Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

16000 இலங்கை அகதிச் சிறுவர்கள் நாடற்றவர்களாக இந்தியாவில் வாழ்கின்றனர்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

16000 இலங்கை அகதிச் சிறுவாகள் நாடற்றவர்களாக இந்தியாவில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சிறுவர் சிறுமியருக்கு எந்தவொரு நாட்டினதும் குடியுரிமை கிடையாது என சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்திய அகதி முகாம்களில் பிறந்த சிறுவர் சிறுமியர் பிறந்து ஒராண்டு காலத்திற்குள், இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

கடந்த மூன்று தசாப்த காலத்தில் 24000 சிறுவர் சிறுமியர்கள் பிறந்துள்ள போதிலும், 8000 சிறுவர் சிறுமியர் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

எஞ்சிய சிறுவர் சிறுமியர்கள் பற்றிய விபரங்களை பதிந்து அவர்களுக்கான குடியுரிமையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என ஈழ அகதி புனர்வாழ்வு அமைப்பு கோரியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சிக் காலத்தில் இந்தப் பதிவுகள் கிரமமான முறையில் நடைபெற்றதாகவும் அதன் பின்னர் உரிய முறையில் பதிவு செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளது.

  

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/116170/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

 

16000 இலங்கை அகதிச் சிறுவாகள் நாடற்றவர்களாக இந்தியாவில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சிறுவர் சிறுமியருக்கு எந்தவொரு நாட்டினதும் குடியுரிமை கிடையாது என சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்திய அகதி முகாம்களில் பிறந்த சிறுவர் சிறுமியர் பிறந்து ஒராண்டு காலத்திற்குள், இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

கடந்த மூன்று தசாப்த காலத்தில் 24000 சிறுவர் சிறுமியர்கள் பிறந்துள்ள போதிலும், 8000 சிறுவர் சிறுமியர் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

எஞ்சிய சிறுவர் சிறுமியர்கள் பற்றிய விபரங்களை பதிந்து அவர்களுக்கான குடியுரிமையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என ஈழ அகதி புனர்வாழ்வு அமைப்பு கோரியுள்ளது.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/116170/language/ta-IN/article.aspx

 

 

பாவம், மீதமுள்ள சிறார்களின் கதி..? பொறுப்பிலுள்ள பாதுகாவலர்கள் தான் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

  • 3 weeks later...

chandrahasan.jpg

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளுக்குப் பிறந்த 16000 குழந்தைகள் குடியுரிமைகள் இல்லாத நிலையில் அகதிகள் அந்தஸ்துடன் வாழ்ந்து வருவதாக ஈழ அகதிகள் புனர்வாழ்வு அமைப்பின் நிறுவனர் எஸ்.சி.சந்திரஹாசன் தெரிவித்துள்ளார்.

 

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்ப வேண்டுமென இலங்கை இந்திய அதிகாரிகள் கலந்துரையாடிவரும் நிலையில் இவ்விஷயம் தொடர்பாக அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

 

அகதி முகாம்களில் பிறக்கும் குழந்தைகள் குறித்து இலங்கை தூதரகத்தில் பதிவு செய்ய வேண்டும். பிறந்த ஒரு வருடத்துக்குள் பதிவு செய்த பின் பிறப்புச் சான்றிதழைப் பெற வேண்டும். கடந்த 30 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள பல்வேறு முகாம்களில் 24000ற்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளன. இவற்றில் 3000 குழந்தைகளுக்கு மாத்திரமே பதிவு செய்யப்பட்டிருப்பதாக எஸ்.சி.சந்திரஹாசன் சுட்டிக் காட்டியுள்ளார்.

 

16000 பிள்ளைகள் பதிவு செய்யப்படவேண்டி உள்ளது. இவர்களில் பலர் இளைஞர்களாகி விட்டனர். அவர்கள் நாடு திரும்பினாலும் அது சட்ட ரீதியானதாக அமையாது. எனவே அவர்களின் பதிவுகளை இந்திய அரசாங்கம் உறுதி செய்ய வேண்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அகதி முகாம்களில் பிறக்கும் குழந்தைகளைப் இலங்கை தூதரகத்தில் பதிவு செய்யும் நடவடிக்கை சுமுகமாக நடைபெற்றது. அப்போதிருந்த தூதரக அதிகாரி மக்களிடம் சென்று பதிவுகளை நடத்தினார். இந்த நிலையில் சந்திரிகா காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கொள்கையை மீண்டும் கடைப்பிடிப்பதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சந்திரஹாசன் தெரிவித்துள்ளார்.

 

2012ஆம் ஆண்டு ஈழ அகதிகள் புனர்வாழ்வு அமைப்பு பதிவுகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது. எனினும்இ ஈழ ஆதரவு குழுக்களால் இந்த முயற்சி தடை ஏற்பட்டது.

 

இந்தியாவிலுள்ள அகதிகளை நாட்டுக்கு அழைப்பதற்கு முன்னர் அவர்களை பதிவு செய்வது தொடர்பில் தெளிவான நிலைப்பாடு ஒன்றை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

http://lankanaatham.com/news/16660http://lankanaatham.com/news/16660

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.