கள். மே.இ. தீவுகள், ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, இந்தியா ஆகியவை ஒரு பிரிவு. இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகியவை இன்னொரு பிரிவு.

மே.இ. தீவுகள், இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பலம் பொருந்தியவையாக இருந்தன. ஆனால், ஆஸ்திரேலியா பின்தங்கியது. இந்தியா ஆஸ்திரேலியாவையும் ஜிம்பாப்வேயையும் விடச் சிறப்பாக ஆடி நான்கு வெற்றிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா 2 போட்டிகளில் மட்டுமே வென்றது.

ஜிம்பாப்வேயுடனான போட்டியில் தோற்றது ஆஸ்திரேலிய அணிக்குப் பெரிய அதிர்ச்சியைத் தந்தது. அது ஜிம்பாப்வேயின் முதல் சர்வதேசப்போட்டி என்பதும் குறிப்பிடத் தக்கது. அதன் பிறகு ஜிம்பாப்வேயிடம் ஆஸ்திரேலியா பல ஆண்டுகளுக்கு ஒரு போட்டியில்கூடத் தோற்கவில்லை. 31 ஆண்டுகள் கழித்து அண்மையில்தான் ஜிம்பாப்வே ஆஸ்திரேலியாவை வென்றது.

 

 

மே.இ. தீவுகளும் இங்கிலாந்தும் தலா ஐந்து போட்டிகளில் வென்று தத்தமது பிரிவில் முன்னணியில் இருந்தன. பாகிஸ்தானும் நியூசிலாந்தும் தலா மூன்று போட்டிகளில் வென்றன. புள்ளிகள் கணக்கில் முன்னைலை பெற்ற பாகிஸ்தான் அரை இறுதிக்கு வந்தது. இரண்டு அரை இறுதிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் இடம்பெற்றதால் இரண்டு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதும் நிலை உருவாகலாம் என்னும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் மேற்கிந்தியா பாகிஸ்தானை வென்றது. இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு போட்டியிலும் மோதிக்கொள்ளாத உலகக் கோப்பை ஆட்டமாக 1983 போட்டித் தொடர் அமைந்துவிட்டது.
 

 

http://tamil.thehindu.com/sports/1983-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6820890.ece

  • தொடங்கியவர்

1983 உலகக் கோப்பை: இந்திய கிரிக்கெட்டின் பொன்னான நேரம்

 

லண்டன் லார்ட்ஸ் மைதானம். இலக்கு 184. ஆடுவது மேற்கிந்தியத் தீவுகள் அணி. மூன்று நாட்களுக்கு முன்புதான் கிட்டத்தட்ட இதே அளவு இலக்கைச் சர்வசாதாரணமாக அடித்து தூள் கிளப்பியிருந்தது அந்த அணி. இறுதிப் போட்டியில் இந்தியாவை 183 ரன்களுக்குள் சுருட்டியதுமே மே.இ. அணிக்குக் கோப்பை கைக்கு வந்ததைப் போன்ற உணர்வு ஏற்பட்டுவிட்டது.

மே.இ. தீவுகள் அணியின் ஓய்வறையில் இருந்த மனநிலையைப் பற்றி உறுதிப்படுத்தப்படாத சம்பவம் ஒன்று சொல்லப்படுவதுண்டு. 184 ரன்தானே, ஹெய்ன்ஸும் கிரீனிட்ஜும் அடித்துவிடுவார்கள், அவர்கள் மிச்சம் வைத்தால் அடுத்து ரிச்சர்ட்ஸும் கோம்ஸும் பார்த்துக்கொள்வார்கள், நான் ஷாப்பிங் போகிறேன் என்று பந்து வீச்சாளர் மால்கம் மார்ஷல் சொன்னாராம்.

இந்த ரன்னுக்கெல்லாம் தான் களம் இறங்க வேண்டியிருக்காது என்று நினைத்தது மார்ஷலின் தவறு அல்ல. அவரை இறங்கவைத்தது முன்னணி மட்டையாளர்களின் தவறு.

 

 

ஸ்ரீகாந்தின் அதிரடி

டாஸ் வென்ற லாயிட்ஸ் இந்தியாவை பேட்டிங் செய்யப் பணித்தார். கவாஸ்கர் விரைவில் ஆட்டமிழந்தாலும் ஸ்ரீகாந்த் ஆக்ரோஷமாக ஆடி 38 ரன் எடுத்தார். ஆன்டி ராபர்ட்ஸின் பவுன்சர்களில் அவர் பவுண்டரியும் சிக்சரும் அடித்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

ஆனால் மற்றவர்கள் சரியாக ஆடவில்லை. பந்து வீச்சின் உக்கிரம் யாரையும் நிற்கவிடவில்லை. அமர்நாத்தும் (28) சந்தீப் பாட்டீலும் (27) மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்தார்கள். அவர்களுக்கு அடுத்து அதிக ரன்கள் (20) வந்தது உபரிகள் மூலமாகத்தான்.

 

54.4 ஓவர்களில் 183க்கு இந்தியா ஆட்டமிழந்த பிறகு மே.இ. அணியின் உற்சகம் கரைபுரண்டது. ஹெய்ன்ஸும் கிரீனிட்ஜும் பதற்றமில்லாமல் ஆடத் தொடங்கினர். ரன்கள் குறைவாக இருந்ததால் விக்கெட்களை வீழ்த்தினால்தான் விமோசனம் என்பதால் டெஸ்ட் போட்டியைப் போலத் தாக்குதல் வியூகம் அமைத்தார் கபில்.

ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே பல்வீந்தர் சிங் சந்து வீசிய ஒரு ஒரு பந்தை ஆட விரும்பாமல் கிரீனிட்ஜ் மட்டையை உயர்த்தினார். அது இன்ஸ்விங்கர் என்பதை அவர் கணிக்கவில்லை. கிரீனிட்ஜின் கை உயர்த்தியிருக்க, பந்து உள்ளே புகுந்து ஆஃப் ஸ்டெம்பைச் சாய்த்தது. இந்தியாவின் நம்பிக்கை துளிர்த்தது. ஸ்கோர் 5-1.

 

 

மறக்க முடியாத கேட்ச்

ஆனால் 50 ரன்களை எட்டும்வரை அடுத்த விக்கெட் விழவில்லை. ரிச்சர்ட்ஸும் ஹெய்ன்ஸும் அலட்டிக்கொள்ளாமல் ஆடிக்கொண்டிருந்தார்கள். குறிப்பாக ரிச்சர்ட்ஸ் வழக்கமான அதிரடியை மேற்கொண்டார். 28 பந்துகளில் 33 ரன் அடித்தார். ரிச்சர்ட்ஸ் ஆடிய ஆட்டம் இந்திய அணியினரின் ஊக்கத்தை அடித்துத் துரத்துவதுபோல இருந்தது. ஸ்கோர் 50ஆக இருக்கும்போது ஹெயின்ஸ் (13) ஆட்டமிழந்தாலும் ரிச்சர்ட்ஸின் தாண்டவத்தைப் பார்க்கும்போது ஆட்டம் முடிந்தது என்றே தோன்றியது.

அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. மதன்லாலின் பந்து ஒன்றை ரிச்சர்ட்ஸ் புல் ஷாட் அடித்தார். பந்தின் தையல் பகுதி தரையில் பட்டதில் பந்து எழும்பியதும் சற்றுத் திசை மாறியது. மட்டையின் மத்தியில் படாமல் சற்றே மேலே பட்டு உயர எழும்பியது. மிட் விக்கெட் திசையில் நின்றிருந்த கபில் தலையை அண்ணாந்து பந்தைப் பார்த்தபடி பின்னால் ஓடினார். பந்து பறந்த திசையைக் கணித்தபடி ஓடினார். பந்து விழும் இடத்தைச் சரியாகக் கணித்து கேட்ச் பிடித்தார். அப்போது ஸ்கோர் 57-3. இந்திய அணியினரின் நம்பிக்கை புத்துயிர் பெற்றது.

 

 

ஸ்கோர் 66 ஆக இருக்கும்போது கோம்ஸும் லாயிடும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து பேச்சஸ் ஆட்டமிழந்தார். ஸ்கோர் 76-6. அடுத்து ஜோடி சேர்ந்த ஜெஃப் துஜோனும் மார்ஷலும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து பொறுமை காட்டினார்கள். இவர்கள் இருவரும் ஸ்கோரை மெல்ல மெல்ல உயர்த்தினார்கள். மே.இ. அணி 100 ரன்களைக் கடந்தது. நெருக்கடியையும் அது கடந்துவிடும் என்று தோன்றியது.

அப்போது மீண்டும் ஒரு திருப்பம் நிகழ்ந்தது. அமர்நாத்தின் புதிரான பந்து வீச்சு துஜோனின் ஸ்டெம்பைத் தட்டிச் சென்றது. துஜோன் நொந்துபோனார். அணியின் நிலை மீள முடியாத கட்டத்தை எட்டிவிட்டது என்பதை உணர்ந்த அவர் பெரும் வேதனையுடன் பெவிலியன் திரும்பியதை அவரது உடல் மொழி உணர்த்தியது. அதைவிட வேதனையான தருணம் அவருக்குக் களத்தில் வாய்த்திருக்காது என்று சொல்லலாம்.

ஸ்கோர் 119-7. ஷாப்பிங் போக ஆசைப்பட்ட மார்ஷலும் அமர்நாத்தின் வீச்சில் கவாஸ்கரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஸ்கோர் 125-8. அடுத்து ராபர்ட்ஸ் விக்கெட்டை கபில் சாய்க்க, ஹோல்டிங்கை அமர்நாத் வெளியேற்றினார். மேற்கிந்தியத் தீவுகள் அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட்.

இந்திய ரசிகர்களின் உற்சாகம் கரைபுரண்டது. இந்திய அணியினர் பொங்கி வந்த ஷாம்பெயின் நுரையில் மிதந்தார்கள். கோப்பையைக் கையில் ஏந்தியபடி கபில் நிற்கும் காட்சி இந்திய கிரிக்கெட்டின் மகத்தான சித்திரங்களில் ஒன்றாக நிலைபெற்றுவிட்டது.

 

அந்தக் கோப்பை இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றை மாற்றியது. இந்தியாவில் கிரிக்கெட்டின் வீச்சைப் பல மடங்கு அதிகரிக்கச் செய்தது. ஒரு விதத்தில் கிரிக்கெட் இன்று இருக்கும் நிலைக்கு அஸ்திவாரம் என்றுகூட அந்த வெற்றியைச் சொல்லலாம். வேறு எந்த வெற்றியும் கிரிக்கெட் வரலாற்றை இந்த அளவுக்கு மாற்றி எழுதவில்லை.

 

கூட்டாகப் பெற்ற வெற்றி

கோப்பையை வென்ற பெருமையில் கபிலுக்கே முதல் மரியாதை. மட்டையிலும் பந்து வீச்சிலும் வியூகம் அமைப்பதிலும் சிறந்த பங்களிப்பை வழங்கி முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். ஆனால் மற்றவர்களின் பங்கும் முக்கியமானதுதான். குறிப்பாகப் பந்து வீச்சாளர்கள்.

தொடர் முழுவதும் முன்னணிப் பந்து வீச்சாளர்கள் அனைவரும் ஒரு ஓவருக்கு 4 ரன்னுக்கும் குறைவாகவே தந்தார்கள். ஸ்ரீகாந்த், சந்தீப் பாட்டீலின் அதிரடி, அமர்நாத், யாஷ்பாலின் ஸ்திரமான ரன் குவிப்பு, கிர்மானியின் விக்கெட் கீப்பிங் என அனைத்தும் சிறப்பாக அமைந்த தொடர் அது. அனைவரும் சிறப்பாக ஃபீல்டிங் செய்தார்கள்.

 

மதியூக வியூகம்

இறுதிப் போட்டி பற்றிப் பேசும்போது பின்னாளில் ஸ்ரீகாந்த் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார். கிளைவ் லாயிடுக்குக் காலில் அடிபட்டிருந்தது. அவர் முன் காலில் வந்து ஆடுவதற்குச் சிரமப்பட்டார். அதைக் கவனித்த இந்திய வீச்சாளர்கள் அவர் முன்னால் வந்து ஆடும் விதமாகவே பந்து வீசினார்கள். ரிச்சர்ட்ஸ் அவுட் ஆன நிலையில் சற்றே நெருக்கடிக்குள்ளான லாயிட் சிரமப்பட்டு ஆடிக்கொண்டிருந்தார்.

பின்னி வீசிய பந்தை முன்னால் வந்து அவர் அடித்த ஒரு ட்ரைவ் அவர் எதிர்பார்த்தபடி அமையாமல் மிட் ஆஃப் திசையில் இருந்த கபிலின் கையில் கேட்சாக மாறியது. லாயிட் ரிச்சர்ட்ஸைப் போன்ற மட்டையாளர் அல்ல என்றாலும் மிகவும் ஸ்திரமாக நின்று ஆடக்கூடியவர். அவரை வீழ்த்தத் தாமதமாகியிருந்தால் போட்டியை அவர் திசைதிருப்பியிருப்பார் என்பதால் இதுவும் முக்கியமான திருப்பம் என்றுதான் சொல்ல வேண்டும்.
 

http://tamil.thehindu.com/sports/1983-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article6823379.ece

 

  • தொடங்கியவர்

1987: இந்தியத் துணைக் கண்டத்தில் உலகக் கோப்பை

 

1987 உலகக் கோப்பைப் போட்டித் தொடர், கிரிக்கெட்டின் அதிகார மையம் இடம் மாறிய தருணமாக அமைந்தது.

 

1987 கிரிக்கெட் உலகக் கோப்பை. பல்வேறு ‘முதல்’ நிகழ்வுகளுக்காகவும், சில ‘கடைசி’ நிகழ்வுகளுக்காகவும், உலகக் கோப்பை வரலாற்றிலும் கிரிக்கெட் வரலாற்றிலும் நீங்கா இடம் பெற்று விட்டது. உலக கிரிக்கெட் நிர்வாக அதிகார மையத்தில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியதை உணர்த்துவதாக அமைந்த போட்டி இது.

அதுவரை, கிரிக்கெட்டின் ஏகபோக அதிகார மையங்களாக இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் இருந்துவந்த நிலைமாறி, மற்ற நாடுகளும் கிரிக்கெட் ஆட்டத்தின் நிர்வாக விஷயங்களைக் கையாளலாம் என்ற பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னணி சுவாரசியமானது.

 

கண்டம் விட்டு கண்டம் தாண்டி

 

1975, 1979, 1983 உலகக் கோப்பைப் போட்டிகள், கிரிக்கெட்டின் பிறப்பிடமான இங்கிலாந்திலேயே நடந்தன. இதை இப்படியே விடக் கூடாது என்ற எண்ணத்தில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய தெற்காசிய நாடுகள் முடிவெடுத்ததன் விளைவாகவே, உலகக் கோப்பை போட்டிகள் கண்டம் விட்டு கண்டம் தாண்டி, முதல் முறையாக, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்றது.

 

இதற்கான அஸ்திவாரத்தை 1983 உலகக் கோப்பை முடிந்ததுமே, இந்தியாவைச் சேர்ந்த, பின்னாளில் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தில் கோலோச்சிய ஐ.எஸ்.பிந்த்ரா, ஜக்மோகன் டால்மியா, என்.கே.பி.சால்வே ஆகிய மூவரும் போட்டுவிட்டார்கள்.

 

அவர்கள் மூவரும், 1983 உலகக் கோப்பைக்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஏர் மார்ஷல் நூர் கான், துணைத் தலைவர் ஆரிஃப் அப்பாஸி ஆகியோ ரைச் சந்தித்து ஆசியாவில் உலகக் கோப்பையை நடத்தும் தங்களது திட்டத்தினை விவரித்தனர். பாகிஸ்தான் தரப்பும் உற்சாகமாகப் பச்சைக் கொடி காட்டியது.

கிரிக்கெட் ஆட்டத்தில் மட்டுமின்றி, நிதிநிலையிலும் மிகப் பின்தங்கிய நிலையில் இருந்த இலங்கை யும் ஒத்துழைக்க முன்வந்தது. தங்களால் நிதி விவகாரத்தில் எந்த பங்களிப்பையும் தர இயலாது என்று இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் காமினி திஸ்ஸநாயகே தெளிவாகக் கூறிவிட்டார்.

 

ஆசிய நாடுகளின் சாதுரியம்

 

உலகக் கோப்பை போட்டிகளை ஆசியாவில் நடத்துவதற்காக எப்படிக் காய்களை நகர்த்துவது, என்று மூன்று நாடுகளின் கிரிக்கெட் நிர்வாகிகளும் லாகூரில் கூடி விவாதித்தனர். அதில், நிதி தொடர்பான ஆலோசனைகளைப் பெறுவதற்கு துபையில் பல கிரிக்கெட் போட்டிகளை நடத்திய அப்துல் ரெஹ்மான் புகாதிரின் ஆலோசனையை நாட முடிவெடுக்கப்பட்டது.

 

லாகூர் கூட்டத்துக்குப் பிறகு, ஆசியா வில் உலகக் கோப்பையை நடத்துவதற்கு அனுமதி அளிக்கக் கோரும் ஒரு வரைவறிக்கை தயாரிக்கப்பட்டது. அதனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) சமர்ப்பித்தபோது, எதிர்பார்த்தபடியே, இங்கிலாந்திடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்நாளில் ஐசிசியில் இங்கிலாந்தின் பிடி அதிகமாக இருந்ததால் அந்தக் கோரிக்கை உடனடியாக நிராகரிக்கப்பட்டது.

 

இருப்பினும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை நாடுகள் சாதுரியமாக வேறு வழியைக் கையாண்டு, சாமர்த்தியமாகக் காய்களை நகர்த்தின. ஆஸ்திரேலியாவை அணுகிய அவர்கள், இந்திய துணைக் கண்டத்தில் 1987 உலகக் கோப்பையை நடத்த ஆதரவளித்தால், அதன் பிறகு அடுத்தடுத்து நடக்கும் போட்டிகளை, சுழற்சி முறையில், ஐ.சி.சி. டெஸ்ட் போட்டி உறுப்பு நாடுகளில் நடத்த ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர்.

 

இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு இந்த ஆலோசனை மிகவும் பிடித்திருந்தபோதிலும், இங்கிலாந்தை எதிர்த்து வெளிப்படையாக அந்நாட்டால் வாக்களிக்க முடியாது. எனவே மறைமுகமாக ஆதரவு தருவதாக உறுதியளித்தது. ஆசிய நாடுகள் உறுதியளித்தபடி 1992 உலகக் கோப்பைப் போட்டிகள் ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் நடந்தன.

 

50 ஓவர் போட்டியாக நடத்திக்கொள்ளலாம்

 

இங்கிலாந்து தரப்போ, ஆசிய நாடுகளில் பகல் பொழுது நீண்ட நேரம் இருக்காது, அதனால் 60 ஓவர் (1983 கோப்பை வரை இரு அணிகளும் தலா 60 ஓவர்கள் விளையாட வேண்டும்) கிரிக்கெட் போட்டியை முழுவதுமாக நடத்தி முடிக்க அங்கு போதிய வெளிச்சம் இருக்காது என்று சப்பைக்கட்டு கட்டியது. அதற்கு ஆசியத் தரப்பினரோ, “அறுபது ஓவர்கள் விளையாட வேண்டும் என்பது கட்டாயம் அல்ல, அதனால் 50 ஓவர் போட்டிகளாக நடத்திக்கொள்ளலாம்” என்று வாதிட்டனர்.

வாக்கெடுப்பில் ஆசியத் தரப்பு வென்றது. தங்களுக்கு ஆதரவாக வாக்களித்தால் உலகக் கோப்பை வருவாயில் கணிசமான தொகையைக் கொடுப்பதாக உறுப்பு நாடுகளுக்கு ஆசியத் தரப்பு உறுதியளித்தது. அந்த ஆலோசனை நல்ல பயனை அளித்தது.

 

டெஸ்ட் போட்டிகளை விளையாடும் 8 நாடுகள் (ஒவ்வொரு நாட்டுக்கும் தலா 2 வாக்குகள்), மற்றும் இதர 21 சிறிய உறுப்பு நாடுகளிடமிருந்து (தலா ஒரு வாக்கு) கிடைத்த பெரும்பான்மையான ஆதரவுடன் ஆசியத் தரப்பு வென்றது. பிறகென்ன? இங்கிலாந்தில் மட்டுமே நடந்துவந்த உலக் கோப்பை கிரிக்கெட் போட்டி, முதல் முறையாக, கண்டம் தாண்டி, இந்தியாவுக்கு வந்தது.

 

அரசியலான கிரிக்கெட்

 

அதன் பிறகு, பிரச்சினை அரசியல் களத்துக்கு இடம்பெயர்ந்தது. இந்திய - பாகிஸ்தான் இடையே ராணுவ ரீதியான பதற்றங்கள் நிலவியதால் இரு நாடுகளும் இணைந்து இந்தப் போட்டியை நடத்த முடியுமா என்னும் சந்தேகம் ஏற்பட்டது.

அவ்வப்போது நடந்த ராணுவ அத்துமீறல்களால் ஏற்பட்ட சச்சரவுகளுக்கிடையே இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, பாகிஸ்தான் அதிபர் ஜியா உல் ஹக் ஆகியோரை கிரிக்கெட் நிர்வாகிகள் சம்மதிக்க வைத்தது தனிக்கதை. இரு நாடுகளுக்கிடையிலான பதற்றங்களைக் காரணம் காட்டி இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் போட்டியை ஆசியாவில் நடத்த எதிர்ப்புத் தெரிவித்தன.

 

பின்னர், ஒரு போட்டியில் ராஜீவையும், ஜியாவையும் அருகருகே அமரவைத்து, ‘ஒற்றுமையை’ ஆசியத் தரப்பு வெளிப்படுத்தியது. பல்வேறு அரசியல் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை நாடுகள், ஓரணியில் திரண்டு போராடிய கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றியென்பதால், அந்நாடுகளுக்கு இது சிறப்பான நிகழ்வாக அமைந்தது.

 

புதிய ஏற்பாடுகள்

 

முதல் முறையாக இங்கிலாந்துக்கு வெளியே நடந்த அந்த உலகக் கோப்பைப் போட்டியில், ஒரு அணி ஆடக்கூடிய மொத்த ஓவர்களின் எண்ணிக்கை 50ஆகக் குறைக்கப்பட்டது. முதன்முதலாக இருநாடுகள் இணைந்து நடத்திய உலகக் கோப்பையாகவும் அது அமைந்தது.

பொதுவான நடுவரை நியமிக்கும் வழக்கமும் முதன்முதலாக ஏற்படுத்தப்பட்டது, அதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி வரலாற்றி லேயே மிகவும் அதிகம் பேர் நேரிலும், தொலைக்காட்சியில் நேரடியாகவும் பார்த்து ரசித்த போட்டியாகவும் அது அமைந்தது. வெள்ளைச் சீருடை அணிந்து வீரர்கள் விளையாடிய கடைசி உலகக் கோப்பையாகவும் அமைந்தது.

 

இப்படியாகப் பல்வேறு மாற்றங் களைக் கொண்ட 1987 உலகக் கோப்பை, உலகக் கிரிக்கெட் நிர்வாகத்தில் இங்கிலாந்து என்ற மேற்கத்திய கிரிக்கெட் அதிகார மையத்தினை, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய கீழை நாடுகள் சேர்ந்து சாய்த்த நிகழ்வாக அமைந்தது. ஐசிசி நிர்வாகத்தில் பின்னாளில் இந்தியா மாபெரும் சக்தியாக உருவெடுக்கவும் அடிகோலியது.

(1987 ஆட்டங்களும் ஆச்சரியங்களும்: நாளை...)

 

 

http://tamil.thehindu.com/sports/1987-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/article6825782.ece

  • தொடங்கியவர்

1987: ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஆஸ்திரேலியா
 

 

1987-ம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையில் பங்கேற்க ஆஸ்திரேலிய மண்ணிலிருந்து புறப்பட்ட அணியே அதுவரை நடந்த உலகக் கோப்பை போட்டிகளுக்குத் தேர் வான அணிகளுள் மிக மோசமான அணி என்று அந்நாட்டுப் பத்திரிகைகளும், கிரிக் கெட் விமர்சகர்களும் வெளிப்படையா கவே விமர்சித்தனர். அனுபவமற்ற இளம் வீரர்களைக் கொண்டிருந்த அந்த அணி, கோப்பையை வெல்லும் என்று கனவிலும் பலர் நினைத்திருக்க மாட்டார்கள்.

 

 

அணிகளும் கணிப்புகளும்

1983 உலகக் கோப்பையை வென்ற பிறகு, 50 ஓவர் கிரிக்கெட்டில், இந்தியா ஒரு வலுவான அணியாக உருவாகியிருந்த தாலும், சொந்த மண்ணில் விளையாடுவதாலும், கோப்பையை வெல்வதற்கு இந்தியாவுக்கு அதிக வாய்ப்பிருப்பதாகக் கருதப்பட்டது. அதற்கடுத்தபடியாக இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கும், முந்தைய உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் இழந்ததை மீட்க, அதிரடி ஆட்டக்காரர் விவியன் ரிச்சர்ட்ஸ் தலைமையில் வந்திருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் வெற்றி வாய்ப்பு உள்ளதாகக் கணிக்கப்பட்டது.

 

ஆனால்,மேற்கிந்தியத் தீவுகள் அணி யில் சில பிரச்சினைகள் இருந்தன. மால்கம் மார்ஷல் நல்ல ஃபார்மில் இருந்தும் ஆட மறுத்துவிட்டார். ஜோயல் கார்னர் ஓய்வு பெற்றுவிட்டார். அதனால் கர்ட்னி வால்ஷ் போன்ற அனுபவமற்ற இளம் பவுலர்கள் இருந்ததால், பந்து வீச்சில் சற்று பலவீனமாகவே இருந்தது அந்த அணி.

ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் வா, டீன் ஜோன்ஸ், டாம் மூடி போன்ற துடிப்பான வீரர்கள் முதல் முறையாக இடம்பிடித்திருந்தனர். பயிற்சியாளர் பாப் சிம்ஸன், கேப்டன் ஆலன் பார்டர் இணைந்து வகுத்த வியூகத்தினைப் பின்பற்றி, அந்த இளம் அணி, நெருக்கடி யான சமயங்களில் துணிச்சலாகச் செயல்பட்டு, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக ஆடினார்கள். நெருக்கடியான நேரங்களில் ஸ்டீவ் வா சிறப்பான பங்களிப்பினை அளித்தார். நெருக்கடியான நேரங்களில் அலட்டிக்கொள்ளாமல் சிறப்பாக செயல்பட்ட அவருக்கு ‘ஐஸ் மேன்’ என்ற செல்லப் பெயரும் கிடைத்தது.

 

 

இந்தியாவின் பயணம்

இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் ‘ஏ’ பிரிவிலும், பாகி்ஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகள் ‘பி’ பிரிவிலும் இடம்பெற்றிருந்தன. இந்தியாவின் பிரிவில் ஆஸ்திரேலியாவைத் தவிர மற்ற இரு அணிகளின் பந்து வீச்சு பலவீனமானது என்பதால் பலமான பேட்டிங் வரிசையைக் கொண்டிருந்த இந்திய அணியின் அரையிறுதியை நோக்கிய பயணம் சற்று எளிதானதாகவே அமைந்துவிட்டது.

 

புள்ளிப் பட்டியலில் இந்தியா இரண்டாமிடத்தைப் பிடித்தால், அரை இறுதியில் வலுவான பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணான லாகூரில் எதிர்த்துக் களமிறங்க வேண்டும். அதைத் தவிர்க்க, நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற இந்தியா தீர்மானித்தது. வெற்றி இலக்கான 222-ஐ, 33.2 ஓவர்களிலேயே இந்தியா எட்டிப்பிடித்து, புள்ளிகள் கணக்கில் முதலிடத்தைப் பிடித்து, மும்பையில் இங்கிலாந்துடன் அரையிறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொண்டது. இந்தப் போட்டியில் சுனில் கவாஸ்கர் ஒருநாள் போட்டிகளில் தன் ஒரே சதத்தை அடித்தார்.

ஆனால் அதுவரை நன்கு பரிமளித்துவந்த இந்திய பேட்டிங், அரை இறுதிப் போட்டியில் சொதப்பியது. இந்தியா தோற்றது.

 

 

அயராத ஆஸ்திரேலியா

மற்றொரு அரை இறுதியில், மெக்டெர் மாட்டின் (44 ரன்-5 விக்கெட்) அற்புதமான பந்து வீச்சினால் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிக்குத் தகுதி பெற்றது ஆஸ்திரேலியா. போட்டியைக் கூட்டாக நடத்தக் கடும் முயற்சி மேற்கொண்ட இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் மோதும் என்று இரு நாட்டவரும் ஆர்வமாய் எதிர்பார்த்திருக்க, மற்றொரு பரம வைரிகளான ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் மோதும் போட்டியாக அமைந்துவிட்டது.

 

அரையிறுதியில் போட்டியின் கடைசி ஓவரில் 18 ரன்களை ஸ்டீவ் வா விளாசினார். 266 ரன்களை ஆஸ்திரேலியா எடுத்தது. அப்போதெல்லாம் அது பெரிய ஸ்கோர்.

நம்பிக்கையுடன் களம் கண்ட பாகிஸ்தானுக்கு மெக்டெர்மாட் வடிவில் ஆபத்து காத்திருந்தது. 38 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர், ஜாவித் மியாண்டட்டும் (70), இம்ரான் கானும் (58) நிலைத்து ஆடி சரிவிலிருந்து மீட்டனர். எனினும், மெக்டெர்மாட் மீண்டும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதால் தடுமாறி, 249 ரன்களை மட்டுமே எட்டி பாகிஸ்தான் தோற்றது. ஸ்டீவ் வாவின் கடைசி ஓவர் அதிரடி ஆஸ்திரலேயா வென்றதற்கான முக்கியக் காரணம் என கேப்டன் பார்டர் பின்னர் பாராட்டினார்.

 

இவ்வாறாக ஆஸ்திரேலியா இறுதிப் போட்டியை அடைந்தது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் பூன் (75) சிறப்பான அடித்தளம் அமைத்தார். அடுத்து வந்த வீரர்களின் பொறுப்பான ஆட்டம் காரணமாக 5 விக்கெட் இழப்புக்கு 252 ரன்களை எடுத்தது. அரையிறுதியில் இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்தியதால், ஈடன் கார்டனின் திரண்டிருந்த 95,000 ரசிகர்களும் ஆஸ்திரேலியாவுக்கு ஆதரவளித்தனர்.

 

 

அடுத்து ஆடிய இங்கிலாந்து தடுமாறினாலும், மைக் கேட்டிங்கின் அதிரடியால் வெற்றியை நெருங்கி வந்தது. ஆனால், தன்னை அலட்சியமாக எண்ணி கேட்டிங் அடித்து ஆட முற்படுவார் என கணித்த கேப்டன் பார்டர், அவரே பந்துவீச வந்தார். எதிர்பார்த்தபடியே முதல் பந்திலேயே ‘ரிவர்ஸ் ஸ்வீப்’ ஷாட் ஆடினார். பந்து கேட்டிங்கில் கையுறையில் பட்டு கீப்பரிடம் கேட்சாக மாறியது. அதுபோல் 45 பந்தில் 55 ரன் குவித்த லாம்பும் வீழ்ந்தார். கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டபோது, 10 ரன்களை மட்டும் எடுத்த இங்கிலாந்து, 7 ரன் வித்தியாசத்தில் கோப்பையை இழந்தது.

 

 

பிரம்மிக்க வைத்த ஸ்டீவ் வா

இந்தியாவுடனான முதல் லீக் போட்டியில், கடைசி ஓவரில் 19 ரன்களை அடித்தது மட்டுமின்றி, இந்தியா பேட் செய்தபோது கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் 4 ரன்களை மட்டுமே கொடுத்து, ஒரு ரன் வித்தியாசத்தில் ஆஸி வெற்றி பெறக் காரணமாய் அமைந்தார் வா.

நியூஸிலாந்து அணியுடனான ஆட்டத்தில், கடைசி ஒவரில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்றிருந்தபோது, வெறும் 3 ரன்களை மட்டுமே கொடுத்தார். இங்கிலாந்தின் ஆலன் லாம்ப்பை இறுதிப் போட்டியில் 47-ஆவது ஓவரி்ல் அவுட்டாக்கி, ஆஸி வெற்றியை உறுதிப்படுத்தியவர் ஸ்டீவ் வா.

ஸ்டீவ் வா

 

 

புற்றுநோயை மறைத்து விளையாடியவர்

ஆஸ்திரேலிய அணி, கோப்பையை வென்று நாடு திரும்பிய பிறகு, அந்த அணியில் இடம்பெற்றிருந்த பந்து வீச்சாளர் சைமன் ஓ டோனலுக்கு, நிணநீர் புற்றுநோய் இருக்கும் தகவல் வெளியானது. இது ஆஸ்திரேலிய அணியினருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது, உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு முன்பாகவே, சைமனுக்குத் தெரியும் என்பதையும், அவர் அதை மறைத்துவிட்டுத் துணிவுடன் விளையாடியதும் தெரியவந்ததும் ஆஸ்திரேலிய அணியினர் பேரதிர்ச்சியடைந்தனர்.

சைமன் பிறகு புற்றுநோயிலிருந்து மீண்டார். இது உலகக் கோப்பை வெற்றியை மேலும் இனிமையாக்கியது என்று ஒரு பேட்டியி்ல ஆலன் பார்டர் கூறியிருந்தார். தற்போது ஆரோக்கியமாக இருக்கும் சைமன் ஒ டோனல், தன் நாட்டில் நடக்கவிருக்கும் உலகக் கோப்பையைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறார்.

 

http://tamil.thehindu.com/sports/1987-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/article6829274.ece

 

 

  • தொடங்கியவர்

1987: முடிவை நிர்ணயித்த ஸ்வீப் ஷாட்

 

இறுதிப் போட்டியை உறுதியாக எட்டும் எனக் கருதப்பட்ட இந்தியா அரையிறுதியில் மும்பையில் இங்கிலாந்தைச் சந்தித்தது. இந்திய ஸ்பின்னர்களைச் சமாளிக்க இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் கிராஹாம் கூச் ஒரு வியூகத்தோடு களமிறங்கினார். அன்று அவர் ஒரு காலில்தான் ஆடினார் எனக் கூறலாம்.

ரவி சாஸ்திரி, மணீந்தர் சிங் ஆகியோரது பந்துகளை ஒரு காலில் முட்டி போட்டு போட்டு ‘ஸ்வீப்’ (துடைப்பத்தால் பெருக்குவது போல்…) ஷாட்டை ஆடிக்கொண்டேயிருந்தார். பெருக்கி, பெருக்கியே’ ஸ்கோரைக் கூட்டிய கூச், 115 பந்துகளில் 136 ரன் எடுத்து ஸ்டம்பிங் முறையில் அவுட்டானார். இந்தியா, வெற்றி இலக்கான 255-ஐ எட்ட முடியாமல் 219 ரன்னில் ஆட்டமிழந்து போட்டியை விட்டு வெளியேறியது.

 

 

ஆனால், அதே ஸ்வீப் ஷாட் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் தோல்விக்கு முக்கியக் காரணமாக இருக்கும் என்று யாரும் அப்போது கணித்திருக்க மாட்டார்கள். இங்கிலாந்து கேப்டன் கேட்டிங், இறுதிப் போட்டியில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்துகொண்டிருந்தார். இங்கிலாந்தின் வெற்றி உறுதி என்று ஆஸ்திரேலிய வீரர்களும் எண்ணியிருப்பார்கள். ஆனால், அப்போது ஒரு திருப்பம் நிகழ்ந்தது.

 

 

பகுதி நேர ஸ்பின்னரான ஆஸி. கேப்டன் ஆலன் பார்டர், தானே பந்து வீச முடிவெடுத்தார். தனது பந்தினை அலட்சியமாக எண்ணி அடித்து அடித்து ஆட கேட்டிங் முற்படுவார்; அப்போது விக்கெட் விழலாம் என்ற அவரது கணிப்பு பலித்தது. அவரது முதல் பந்தையே, ‘ரிவர்ஸ் ஸ்வீப்’’ செய்ய கேட்டிங் முயன்றார்.

ஆனால், பந்தோ, கிளவுஸில் பட்டு கீப்பரிடம் கேட்சாக மாறியது. 7 ரன் வித்தியாசத்தில் ஆஸி. வென்றது. கேட்டிங் இருந்திருந்தால் இங்கிலாந்து வென்றிருக்கக்கூடும். கூச்சின் திறமையான பெருக்கலால்’ இறுதியை அடைந்த அந்த அணி, கேப்டனின் சமயோசிதமற்ற (ரிவர்ஸ்) ‘பெருக்கலால்’ கோப்பையை இழந்தது.

 

 

களங்கத்தைத் துடைத்த ஹாட்டிரிக்

சேத்தன் ஷர்மா என்றாலே 1986-ல் ஷார்ஜா கோப்பை இறுதிப் போட்டியின் கடைசி ஓவரில் அவரது பந்தில் மியாண்டட் அடித்த ‘வெற்றி’ சிக்ஸர்தான் நினைவுக்கு வரும். போட்டிகளில் அது சகஜம்தான் என்றாலும், சர்மாவை ஏதோ ஒரு குற்றவாளி போலவே தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் கருதினர். அந்த அவப் பெயரினை நிரந்தரமாக அழிக்க உலகக் கோப்பையில் அவர் நிகழ்த்திய ஹாட்ரிக் சாதனை உதவியது.

 

நன்றாக ஆடிக்கொண்டிருந்த கென்ரூதர்ஃபோர்டின் ஸ்டெம்பைத் தனது இன்கட்டரால் சாய்த்தார் ஷர்மா. தொடர்ந்து, இயன் ஸ்மித் வந்தார். மீண்டும் இன்கட்டரை ஷர்மா வீச மீண்டும் ஸ்டெம்ப் கழன்றது. நாக்பூர் ரசிகர்கள் துள்ளிக் குதித்தனர். ஹாட்ரிக் பரபரப்பு எங்கும் தொற்றிக்கொண்டது. கேப்டன் கபில் தேவ் ஷர்மாவின் அருகில் சென்று சற்று நேரம் பேசினார்.

 

பிறகு ஷர்மா அடுத்த பந்தை வீசினார். அது சாட்பீல்டின் கால்களுக்குள் புகுந்து ஸ்டம்பைத் தாக்கியது. உலகக் கோப்பைப் போட்டிகளில் முதல் ஹாட்ரிக் எடுத்தவர் என்னும் பெருமையை ஷர்மா பெற்றார். அந்தச் சாதனையைப் புரிந்த முதல் இந்தியரும் அவரே.

 

அந்த இரு ரன்கள்!

ஒரு நிமிடத்தின் மதிப்பு என்ன என்பதை ஒரு நிமிடத்தில் ரயிலைத் தவறவிட்டவரைக் கேட்டால்தான் தெரியும். ஒரு ரன்னில் தோற்ற அணிக்குத்தான அந்த ஒரு ரன்னின் அருமை புரியும். இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதல் லீக் போட்டியில் இந்தியா ஒரு ரன்னில் தோல்வியடைந்தது. அதற்கு ஸ்டீவ் வா சிறப்பாக வீசிய கடைசி ஓவர் காரணமாக இருந்தாலும் மற்றொரு சுவாரசியமான பின்னணியும் உள்ளது.

 

முன்னதாக, ஆஸி இன்னிங்ஸின்போது ரவி சாஸ்திரி வீசிய ஓவரில் ‘லாங் ஆன்’ திசையில் பந்தினைத் தூக்கி அடித்தார் டீன் ஜோன்ஸ். அது பவுண்டரியா, சிக்ஸரா என்று நடுவர் டிக்கி பேர்டால் கணிக்கமுடியவில்லை. பந்தினை வீசிய சாஸ்திரியோ, அது பவுண்டரி என்று கூறியதும், நடுவரும் பவுண்டரி என சிக்னல் கொடுத்துவிட்டார். ஆனால் ஆஸி தரப்போ அது சிக்ஸர் என்று கருதியது. அந்த இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலியா 268 ரன்கள் எடுத்திருந்தது.

உணவு இடைவேளையின் போது, போட்டி நடுவர் ஹனீப் முகம்மதுவிடம், சிக்ஸர் பற்றி ஆஸ்திரேலியா முறையிட்டது. கபில் தேவிடம் போட்டி நடுவர் விவாதித்தார். கபில்தேவோ 2 ரன்கள்தானே என நினைத்து அதை சிக்ஸராகக் கணக்கில் எடுத்துக்கொள்ள ஒப்புக்கொண்டார். ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 270 ஆனது. தொடர்ந்து ஆடிய இந்தியா, 269 ரன்களை எடுத்து ஒரு ரன்னில் தோல்வியடைந்தது.

ஆனால், அடுத்த லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்து இந்தியா பழிதீர்த்துக்கொண்டது. அதுதான் அத்தொடரில் ஆஸி பெற்ற ஒரே தோல்வி.

 

பெருந்தன்மையால் அரையிறுதி வாய்ப்பை இழந்த அணி

வெற்றி பெற்றால் அரையிறுதிக்குப் போகலாம் என்ற நிலையில் பாகிஸ்தானுடன் தனது கடைசி லீக் போட்டியில் மேற்கிந்தியத் தீவு விளையாடியது. இம்ரான் கானின் சிறப்பான பந்து வீச்சால் 216 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது கரீபியன் அணி. அடுத்து ஆடிய பாகிஸ்தான் 183-க்கு 5 விக்கெட் என்ற வலுவான நிலையில் இருந்தது. வால்ஷ், பேட்டர்சனின் பந்து வீச்சால், மேலும் 20 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

 

அதனால், கடைசி ஓவரில், ஒரு விக்கெட் மட்டும் கைவசம் இருக்க, 14 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது. வால்ஷ் வீசிய அந்த ஓவரில் அப்துல் காதிர் சிக்ஸர் அடித்ததால் ஆட்டத்தின் போக்கு மாறியது. கடைசி பந்தில் 2 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது.

கடைசிப் பந்தை வீச ஓடி வந்தபோது, ரன்னர் சலீம் ஜாபர் அவசரப்பட்டு கிரீஸைத் தாண்டிப் போய்விட்டார். வால்ஷ் நினைத்திருந்தால் அவரை ரன் அவுட் ஆக்கியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் வெறுமனே எச்சரித்துவிட்டு மீண்டும் பந்து வீசினார். அந்தப் பந்தில் அப்துல் காதிர் 2 ரன்னை எடுத்தார். பாகிஸ்தான் வென்றது. வேறு எந்த பவுலராக இருந்தாலும், அரையிறுதி செல்லும் வாய்ப்பை நழுவவிட்டிருப்பார்களா என்பது சந்தேகமே. 1983-ல் இழந்ததை மீண்டும் வெல்லலாம் என்ற கனவில் விவ் ரிச்சர்ட்ஸின் தலைமையில் வந்திருந்த அந்த அணி, வால்ஷின் பெருந்தன்மையால் வாய்ப்பை நழுவவிட்டது.

 

வால்ஷ் செய்த்து சரியா என்று போட்டி முடிந்ததும் ரிச்சர்ட்ஸிடம் கேட்கப்பட்டது. அவர் வால்ஷை முழுமையாக ஆதரித்தார். “நாங்கள் அப்படியேல்லாம் போட்டியை வெல்வதில்லை” என்றார் ரிச்சர்ட்ஸ். அதுதான் ரிச்சர்ட்ஸ். அதுதான் மே.இ. தீவுகள் அணியின் கம்பீரம்.

 

கவாஸ்கரின் ஒண்ணே ஒண்ணு.!

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரான கவாஸ்கர், டெஸ்ட் போட்டிகளில் 34 சதங்களைக் கண்டிருந்தாலும், ஒரு நாள் போட்டிகளில் சதம் அடிக்காமல் இருந்தார். 13 ஆண்டுகளில் சுமார் 100 போட்டிகளில் ஆடி, 27 அரைசதங்கள் அடித்திருந்தாலும், சதம் அடிக்காதது ஒரு பெரிய குறையாகவே இருந்துவந்தது.

அந்தத் தருணத்தைத் தனது கடைசி சர்வதேசத் தொடரான 1987 உலகக் கோப்பைக்காகப் பத்திரப்படுத்தி வைத்திருந்தாரோ என்னவோ? அரையிறுதியில் பாகிஸ்தானுடன் மோதுவதைத் தவிர்க்க, கடைசி லீக் ஆட்டத்தில் (சேத்தன் சர்மா ஹாட்ரிக் போட்டி) நியூசிலாந்தை அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடிக்கவேண்டியிருந்தது. அப்போட்டியில் 88 பந்துகளில் தனது முதல் சதத்தினை (103) எடுத்த கவாஸ்கர், வெற்றி இலக்கான 222-ஐ, 32.1-ம் ஓவரிலேயே எட்ட உதவினார்.
 

 

http://tamil.thehindu.com/sports/1987-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/article6831290.ece

  • தொடங்கியவர்

1983 உலககோப்பை: இந்தியாவுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு சக வீரர்களிடம் பேச மறுத்த ஜொயெல் கார்னர்
3346g3l.jpg
 1983 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆண்டி ராபர்ட்ஸ் விக்கெட்டை கபில் வீழ்த்த அருகில் யாஷ்பால் சர்மா கொண்டாட மிகுந்த ஏமாற்றத்தில் ஜொயெல் கார்னர். | கோப்புப் படம்.

 

1983-ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி மே.இ.தீவுகள் அணியை வீழ்த்தி உலகக்கோப்பையைக் கைப்பற்றியது அந்த அணியின் ஜொயெல் கார்னரை மிகவும் பாதித்தது.

மே.இ,.தீவுகளின் உலகப்புகழ் பெற்ற வர்ணனையாளர் டோனி கோசியர், தனது ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போ பத்தியில் அந்த நாள் பற்றியும், ஜொயெல் கார்னரின் மனநிலை பற்றி எழுதியுள்ளார்.

183 ரன்களை இந்தியா எடுக்க மே.இ.தீவுகள் 140 ரன்களுக்குச் சுருண்டது. இந்திய கிரிக்கெட் வாழ்வின் மிகப்பெரிய திருப்பு முனை வெற்றி மற்றொரு அணிக்கு சரிவின் தொடக்கமாக அமைந்த்து.

 

 

டோனி கோசியர் அந்தப் பத்தியில் கூறும்போது ஜொயெல் கார்னர் கூறியதை மேற்கோள் காட்டியுள்ளார், அதாவது 1983 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் அடைந்த தோல்வி வேகப்பந்து வீச்சாளர் ஜொயெல் கார்னரையே அதிகம் பாதித்தது என்கிறார்.

கார்னர் கூறியதை அவர் மேற்கோள் காட்டும்போது, “நான் நீண்ட நாட்களுக்கு, அதாவது, 2 அல்லது 3 மாதங்களுக்கு என் அணி வீரர்களிடத்தில் பேசவேயில்லை. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் 1983 இறுதிப் போட்டி தோல்வி மிகப்பெரிய ஏமாற்றமளித்த ஒரு கிரிக்கெட் நிகழ்வாகும். 183 ரன்கள்தானே என்ற அலட்சியமே தோல்விக்குக் காரணம், அதீத தன்னம்பிக்கை மிகவும் மோசமானது என்பதை உணர்ந்தோம்.” என்று கார்னர் அப்போது கூறினார்.

 

 

போட்டியின் போது கார்னரும், மார்ஷலும் பேசிக்கொண்ட போது, மார்ஷலை நோக்கி கார்னர் ‘நாம் களமிறங்க வேண்டிய தேவை இருக்குமா?” என்றார் அதற்கு மால்கம் மார்ஷல், ஆம். அப்படி ஒரு நிலைமை வந்தாலும் வரலாம், என்று பதில் அளித்தார்.

 

மார்ஷல் மேலும் கார்னரிடம் கூறும்போது, “சிறிய ரன் எண்ணிக்கையைத் துரத்தும் போது அனைவரும் தனக்கு அடுத்து வருபவர் வெற்றிக்கு அழைத்துச் செல்வார் என்று நினைப்பார்கள். அப்படிப்பட்ட நிலை தோன்றினால் நமக்கு சிக்கல்தான்.” என்று மால்கம் மார்ஷல் ஒரு தீர்க்க தரிசியைப் போல் கூறியுள்ளார்.

மால்கம் மார்ஷல் கூறியது கிரிக்கெட் அரங்கில் ஒரு மனோவியல் கூறாகும். சிறிய ரன் எண்ணிக்கையைத் துரத்தும் போது நிச்சயம் நாம் அவுட் ஆனால் கூட அடுத்து வருபவர் ஆட்டத்தை வெற்றி பெறச் செய்து விடுவார் என்று நினைப்போம் என்று மால்கம் மார்ஷல் கூறியிருப்பது சிறிய ரன் இலக்கை எடுக்க முடியாது தோல்வி அடையும் பெரிய அணிகளுக்கு ஒரு சிறந்த மனோவியல் பாடமாகும்.

 

http://tamil.thehindu.com/sports/1983-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9C%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/article6834647.ece
 

 

  • தொடங்கியவர்

1992: வண்ணமயமான உலகக் கோப்பை

 

உலகக் கோப்பை கிரிக் கெட்டை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் சென்ற தொடர் என்றால், 1992-ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பைத் தொடர்தான் அது. ஆஸ்திரேலியா - நியூசிலாந்தில் நடைபெற்ற இந்த உலகக் கோப்பைத் தொடர் ரசிகர்களுக்குப் புதிய விருந்து படைத்தது என்றுகூடச் சொல்லலாம். வெள்ளை உடையில் ஒரு நாள் போட்டிகளை விளையாடிய வீரர்கள் வண்ண உடைகளுக்கு மாறினார்கள்.

அழகான மைதானங்கள், வெள்ளைப் பந்து, பகல்-இரவு ஆட்டங்கள், கறுப்புத் திரைகள், ரீப்ளே காட்டும் போர்டுகள், ஸ்டெம்ப் விஷன், புதிய கிரிக்கெட் விதிமுறை எனப் புதிய பரிணாமம் பெற்றிருந்தது இந்தத் தொடர்.

vql5ar.jpg

 

ஒன்பது அணிகள்

1975-ம் ஆண்டு முதல் 1987-ம் ஆண்டு வரை நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் 8 அணிகளே பங்கு பெற்றன. முதல் முறையாக இந்தத் தொடரில் 9 அணிகள் களம் கண்டன. புதிய அணியாகத் தென்னாப்பிரிக்கா அறிமுகமானது. இனவெறிக் கொள்கை காரணமாக சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சிலில் இருந்து விலக்கப்பட்ட தென்னாப்பிரிக்கா 1991-ம் ஆண்டு மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இதனால் தென்னாப்பிரிக்காவுக்கு வாய்ப்பு கிடைத்தது.

இதற்கு முந்தைய உலகக் கோப்பைத் தொடர்களில் அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. ஆனால் இந்த உலகக் கோப்பையில் அணிகள் பிரிக்கப்படவில்லை. 9 அணிகளை இரண்டாகப் பிரிக்க முடியவில்லை. எனவே எல்லா அணிகளும் ஒவ்வொரு அணியு டனும் மோதுவதுபோல அட்ட வணையை மாற்றியமைத் தார்கள். (1992-ம் ஆண்டு மட்டுமே இப்படி ஒரு முறை பின்பற்றப்பட்டது. அதன் பிறகு இப்போது வரை அணிகள் பிரிவுகளாகவே பிரிக்கப்படுகின்றன).

 

 

சச்சின் அறிமுகம்

இந்திய அணியைப் பொறுத்த வரை அனுபவமும் இளமையும் கலந்த அணியாகவே காட்சி யளித்தது. 1987-ம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடிய வீரர்களில் கபில்தேவ், அசாருதீன், காந்த், மனோஜ் பிரபாகர், கிரண் மோரே, ரவிசாஸ்திரி ஆகியோர் மட்டுமே 1992 உலகக் கோப்பையில் இடம் பெற்றிருந்தார்கள். இந்த உலகக் கோப்பைத் தொடர்தான் சச்சின் டெண்டுல்கர் விளையாடிய முதல் தொடர்.

சச்சின் டெண்டுல்கர் போலவே விநோத் காம்ப்ளி, அஜய் ஜடேஜா, ஜவகல் ஸ்ரீநாத், பிரையன் லாரா, ஜாண்டி ரோட்ஸ், இன்சமாம்-உல்-ஹக் ஆகியோருக்கும் இது முதல் உலகக் கோப்பையாக அமைந்தது. 1996-ம் ஆண்டு உலகக் கோப்பையில் சூறாவளி மட்டையாளராக உருவெடுத்த இலங்கையின் சனத் ஜெயசூர்யா இந்தத் தொடரில் சுழற்பந்து வீச்சாளராக அறிமுகமானார்.

 

 

1983-ம் ஆண்டில் உலகக் கோப்பையை வென்று, 1987-ம் ஆண்டு அரையிறுதி வரை அணியை வழிநடத்திச் சென்ற கபில் தேவ் இந்தத் தொடரில் சாதாரண வீரராக அணியில் இடம் பெற்றார். தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பியதால் ஸ்ரீகாந்த், 1989-ம் ஆண்டு அணியிலிருந்து விலக்கப்பட்டிருந்தார்.

உலகக் கோப்பையில் அவர் ஆடுவாரா என்னும் சந்தேகமும் இருந்தது. தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கி அதிரடியாக விளையாடும் ஸ்ரீகாந்த் போன்ற வீரர்கள் தேவை என அணி நிர்வாகம் கருதியதால் அவர் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இரண்டு ஆண்டுகள் கழித்து அணிக்குத் திரும்பினார்.

இப்போது ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக அங்கு டெஸ்ட், முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாட இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்தி ருக்கிறது அல்லவா? அது போலவே 1992-லும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது 5 டெஸ்ட் போட்டிகள், முத்தரப்பு தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.

அதனால் அங்குள்ள சூழ்நிலைக்கு நன்றாகப் பழகிய இந்தியா உலகக் கோப்பையில் நன்றாக விளையாடும் என்றும் கோப்பையையும் வெல்லக்கூடும் என்றும் பரவலாகக் கூறப்பட்டது. ஆனால், நடந்தது வேறு கதை. ஆட்டங்கள் போன போக்கில் எந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்பதைக்கூட யாராலும் கணிக்க முடியவில்லை.

 

 

ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி

இந்தத் தொடரின் முதல் போட்டியில் இருந்தே சுவாரஸ்யம் தொற்றிக்கொண்டது. உலக சாம்பியன் என்ற அந்தஸ்தோடு உள்ளூரில் தெம்பாகக் களமிறங்கிய ஆஸ்திரேலியா செமத்தியாக அடி வாங்கியது. ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் அணித் தலைவர் மார்டின் குரோ 100 ரன்கள் விளாசினார். பதிலடியாக ஆஸ்திரேலியாவின் டேவிட் பூன் 100 ரன்கள் விளாசினார். ஆனால், மற்ற வீரர்கள் சோபிக்காததால் ஆஸ்திரேலியா அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்தது.

 

 

புதுமை உத்தி

முதல் முறையாக இந்தத் தொடரில் நியூசிலாந்து கேப்டன் மார்டின் குரோ தொடக்க ஓவரை சுழற்பந்து வீச்சாளரைக் கொண்டு வீசச் செய்தார். நியூசிலாந்தின் தீபக் பட்டேல் முதல் ஓவரை வீசினார். பிற அணிகள் இதை எதிர்பார்க்கவில்லை. ரன் எடுக்க முடியாமல் திணறினார்கள்.

உலகக் கோப்பைத் தொடரில் அதிரடியாக விளையாடிய நியூசிலாந்தின் மார்க் கிரேட்பாட்ச் முதலில் அணியிலேயே சேர்க்கப்படவில்லை. முதல் இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் தொடக்க வீரரான ஜான் ரைட்டுக்கு காயம் ஏற்பட்டது. அவருக்குப் பதிலாக கிரேட்பாட்ச் இடம் பெற்றார். தொடக்க வீரராகக் களமிறங்கிய அவர், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பீல்டிங் கட்டுப்பாடு விதிகளைப் பயன்படுத்தி அதிரடியாக விளையாடினார். அது அந்த அணிக்குப் பெரும் பலனைக் கொடுத்தது.

 

 

ஒரு வீரர்; இரு அணி

இந்த உலகக் கோப்பைத் தொடரில் தென் ஆப்பிரிக்க அணித் தலைவராக கெப்ளர் வெசல்ஸ் இருந்தார். தென் ஆப்பிரிக்க அணிக்கு விதிக்கப்பட்ட தடை நீங்குவதற்கு முன்பு வரை ஆஸ்திரேலிய அணி சார்பில் பல போட்டிகளில் பங்கேற்றவர் இவர். அதுமட்டுமல்ல, 1983-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரிலும் ஆஸ்திரேலிய அணியில் இவர் இடம் பெற்றிருந்தார்.

இதன் பின்பு தென் ஆப்பிரிக்க அணிக்குத் திரும்பிய வெசல்ஸ், அந்த அணிக்குத் தலைவராக இருந்தார். இதன் மூலம், ஒரே வீரர் இரண்டு உலகக் கோப்பையில் வெவ்வேறு அணிக்காக விளையாடிய வீரர் என்ற சிறப்பைப் பெற்றார் கெப்ளர் வெசல்ஸ்

 

(நினைவலைகள் தொடரும்)

 

http://tamil.thehindu.com/sports/1992-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/article6835576.ece

  • கருத்துக்கள உறவுகள்
 
மிகவும் சுவாரசியமான பதிவு. தொடருங்கள், நவீனன்.
  • தொடங்கியவர்

1992 திணறவைத்த திருப்புமுனைகள்

34smmab.jpg

1992 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் திருப்புமுனைகளுக்குப் பஞ்சமில்லாதது. குறிப்பாக இந்தியாவுக்கு. முதல் மூன்று போட்டிகளும் இந்தியாவுக்குத் துரதிர்ஷ்டவசமாகவே அமைந்தன. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 9 ரன்னில் தோல்வி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1 ரன்னில் தோல்வி. இலங்கைக்கு எதிரான ஆட்டம் மழை காரணமாகக் கைவிடப்பட்டது.

 

பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா விளையாடிய போட்டி. கடைசிப் பந்து வரை பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றது.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 237 ரன்களை எடுத்தது. இந்திய அணி ஆடியபோது 17-வது ஓவரில் சிறிது நேரம் மழை பெய்தது. எனவே ஓவர் 47ஆகக் குறைக்கப்பட்டது. கடைசி ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்கள் எடுத்து ஒரு ரன்னில் வெற்றி வாய்ப்பை இழந்த தருணம் ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாது. மழை பெய்ததால் 3 ஓவர்கள் குறைக்கப்பட்டாலும் இலக்கில் 2 ரன்கள் மட்டுமே குறைக்கப்பட்டது அப்போது பெரிதாக விவாதிக்கப்பட்டது.

 

இந்தியா - பாகிஸ்தான்

முதல் மூன்று போட்டிகளும் இப்படி ஆனதால் எஞ்சிய போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்ற நிலை இருந்தது. இந்தச் சிக்கலான சூழ்நிலையில் மார்ச் 4 அன்று பாகிஸ்தானை இந்திய அணி சிட்னியில் சந்தித்தது.

இதுதான் இந்தியாவும் பாகிஸ்தானும் உலகக் கோப்பையில் சந்தித்துக் கொள்ளும் முதல் போட்டி என்பதால் பலத்த எதிர்பார்ப்பும் இருந்தது. இந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் சிறப்பாக விளையாடிச் சேர்த்த 54 ரன்கள், ஜடேஜாவின் 46 ரன்கள், கபில்தேவின் 35 ரன்கள் இந்தியா 216 ரன்களை எடுக்க உதவின. பாகிஸ்தான் அணியில் அமீர் சோகைல் மட்டுமே சிறப்பாக ஆடி 62 ரன் எடுத்தார்.

 

இந்தியாவின் பந்து வீச்சும் களத் தடுப்பும் துடிப்பாக இருந்தன. இதனால் ரன் சேகரிக்கத் திணறிய பாகிஸ்தான் அணி 48.1 ஓவர்களில் 173 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. 1992ம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணிக்குக் கிடைத்த முதல் வெற்றி இதுதான். இதன் பிறகு உலகக் கோப்பை யில் இந்தியாவை பாகிஸ்தானால் வெற்றி கொள்ளவே முடியவில்லை.

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஹாமில்டனில் நடைபெற்ற ஆட்டத்திலும் மழை தொடர்ந்து குறுக்கிட்டது. டக்வொர்த்-லீவிஸ் விதிப்படி இந்தியா வெற்றி வெற்றது. மற்ற போட்டிகளில் வெற்றி பெற முடியவில்லை.

 

தொடக்க நிலையில் தடுமாற்றம்

இந்தியாவுக்கு மழை பெரும் இடைஞ்சலாக இருந்தது. போட்டிக்குப் போட்டி தொடக்க ஜோடி மாறிக்கொண்டே இருந்தது. மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்ட இலங்கை, ஜிம்பாப் வேவுக்கு எதிரான போட்டிகளில் காந் தும் கபில்தேவும் தொடக்க வீரர்க ளாகக் களமிறங்கினார்கள்.

தென்னாப் பிரிக்காவுக்கு எதிராக ஸ்ரீகாந்தும் மஞ்ச் ரேக்கரும். பாகிஸ்தான், நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஸ்ரீகாந்தும் ஜடேஜாவும். இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஸ்ரீகாந்த், ரவிசாஸ்திரி. இப்படித் தொடக்க ஜோடி மாறிக்கொண்டே இருந்தது.

 

சச்சின் டெண்டுல்கர் தனது முதல் உலகக் கோப்பை தொடரில் சோடை போகவில்லை. 7 இன்னிங்ஸ் களில் 283 ரன்கள் (சராசரி 40.4) எடுத் தார். அதில் மூன்று அரை சதங்கள். ஜிம்பாப்வேக்கு எதிராக 81, நியூசிலாந் துக்கு எதிராக 84 ரன்களை அடித்தார். பாகிஸ்தானுக்கு எதிராக அவர் அடித்த 54 வெற்றிக்குப் பெரிதும் உதவியது. அனைத்து போட்டிகளிலும் பந்து வீசினார். மொத்தம் 35 ஓவர்கள் வீசிய அவர் ஒரே ஒரு விக்கெட் எடுத்தார். கொடுத்த ரன் விகிதம் ஒரு ஓவருக்கு 4.5.

இரு வெற்றிகளை மட்டுமே பெற்ற இந்தியா புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தைப் பிடித்தது. 8 மற்றும் 9-வது இடங்களை முறையே அப்போதைய கற்றுக்குட்டி அணிகளான இலங்கையும் ஜிம்பாப்வேவும் பிடித்தன. போட்டியை நடத்திய ஆஸ்திரேலியா 4 வெற்றிகளுடன் மூட்டையைக் கட்டியது. பாகிஸ்தான் அணி முதல் 5 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. ஆனால், கடைசி மூன்று போட்டிகளில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

 

ஆச்சரியம் தந்த அணிகள்

இந்தத் தொடரில் நியூசிலாந்து 8 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக 7 போட்டிகளில் வென்று ஆச்சரியப் பட வைத்தது. கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் மட்டுமே தோல்வியடைந்தது. அதிகம் எதிர்பார்க் கப்படாத தென்னாப்பிரிக்கா 5 வெற்றி களுடன் தனது முதல் உலகக் கோப்பை யிலேயே அரையிறுதியில் காலடி எடுத்து வைத்தது. இந்த அணிகள் தவிர இங்கிலாந்தும் அரையிறுதிக்குச் சென்றது.

 

‘குரங்கு’ தவ்வல்

இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் மிகவும் மந்தமாக விளையாடினார் ஜாவித் மியாண்டட். 110 பந்துகளைச் சந்தித்த அவர் 40 ரன்களை மட்டுமே எடுத்தார். இந்தப் போட்டியில் பந்து கால் காப்பில் படும்போதேல்லாம் விக்கெட் காப்பாளராக இருந்த கிரண் மோரே குதித்து குதித்து அம்பயரிடம் அவுட் கேட்டுக்கொண்டே இருந்தார்.

இதற்காக ஒரு கட்டத்தில் கிரண் மோரேயிடம் வாக்குவாதமும் செய்தார் மியாண்டட். அதன் தொடர்ச்சியாக பேட்டைக் கையில் தூக்கிக்கொண்டு ‘குரங்கு’ தாவுவது போல குதித்து கிரண் மோரேவைக் கிண்டல் செய்தார்.

2h7ffw5.jpg

 

கிரண் மோரேவுக்கு எதிராக குரங்கு தவ்வலில் ஈடுபட்ட மியாண்டட்.

 

ரோட்ஸின் புலிப் பாய்ச்சல்

லீக் போட்டி ஒன்றில் தென் ஆப்பிரிக்காவும் பாகிஸ்தானும் பிரிஸ்பேனில் விளையாடின. மேக்மில்லன் வீசிய பந்தை இன்சமாம்-உல்-ஹக் அடிக்க முயற்சி செய்தார். பந்து கால் காப்பில் பட்டு அருகிலேயே விழுந்தது. பக்கத்தில் யாரும் இல்லை என்பதால் விரைவாக ஒரு ரன் எடுக்க விரும்பி ஓடிய இன்சமாம் கால்வாசி தூரத்தைக் கடந்துவிட்டார். எதிர் முனையில் இருந்த இம்ரான் கான், ரன் வேண்டாம் என்று கூற, திரும்பவும் கிரீஸுக்குள் வர இன்சமாம் முயற்சித்தார்.

அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. ஸ்கொயர் லெக் திசையில் பீல்டிங் செய்துகொண்டிருந்த ஜான்டி ரோட்ஸ் மின்னல் வேகத்தில் ஓடி வந்து பந்தைக் கையில் எடுத்தார். ஸ்டெம்ப்புக்குச் சில அடி தூரம் வந்ததும் அப்படியே புலிபோலப் பாய்ந்து ஸ்டெம்புகளைத் தகர்த்து இன்சமாமை ரன் அவுட் செய்தார். உலகக் கோப்பையில் மட்டுமல்ல கிரிக்கெட்டிலேயே மிகவும் சிறப்பான ரன் அவுட் இது எனப் புகழப்படுகிறது.

 

29ymejo.jpg

 

ஜான்டி ரோட்ஸ்.

 

http://tamil.thehindu.com/sports/1992-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6841984.ece
 

  • தொடங்கியவர்

1992: தடுமாறிச் சுதாரித்த பாகிஸ்தான்

 

1992-ம் ஆண்டு உலகக் கோப்பையில் லீக் ஆட்டங்களில் சிறப்பாக ஆடிய இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகள் சுலபமாக அரையி றுதிக்குத் தகுதி பெற்றன. ஆனால் பாகிஸ்தான் அணிக்குக் கடைசிப் போட்டிவரை சிக்கல் நீடித்துக் கொண்டிருந்தது. பாகிஸ்தான் தனது கடைசி லீக் போட்டியில் நியூசிலாந்துடன் கிறைட்சர்ச்சில் மோதியது. இந்தப் போட்டியில் லீக் சுற்றில் எந்த அணியுடனும் தோற்காத நியூசிலாந்து தோல்வி யைச் சந்தித்தது. பாகிஸ்தான் கடைசி சுற்றில் வெற்றி பெற்றும் உடனே அரையிறுதிக்குத் தகுதி பெற முடியவில்லை. ஏனென்றால் பாகிஸ்தானின் புள்ளி 9ஆக மட்டுமே இருந்தது.

 

 

இந்தப் போட்டி நடைபெற்ற அதே நாளில் மெல்போர்னில் ஆஸ்திரேலியாவும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் மோதின. மேற்கிந்திய அணி 8 புள்ளிகள் பெற்றிருந்தது. இந்தப் போட்டி யில் வென்றால் அந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்ற நிலை இருந்தது. ஆனால், போட்டியில் மேற்கிந்திய அணி தோல்வியைத் தழுவியது. எனவே ஒரு புள்ளி வித்தியாசத்தில் பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

 

 

முதல் அரையிறுதி

தட்டுத் தடுமாறி அரையிறுதியில் நுழைந்த பாகிஸ்தான் நியூசி லாந்தை எதிர்கொண்டது. ஆக்லாந்தில் மார்ச் 21 அன்று போட்டி நடந்தது. முதலில் நியூசிலாந்து பேட்டிங் செய்தது. மத்திய வரிசையில் மார்டின் குரோவும் (91) ரூதர்போர்டும் (50) நியூசிலாந்து 262 ரன்கள் எடுக்க உதவினார்கள்.

அடுத்து ஆடிய பாகிஸ்தான் 140 ரன்கள் எடுத்திருந்தபோது 4 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் இருந்தது. நியுசிலாந்து ரசிகர்கள் கொண் டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போதுதான் இன்சமாம் உல்-ஹக் களத்தில் இறங்கினார். லீக் சுற்றில் இவர் சரியாக ஆடவில்லை என்பதால் அவர் மீது எந்த எதிர்பார்ப்பும் இல்லை.

 

சந்தித்த முதல் பந்தில் இருந்தே வெளுத்து வாங்கத் தொடங்கினார் இன்சமாம். எந்த பந்தையும் மிச்சம் வைக்கவில்லை. பவுண்டரிகளாக விளாசினார். எதிர்முனையில் அனுபவ வீரர் ஜாவித் மியாண்டாட் அவரைச் சிறப்பாக வழி நடத்தி ரன் குவிக்க உதவினார். இன்றைய இருபது ஓவர் ஆட்டத்தை அன்றே இன்சமாம் விளையாடினார். 37 பந்துகளைச் சந்தித்து 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உதவியுடன் 60 ரன்களைக் குவித்து பாகிஸ்தானை வெற்றிப் பக்கம் அழைத்து வந்தார்.

தொடர் முழுவதும் தடுமாறிவந்த பாகிஸ்தான் அரையிறுதியில் இன்சமாமின் அதிரடியால் இறுதிப் போட்டிக்குச் சென்றது. தொடரில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து அந்த ஒரு இன்னிங் ஸைக் கட்டுப்படுத்த முடியாமல் பரிதாபமாக வெளியேறியது.

 

 

இரண்டாவது அரையிறுதி

பாகிஸ்தானுடன் இறுதிப் போட்டியில் மோதப்போகும் அணி எது என்பதை நிர்ணயிக்கும் இரண்டாது அரையிறுதி மார்ச் 22 அன்று சிட்னியில் நடைபெற்றது. அதிகம் எதிர்ப்பார்க்கப்படாத தென் ஆப்பிரிக்காவும் பலமிக்க இங்கிலாந்தும் மோதின. பூவா தலையா வென்ற தென் ஆப்பிரிக்க அணித் தலைவர் கெப்ளர் வெசல்ஸ் இங்கிலாந்தை முதலில் பேட் செய்யச் சொன்னார். மழை காரண மாக ஓவர்கள் 45 ஆக குறைக்கப் பட்டன. கிரஹாம் ஹிக் சேர்த்த 82 ரன் உதவியுடன் இங்கிலாந்து 252 ரன்களை எடுத்தது.

இலக்கைத் துரத்திய தென் ஆப்பிரிக்கா அணி விக்கெட் வீழ்ச்சியும் சராசரி ரன் விகிதமும் சரி சமமாக ஏறிக் கொண்டே இருந்தது. போட்டி பரபரப்பான கட்டத்துக்கு வந்துகொண்டிருந்தது. 13 பந்து கள் மீதமிருக்கையில் தென் ஆப்பிரிக்காவுக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது பிரையன் மேக்மிலனும், டேவ் ரிச்சர்ட்சனும் களத்தில் இருந்தார்கள். இருவருமே மட்டையாளர்கள். எனவே தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறும் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். அப்போது வருண பகவான் சற்றே எட்டிப் பார்க்க, 12 நிமிடங்கள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

 

மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது எல்லோருக்குமே பேரதிர்ச்சி.புதிய விதிப்படி 1 பந்தில் 21 ரன் என்ற இலக்கு பெரிய ஸ்கிரீனில் பளிச்சிட்டது. தென் ஆப்பிரிக்கா வீரர்கள் மட்டுமல்ல, ரசிகர்களின் இதயமும் நொறுங்கியது. மிகவும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த மழை விதி கடும் விவாதத்தைக் கிளப்பியது. மழையின் புண்ணியத்தால் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

 

 

இறுதிப் போட்டி

மெல்போர்னில் 87 ஆயிரம் ரசிகர்கள் குழுமியிருக்க இங்கிலாந்தும் பாகிஸ்தானும் கோப்பைக்காக மல்லுக்கட்டின. முதலில் பாகிஸ்தான் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் விரைவாக வெளியேற இம்ரான் கான், மியாண்டட், இன்சமாம் ஆகியோரது பங்களிப்புகளுடன், வாசிம் அக்ரமின் கடைசி நேர அதிரடி காரணமாக பாகிஸ்தான் 249 ரன்களைக் குவித்தது.

 

இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணியின் முன்கள வீரர்கள் அடுத்தடுத்த சொதப்ப, ஃபேர்பிரதரும் லாம்ப்பும் இங்கிலாந்தை சரிவில் இருந்து மீட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது வாசிம் அக்ரம் சிறப்பாக வீசிய இரண்டு பந்துகள்தான் அந்த அணி கோப்பையை வெல்லக் காரணமாக இருந்தது. லாம்ப்பும், லூயிஸும் வாசிமின் அற்புதமான பந்து வீச்சில் அடுத்தடுத்து ஸ்டெம்புகளைச் சிதறவிட இங்கிலாந்து மீண்டும் தடுமாறியது. இதைப் பயன்படுத்திக்கொண்டு பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் நெருக்கடி தர 49.2 ஓவர்களில் 227 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து தோற்றது.

 

தொடக்கத்தில் சறுக்கிய பாகிஸ்தான் அணி பின்னர் சுதாரித்து ஆடி சாம்பியன் பட்டம் வென்றது. உலகக் கோப்பை பெற்ற தந்த கையோடு இம்ரான்கான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

 

முதல் விருது

முதல் நான்கு உலகக் கோப்பைத் தொடரில் தொடர் நாயகன் விருது அறிமுகப்படுத்தப்படவில்லை. 1992-ம் ஆண்டு உலகக் கோப் பைத் தொடரில்தான் இந்த விருது வழங்கப்பட்டது. இந்த முதல் விருதை நியூசிலாந்து கேப்டன் மார்டின் குரோ பெற்றார். 9 போட்டிகளில் விளையாடி 456 ரன்களை அவர் குவித்ததால் இந்த விருது வழங்கப்பட்டது.

 

 

இங்கிலாந்தின் சோகம்

மூன்று முறை உலகக் கோப்பைத் தொடரில் இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்றும் கோப்பையை வெல்ல முடியாமல் இங்கிலாந்துக்கு துரதிர்ஷ்டம் துரத்தியது. 1979-ம் ஆண்டில் மேற்கிந்திய அணிக்கு எதிராகவும், 1987-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் இறுதி ஆட்டத்தில் தோற்ற இந்த அணி, இந்த முறை பாகிஸ்தானிடம் தோல்வியைத் தழுவியது. அதுமட்டுமல்ல, அரையிறுதி, இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து தகுதி பெற்றது இதுதான் கடைசி முறையும்கூட. அதன் பிறகு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடர்கள் எதிலும் இங்கிலாந்தால் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியவில்லை.
 

http://tamil.thehindu.com/sports/1992-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/article6845163.ece

 

  • தொடங்கியவர்

1996 உலகக் கோப்பை: குட்டித் தீவின் எழுச்சி
 

சச்சின் டெண்டுல்கரும் அமீர் சோஹைலும் இன்னிங்ஸைத் தொடங்கினால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட ஒரு அதிசயம் 1996-ல் அரங்கேறியது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? இந்திய, பாகிஸ்தான் ஆட்டக்காரர்கள் கொண்ட அணி இலங்கையை எதிர்த்து விளையாடி வெற்றிபெற்றது.

 

1987-க்குப் பிறகு 1996-ல் மீண்டும் ஆசியக் கண்டத்துக்கு வந்த உலகக் கோப்பைத் தொடர் ஆரம்பத்திலேயே சர்ச்சையில் சிக்கிக்கொண்டது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து நடத்திய 1996-ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் இலங்கையில் நடக்கும் போட்டிகளில் கலந்துகொள்ள ஆஸ்திரேலியாவும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் மறுத்துவிட்டன.

 

தொடர் தொடங்குவதற்குச் சில வாரங்களுக்கு முன்பு அங்கே நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத் தில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தார்கள். பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு இலங்கை செல்ல இந்த இரு அணிகளும் மறுத்துவிட்டன.

 

அந்த இரு போட்டிகள் நடக் காமல் போனதால் ஏற்பட்ட நஷ் டத்தை ஈடுகட்ட சிறப்புக் காட்சிப் போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப் பட்டது. உலகக் கோப்பையை நடத்திய மூன்று நாடுகளும் அதில் கலந்துகொண்டன. இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் இணைந்த அணி இலங்கையை எதிர்கொண்டு ஆடி வென்றது. இதில்தான் சச்சி னும் சோஹைலும் தொடக்க ஜோடி யாகக் களம் இறங்கினார்கள்.

 

உலகக் கோப்பையில் தன் முதல் ஆட்டத்தில் களம் இறங் காமலேயே வெற்றிப் புள்ளிகளைப் பெற்ற இலங்கை, நேரடியாக காலிறுதியில் களம் இறங்கிய பிறகு தன் அதிரடி ஆட்டத்தால் வெற்றி மேல் வெற்றி பெற்றுக் கடைசியில் கோப்பையையும் வென்றது. இந்தத் தொடரில் இலங்கை ஒரு போட்டியில்கூடத் தோற்கவில்லை.

 

மாற்றங்களும் புதுமைகளும்

முதல் 15 ஓவர்களில் களத் தடுப்பு வியூகத்தில் கட்டுப்பாடுகள் 1992 தொடரிலேயே அறிமுகப்படுத் தப்பட்டன. ஆனால் நியூஸிலாந் தின் கிரேட்பேட்சைத் தவிர யாரும் இதை அவ்வளவாகப் பயன்படுத் திக்கொள்ளவில்லை. 1996-ல் இந்தக் கட்டுப்பாடுகளைப் பயன் படுத்திக்கொள்வது தனிக் கலையாக வளர்ச்சி பெற்றிருந்தது.

எல்லைக் கோட்டுக்கு அருகே அதிகம் பேர் நிற்க இடம் தராத இந்தக் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்திக் கொண்டு பந்துகளைத் தூக்கி அடிக் கும் திறன் கொண்டவர்கள் போட்டி களின் முடிவுகளை நிர்ணயிக்க ஆரம்பித்தார்கள். இலங்கை, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் இதில் சிறந்து விளங்கின. இதில் தனி முத்திரை பதித்தவர் இலங்கையின் சனத் ஜெயசூர்யா.

 

சனத் ஜெயசூர்யாவின் அதிரடி, போட்டி நடக்கும் முறையையே மாற்றி எழுதியது. அப்போதெல் லாம் முதல் 15 ஓவர்களில் 60 70 ரன் எடுத்தால் நல்ல ஸ்கோர் என்று கருதப்படும். சனத்தும் ரொமேஷ் கலுவிதரணவும் இதை மாற்றினார்கள்.

 

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 15 ஓவர் களில் 117, கென்யாவுக்கு எதிரான போட்டியில் 123, இங்கிலாந்துடன் 121 என்று எடுத்து போட்டி ஆடப் படும் முறையை மாற்றினார்கள். இந்த அதிரடிதான் இலங்கையின் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்று சொல்லலாம். கென்யாவுக்கு எதிராக இலங்கை எடுத்த 398-5 அப் போதைய உலக சாதனை. 2006-ல்தான் இது முறியடிக்கப்பட்டது.

களத்தில் முடிவு எடுக்க முடியாதபோது மூன்றாம் நடுவரை அணுகும் ஏற்பாடும் இந்தத் தொடரில்தான் தொடங்கியது.

 

தலை சுற்றவைத்த முதல் சுற்று

போட்டியில் மொத்தம் 12 அணிகள். இரண்டு பிரிவுகள். முதல் சுற்றில் மொத்தம் 30 ஆட் டங்கள். வலுவற்ற ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர் லாந்து, கென்யா ஆகிய அணி கள் போட்டியிலிருந்து வெளியேற் றப்பட 30 ஆட்டங்களைக் கடக்க வேண்டியதாயிற்று.

இந்தியா, இலங்கை, பாகிஸ் தான், மேற்கிந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய எட்டு அணிகள்தான் கால் இறுதிப் போட்டியில் மோதின. இவைதான் மோதும் என்பது அனேகமாக எல் லாருமே கணித்த விஷயம்தான்.

 

எனவே கால் இறுதியிலிருந்துதான் நிஜமான போட்டிகள் தொடங்கு வதாக ரசிகர்கள் கருதினார்கள். இந்தக் கட்டத்தை எட்ட 30 போட்டிகள் நடத்தப்பட்டன. கென்யா, பங்களாதேஷ் அணிகள் அரிதாக நிகழ்த்தும் ஆச்சரியங்கள் அரங்கேறும் சமயங்கள் தவிர எல்லாப் போட்டித் தொடர்களிலும் இந்த யதார்த்தமே இன்றுவரை தொடர்கிறது.

 

அணிகளின் ஊர்வலம்

1992-ல் சிறப்பாக ஆடிய தென்னாப்பிரிக்கா இந்தத் தொடரிலும் சிறப்பாக ஆடியது. தனது பிரிவில் ஆடிய அனைத்துப் போட்டிகளிலும் அது வென்றது. ஆனால் கால் இறுதியில் மேற்கிந்தியத் தீவுகளிடம் தோற்றது. தட்டுத் தடுமாறிக் கால் இறுதிக்கு வந்த இங்கிலாந்து அசுர வேகத்தில் முன்னேறிக்கொண்டிருந்த இலங்கையிடம் பலத்த அடி வாங்கி வெளியேறியது. வலுவான ஆஸ்திரேலிய அணி முதல் சுற்று ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளிடம் தோற்றது. மற்ற எல்லாப் போட்டிகளிலும் வென்று இறுதிக்கு வந்த இந்த அணி இலங்கையிடம் வீழ்ந்தது.

(1996-ல் இந்தியாவின் பயணம்… நாளை)
 

 

http://tamil.thehindu.com/sports/1996-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/article6847627.ece

  • தொடங்கியவர்

1996 உலகக் கோப்பை: இந்திய அணியின் பயணம்
 

 

லாகூரில் இருந்த பாகிஸ்தான் அணித் தலைவரும் முன்னணி வேகப்பந்து வீச்சாளருமான வஸீம் அக்ரமின் வீட்டின் மீது கல் எறியப்பட்டது. மார்ச் 9 அன்று நடந்த காலிறுதிப் போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றதை அடுத்து இந்தச் சம்பவம் நடந்தது.

அக்ரம் அந்தப் போட்டியில் மோசமாக விளையாடினார் என்று நீங்கள் நினைக்கலாம். அவர் உடல்நலமின்மை காரணமாக அதில் விளையாடவே இல்லை. அப்புறம் என்ன பிரச்சினை?

 

அதுதான் பிரச்சினை. இந்தியாவுடனான போட்டி, அதுவும் தோற்றவர் போட்டியிலிருந்தே வெளியேறும் சுற்று என்று வரும்போது அதில் எப்படி ஆடாமல் இருக்கலாம்? போர் நடக்கும்போது கால் வலிக்கிறது, இடுப்பு சுளுக்கு என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கலாமா? இதுதான் இந்தியா பாகிஸ்தான் போட்டி விஷயத்தில் இரு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களின் மனநிலை. ஆடாத அக்ரம் வாங்கிக் கட்டிக்கொண்டது இப்படித்தான்.

 

இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றால் அதில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமே இருக்காது. 1992 உலகக் கோப்பைப் போட்டி யில் பாகிஸ்தான் கோப்பையை வென்றாலும் முதல் சுற்று ஆட்டத் தில் இந்தியாவிடம் தோற்றது. அதற்குப் பழிதீர்ப்பதற்கான நல்ல சந்தர்ப்பமாக இதை அந்த அணி பார்த்திருக்கக்கூடும். அணியின் முன்னணி பந்து வீச்சாளர் ஆடவில்லை என்றாலும் பாகிஸ்தானின் வலிமையைக் குறைத்து மதிப்பிட முடியாது.

 

பெங்களூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸை வென்ற இந்தியா முதலில் மட்டை பிடித்தது. நவ்ஜோத் சிங் சித்துவும் டெண்டுல்கரும் சிறப்பான அடித்தளம் அமைத்தார்கள். ஸ்கோர் 90 ஆக இருக்கும்போது சச்சின் (31) ஆட்டமிழந்தார்.

பிறகு வந்த சஞ்சய் மஞ்ரேக்கர், முகம்மது அசாருதீன், வினோத் காம்ப்ளி ஆகியோர் பெரிய ஸ்கோர் எடுக்கவில்லை என்றாலும் ஒவ்வொருவரும் தலா 20க்கு மேல் அடித்தார்கள். சித்து 93 ரன் எடுத்தார். அஜய் ஜடேஜா 45. அணியின் ஸ்கோர் 287-8.

 

ஆவேசத்துடன் இலக்கைத் துரத்திய பாகிஸ்தானின் அமீர் சோஹைலும் சயீத் அன்வரும் வலுவான தொடக்கத்தைத் தந்தார்கள். இந்தியா 287 ரன் எடுத்ததும் ஆனந்தக் கூத்தாடிய பெங்களூர் ரசிகர்கள் முதல் 10 ஓவர்களில் பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 84 ரன்களை எடுத்ததும் அதிர்ச்சியில் உறைந்தார்கள். ஆனால் நாத் பந்தில் அன்வர் (48) விரைவிலேயே ஆட்டமிழந்தார். இந்திய ரசிகர்கள் சற்றே ஆசுவாசம் அடைந்தார்கள்.

 

நன்றாக ஆடிக்கொண்டிருந்த சோஹைல் (55) ஆட்டமிழந்ததும் ஆட்டமிழந்த விதமும் விதம் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. போட்டியில் அனல் பறந்தது. வெங்கடேஷ் பிரசாதின் பந்தை எக்ஸ்ட்ரா கவர் பவுண்டரிக்கு விரட்டிய சோஹைல், பிரசாதை நோக்கி மட்டையை நீட்டி பவுண்டரியைக் காட்டி நக்கலாக ஏதோ சொன்னார்.

ஏற்கெனவே அதிக ரன்கள் கொடுத்ததால் ரசிகர்கள் பிரசாதைக் கண்டபடி திட்டிக்கொண்டிருந்தார்கள். சோஹைலின் பரிகாசமும் பிரசாத் தின் கோபத்தை எகிறவைத்தது.

ரோஷத்துடன் அடுத்த பந்தை வீசினார் பிரசாத். ஆஃப் ஸ்டெம்புக்கு நேரே வந்த அந்தப் பந்தையும் அதேபோல அடிக்க முயன்ற சோஹைல் ஆவேசமாக மட்டையை வீச, பந்து மட்டையில் படாமல் அவரைத் தாண்டிச் சென்று ஸ்டெம்பைச் சாய்த்தது. மைதானமே அதிர, உணர்ச்சிவசப்பட்ட பிரசாத் சோஹைலைக் கெட்ட வார்த்தையால் திட்டி அனுப்பினார். மேலும் 60 ரன் எடுப்பதற்குள் மேலும் 3 விக்கெட்கள் விழ, ஆட்டம் திசை மாறியது.

 

அந்தப் போட்டியில் கேப்டனாக இருந்த சோஹைல் அந்த அளவுக்கு உணர்ச்சிவசப்பட்டிருக்காவிட்டால் அந்த ஷாட்டை அப்படி ஆடியிருக்க மாட்டார் என்று சொல்லலாம். அணி வலுவான நிலையில் இருக்கும்போது அவருக்கு ஏற்பட்ட அதீத நம்பிக்கை தேவையற்ற ஆவேசத்தை ஏற்படுத்தி அவரது அணியின் சரிவுக்கு அவரே காரணமாக அமையும் சூழலை ஏற்படுத்திவிட்டது.

 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜாவித் மியண்டாட் 38 ரன்னில் ரன் அவுட் ஆனார். இந்தியா 39 ரன் வித்தியாசத்தில் வென்றது. உள்ளூர் வீரர்களான பிரசாத்தும் அனில் கும்ப்ளேவும் ஆளுக்கு 3 விக்கெட்களை எடுத்தார்கள்.

 

எளிதான முதல் சுற்று

கால் இறுதியில் போராடி வென்ற இந்தியா முதல் சுற்றில் ஒப்பீட்டளவில் எளிதாகவே வென்றது. ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய அணிகளிடம் தோற்ற இந்தியா ஜிம்பாப்வே, மேற்கிந்தியா, கென்யா அணி களைத் தோற்கடித்துக் கால் இறுதிக்கு வந்தது. மேற்கிந்தியா வின் பிரையன் லாரா அந்தப் போட்டியில் சோபிக்கவில்லை.

இந்தியாவின் பந்து வீச்சு சிறப்பாக அமைய, 173 ரன்களில் மேற்கிந்தியா சுருண்டது. டெண்டுல்கர் (70), காம்ப்ளி (33), அசாருதீன் (32), நயன் மோங்கியா (24) ஆகியோரின் ஆட்டத்தால் இந்தியா எளிதாக வென்றது. 10 ஓவர்களில் 22 ரன் கொடுத்து 2 விக்கெட் எடுத்த கர்ட்னி வால்ஷின் பந்து வீச்சுதான் மேற்கிந்திய அணியின் ஒரே ஆறுதல்.

ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் இந்தியா 16 ரன் வித்தியாசத்தில் தோற்றது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்க் வா 126 ரன் அடித்தார். இந்தியாவில் சச்சின் 90 ரன் அடித்தார். இரண்டுமே அருமையான இன்னிங்ஸ்களாக அமைந்தன.

10 ஓவர்களில் ஷேர்ன் வார்ன் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தாலும் 28 ரன் மட்டுமே கொடுத்து மிகவும் சிக்கனமாகப் பந்து வீசினார். 5 விக்கெட்களை வீழ்த்திய டேமியன் ஃப்ளெமிங் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார் (ஆஸ்திரேலியா 258, இந்தியா 242).

 

அதிர்ச்சி அளித்த இலங்கை

இலங்கையுடனான போட்டிதான் இந்தியாவுக்கு அதிர்ச்சி தந்த போட்டி யாக அமைந்தது. 3 விக்கெட் இழப்புக்கு 271 (சச்சின் 137, அசாருதீன் 72, மஞ்ரேகர் 32) எடுத்த எளிதாக வெல்லும் நம்பிக்கையுடன் பந்து வீச்சைத் தொடங்கியது. சனத் ஜெயசூர்யாவின் வடிவில் அதிர்ச்சி காத்திருந்தது. 76 பந்துகளில் 79 ரன் எடுத்த ஜெயசூர்யா, மனோஜ் பிரபாகரை வெளுத்து வாங்கிவிட்டார்.

4 ஓவரில் 47 ரன் கொடுத்த அவரை அசாருதீன் மீண்டும் பந்து வீச அழைக்கவே இல்லை. 16 பந்துகளில் 26 ரன் எடுத்து கலுவிதரண ஆட்டமிழந்தாலும் குருசின்ஹா, அர்ஜுன ரனதுங்கா, ஹஷன் திலகரத்னே ஆகியோரின் உறுதியான ஆட்டத்தால் எளிதாக வென்றது. தொடக்க ஆட்டக்காரர்கள் போட்டுக் கொடுத்த பலமான அஸ்திவரத்தைப் பயன்படுத்திப் பதற்றமில்லாமல் ரணதுங்கா அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார்.

 

பிரபாகரின் அன்றைய வீச்சு அவரது கிரிக்கெட் வாழ்வையே முடிவுக்குக் கொண்டுவந்தது என்று சொன்னால் அதில் மிகை இருக்காது. கடைசியில் கும்ப்ளே பந்து வீச்சில் ஜெயசூர்யாவின் கேட்சைப் பிடித்தது ஒன்றுதான் பிரபாகருக்கு ஆறுதலான விஷயம்

 

(இனி.. இலங்கையின் உறுதியும் இந்தியாவின் சொதப்பலும்…)

 

http://tamil.thehindu.com/sports/1996-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/article6851775.ece
 

  • தொடங்கியவர்

1996: மட்டையால் எழுதிய அழகோவியம்

34ytuo7.jpg

சனத் ஜெயசூர்யாவும் ரொமேஷ் கலுவிதரணவும் தங்கள் அதிரடியால் பெரும் பலமாகத் திகழ்ந்தாலும் இலங்கை இவர்களை மட்டுமே நம்பியிருக்கவில்லை. “ஒரு நாள் இவர்கள் முயற்சி பலிக்காமல் போகும் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் அதற்குத் தயாராகவே இருந்தோம்” என்று அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க கூறினார். அரை இறுதி, இறுதி ஆகிய இரண்டு போட்டிகளிலும் தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் ஆட்டமிழந்தார்கள். ஆனால் இலங்கை அசர வில்லை.

அரை இறுதியில் இந்தியா இலங்கையை எதிர்கொண்டது. இந்த முறை ஆட்டத்தில் மனோஜ் பிரபாகர் இல்லை. முதலில் மட்டை பிடித்த இலங்கையின் அபாயகரமான தொடக்க ஆட்டக்காரர்களை நாத் எடுத்த எடுப்பில் ஆட்டமிழக்கச் செய்தார். 1 ரன்னில் இரண்டு விக்கெட்கள். அடுத்து, 16 பந்துகளில் 1 ரன் எடுத்திருந்த குருசின்ஹாவும் ஸ்ரீநாத் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

 

 

கொல்கத்தா அரங்கமே உற்சாகத்தில் துள்ளியது. ஆனால் இதர மட்டையாளர்கள் பதற்றமடையவில்லை. அரவிந்த டிசில்வா (66), ரோஷன் மஹானமா (58), ரணதுங்கா (35), ஹஷன் திலகரத்னா (32), சமிந்தா வாஸ் (23) ஆகியோர் அணியை கௌரவமான நிலைக்குக் (251) கொண்டுசென்றார்கள்.

தொடர்ந்து ஆடிய இந்தியா விரைவில் சித்துவை இழந்தாலும் சச்சினும் மஞ்ச்ரேக்கரும் ஸ்திரப்படுத்தினார்கள். ஸ்கோர் 98ஆக இருக்கும்போது சச்சின் (65) ஆட்டமிழந்தார். ஆட்டம் சட்டென்று திசை மாறியது. அசாருதீன் ரன் எடுக்காமலேயே பெவிலியன் திரும்பினார். பிறகு மஞ்ச்ரேக்கர் (25) ஆட்டமிழக்க, நாத், அஜய் ஜடேஜா, மோங்கியா, ஆஷிஷ் கபூர் ஆகியோர் வந்த சுருக்கில் நடையைக் கட்டினார்கள். 35ஆவது ஓவரில் 120-8 என இந்தியா பரிதாபமாக நின்றது.

 

 

கிரிக்கெட்டின் மீது அடங்காத காதல் கொண்ட கொல்கத்தா ரசிகர்கள் பொறுமை இழந்தார்கள். மைதானத்தின் மீது கற்களையும் பாட்டில்களையும் வீசி ரகளை செய்ய ஆரம்பித்தார்கள். ஆட்டம் தடைப்பட்டது. ரசிகர்களின் ஆவேசம் தொடர்ந்தது. ஆட்ட த்தை மீண்டும் தொடங்கும் சூழல் இல்லை என்பதால் இலங்கை வெற்றிபெற்றதாக அறிவிக்கப் பட்டது.

 

 

உலகக் கோப்பையின் தொடக்க விழாவும் கொல்கத்தாவில்தான் நடந்தது. அதில் நடந்த எக்கச்சக்க மான சொதப்பல்களால் கொல்கத் தாவுக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டது. அரையிறுதியில் ரசிகர் களின் கலாட்டாவால் கொல்கத்தா வின் பெயர் மேலும் சந்தி சிரித்தது.

 

அரவிந்த டிசில்வாவின் அற்புதம்

இறுதிப் போட்டியில் இலங்கை ஆஸ்திரேலியாவை எதிர் கொண்டது. டாஸ் வென்ற ரணதுங்கா ஆஸ்திரேலியாவை மட்டை பிடிக்கச் சொன்னார். மார்க் டெய்லர் (74), ரிக்கி பாண்டிங் (45), மைக்கேல் பெவன் (36) ஆகியோரின் ஆட்டத்தால் ஆஸ்திரேலியா 241 ரன்களை எட்டியது.

இலங்கையின் ஜெயசூர் யாவும் கலுவிதரணவும் மீண்டும் விரைவில் ஆட்டமிழந்தார்கள். ஸ்கோர் 23-2. ஆனால் இலங்கை மீண்டும் தன் உறுதியைக் காட்டியது. குருசின்ஹா (65), டிசில்வா (107), ரணதுங்கா (47) ஆகியோர் வெற்றிக் குத் தேவையான ரன்களை எடுத் தார்கள். டிசில்வாவும் ரணதுங்கவும் கடைசிவரை ஆட்டமிழக்க வில்லை.

 

அன்று டிசில்வா ஆடிய ஆட்டத்தை மட்டையால் வரைந்த அழகோவியம் என்று சொல்ல வேண்டும். அவரது கால்களின் நகர்வு கச்சிதமாக இருந்தது. இடைவெளிகளில் பந்தைச் செலுத்திய துல்லியம் அபாரமாக இருந்தது. டிசில்வா இரண்டு கேட்ச்களையும் பிடித்து மூன்று விக்கெட்களையும் வீழ்த்தி யிருந்தார். தொடர் முழுவதும் 91, 8, 145, 66 ஆகிய ஸ்கோர்களை அடித்த டிசில்வா ஆகச் சிறந்த ஆட்டத்தை இறுதிப் போட்டியில் வெளிப்படுத்தினார்.

 

தலைவன் இருக்கிறான் கலங்காதே

இறுதிப் போட்டி தொடங்கு வதற்கு முன்பு ரணதுங்க, ஆஸ்திரேலியாவின் பாணி யிலேயே ஆஸ்திரேலிய அணியை வெறுப்பேற்றினார். ஷேன் வார்ன் ஊடகங்களால் உருவாக்கப்பட்ட மாயை என்றார். அவர் ஒன்றும் அவ்வளவு பெரிய பவுலர் இல்லை என்றார்.

அந்தச் சொற்களை நிரூபிப்பதுபோல டிசில்வா ஆடினார். வார்னை அவர் அடித்த விதம் தாக்குதலிலிருந்து அவரை அப்புறப்படுத்தியது. வார்ன் தன் ஆக மோசமான பந்து வீச்சுடன் (10 ஓவர் 58 ரன், விக்கெட் இல்லை) தொடரை முடித்துக் கொண்டார்.

இலங்கை கேப்டனின் துணிச்சலும் தன்னம்பிக்கையும் அபாரமானவை. முதல் சுற்று ஆட்டத்தில் இலங்கைக்குச் செல்ல மாட்டோம் என ஆஸ்திரேலியா அறிவித்ததும் அந்த அணியை இறுதிப் போட்டியில் சந்திக்க ஆசைப்படுகிறேன் என்றார் ரணதுங்க. பொதுவாக இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவைத் தவிர்க்கவே எல்லா அணிகளும் விரும்பும்.

 

வெற்றி மந்திரம்

இலங்கை அணியில் ஒவ்வொருவரும் தத்தமது பங்கை உணர்ந்து ஆடினார்கள். யாரும் யாரையும் நம்பி ஆடவில்லை. அதே சமயம் ஒரு அணியாகச் செயல்பட்டார்கள். அவர்களிடம் தெளிவான வியூகம் இருந்தது. அந்த வியூகம் தவறினால் என்ன செய்வது என்ற மாற்று ஏற்பாடும் இருந்தது. பக்குவமான தலைமை, பன்முகத் திறமை கொண்ட ஆட்டக்காரர்கள், அணியினர் அனைவரின் முழு ஒத்துழைப்பு ஆகியவைதாம் இலங்கையை கிரிக்கெட் சிகரத்தின் உச்சியை எட்டவைத்தது.

இன்றுவரை இலங்கை உலக அரங்கில் முக்கியமான அணிகளில் ஒன்றாகவே திகழ்கிறது. அதன் பிறகு நடந்த நான்கு உலகக் கோப்பைகளில் 2003-ல் அரை இறுதி வரை வந்தது. 2007, 20011-ல் இறுதிப் போட்டிவரை வந்தது. வெற்றிக்கான ஊக்கத்தையும் உத்திகளையும் அந்த அணி தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருப்பதே இதற்குக் காரணம்.

 

பிரகாசித்த நட்சத்திரங்கள்

சச்சின் டெண்டுல்கர், மார்க் வா, பிரையன் லாரா ஆகிய மூவரும் தொண்ணூறுகளில் உலக கிரிக்கெட்டை ஆதிக்கம் செலுத்திய மட்டையாளர்கள். 1996-ல் லாரா தொடர்ந்து சீராக ஆடவில்லை. இரண்டு சதங்கள், மூன்று அரை சதங்களுடன் 523 ரன் அடித்த சச்சின், கேள்விக்கு அப்பாற்பட்டு முதலிடம் பெற்றார். இலங்கைக்கு எதிரான போட்டியில் அவர் அடித்த 137, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்த 90 ஆகியவை மிகச் சிறந்த இன்னிங்ஸ்களாகத் திகழ்ந்தன.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முதல் மூன்று ஓவர்களை மெய்டன் ஓவர்களாக வீசிய க்லென் மெக்ரா அடுத்த ஐந்து ஓவர்களில் 48 ரன்களைக் கொடுத்தார். அவரை எதிர்கொண்ட முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடித்து ஆதிக்கம் செலுத்தினார் சச்சின்.

 

சச்சின், மார்க் வா, அரவிந்த டிசில்வா, கேரி கிறிஸ்டன், சயீத் அன்வர் ஆகியோர் முதல் ஐந்து இடங்களைப் பிடித்தார்கள்.

பந்து வீச்சில் அனில் கும்ப்ளே, வக்கார் யூனுஸ், பால் ஸ்ட்ராங், ரோஜர் ஹார்ப்பர், டெமியன் ஃப்ளெமிங், ஷேன் வார்ன் ஆகியோர் முதல் இடங்களைப் பிடித்தார்கள். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரில் 10 ரன் கொடுத்த ஷேன் வார்ன், அடுத்த 9 ஓவர்களில் 18 ரன் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

 

சனத் என்னும் தனிக்காட்டு ராஜா

சச்சின், மார்க் வா ஆகியோர் சிறப்பாக ஆடினாலும் ஆட்டத்தின் போக்கைத் திசை திருப்பிய விதத்தில் இலங்கையின் சனத் ஜெயசூர்யா தனித்து நின்றார். அவர் அடித்த ரன்கள் அதிகம் இல்லை என்றாலும் புயல் வேகத்தில் அடித்ததால் அணியின் வெற்றிக்குப் பெரும் துணைபுரிந்தார்.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 76 பந்துகளில் 79, கென்யாவுக்கு எதிரான போட்டியில் 27 பந்துகளில் 44 அடித்த அவர் காலிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக 44 பந்துகளில் 82 அடித்துப் பட்டையைக் கிளப்பினார். சிக்கனமான அவரது சுழல் பந்து வீச்சும் கைகொடுக்க, அதிக ரன்களோ அதிக விக்கெட்களோ எடுக்காமலேயே உலகக் கோப்பையின் தொடர் நாயகன் என்னும் விருதை அவர் தட்டிச் சென்றார்.

 

“ஆட்டத்தின் போக்கையே அவர் மாற்றினார். 1996 உலகக் கோப்பையில் அவர் ஆடிய விதம் இன்னிங்ஸைத் தொடங்கும் விதம் பற்றிய எண்ணத்தை அடியோடு மாற்றிவிட்டது” என்று ஆஸ்திரேலியாவின் வேகப் பந்து வீச்சாளர் க்லென் மெக்ரா குறிப்பிட்டது ஜெயசூர்யாவின் பங்களிப்பைத் துல்லியமாகக் கூறுகிறது.
 

 

http://tamil.thehindu.com/sports/1996-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/article6855609.ece

  • தொடங்கியவர்

1999: தொடங்கியது ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம்
 

 

இந்தியாவில் 1987-ல் நடந்த உலகக் கோப்பைத் தொடருக்கு எவ்வித எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாமல் சாதாரண அணியாக இந்தியா வந்த ஆஸ்திரேலியா, கடுமையாகப் போராடிக் கோப்பையை வென்று அசத்தியது.

 

ஸ்டீவ் வாஹ் என்னும் நம்பிக்கை நட்சத்திரம் அப்போது உதயமானார். அந்த இளம் நட்சத்திரம் 1999-ல் மாபெரும் தலைவனாக உருவெடுத்தார்.

ஸ்டீவ் வாஹ் தலைமையில், 1999 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட இங்கிலாந்தில் கால் பதித்த ஆஸ்திரேலிய அணி, அனைத்து அணிகளையும் அச்சுறுத் தக்கூடிய சிறந்த வீரர்களைப் பெற்றிருந்தது.

 

ஆனால், ஆஸ்தி ரேலிய அணிக்குச் சவால் விடக் கூடிய அணியாகத் தென்னாப் பிரிக்க அணி இருந்தது. கேரி கிர்ஸ்டன், ஹர்ஷல் கிப்ஸ், ஆலன் டொனால்ட், ஷான் பொல்லாக், ஜேக் காலிஸ், ஜாண்டி ரோட்ஸ் போன்ற வீரர்களைக் கொண்ட அணி அது.

 

இதுபோதாதென்று அதன் தலைவர் ஹன்ஸி க்ரோன்யே ஆல் ரவுண்டர் என்பதோடு வியூக வித்தகராகவும் விளங்கினார்.

 

வெளியேறியது இந்தியா

இந்த உலகக் கோப்பை, இந்தியாவுக்கு சொல்லிக் கொள் ளும்வகையில் அமையவில்லை, பரம வைரியான பாகிஸ்தானை வென்றது, 1996-ல் அரையிறுதியில் படுதோல்வியைப் பரிசளித்த இலங்கையைத் தோற்கடித்தது ஆகிய திருப்திகளோடு நாடு திரும்பியது முகமது அசாருதீன் தலைமையிலான இந்திய அணி.

 

தென்னாப்பிரிக்கா, இந்தியா, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் “ஏ’ பிரிவில் சூப்பர் சிக்ஸ் பிரிவுக்குத் தகுதி பெற்றன. இதில், ஜிம்பாப்வே லீக் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி அதிர்ச்சி அளி்த்தது. நடப்பு சாம்பியன் இலங்கை, போட்டியை நடத்தும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி சூப்பர் சிக்ஸ் போட்டிக்கு முன்னேறி அசத்தியது ஜிம்பாப்வே.

 

அசராத ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா-தென்னாப் பிரிக்கா, பாகிஸ்தான்-நியூஸி லாந்து அணிகள் அரையிறுதிக்குத் தகுதிபெற்றன. அதில் நியூஸி லாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் ஊதித் தள்ளிய வாசிம் அக்ரம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் பணிந்தது.

 

1992-ல் உலகக் கோப்பையை வென்றபோது, மிகக் கடுமையாகப் போராடி இறுதிப் போட்டியை எட்டியதுபோல், இம்முறையும் அந்த அணி போராட்டத்தை வெளிப்படுத்தியிருந்ததால், இறுதிப் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்ப்பு நிலவியது.

 

தென்னாப்பிரிக்காவுடன் தொடர்ந்து இரு கடுமையான போட்டிகளில் விளையாடி ஆஸ்திரேலியா அயர்ந்து போயிருந்ததால், தாங்கள் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாகவும் பாகிஸ்தான் கருதியது. ஆனால், உலகை ‘ஆள்வதற்கு’த் தயாராகிவிட்ட ஆஸ்திரேலியா அசரவில்லை. 132 ரன்களுக்கு பாகிஸ்தான் சுருண்டது. அக்ரம், வக்கார் யூனுஸ் போன்ற பந்துவீச்சாளர்கள் இருந்தாலும், ஆடம் கில்கிறிஸ்ட் 36 பந்துகளில் 54 ரன் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.

 

கில்கிறிஸ்ட் எழுச்சி

ஸ்டீவ் வாஹ், 1998-ல் மூன்று அணிகள் மோதிய ஒரு நாள் தொடரில் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்டை தென்னாப்பிரிக் காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் தொடக்க வீரராகக் களம் இறக்கினார். அதன் பிறகு, அவர் ஓய்வுபெறும்வரை தொடக்க வீரராக இறங்கிப் பந்து வீச்சாளர் களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தது வரலாறு.

 

வார்னே எனும் மந்திர சுழல்

கிரிக்கெட் வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தைப் பிடித்துவிட்ட ஷேன் வார்னே, கிலென் மெக்ரா ஆகியோரின் பந்து வீச்சு ஆஸ்திரேலியாவுக்குப் பெரிதும் கைகொடுத்தது. குறிப்பாக, ஸ்விங் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமான களங்களில் தனது தனித்துவத்தைக் காட்டினார் வார்னே.

 

சுழற்பந்து வீச்சாளர்களை அனாயசமாகக் கையாளும் பாகிஸ்தானை இறுதிப் போட்டியில், தனது மந்திரச் சுழலில் சிக்கச் செய்தார் (33 ரன் கொடுத்து 4 விக்கெட்). உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் மிகக் குறைந்த (39) ஓவர்களில் 132 ரன்களுக்கு எதிரணியைச் சுருட்டி வீச மிக முக்கியக் காரணமாக இருந்தார் ஆட்ட நாயகன் ஷேன் வார்னே.

மேற்கிந்தியத் தீவுகளுக் கெதிரான, வென்றே தீர வேண்டிய லீக் போட்டியில், 14 ரன் கொடுத்து 5 விக்கெட்டை வீழ்த்தி வெல்ல உதவினார் மெக்ரா. சூப்பர் சிக்ஸ் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியதிலும் மெக்ராவுக்கு முக்கியமான பங்கு இருந்தது. சச்சின், திராவிட், அசாருதீன் ஆகிய மூவரையும் அவர் சொற்ப ரன்களில் வீழ்த்தினார்.

 

ஆதிக்கம் ஆரம்பம்

வார்னே, கில்கிறிஸ்ட், மெக்ரா, ஸ்டீவ் வாஹ் ஆகியோருடன் பின்னாளில் ரிக்கி பாண்டிங், மேத்யு ஹைடன், ஆண்ட்ரூ சைமன்ட்ஸ், பிரெட் லீ போன்றவர்களின் பங்களிப்பும் சேர்ந்துகொள்ள, எல்லா விதமான போட்டிகளிலும் சுமார் 12 ஆண்டுகள்வரை ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தியது. அதற்கெல்லாம் தொடக்கமாக அமைந்தது 1999 உலகக் கோப்பைப் போட்டி என்று சொல்லலாம்.

 

1996 உலகக் கோப்பையில் இறுதி வரை முன்னேறிய ஆஸ்திரேலியா, இலங்கையிடம் தோற்றது. கோப்பையை மீண்டும் கைப்பற்றும் வேட்கையுடன் 1999-ல் இங்கிலாந்தில் கால் பதித்த ஆஸ்திரேலியா, கடுமையாகப் போராடி நினைத்ததைச் சாதித்தது.

 

முதல் முறையாக சூப்பர் சிக்ஸ்

இந்த உலகக் கோப்பையில்தான் முதல்முதலாக, சூப்பர் சிக்ஸ் என்னும் புதிய நடைமுறை உருவாக்கப்பட்டது. வழக்கமாக, இரு பிரிவுகளாக அணிகளைப் பிரிக்கும்போது, அதில் நான்கு இடங்களைப் பிடித்து காலிறுதிக்குத் தகுதி பெறப்போகும் அணிகள் எவை என்பதனை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.

ஆனால், சூப்பர் சிக்ஸில் அவ்வாறு கணிப்பது சற்று சிரமமாக இருந்தது என்றே கூறலாம். காரணம், எட்டு அணிகள் மோதக்கூடிய காலிறுதி என்னும் சுற்றே இதில் கிடையாது. அதற்குப் பதில் சூப்பர் சிக்ஸ். அதாவது, வலுவான எட்டு அணிகளும் அடுத்த சுற்றுக்குப் போக முடியாது. அதில் இரு அணிகள் முதல் சுற்றிலேயே வெளியேறும் என்பதால் முதல் சுற்றும் சவாலானதாகவும் முக்கியமானதாகவும் அமையும்.

 

இரு பிரிவுகளிலும் முதல் சுற்றில் முதல் 3 இடங்களைப் பெற்ற 6 அணிகள் சூப்பர் சிக்ஸுக்குத் தகுதி பெற்றன. அதிலிருந்து 4 அணிகள் அரையிறுதிக்குத் தேர்வாகின. ஒரு அணி, தனது பிரிவில் இருந்து சூப்பர் சிக்ஸுக்குத் தகுதி பெறும் இன்னொரு அணியை முதல் சுற்றில் வென்றிருந்தால் போனஸ் புள்ளி உண்டு என்ற விதியும் இருந்தது.

 

மீண்டும் இங்கிலாந்து மண்ணில்

1975, 1979 மற்றும் 1983 உலகக் கோப்பைப் போட்டிகளை நடத்தியிருந்த இங்கிலாந்து, சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, அவ்வாய்ப்பினை 1999-ல் மீண்டும் பெற்றது. இங்கிலாந்தின் அண்டை நாடுகளான ஸ்காட்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்திலும் சில போட்டிகள் நடைபெற்றன. வங்கதேசம் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் முதல்முறையாகக் களம் கண்டன.

 

‘ஏ’ பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, இங்கிலாந்து இலங்கை மற்றும் கென்யா ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், வங்கதேசம் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளும் அணி வகுத்தன.
 

http://tamil.thehindu.com/sports/1999-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article6859937.ece

 

  • தொடங்கியவர்

1999: திணறல் திலகம் தென்னாப்பிரிக்கா

 

ஆயிரம் திறமைகளைக் கொண்டிருந்தாலும், ஏதோ ஒரு வகையில் அதிர்ஷ்டமும் கைகொடுத்தால்தான் வெற்றி கிடைக்கிறது. அது, 1999 உலகக் கோப்பையில் ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கும் பொருந்தும். அந்த அணிக்கு எப்போதுமே ஏதோ ஒரு வகையில் அதிர்ஷ்டம் அடித்தபடி இருந்தது.

இல்லாவிட்டால், ஆஸ்திரேலியாவை விட வலுவா னதாகக் கணிக்கப்பட்ட தென்னாப் பிரிக்காவைத் தொடர்ந்து இரு போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்றிருக்க முடியாது.

தென்னைப்பிரிக்கா வலுவான அணியாக இருந்தபோதிலும், உலகக் கோப்பையை பொருத்த வரையில் அதிர்ஷ்டம் இல்லாத, அணியாகவே இருந்துவருகிறது. 1992-ல் விந்தையான மழை விதியால், அரையிறுதி வாய்ப்பைப் பறிகொடுத்தது தென்னாப்பிரிக்கா.

 

நீ தவறவிட்டது கோப்பையை நண்பா!

1999-ல் சூப்பர் சிக்ஸ் சுற்றில் கடைசி ஆட்டத்தில் வென்றே தீர வேண்டிய நிலையில், தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது ஆஸ்திரேலியா. ‘ஐஸ் மேன்’ எனப் பெயற்பெற்ற ஸ்டீவ் வா எப்போதும் போல் நெருக்கடியிலிருந்து அணியை மீண்டும் காப்பாற்றினார்.

272 என்னும் இலக்கை நோக்கி ஆடியபோது, 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆஸி. அப்போது களமிறங்கிய ஆபத்பாந்தவன் ஸ்டீவ் வா, ஆட்டமிழக்காமல் 120 ரன்களை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெல்ல உதவினார்.

 

அவர் 56 ரன்களில் இருந்தபோது கொடுத்த கேட்சினை கிப்ஸ் தவறவிட்டார். அப்போது அவரைப் பார்த்து, “நண்பா.. நீ தவறவிட்டது கேட்ச்சை அல்ல. உலகக் கோப்பையை” என்று ஸ்டீவ் வா சொன்னார். அதைப் போலவே அரையிறுதியில் தோற்று வெளியேறியது தென்னாப்பிரிக்கா.

அரையிறுதியில் தென்னாப் பிரிக்கா அணி சொதப்பி யதையும், லான்ஸ் குளூஸ்னர் என்ற அதிரடி வீரரின் ஆட்டத்தையும் கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கவே முடியாது. ஆனால், நெருக்கடி யான கட்டங்களில், எளிதில் நெருக்கடிக்குள்ளாகி, நம்ப முடியாத வகையில் சொதப்பிவிடு வதால் கிடைத்த ‘சோக்கர்ஸ்’ என்னும் அடைமொழி இன்றளவும் தொடர்கிறது.

 

குளூஸ்னர், யார் எப்படிப் போட்டாலும், ராக்கெட் வேகத்தில் பவுண்டரிக்கு விரட்டி அசத்தினார். 4 போட்டிகளில் ஆட்டநாயகன் பரிசினைப் பெற்றார். அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றார். ஆனால் ஆஸ்திரேலி யாவுக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெறும் நிலை யில் இருந்த தென்னாப்பிரிக்கா, திடீரென்று சொதப்பி ஆட்டத்தை ‘டை’ செய்து இறுதிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது.

 

கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் டேமியன் ஃப்ளெமிங்கை எதிர்கொண்டார் ‘அதிரடி’ குளூஸ்னர். மறுமுனையில் கடைசி ஆட்டக்காரரான டொனால்ட். குளூஸ்னருக்கு 9 ரன்கள் மிகச் சாதாரணம் என அனைவரும் நினைத்தனர்.

அதுபோலவே, முதல் இரு பந்துகளில் பவுண்டரி அடித்து ஸ்கோரைச் சமன் செய்தார் குளூஸ்னர். 4 பந்துகளில் 1 ரன் தேவை. தென்னாப்பிரிக்கா வெற்றிபெற்றிவிடும் என ஆஸ்திரேலிய வீரர்களே நம்பத் தொடங்கிய நேரத்தில் அது நிகழ்ந்தது.

 

3-வது பந்தில் ரன் இல்லை. 4-வது பந்தை அடித்துவிட்டு, வெற்றி ரன்னுக்கா குளூஸ்னர் ஓடினார். டொனால்டோ, அவரைப் பார்க்காமல் பந்தை பார்த்தபடி இருந்தார். குளூஸ்னர் ஓடிவந்துவிட்டதைக் தாமதமாகவே பார்த்த டொனால்ட், அலறி அடித்துக்கொண்டு ஓடினார். வழியில் தடுமாறி மட்டையைக் கீழே போட்டுவிட்டார். மார்க் வா, பந்தினை பவுலரிடம் வீசினார்.

 

அவர் பதற்றப்படாமல் கீப்பர் கில்கிறிஸ்ட்டிடம் வேகமாக அதை உருட்டி விட்டார். அதைப் பிடித்து டொனால்ட்டை ரன்-அவுட் செய்தார் கில். ஆட்டம் சமனில் முடிந்தது. நிகர ரன் விகித அடிப்படையில் இறுதியை அடையும் வாய்ப்பை ஆஸியிடம் தென்னாப்பிரிக்கா இழந்தது. ‘சோக்கர்ஸ்’ (திணறல் திலகம்) என்ற அடைமொழி சேர்ந்துகொண்டது. இன்றுவரை அந்த அணியால் கோப்பையையும் வெல்ல முடியவில்லை. இந்தப் பட்டத்தையும் உதற முடியவில்லை.

 

 

சச்சினுக்கு வந்த சோதனை

1999 உலகக் கோப்பையை இந்தியா பெரும் நம்பிக்கையோடு எதிர்கொண்டதற்குக் காரணம் மட்டை அணியின் மும்மூர்த்தி களான சச்சின், கங்குலி, திராவிட் ஆகியோர்தான்.

இவர்களுக்குத் துணையாக சடகோபன் ரமேஷ், முகம்மது அசருதீன், அஜய் ஜடேஜா ஆகியோரும் நயன் மோங்கியாவும் ஆல்ரவுண்டர் அஜித் அகர்க்கரும் இருந்ததால் இந்தியாவின் மட்டை வலு அபாரமாகவே இருந்தது என்று சொல்ல வேண்டும்.

இத்தனை வலிமை இருந்தும் இந்தியாவால் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வெல்ல முடியவில்லை. எல்லாத் துறை களிலும் அபாரத் திறமை பெற்ற தென்னாப்பிரிக்காவிடம் தோற்ற தில் ஆச்சரியம் இல்லை. ஆனால் ஜிம்பாப்வேயிடம் தோற்றுப் போனதுதான் இந்தியாவின் பின்ன டைவுக்குக் காரணமாக அமைந்தது.

இந்த இரு போட்டிகளுக்கு இடையே ஒரு அசம்பாவிதம் நடந்தது. சச்சினின் அப்பா ரமேஷ் டெண்டுல்கர் காலமாகிவிட்ட செய்தி வந்தது. சச்சின் உடனே கிளம்பி மும்பைக்குச் சென்றார். ஜிம்பாப்வே போட்டியில் அவர் ஆடவில்லை.

 

 

டாஸை வென்று பந்து வீச்சைத் தேர்ந்தெடுத்த இந்தியா, நன்றாகவே தொடங்கினாலும் தொடர்ந்து சரியாகப் போட வில்லை. ஜிம்பாப்வே 252 ரன்களை எடுத்தது. அன்று இந்தியாவின் பெரிய வில்லன் என்றால் அது உபரி ரன்கள்தான். 21 வைட், 16 நோபால்களுடன் வந்த 51 உபரி ரன்கள் ஜிம்பாப்வேக்கு போனஸாக அமைந்தன. கடைசியில் இந்தியா 3 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

 

அடுத்த போட்டி கென்யாவுடன். அதற்குள் திரும்பிவிட்ட சச்சின் அந்தப் போட்டியில் சதம் அடித்தார். அடித்துவிட்டுக் கண்களில் நீர் மல்க வானத்தைப் பார்த்தார். அன்று முதல் ஒவ்வொரு சதம் அடித்த பின்பும் அதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இலங்கையுடனான போட்டியில் கங்குலியும் (183) திராவிடும் (145) அற்புதமாக ஆடியதில் இந்தியா வென்றது. தட்டுத் தடுமாறி சூப்பர் சிக்ஸுக்கும் சென்றது. ஆனால் சூப்பர் சிக்ஸில் ஐந்து போட்டிகளில் நான்கில் தோற்று வெளியேறியது.

கூட்டிக் கழித்துப் பார்க்கையில் இலங்கைக்கு எதிரான லீக் போட்டி, பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் சிக்ஸ் போட்டி ஆகிய இரண்டைத் தவிர வேறு எதிலும் இந்தியா சிறப்பாக ஆடவில்லை என்பதால் இந்தியா மறக்க விரும்பும் உலகக் கோப்பைப் போட்டிகளில் ஒன்றாக இது அமைந்துவிட்டது.

 

 

களத்தில் இயர்போனில் பேசிய குரோன்யே

உலகக் கோப்பையை வெல்லக்கூடிய வாய்ப்புமிக்க மிக வலுவான அணியாகப் பல்வேறு திட்டமிடல்களுடன் இங்கிலாந்து வந்திருந்தது தென்னாப்பிரிக்கா. இந்தியாவுடனான போட்டியில் ஸ்லிப்பில் நின்றிருந்த கேப்டன் ஹன்ஸி குரோன்யே காதில் இயர் போனைப் பொருத்தி, அதில் பயிற்சியாளபர் பாப் உல்மரின் கட்டளைகளைக் கேட்டுக்கொண்டி ருந்தார். அது கண்டறியப்பட்டு, உடனடியாக, போட்டியின்போதே அதற்குத் தடை விதிக்கப்பட்டது.

 

வங்கதேசம், ஜிம்பாப்வே தந்த அதிர்ச்சி

1999 போட்டிகளில், வித்தியாச மான சிகையலங்காரத்துடன் தோன்றிய ஜிம்பாப்வே வேகப் பந்து வீச்சாளர் ஹென்றி ஒலங்காவை யாரும் மறந்திருக்க முடியாது.

லீக் போட்டியில், 253 ரன் வெற்றி இலக்கை நோக்கி இந்தியா வெற்றிகரமாக முன்னேறிக்கொண்டிருந்தபோது, 45-வது ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தியா 3 ரன்னில் தோற்கக் காரணமாக அமைந்தவர். பின்னாளில், ஜிம்பாப்வே சுற்றுப் பயணத்தின்போது அவரை சச்சின் துவம்சம் செய்தது வேறு விஷயம்.

இதுபோல், முதல் முறையாக போட்டியில் பங்கேற்ற வங்கதேசம், வலுவான பாகிஸ்தான் அணியை, 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தி, உலகக் கோப்பையையே வென்றது போன்ற களிப்பில் நாடு திரும்பியது.
 

http://tamil.thehindu.com/sports/1999-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/article6864453.ece

  • தொடங்கியவர்

2003 உலகக் கோப்பை: கல்லடிபட்ட வீடுகள், சீறி எழுந்த சிங்கங்கள்

 

இந்திய அணித் தலைவர் சவுரவ் கங்கூலி முதலான சிலரது வீடுகளை கிரிக்கெட் ரசிகர்கள் கற்களை வீசித் தாக்கினார்கள். காரணம், தொலை தூரத்தில், தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி ஆடிய லட்சணம்.

 

இந்தியா உலகக் கோப்பையை வென்று 20 ஆண்டுகள் கழித்து நடக்கும் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா சிறப்பாக ஆடும் என்று நம்பிக்கை வைத்திருந்த இந்திய ரசிகர்களால் இந்தியா ஆடிய விதத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

 

இந்தியாவுக்கு இரண்டு போட்டி கள்தான் முடிந்திருந்தன. நெதர் லாந்தை வென்று ஆஸ்திரேலியா விடம் தோற்றிருந்தது. கற்றுக்குட்டி அணியான நெதர்லாந்தின் பந்து வீச்சில் இந்தியாவின் புகழ்பெற்ற மட்டையாளர்கள் திணறினார்கள். 48.5 ஓவர்களில் 204 ரன் எடுத்து இந்தியா ஆட்டமிழந்தது.

சச்சின் (52), யுவராஜ் சிங் (37), தினேஷ் மோங்கியா (42) ஆகியோர் மட்டுமே கௌரவமான ஸ்கோரை எடுத்தார்கள். ஜவகல் ஸ்ரீநாத், அனில் கும்ப்ளேயின் சிறப்பான பந்து வீச்சாலும் நெதர்லாந்து மட்டையாளர்களின் மோசமான ஆட்டத்தாலும் இந்தியா வென்றது.

 

அடுத்து ஆஸ்திரேலியா வுடனான போட்டியில் 41.1 ஓவர்களில் 125 ரன்னுக்கு இந்தியா சுருண்டது. சச்சின் (36), ஹர்பஜன் சிங் (28) தவிர வேறு யாரும் சோபிக்கவில்லை. கங்கூலி, ராகுல் திராவிட் உள்பட ஏழு பேர் ஒற்றை இலக்க எண்ணில் ஆட்டமிழந்தார்கள். யுவராஜ் சிங் பூஜ்யம். இந்தப் போட்டியில் பந்து வீச்சும் எடுபடவில்லை. 22.2 ஓவர்களில் ஒரே ஒரு விக்கெட் இழப்புக்கு 128 ரன் எடுத்து அட்டகாசமாக வென்றது ஆஸ்திரேலியா.

 

இந்த அளவுக்கு மோசமான ஆட்டத்தை இந்திய ரசிகர்கள் மன்னிக்கத் தயாராக இல்லை. ஊக்க மருந்து சர்ச்சையால் ஷேர்ன் வார்ன் திடீரென்று அணியிலிருந்து விலக வேண்டிய அதிர்ச்சியைத் தாண்டி வந்து ஆஸ்திரேலியா சிறப் பாக ஆட, பெரும் நம்பிக்கையுடன் களம் இறங்கிய இந்தியா படு மோசமாகச் சொதப்பியது.

புகழ் பெற்ற மட்டை வரிசை தடுமாறி யது. இந்திய ரசிகர்கள் பொங்கி விட்டார்கள். “இதற்குத்தானா உங்களை அனுப்பினோம்” என்ற ரீதியில் ரகளையில் ஈடுபட்டார்கள்.

 

சச்சின் விடுத்த செய்தி

ஓய்வு அறையில் அணியினர் அனைவரது முகங்களிலும் துக்கம் கவிந்திருந்தது. தாயகத்தின் ரசிகர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு அணியின் அதிகபட்ச அனுபவம் மிகுந்த உறுப்பினரான சச்சினுக்குக் கொடுக் கப்பட்டது.

“முழு ஈடுபாட்டுடன் ஆடுவோம். கடைசிவரையிலும் தீவிரமாகப் போராடுவோம். எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்” என்று சச்சின் அறிக்கை விடுத்தார். தங்கள் செல்லப் பிள்ளையிடமிருந்து இப்படி ஒரு அறிக்கை வந்ததும் இந்திய ரசிகர்கள் சற்று சமாதானமானார்கள்.

 

 

சச்சின் சொன்னபடியே நடந்தது. அனைத்து ஆட்டக்காரர்களும் மிகுந்த முனைப்புடனும் புதிய உத்வேகத்துடனும் ஆட ஆரம்பித்தார்கள். இந்தியா புதிய வேகத்துடன் இதர போட்டிகளை எதிர்கொண்டது. தங்கள் பிரிவில் அடுத்து வந்த அனைத்துப் போட்டிகளையும் வென்றது.

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 250 ரன்களை எடுத்து, அந்த அணியை 168 ரன்னில் சுருட்டியது. பாகிஸ்தானுடனான பரபரப்பான போட்டியில் மிகத் தீவிரமாகப் போராடி சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறியது.

 

சூப்பர் சிக்ஸ் சுற்றில் கென்யா, இலங்கை, நியூஸிலாந்து ஆகிய அணிகளை வென்றது. அரை இறுதிக்கு வந்த கென்யாவைச் சுலபமாக வென்று இறுதிப் போட்டிக்குள் கம்பீரமாக நுழைந்தது.

 

எது சிறந்த தொடர்?

இந்தியாவின் ஆகச் சிறந்த உலகக் கோப்பைத் தொடர்களில் ஒன்றாக 2003 போட்டிகளைச் சொல்லலாம். 1983-ல் வென்ற கோப்பை அதன் பிறகு இந்தியாவின் கைக்குக் கிடைக்கவே இல்லை. மீண்டும் கோப்பையை வெல்லும் ஏக்கம் கோடிக்கணக்கான மக்களிடம் இருந்தது.

சச்சின் டெண்டுல்கர் போன்ற கிரிக்கெட் வீரர்களுக்கு அது வாழ்நாள் கனவாகவே இருந்தது. 1987, 1996 ஆகிய இரு ஆண்டுகளிலும் போட்டிகள் துணைக்கண்டத்தின் சாதகமான சூழலில் நடைபெற்றபோது இந்தியா மீண்டும் கோப்பையைக் கைப்பற்றும் என்னும் எதிர்பார்ப்பு இருந்தது. இரு போட்டிகளிலும் முதல் சுற்றுக்களில் நன்கு ஆடிய இந்தியா கடைசிக் கட்டத்தில் சொதப்பியது.

 

2003 இறுதிப் போட்டியில் இந்தியா சொதப்பினாலும் 1983-க்கு அடுத்து அந்தத் தொடரை இந்தியாவின் சிறந்த தொடராகச் சொல்லலாம். துணைக்கண்டத்துக்கு வெளியே, வேகப் பந்துக்குத் துணைபுரியும் தென்னாப்பிரிக்கக் களங்களில் அந்தப் போட்டிகள் நடைபெற்றன என்பது ஒரு காரணம்.

இரண்டாவது போட்டியையும் கடைசிப் போட்டியையும் தவிர வேறு எந்தப் போட்டியிலும் இந்தியா தோற்கவில்லை என்பது இன்னொரு காரணம். அதுவும் ஆஸ்திரேலியாவுடன் மட்டுமே இந்தியா தோற்றது.

 

இங்கிலாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான் முதலான வலுவான அணிகளைத் தோற்கடித்து இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆஸி அணியின் முழுமையான ஆட்டமும் இந்தியப் பந்து வீச்சாளர்களின் திடீர் பதற்றமும் சேர்ந்து இந்தியாவைத் தோற்கடித்தன.

இறுதிக்கு வந்த பாதை மிகவும் பரவசமூட்டக்கூடியது. அணியில் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு கட்டத்தில் சிறப்பாகப் பங்களித்தார்கள். நல்ல தொடக்கங்களை வீணடிக்கும் பழக்கம் கொண்ட இந்திய அணி அவற்றை வெற்றிகளாக மாற்றக் கற்றுக்கொண்டிருந்த காலகட்டம் அது.

தடுப்பரணிலும் குறிப்பிடத்தக்க விதத்தில் முன்னேற்றம் கண்டிருந்த இந்திய அணி ஒரு சிலரது ஆட்டத்தால் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமான ஆட்டத்தால் உலகை வியக்கவைத்த தொடர் அது.

 

திராவிடின் அர்ப்பணிப்பு உணர்வு

பந்து வீச்சுக்குச் சாதகமான களங்களில் மட்டை வலுவைக் கூட்டியாக வேண்டிய நெருக்கடி ஏற்படும். சச்சின், வீரேந்திர சேவாக், கங்கூலி போன்றவர்கள் இந்தியாவுக்குப் பல சமயங்களில் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தாலும் அந்தத் தொடக்கங்கள் பல சமயம் வீணாகிவந்தன.

யுவராஜ் சிங், முகம்மது கைஃப் போன்றவர்கள் அணியில் நிலைபெற்ற பிறகு இந்த நிலை மாறத் தொடங்கியது. ஆனாலும் வலுவான பந்து வீச்சு கொண்ட அணிகளோடு மோதும்போது அணியின் மட்டை வலுவைக் கூட்ட ஏதாவது செய்தாக வேண்டும் என்று அணி நிர்வாகம் விரும்பியது.

 

அப்போது ஆபத்பாந்தவனாக வந்தவர் ராகுல் திராவிட். அணியின் முன்னணி மட்டையாளரான அவர் விக்கெட் கீப்பிங்கும் செய்ய ஒப்புக்கொண்டார். இதன் மூலம் இந்தியா இடைநிலையில் மேலும் ஒரு மட்டையாளரைச் சேர்க்க முடிந்தது. அப்படி இடம்பிடித்த தினேஷ் மோங்கியா சில போட்டிகளில் இந்தியா வெல்ல உதவினார்.

கீப்பிங் செய்து அதிகப் பழக்கம் இல்லாத திராவிட் உலகக் கோப்பை போன்ற தீவிரமான ஒரு தொடரில் கீப்பிங் செய்ய முன்வந்தது மிகத் துணிச்சலான செயல் என்றுதான் சொல்ல வேண்டும். அணிக்குத் தேவை என்றால் எதையும் செய்வேன் என்னும் திராவிடின் அர்ப்பணிப்பு உணர்வையே இது காட்டுகிறது.

 

(நாளை… இந்தியாவின் முக்கியமான போட்டிகள்)

 

http://tamil.thehindu.com/sports/2003-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6868315.ece


 

  • தொடங்கியவர்

2003 உலகக் கோப்பை: புத்தெழுச்சி பெற்ற இந்தியா
 

 

ரசிகர்களின் ஆவேசத்தால் தூண்டப்பட்ட இந்திய அணி அதன் பிறகு தவறு செய்யவில்லை. ஆஸ்திரேலியாவுடனான போட்டிக்கு அடுத்து ஜிம்பாப்வே. அதில் 7 விக்கெட் இழப்புக்கு 250 ரன் எடுத்தது. சச்சின் (81), ராகுல் திராவிட் (43), வீரேந்திர சேவாக் (36) ஆகியோரின் பங்களிப்பு இந்தியா கௌரவமான ஸ்கோரை எட்ட உதவியது. பந்து வீச்சுக்குச் சாதகமான களம் என்பதால் இந்தியா நம்பிக்கையுடன் பந்து வீச்சைத் தொடங்கியது.

 

 

ஜவகல் ஸ்ரீநாத் தலைமையில் புதிய திறமைசாலிகளான ஜாகீர் கான், ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் திறம்படப் பந்து வீசினார்கள். ஹர்பஜன் சிங், சேவாகின் சுழலும் சவுரவ் கங்கூலியின் சிக்கனமான மித வேகப் பந்து வீச்சும் சேர்ந்து ஜிம்பாப்வேயை 44.4 ஓவர்களில் 172 ரன்களுக்குள் சுருட்டின. கங்கூலி 3 விக்கெட் எடுத்தார். ஆட்ட நாயகன் சச்சின்.

இந்தப் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா அடுத்து எதிர்கொண்ட கற்றுக்குட்டி நமீபியாவை நொறுக்கித் தள்ளியது. சச்சினும் (152) கங்கூலியும் (112) சதம் அடிக்க, 2 விக்கெட் இழப்புக்கு 311 ரன் அடித்தது. 42.3 ஓவர்களில் 130 ரன்களுக்குள் நமீபியாவின் இன்னிங்ஸை முடித்துவைத்தது. யுவராஜ் சிங் 4.3 ஓவர்களில் 6 ரன் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார்.

 

முதல் நெருக்கடி

என்னதான் புதிய வேகத்துடன் இந்தியா ஆடினாலும் ஆஸ்திரேலியா வுடனான தோல்விக்குப் பிறகு அது ஆடிய இரு அணிகளும் அவ்வளவாக வலுவற்ற அணிகள். அவற்றை உண் மையான சோதனையாக எடுத்துக் கொள்ள முடியாது. எனவே அடுத்து வந்த இங்கிலாந்துடனான போட்டி இந்திய ரசிகர்களின் பதற்றத்தைக் கூட்டியது. போட்டிக்கான பரபரப்பும் கணிசமாக அதிகரித்திருந்தது.

 

டாஸை வென்ற இந்தியா மட்டை வீச்சைத் தேர்ந்தெடுத்தது. 10 ஓவர்கள் முடிவதற்குள் இந்தியா 60 ரன் எடுத்தது. பத்தாவது ஓவர் முடியும் சமயத்தில் சேவாக் (23) ஆட்டமிழந்தார். 50 ரன் அடித்த சச்சின் 16-வது ஓவரில் ஆட்டமிழ்ந்தபோது ஸ்கோர் 91. அதன் பிறகு இந்தியாவின் ரன் வேகம் குறைந்தது. கங்கூலியும் (19) தினேஷ் மோங்கியாவும் (39) ஆட்டமிழந்த பிறகு ஆட்டம் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததுபோல் தோன்றியது. ஆனால் திராவிடும் (62) யுவராஜ் சிங்கும் (42) ரன் வேகத்தையும் ஸ்கோரையும் கணிசமாக உயர்த்தினார்கள். யுவராஜ் 38 பந்துகளில் 42 அடித்தார். இந்தியாவின் ஸ்கோர் 250-9. வெற்றிக்கு உத்தரவாதமான ஸ்கோர் இல்லையென்றாலும் டர்பன், கிங்ஸ்மீட் ஆடுகளத்துக்கு கவுரவமான ஸ்கோர் என்று சொல்லலாம்.

 

கை கொடுத்த பந்து வீச்சு

இரண்டாம் ஓவரில் இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர் நிக் நைட்டை முகம்மது கைஃப் அபாரபான ஃபீல்டிங்கின் மூலம் ரன் அவுட் செய்து தொடக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார். 23 பந்துகளில் 8 ரன் எடுத்த மார்க் ட்ரெஸ்கொத்திக், ஜாகீர் கான் பந்தில் வீழ்ந்தார். 12 ஓவர் முடிவில் இங்கிலாந்து 28-2 என்று திணறிக்கொண்டிருந்தது. ஜாகீர் கான் 6 ஓவர் 14 ரன் ஒரு விக்கெட். ஸ்ரீநாத் 6 ஓவர் 13 ரன்.

 

13-வது ஓவரை வீச வந்த ஆஷிஷ் நெஹ்ரா செய்த மாயம் இவ்வளவு சிக்கனமான பந்து வீச்சை மறக்கச் செய்தது. இரண்டு நாட்களுக்கு முன்புவரை கணுக்கால் வீங்கி அவதிப் பட்டுக்கொண்டிருந்த நெஹ்ரா அணி யில் இடம்பெற்றதே ஒரு அதிசயம் என்று சொல்லலாம். அவர் நிகழ்த்திய சாதனையை இன்னொரு அதிசயம் என்று சொல்ல வேண்டும். முதல் இரண்டு ஓவர்களைச் சிக்கனமாக வீசிய நெஹ்ரா அடுத்த ஓவரில் விஸ்வரூபம் எடுத்தார். அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். பிறகு மேலும் 4 விக்கெட்களை வீழ்த்தினார். துல்லியமான அளவில் வீசப்பட்ட அவரது பந்துகள் கணிக்க முடியாத விதத்தில்

 

ஸ்விங் ஆகி இங்கிலாந்தின் மட்டை வரிசையைப் பிளந்தன. 45.3 ஓவர்களில் 168 ரன்னுக்கு இங்கிலாந்து ஆட்டமிழந்தது. நெஹ்ராவின் கணக்கு 10-2-23-6. வேகப்பந்துக்குச் சாதகமான களங்களில் இந்தியாவாலும் பிற அணிகளை மிரட்ட முடியும் என்பதைக் காட்டிய பந்து வீச்சு அது.

அடுத்த போட்டியில் இந்தியா தன் பரம வைரியான பாகிஸ்தானை வீழ்த்தினாலும் வென்ற விதத்தில் ஆகச் சிறந்த வெற்றி என்று இங்கிலாந்துடனான போட்டியைத் தான் சொல்ல வேண்டும்.

 

போட்டிகளின் உச்சம்

சிறப்பாக ஆடியும் கோப்பையை வெல்ல முடியாமல் போன இந்திய அணியை ரசிகர்கள் மனமார மன்னிக்கத் தயாராக இருந்தார்கள் என்றால் அதற்கு மூன்று காரணங்கள். ஒன்று தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து இறுதிவரை வந்த சாதனை. இரண்டு, உலகிலேயே வலுவான அணியிடம் தோற்றதில் வருத்தப்பட எதுவும் இல்லை. மூன்றாவது காரணம், முதல் சுற்றில் பாகிஸ்தானை வென்றது.

 

கிட்டத்தட்ட இறுதிப் போட்டிக்கு இருக்கும் பரபரப்பும் பதற்றமும் இந்தப் போட்டிக்கு இருந்தது. பாகிஸ்தான் பலம் வாய்ந்த அணி. குறிப்பாக வலுவான பந்து வீச்சு. ஷோயிப் அக்தரின் புயல் வீச்சும் வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸின் அனுபவமும் சேர்ந்து பந்து வீச்சை வலுவானதாக்கின.

சையீத் அன்வர், இன்சமாம் உல் ஹக், யூசுஃப் யோஹானா, யூனிஸ் கான் ஆகியோருடன் அதிரடி ஆட்டத்துக்குப் பேர்போன ஷாஹித் அஃப்ரிதியும் சேர எந்தப் பந்துவீச்சுக்கும் சவால்விடும் மட்டை வலு பாகிஸ்தானிடம் இருந்தது. போதாக்குறைக்கு அப்துர் ரசாக் என்னும் ஆல் ரவுண்டரும் அணியை வலுப்படுத்தினார்.

இந்த அணியை எதிர்கொள்ளும் வலிமை இந்தியவுக்கு இருந்தது. ஆனால் பாகிஸ்தானின் ஆவேசத் துக்கு இந்தியா ஈடுகொடுக்குமா என்னும் கவலை ரசிகர்களைச் சூழந்தது. இங்கிலந்தை அபாரமாக வென்ற மூன்றே நாட்களில் மிகக் கடுமையான போட்டியை எதிர்கொள்ள இந்தியா தயாரானது.

 

இங்கிலாந்திடமும் ஆஸ்திரேலியா விடமும் தோற்று இந்தியாவுடனான போட்டியை வென்றே ஆக வேண்டும் என்னும் நிலையில் பாகிஸ்தான் அந்தப் போட்டியை எதிர்கொண்டது. இரு அணிகளுமே அதை இறுதிப் போட்டி அளவுக்கு மதிப் பளித்தன.

இரு நாடுகளின் ரசிகர்களும் செஞ்சூரியன் மைதானத்தில் குவிந்தார்கள். தொலை தூரத்தில் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு முன்னால் கோடிக்கணக்கான ரசிகர்கள் தத்தமது அணிகளின் வெற்றியை எதிர்நோக்கிப் பதற்றத்துடன் அமர்ந்திருந்தார்கள்.
 

 

http://tamil.thehindu.com/sports/2003-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/article6871063.ece

  • தொடங்கியவர்

2007: சர்ச்சைகள், பரபரப்புகள், அதிர்ச்சிகள்

 

கிரிக்கெட் உலகில் பன்னெடுங்காலம் கோலோச்சிய மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற முதல் உலகக் கோப்பைப் போட்டி, பல்வேறு சர்ச்சைகளுக்காகவும், பரபரப்பான திருப்பங்களுக்காகவும், இன்றும் நினைவில் நிற்கிறது. பெரிய அளவுக்கு நிதி வசதியில்லாத மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் இப்போட்டிகளை நடத்தி முடிப்பதற்குப் படாதபாடுபட்டது.

 

போட்டி நடந்த புதிய மைதானங்கள் கடைசி நேரம் வரை முழுவதுமாக தயாராகாதது, மைதானப் பணியாளர்களையே பாதுகாப்புக் காரணங்களுக்காக அனுமதிக்காமல் போனது எனப் பல்வேறு சொதப்பல்கள் அரங்கேறின.

 

மேற்கிந்தியத் தீவுகளுக்கே உரிய டிரம்ஸ், சங்கு, மற்றும் நடனம் ஆகியவை மைதானங்களில் தடைசெய்யப்பட்டன. ரசிகர் கூட்டம் குறைவாக இருந்தது. வெளி நாட்டு ரசிகர்களுக்குக் கூடுதல் முக்கியத் துவம் தரப்பட்டது போன்ற பல காரணங் களுக்காக ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் தனது அதிருப்தியை வெளியிட்டு, கண்டனத்துக்காளானார். பயிற்சி மேற்கொள்வதற்கான போதிய வசதிகள் இல்லை என்று ஆஸ்திரேலியாவும், தென்னாப்பிரிக்காவும் தங்கள் பங்குக்குக் குறை கூறின.

இப்போட்டியின்போது, தர வரிசையில் முதல் 3 இடங்களில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் நியூஸிலாந்து அணிகள் இருந்தபோதிலும், 4-வது மற்றும் 5-வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளின் மீது பெரும்பாலானோரின் கவனமும் பதிந்திருந்தது.

 

தலைசிறந்த பயிற்சியாளர், முதல் முதலில் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி வீரர்கள், எதிரணிகளின் குறை, நிறைகளை ஆராய்ந்து அதற்கேற்க வியூகம் வகுத்தவர் என்றறியப்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த பாப் உல்மர், பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்ததும், ஆஸ்திரேலிய ஜாம்பவான் கிரெக் சேப்பல் இந்தியாவின் பயிற்சியாளராக இருந்ததுமே அதற்கு முக்கியக் காரணம்.

 

சேப்பல் சர்ச்சைகளின் நாயகர். அணித் தலைவராக இருந்த சவுரவ் கங்கூலியிடம் மோதி, அவரது தலைமைப் பதவி பறிபோகவும், அணியில் இருந்து நீக்கப்படவும் காரணமாக இருந்தவர். அவருக்கு கங்குலி, வி.வி.எஸ். லக்ஷ்மன் போன்ற சில சீனியர்களை ஏனோ பிடிக்கவேயில்லை. பின்னர், ஒருவழியாக அணியில் கங்குலி இடம்பிடித்து, 2007 உலகக் கோப்பைக்கும் தேர்வு செய்யப் பட்டார்.

 

ராகுல் திராவிட் தலைமையில் மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சென்ற அணி, சேப்பலின் எதேச்சதிகார அணுகுமுறை காரணமாகச் சுரத்திழந்திருந்தது. ஹர்பஜன் சிங், கங்கூலிக்கு ஆதரவாக வெளிப்படையாக்க் கருத்து தெரிவித்ததே அணி பிளவுபட்டிருந்ததைப் படம்பிடித்துக் காட்டியது. இந்த சூழலில்தான் இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகள் போய்ச் சேர்ந்தது.

 

வழக்கமான இரண்டு குழுக்களுக்குப் பதில், இம்முறை தலா நான்கு அணிகள் அடங்கிய நான்கு குழுக்கள் ஏற்படுத்தப் பட்டன. பிரிவுகளின் விவரம்: ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, தென்னாப் பிரிக்கா, ஸ்காட்லாந்து. ‘பி’ பிரிவில், இந்தியா, இலங்கை, வங்கதேசம், பெர்முடா, ‘சி’ பிரிவில், இங்கிலாந்து, நியூஸிலாந்து, கனடா, கென்யா, ‘டி’ பிரிவில், பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து.

 

பாப் உல்மர் மரணம்

மார்ச் 14-ல் தொடங்கிய முதல் போட்டியில், ஆஸ்திரேலியா, எளிதில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது. ஆனால், மார்ச் 17-ம் தேதி, பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்குப் பேரிடி காத்திருந்தது. அன்று, வங்கதேசத்துடன் மோதிய இந்தியா, தோல்வியடைந்தது.

முதலில் ஆடிய இந்தியா, முர்தஸா, ரசாக் உள்ளிட்டோரின் சிறப்பான பந்து வீச்சில் 49.3 ஓவர்களில் 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பின்னர், தொடக்க ஆட்டக்காரர் தமீம் இக்பாலின் சிறப்பான ஆட்டத்தால், 48.3 ஓவரிலேயே வங்கதேசம் வென்றது. அதேநாளில், முதல்முறையாக உலகக் கோப்பையில் இடம்பிடித்த அயர்லாந்து அணியிடம் பாகிஸ்தான் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் கடும் கண்டனக் குரல்கள் எழுந்தன.

அன்றைய இரவு, கிங்க்ஸ்டனில் தான் தங்கியிருந்த ஹோட்டலில் மர்மமான முறையில் பாப் உல்மர் இறந்து கிடந்தார். அது கொலை என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், சில மாதங்களுக்குப் பிறகு, அது இயற்கையான மரணம் என ஒருவழியாக முடித்துவைக்கப்பட்டது.

 

மனம் நொந்த நிலையில் ஆடிய பாகிஸ்தான், கடைசி லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வேவை படுதோல்வியடையச் செய்து ஆறுதல் தேடிக்கொண்டாலும், அவர்களைப் பின்னுக்குத் தள்ளி, ‘சூப்பர் 8’ பிரிவுக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன், கற்றுக்குட்டி அயர்லாந்து தகுதி பெற்றது.

‘ஏ’ பிரிவில் இந்தியாவை புறம்தள்ளி, இலங்கையும், வங்கதேசமும், அடுத்த கட்டத்துக்கு முன்னேறின. 1983-க்குப் பிந்தைய உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளில் ஒன்றுகூட அரையிறுதிக்குத் தகுதி பெறாதது அதுவே முதல்முறையாகும். இந்திய ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். ஆட்டம் பற்றியும் அணியில் நிலவும் சூழல் பற்றியும் பல சர்ச்சைகள் எழுந்தன. கிரெக் சேப்பல் ராஜினாமா செய்தார்.

மகேந்திர சிங் தோனியின் முதல் கோப்பையாக அமைந்த இந்தத் தொடர் திராவிட், கங்கூலிக்குக் கடைசி உலகக் கோப்பைத் தொடராகவும் அமைந்தது.

 

1996 தோல்விக்குப் பழி

 

சூப்பர் 8 பிரிவில் தென்னாப் பிரிக்காவை 67 ரன்னில் வீழ்த்தி வங்கதேசம் அசத்தினாலும், அரையிறுதிக்கு வலுவான ஆஸ்திரேலியா, இலங்கை, தென்னாப் பிரிக்கா, நியூஸிலாந்து அணிகளே தகுதி பெற்றன. அரையிறுதியில் நியூஸிலாந்தை வீழ்த்தி, இலங்கையும், வலுவான தென்னாப்பிரிக்காவை எளிதில் ஊதித் தள்ளி ஆஸியும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன.

 

அதுவரை நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில், ஏற்கெனவே மோதிய இரு அணிகள் மீண்டும் இறுதியில் மோதியதில்லை. ஆனால்,

இலங்கையிடம் 1996-ல் இறுதிப் போட்டியில் தோற்ற ஆஸி, இம்முறை மீண்டும் அந்த அணியை இறுதியில் (ஏப்ரல் 28) சந்தித்தபோது, அதற்குப் பழிவாங்கியது மட்டுமன்றி, தொடர்ந்து மூன்றாவது முறையாக கோப்பையைத் தட்டிச்சென்று ‘ஹேட்ரிக்’ சாதனையும் புரிந்தது முத்தாய்ப்பாக அமைந்தது.

 

இறுதிப் போட்டி சர்ச்சை

மழை காரணமாக 36 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட அந்தப் போட்டியில் இரண்டாவதாக ஆடிய இலங்கைக்கு 281 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர், 36 ஓவர்களில் 269 ஆக அது மாற்றப்பட்டது. அதன்பிறகு, 33-வது ஓவரில் மழை குறுக்கிட்டதால், 37 ரன்களில் ஆஸி வென்றதாக அறிவிக்கப்பட்டது. அவர்கள் வெற்றியைக் கொண்டாடத் தொடங்கினர். ஆனால் அது தவறு என்று கூறி, 18 பந்துகளில் 61 ரன்கள் எடுக்க வேண்டும் என்று மீண்டும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. வெளிச்ச மின்மையால் மறு நாள் தொடரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இலங்கை கேப்டன் ஜெயவர்த்தனே, தொடர்ந்து ஆடுவதாகக் கூறியதும், எதிரணி கேப்டன் பான்டிங், ஸ்பின்னர் களை மட்டுமே பயன்படுத்துவ தாகக் கூறினார். இருட்டில் ஆடிய இலங்கை, 9 ரன்களை மட்டுமே மேலும் சேர்க்க முடிந்தது. இந்தச் சொதப்பலுக்காக நடுவர்கள் மன்னிப்பு கேட்டாலும் 2007-ல் நடந்த 20 ஓவர் போட்டிக்கு அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இவ்வாறு சர்ச்சைகள் நிறைந்ததாக 2007 கோப்பை அமைந்தது.

 

சுவாரஸ்யங்கள், சாதனைகள்

பெர்முடாவுக்கு எதிராக இந்தியா அடித்த 413 ரன்களே உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோராகும்.

நெதர்லாந்துடனான ஆட்டத்தில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர் அடித்து, சாதனை புரிந்தார் தென்னாப்பிரிக்காவின் கிப்ஸ்.

127 கிலோ எடையுள்ள பெர்முடாவின் லிவராக், ஸ்லிப்பில் பாய்ந்து பிடித்த உத்தப்பாவின் கேட்ச், இன்றளவும் பேசப்படுகிறது.

 

அயர்லாந்து அணிக்காக உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஆடிய எட்ஜாய்ஸ், உலகக் கோப்பையின்போது இங்கிலாந்து அணியில் ஆடினார்.

அயர்லாந்து அணியில் விளையாடிய தென்னாப்பிரிக்கரான இயன் மார்கன், 2015 உலகக் கோப்பையின் இங்கிலாந்தின் கேப்டனாகக் களம் காண்கிறார்.

முதல் முறையாக அதிக அணிகள் (16) இடம்பெற்றன. சூப்பர் 8 சுற்றும் அறிமுகப்படுத்தப்பட்டது.
 

http://tamil.thehindu.com/sports/2007-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6877904.ece

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.