Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். மாநகர சபையால் கழிவகற்றல் நிறுத்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

d7da85b480479c1b6a2976d728f329ea.jpg

கழிவகற்றும்  நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு யாழ். மாநகர சபை தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது குறித்து யாழ். மாநகர சபையின்  ஆணையாளர் பிரணவநாதன் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
மேலும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 
 
 
மாநகரசபையினால் அகற்றப்படும் திண்மக் கழிவுகள்  இதுவரை கல்லுண்டாய் பகுதியில் கொட்டப்பட்டு வந்தது. தற்போது குறித்த பகுதியில் கழிவுகளை கொட்டுவதில் தடைகள் ஏற்பட்டுள்ளது. 
 
எனவே மாநகர சபை கழிவகற்றல் நடைமுறையை தற்காலிகமாக இடைநிறுத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. 
 
இந்த கழிவு அகற்றும் முறை மீண்டும் ஆரம்பிக்கும் வரை மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட குடியிருப்பாளர்கள்  மற்றும்  அரச, அரச சார்பற்ற நிறுவனத்தினர் அனைவரும் ஏனைய குடியிருப்பாளர்களுக்கு இடையூறு இல்லாத வகையிலும் நோய்த்தொற்றுக்கு உள்ளாகாத வகையிலும் வீதிகளை அசுத்தப்படுத்தாது சுகாதாரமான சூழலை பேண ஒத்துழைப்புத் தருமாறும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதேவேளை ,  கடந்த பல ஆண்டுகளாக கல்லுண்டாய் வெளியில் யாழ். மாநகர சபை கழிவுப் பொருட்களைக் கொட்டி வந்தது. இதனால் போக்குவரத்துச் செய்பவர்கள் அப்பிரதேசத்தின் குடியிருப்பாளர்கள்  பல அசௌகரியங்களை எதிர்நோக்கியதுடன்  பல்வேறு நோய்த்தாக்கத்திற்கும் உள்ளாகி வருகின்றனர்.
 
இதனால் பல தடவைகள்  குறித்த பகுதியில் கழிவுகளைக் கொட்ட வேண்டாம் என பொதுமக்கள் மற்றும் மானிப்பாய் பிரதேச சபையினர் யாழ். மாநகர சபைக்கு கடிதங்களை அனுப்பிவைத்தனர். 
 
எனினும் செயற்பாட்டில் மாற்றம் எதுவும் இடம்பெறவில்லை. பொதுமக்கள்  இணைந்து நேற்று முன்தினம் குறித்த இடத்தில் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டதுடன்  குப்பைகளை ஏற்றி வந்த ரக்ரர்களையும் திருப்பி அனுப்பினர்.
 
அத்துடன்  ஆணையாளுருடனும் நியாயம் கேட்டு போராடினர். சம்பவ இடத்திற்கு வந்த ஆணையாளர் . யாழ். மாநகர சபைக்கு குறித்த இடத்தில் குப்பைகளைப் போடுவதற்கு அனுமதி உள்ளது என்றும் பொதுமக்கள் தடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
 
மேலும் நீதிமன்றத்தை நாடுமாறும் பொதுமக்களுக்கு  ஆணையாளர் தெரிவித்தார். அத்துடன் தொடர்ந்தும் குறித்த பகுதியில் மக்கள் கூடி போராட்டத்தை மேற்கொண்டு வருவதால் கழிவுகளைக் கொட்ட முடியாத நிலைக்கு மாநகர சபை தள்ளப்பட்டுள்ளது.
 
 
இதனையடுத்தே தீர்வு ஒன்றினைப் பெறும் வரை கழிவுகளைக் எடுக்கும் நடவடிக்கையினை இடைநிறுத்துவதாக ஆணையாளர் அறிவித்துள்ளார். 

http://onlineuthayan.com/News_More.php?id=453063877717300861

அதென்னவோ தெரியவில்லை தொலைக்காட்சி, தொலைபேசி, இணையம், அலைபேசி,ஸ்மார்ட்போன்,  பேஸ்புக், வட்ஸ்அப், ஸ்கைப் என எல்லா நவீன தொழில் நுட்பங்களும் எமது தென்னாசிய நகரங்களை மிக துரித கதியில் ஆக்கிரமித்து விடும். ஆனால் மேற்கு நாடுகளின் நகரங்களில் பல தசாப்தங்களாகவே நடைமுறையில் இருநக்கும் கழிவகற்றல், பொது இடங்களை சுத்தமாக வைத்திருக்கும் தொழில் நுட்பங்கள் மாத்திரம் இன்றைய தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்த நிலையிலும் எமது நாடுகளை எட்டுவதேயில்லை. இது ஏன்?  யாழ்கள உறவுகளுக்காவது  தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

அதென்னவோ தெரியவில்லை தொலைக்காட்சி, தொலைபேசி, இணையம், அலைபேசி,ஸ்மார்ட்போன்,  பேஸ்புக், வட்ஸ்அப், ஸ்கைப் என எல்லா நவீன தொழில் நுட்பங்களும் எமது தென்னாசிய நகரங்களை மிக துரித கதியில் ஆக்கிரமித்து விடும். ஆனால் மேற்கு நாடுகளின் நகரங்களில் பல தசாப்தங்களாகவே நடைமுறையில் இருநக்கும் கழிவகற்றல், பொது இடங்களை சுத்தமாக வைத்திருக்கும் தொழில் நுட்பங்கள் மாத்திரம் இன்றைய தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்த நிலையிலும் எமது நாடுகளை எட்டுவதேயில்லை. இது ஏன்?  யாழ்கள உறவுகளுக்காவது  தெரியுமா?

 

நாங்கள் யார்? எப்படி எங்கன்ட சொந்த கழிவுகளை அகற்றுவது ......மற்றவன் செய்யமட்டும் பார்த்துகொண்டு இருப்போம்....தொலைபேசியுடன் பிறந்த பரம்பரை எப்படி கழிவுகளை அகற்றுவது..:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.