Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாணத்தில் இனரீதியான மக்கள் தொகை என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாணத்தில் இனரீதியான மக்கள் தொகை என்ன?

கிழக்கு மாகாணத்தின் இன ரீதியான மக்கள் தொகையின் அளவு பற்றிய பல கணக்குகள் காட்டப்படுகின்றன. குடிசனத் தொகை மதிப்பீடு கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக சரியான முறையில் நடத்தப்படாத நிலையில் ஒவ்வொருவரும் தமது அபிப்பிராயத்தைக் கூறிவருகின்றனர். இவ்வாறான நிலையில் 1881 ஆம் ஆண்டில் நடைபெற்ற குடிசனத் தொகை மதீப்பீட்டையும் 1981 ஆம் ஆண்டு நடைபெற்ற குடிசனத்தொகை மதிப்பீட்டையும் ஒப்பிட்டுக் கவனம் செலுத்துவது காலத்தின் தேவையாகும்.

1881 ஆம் ஆண்டின் குடிசனத் தொகை மதிப்பீட்டின்படி கிழக்கு மாகாணத்தின் மொத்த சனத்தொகையில் தமிழர்கள் 67 வீதத்தினராகவும் தமிழ், பேசும் பேசும் முஸ்லிம்கள் 30 வீதத்தினராகவும் சிங்கள மக்கள் மூன்று வீதத்தினராகவும் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, கிழக்கு மாகாணத்தின் மொத்த சனத் தொகையில் தமிழர்கள் மூன்றில் இரண்டு பங்கினருக்கும் அதிகமாக இருந்ததுடன் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழர்களும், முஸ்லிம்களும் கூட்டாக தொண்ணுற்று ஏழு வீதத்தினராக இருந்துள்ளனர். இது குடிசனத் தொகை மதிப்பீட்டு அறிக்கையில் காட்டப்பட்டுள்ள விபரமாகும்.

1981 ஆம் ஆண்டின் குடிசனத் தொகை மதிப்பீட்டின் போது அதாவது நூறு ஆண்டுகளுக்குப் பின்னரான மதிப்பீட்டின் போது தமிழர்களின் எண்ணிக்கை 45 வீதமாகக் காட்டப்பட்டுள்ளது. அதாவது அறுபத்து ஏழு வீதமாக இருந்த தமிழர்களின் அளவு நாற்பத்தைந்து வீதமாகக் குறைந்துள்ளது.

முப்பது வீதமாக இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை முப்பத்தைந்து வீதமாக அதிகரிக்கப்பட்ட அதேவேளை மூன்று வீதமாக இருந்த சிங்கள மக்களின் தொகை இருபது வீதமாக அதிகரித்துள்ளமையை 1981 ஆம் ஆண்டின் மதிப்பீட்டறிக்கை காட்டுகின்றது.

அதாவது நூற்றுக்குத் தொண்ணுற்றேழுவீதமாக 1881 ஆம் ஆண்டிருந்த தமிழ்ப் பேசும் மக்களின் அளவு 1981 ஆம் ஆண்டு எண்பது வீதமாக வீழ்ச்சியடைந்தது.

கிழக்கு மாகாணத்தின் தமிழ்ப் பேசும் மக்களின் வீதாசார வீழ்ச்சிக்குப் புதிதாக உருவாக்கப்பட்ட குடியேற்றங்களும், பெரும்பான்மை மக்கள் வாழும் பகுதிகள் கிழக்கு மாகாணத்துடன் இணைக்கப்பட்டதும் ஏதுக்களாயமைந்தன.

1981 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணிப்பீட்டின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள் மிகப் பெரும்பான்மையாக இருப்பதுடன் திருகோணமலை மாவட்டத்தில் தனிப்பெரும்பான்மையாகவும் உள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் எண்ணிக்கை மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பங்கினராக உள்ளது. அம்பாறை மாவட்டத்தில் இரண்டு வீதம் கூடுதலாக, சிங்கள மக்களைவிட அதிகமாக வாழ்வதால் முஸ்லிம்கள் தனிப்பெரும்பான்மையாக உள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள் எண்பத்திரண்டு வீதமாகவும் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள் நாற்பது வீதமாகவும் அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் 20 சதவீதமாகவும் வாழ்வதாக 1981 ஆம் ஆண்டின் மதிப்பீடு காட்டுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் பதினெட்டு வீதமாகவும் திருகோணமலை மாவட்டத்தில் சிங்களவர்கள் முப்பத்தாறு வீதமாகவுள்ள அதேவேளை முஸ்லிம்களின் எண்ணிக்கை இருபத்துநான்கு வீதமாக மூன்றாம் இடத்திலேயே உள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் நாற்பத்தொரு வீதமாக இருக்கும் அதேவேளை சிங்கள மக்களின் தொகை முப்பத்தொன்பது வீதமாகவும் தமிழர்களது தொகை இருபது வீதமாகவும் உள்ளது.

புள்ளிவிபரங்கள் இவ்வாறு சுட்டிக்காட்ட ஒவ்வொருவரும் தாம் விரும்பியபடி கணக்குகளைப் போடுவது வேடிக்கையாக உள்ளது. போலியான புள்ளிவிபரங்களை அள்ளிவீசி உணர்ச்சிபூர்வமாகக் கருத்துகளைக் கூறுவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை.

மக்கள் மத்தியிலே வீணான குழப்பங்களையும் அவ நம்பிக்கைகளையும் அச்சத்தையும் ஏற்படுத்துவதால் பயனில்லை. மக்கள் உண்மையைத் தெரிந்திருத்தல் வேண்டும். தமது நிலை என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் சமூக நல்லுறவு ஏற்படும்.

ஒரு சில ஆண்டுகள் மட்டும் பதவிகளை வகிக்கும் பிரமுகர்கள் மக்களின் நிரந்தர ஒற்றுமையான வாழ்விற்குப் பங்கம் செய்வது பாதகச் செயலாகும்.

கிழக்கு மாகாணத்தின் 1970 ஆம், 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள் இனரீதியான பிரதி நிதித்துவத்தை உறுதிப் படுத்துகின்றன. 1970 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவான பதினொருபேரில் தமிழர்கள் ஆறுபேரும் முஸ்லிம்கள் நான்கு பேரும் சிங்களவர் ஒருவரும் இடம்பெற்றனர்.

2004 ஆம் ஆண்டில் தமிழர்கள் ஏழுபேரும் முஸ்லிம்கள் ஆறுபேரும் சிங்களவர்கள் மூன்று பேருமாகப் பதினைந்து பேர் தெரிவாகினர். மக்களது நேரடி வாக்குகளால் தெரிவானோரின் அடிப்படையைக் கொண்டு நோக்கும் போதும் தமிழர்களே கிழக்கு மாகாணத்தின் தனிப்பெரும்பான்மை என்பதுடன் கிழக்கின் மூன்று மாவட்டங்களில் ஒருமாவட்டத்தில் அதாவது மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமே ஒரே இனத்தவர்கள் தமிழர்கள் அறுதிப் பெரும்பான்மை உள்ளனர்.

திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் எந்தச் சமூகத்தினரும் தாமே பெரும்பான்மையினத்தவர் என்று உரிமை கூற வழியில்லை.

இருப்பினும் மொழி ரீதியான இணைப்பால் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்தால் மேற்படி இருமாவட்டங்களிலும் தமிழ் மொழிபேசுவோர் பெரும்பான்மையாக அமைவர்.

இல்லாதுவிட்டால் மொழிதவிர்ந்த சமய, கலாசார, பண்பாடுகளை அடிப்படையாகக் கொண்டால் இந்துக்களும், பௌத்தர்களும் அதாவது தமிழரும், சிங்களவரும் இணைந்தால் அவர்களே திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் பெரும்பான்மையினராக இருப்பர். மொழியென்பது தடையாக இல்லாவிட்டால் தமிழ், சிங்கள உறவுக்குக் கூடிய வாய்ப்புகள் உண்டு. பண்பாடு, சமய, கலாசார இணைப்புகள் தமிழ், சிங்கள மக்களிடம் அடிப்படை உறவுக்கு வழிவகுக்கக் கூடிய காரணிகளாயுள்ளன.

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் வரலாற்றுச் சிறப்பும் பழைமையும் கொண்ட இந்து ஆலயங்கள் உள்ளன.

திருகோணமலையிலுள்ள திருக்கோணேஸ்வரம், தம்பலகாமம் ஆதிகோணேஸ்வரம், கந்தளாய் சிவன் கோயில், மட்டக்களப்பிலுள்ள மாமங்கேஸ்வரம், மண்டூர் முருகன் கோயில், அம்பாறையிலுள்ள காரைதீவு திரௌபதை அம்மன் ஆலயம், உகந்தை முருகன் கோயில், திருக்கோயில் சித்திரவேலாயுத சுவாமி கோயில் என்பன கிழக்கின் தமிழரின், இந்துக்களின் பழைமைக்கும் பெருமைக்கும் கட்டியம் கூறி நிற்கின்றன.

பௌத்தர்கள் அம்பாறையிலுள்ள தீகவாபியைத் தமது வரலாற்றுத் தொன்மைக்கு ஆதாரமாகக் கொள்வதும் குறிப்பிடத்தக்கது. பௌத்தம் இந்துகளுக்கோ, தமிழர்களுக்கோ, அந்நிய மானதல்ல என்பது வரலாற்று உண்மை என்பதும் கவனத்திற் கொள்ள வேண்டியதாகும்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள பௌத்த வழிபாட்டிடங்கள் பண்டைய தமிழரின் வழிபாட்டிடங்களாகவும் இருந்திருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை. ஏனெனில், பௌத்தத்திற்கும் தமிழர்களுக்கும், இந்துக்களுக்கும் உள்ள தொடர்பு வரலாற்று ரீதியானது. இதை எவராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

நிலைமை இவ்வாறிருப்பதால் மொழி ரீதியாகத் தமிழர்களும், முஸ்லிம்களும் ஒன்றிணைந்தால் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கை எண்பது வீதமாக அமையும்.

கிழக்கு மாகாணத்தின் உண்மை நிலையைப் புரிந்து கொள்ளாது சிந்திப்பதும், மக்களை திசைமாற்றுவதும் அம்மக்களுக்கு ஆற்றும் நற்பணியல்ல என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.