Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அநீதி இழைக்கப்பட்டால் மீண்டும் அரசியலுக்கு வருவேன் – மிரட்டுகிறார் மகிந்த

Featured Replies

அநீதி இழைக்கப்பட்டால் மீண்டும் அரசியலுக்கு வருவேன் – மிரட்டுகிறார் மகிந்த FEB 04, 2015 | 0:05by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

mahinda-rajapaksa-300x200.jpgதனது வெற்றிகளிலும் தோல்விகளிலும் துணை நின்ற கட்சிகளுக்கு அநியாயம் இழைக்கப்பட்டால், நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களின் சார்பாக தாம் மீண்டும் மக்களின் முன் செல்வேன் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“மீண்டும் நான் அரசியலுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு மீண்டும் அரசியலுக்கு வருவேன் என்ற நம்பிக்கையும் இல்லை.

ஆனாலும்,எனது வெற்றிகளிலும் தோல்விகளிலும் துணை நின்ற கட்சிகளை கைவிட்டு விட முடியாது.

அவர்களைத் தனிமைப்படுத்துவதை என்னால் அனுமதிக்க முடியாது.

நான் தலையிடாது போனால் அது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

அவர்கள் அநீதியை எதிர்கொள்ள நேரிட்டால், அவர்களின் சார்பாக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் முன் செல்வேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/02/04/news/3369

 

மகிந்தா வேறொரு கட்சியினூடாக அரசியலில் பிரவேசிப்பாரானால் பொதுக்கட்சிகளின் ஆட்சி உடைபடக்கூடிய வாய்புகளே அதிகமாகவுள்ளது.காரணம் சிறிலங்கா சுதந்திரக்கட்சி அனாதை ஆகி விடும்.இதை சந்திரிகாவோ மைத்திரியோ ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்

 

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் திரும்பி வந்தால் இவையள் உங்களுக்குத்தான் ஓட்டுப்போடுவினம்.... :D

இல்லாட்டி ஒண்டும் தெரியாதமாதிரி இருப்பினம்........ :icon_idea:

ஏனெண்டால் அண்டுதொடக்கம்  மாத்தி மாத்தி ஓட்டு போட்டு அடிவாங்கி அழியிற கொள்கைக்காரர்கள். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதிய அரசாங்கம் மகிந்தர் கூட்டத்தின் திருகுதாளங்கள், கொள்ளைகள், சொகுசு வாழ்க்கையை அம்பலப்படுத்தும் வேகத்தை பார்த்தால் இன்னும் மூன்று மாதங்களில் மகிந்தரின் மதிப்பு தேர்தல் வரும்போது ஏறக்குறைய செல்லாக்காசாகிவிடும். சந்திரிக்கா சூடுபட்ட பூனை. அவ்வளவு இலகுவில் மகிந்தர் கூட்டம் அதிகாரத்தை கைப்பற்றுவதை விடமாட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

 இவர் காலத்தில் எல்லாம் நீதியாய்த்தான் நடந்தது. இனியேதும் அநீதி நடந்தால், இரட்சகர் உடனடியா மீட்க வருவார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும்,எனது வெற்றிகளிலும் தோல்விகளிலும் துணை நின்ற கட்சிகளை கைவிட்டு விட முடியாது.

அவர்களைத் தனிமைப்படுத்துவதை என்னால் அனுமதிக்க முடியாது.

நான் தலையிடாது போனால் அது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

அவர்கள் அநீதியை எதிர்கொள்ள நேரிட்டால், அவர்களின் சார்பாக வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் முன் செல்வேன்” 

 

 

அவர் சரியாகவே சொல்கிறார்

இன்று நல்லவர்களுக்கு காலமில்லை

இது உலகளவில் உணர்ந்து கொள்ளப்பட்ட உண்மை

எனவே கெட்டவர்கள் ஒன்று கூடுவோம் என்கிறார்

அவர்கள் தான் இன்றைய உலகத்தின் வெற்றியாளர்கள்

வெல்வார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.