Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதை அந்தாதி

Featured Replies

வாலைக் குமரியின்

காலைக் குளிப்புக்காய்

பூஞ்சோலைத்தடாகங்கள்..

பாலாகப் பொங்கநுரை..

அடடா அது ரெக்ஸோனா...

சோப்புநுரை..

அன்பே ..அழகே..

நீ குளித்தாலும் அழகு..

குழைந்தாலும் அழகு..

ஆனால் ஏனோ

கண்ணன் வண்ணத்தை

கல்லில் உரைத்து

போக்கப் பார்க்கிறாய்..

போகாதடி அன்பே

கங்கையில் குளித்தாலும்..

கா...க்..கா...

வெள்ளையாகுமா..

  • Replies 1.9k
  • Views 182k
  • Created
  • Last Reply

வெள்ளைக் காக்க பறக்குதடா

இதை சொல்வது றம்புட்டாண்டா

இதிலிருந்து புரியுதடா

அவர்களை அரிசந்திர பண்பு

புலி பதுங்குதென்பார்களடா

பதுங்கும் புலி பாயுமென்பது பழமொழியடா

பதுங்கும் புலி பாயுதடா

இது புதுமொழியடா

புதுமொழி நீ

பேச புரியாது

நான் கேட்க

காதல் மொழி

என்றுரைத்தாய்

காதலுக்காய் வந்த

மொழி காவியம்

படைக்குமென்று

பேதையிவள் நம்பியதால்

வாழ்கை தனை

தான் தொலைத்தால்

புரியாது வந்த மொழி

காதலையும் புரியாது

ஆக்கியது ஏன்

புரியாது போகின்றது

இந்த வெள்ளை ரோஜா

ரோஜாவைச் சூடிய ரோஜா

நடக்கிறதோ மிதக்கிறதோ..

உன் வண்ணவனப்பில்

கன்னப் பளபளப்பில்..இருதயக்

கட்டுடைந்த காளையாய்..

பாவாடைத் தாவணிக்குள்

கட்டுண்ட ஆணமகனாய்..

சுற்றம் சூழல் மறந்து உனைச்

சுற்ற வைத்த காரிகையே..

பார்வையில் பசி தந்து எனைப்

பட்டினியாய் விட்டதென்ன..

வெள்ளை ரோய மலர்

போன்ற எம் பின்ஞ்சுக்கள்

கருகிப் போய் விட்டார்கள்

இராட்சத கழுகுகளின்

வெறியாட்டத்திற்க்கு

கழுகுகளை அழிப்பதற்க்கு

புறப்பட்டது தமிழீழத்தின்

சிட்டுக் குருவிகள்

சிட்டுக் குருவிகளின்

சீற்றம் கண்டு வெருண்டு

மண்டியிட்டது

கழுகுக் கூட்டம்

நாளை மீண்டும்

பூத்துக் குளுக்கட்டும்

எம் வெள்ளை ரோஜாக்கள்

ரோஜாக்கள் அவையே

காதலுக்கு ராஜாக்கள்

பூவையரை கொள்ளையிடும்

பூக்கள் தான் ரோஜாக்கள்

ரோஜாவில் முள்ளுமுண்டு

ரோஜாவில் அழகுமுண்டு

கன்னியை கவர்ந்திழுக்க

காளையே ரோஜா கொடு

ரோஜாக்கள் பலவிதம்

ஒவ்வொன்றும் ஒருவிதம்

காதலுக்கு சிவப்பு ரோஜா

நட்புக்கு மஞ்சள் ரோஜா

காதலிக்கு நீட்டு சிவப்பு ரோஜா

காதலில் நீயே தனி ராஜா

ரோஜா ரோஜா ரோஜா அவை

ராஜா ராஜா காதலின் ராஜா

காதலின் ராஜாவாக

கட்டிய கணவன்மார்களை

பறிகொடுத்து தவித்திருக்கும்

எம் சகோதரிகள் கூடி அழுகையிலே

உங்கள் காதல் ரோஜாக்களுக்கும்

காதல் ராஜாக்களுக்கும்

கவிதைகள் ஆயிரம்

படைப்பது நியாயமா..........?

மாதத்தில் பாதி நாள்

வானத்தில் எட்டிப்

பார்க்கும் நிலவுக்கு

இருளின் கொடுமை

எப்படி தெரியும்..........?

Edited by வானவில்

எபப்டி தெரியும் எப்படி தெரியும்

இருளின் கொடுமை

எப்படி தெரியும்

எப்படி தெரியும் எப்படி தெரியும்

வானவில்லுக்கு காதலின் அருமை

எப்படி தெரியும்

எபப்டி தெரியும் எப்படி தெரியும்

போலிக் காதலருக்கு ரோஜாவின் குணம்

எபப்டி தெரியும்?

எல்லாம் மாயம் எங்கும் மாயம்

காதலிலும் மாயம் இருப்பினும்

ரோயாவுக்கான கவியில் மாயம் இல்லை

இது தெரியுமா? தெரியாவிடில் புரியும்

புரியும் என்பார்

ஆனால் புரியாது

காதலிலும் எதுவும்

புரிவதில்லை

காதலும் புரிவதில்லை

வேலை இல்லாத

வெட்டிக்கூட்டத்தின்

பொழுது போக்கு காதல்

நிலவுக்கு இருளை

பற்றி தெரியும்போது

வானவில்லுக்கு

காதல் பற்றி தெரியாதா?

தெரியாதோ கண்ணே

சேதி

வானில் மறுபடியும்

புலிப் பாய்ந்த கதை

கிலி பிடித்து

கிடக்குதடி

சிங்களச் சேனை

கெதியாக ஈழம்

வரப்போகுதடி

துணிவோடு இரடி

எந்த நாடு விசா

மறுத்தாலும் - எம்

ஈழமிருக்கடி...!

ஈழமே நீ

விரைவில் வருவாயா?

கண்களில் நீர்ரின்றி

அழுதிடும் தாய்யவளின்

தொடரான சோகத் தை

துடைத்திட வருவாயா?

பாலுக்காய் அழுதிட்ட

குழந்தைதனை மார்வோடு

அணைத்திட மட்டுமே

முடித்த அன்னையவள்

வலியை உணர்ந்து நீ

வருவாயா?

யுத்தத்தின் கொடுமையாலும்

பட்டினிசாவினாலும்

இறந்திட்ட எம்

உறவுகளின் எண்ணிக்கை

போதாத உணக்கு

இன்னுமா புரியவில்லை

எம் சோகம்

எத்ததை தலைமுறையை

இழந்து விட்டோம்

உன்னால் _அனாலும்

எம் நம்பிக்கை இன்னும்

இறக்கவில்லை

எம் பொறுமைக்காய்

விரைவில் வந்து

விடமாட்டாயா?

விடமாட்டாய என் அன்பே

என்னை நானாக இருக்க

விட மாட்டாய்யா......?

நானாக நானிருந்தேன்

என் வாழ்வில் நீயாக

வந்தாய் என் பின்னால்

என் பின்னால் வந்த

நீ என்னை உன் பின்னால்

அழைய வைத்தாய்

இன்றோ நான் மட்டும்

தனிமையில் வாடுகிறேன்

உன்னை தொலைத்து விட்டு

என்னை விட்டுப் போன நீ

என் மனதை விட்டுப்

போகமாட்டியா.........?

போகுமிடம் தொரியாது

பேதையிவள் நிற்க

போவென நீ

துறத்த புரியாது

இவள் தவிக்க

காதலியை திட்டியது

புரிந்தது எனக்கு

போனவள் நினைவு

கொண்டு தனிமையில்

நீயிருநதால் வந்து

விட _அவள் மாட்டாள்

காதல் அது

செய்தாலே ஏமாற்றங்கள்

அதிகம்தானே

கவிஞ்ஞனாய் நீ_ஓர்நாள்

சரித்திரம் படைத்து

விட்டால் அவளும்

அழுவாள் உனக்காய்

உனக்காய் உயிர்

வாழும் இதயமிது

உன்னை மூச்சைத்தவிர

வேறெதையும்

சுவாசிப்பதில்லை

எந்தன் இதயத்தின்

சுவர்களில் உந்தன்

விம்பங்கள்தான்

ஓவியங்களாக

உன் பார்வை

ஈட்டிகளாள் என்

இதயத்தை குத்தாதே

அங்கே இருக்கும்

உன் விம்பங்களிற்க்கு

வலிக்கும் உனது

விம்பங்களிற்க்கு

வலித்தால் என்

இதயம் துடிப்பதை

நிறுத்திவிடும்....!

நிறுத்திவிடு இறைவா

இந்த உலகை

ஒருகனம்

எல்லாம் புதிதாய்

பிறக்கட்டும்

சண்டைகள் இன்றி

மனிதநேயங்கள்

கொண்டு அன்பென்னும்

மொழியால் ஒன்றினைத்து

இன்பமாய் வாழ்த்திட

இன்பமாய் வாழ்ந்திட

எங்கள் தேசத்தை

எம்மிடம் கொடுங்கள்

நாங்கள் நிம்மதியாக இருப்போம்

எங்கள் தேசத்தை

நீங்கள் கொடுக்காவிலும்

பறாவயில்லை

எஙகளை எங்கள்

வழியில் விடுங்கள்

எங்கள் தேசததை

நாங்கள் கட்டியெழுப்புவோம்

எங்கள் தலவனது

வழிகாட்டலிள்

எம் தலைவனின் வழியில்

்ஈழம் தனை காண்போம்

வெகு தொலைவில் இல்லை

எம் ஈழம்

தமிழனே நீ

நடோடி அகதியாய்

விசா மறுக்கமட்டு

மொழி புரியாமல்

வேலை இல்லாமல்

இருக்க ஓர் இடமும் அற்று

உறவுகள் அற்ற அநாதையாய்

வீதிவீதியாக திரிந்தது போதும்

நம் ஈழம் தனில் செல்வோம்

உரிமையோடு சுகந்திர காற்றினை

சுவாசிப்போம்

எம் தலைவனின் வழியில்

்ஈழம் தனை காண்போம்

வெகு தொலைவில் இல்லை

எம் ஈழம்

தமிழனே நீ

நடோடி அகதியாய்

விசா மறுக்கமட்டு

மொழி புரியாமல்

வேலை இல்லாமல்

இருக்க ஓர் இடமும் அற்று

உறவுகள் அற்ற அநாதையாய்

வீதிவீதியாக திரிந்தது போதும்

நம் ஈழம் தனில் செல்வோம்

உரிமையோடு சுகந்திர காற்றினை

சுவாசிப்போம்

ஒருவர் கவிதை வடிக்க அதன் முடிவு சொல்லை வைத்து மற்றவர் கவிதை வடிக்க வேண்டும். கவிதை எதைப்பற்றியதாகவும் எத்தனை வரியாகவும் இருக்கலாம்.

குறிப்பாக புதிதாக கவிதை எழுத இருப்போரும் மற்றும் கவிகள் படைக்கும் பலரும் தங்கள் கவித்திறமையை வளர்க்க ஒர் அடித்தளமாகவும் அமையும் என்பதே எண்ணம்.

சுவாசிப்போம் என்பதனை

வாசிக்கக் சூடத்தெரியாத..

வாசகி அல்ல நம் சகி..

ஏனோ வானவில் வரைந்த

வார்த்தை விளக்கை

வழக்காக்கி வளம் பெற என்ன

விகடன் அடமா பிடிப்பான்..

தமிழை வாசிப்போம்..

தமிழை நேசிப்போம்..

தமிழையே சுவாசிப்போம்..

சுவாசிக்கின்றேன்_ நான்

கவிதைகளை மட்டுமே

என்னை நீங்கள்

நேசிப்பதால் என்

வாழ்வை மறந்து

உங்களுடன் மட்டுமே

நான் மெளனமாக

பேசிக்கொள்கின்றேன்

என் உணர்வுகளை

வாங்கிக்கொள்வதால்

என்சோகங்களை

பகிர்ந்து கொள்கின்றேன்

இப்போது என்னுடன்

பேசிக்கொள்ள

நீங்கள் மட்டுமே

இருப்பதால் என்

இதயங்கள் உங்களுடன்

உறவாடுகின்றது

என்னை சிறைப்பிடித்த

நீங்கள் எப்போதுமே

விட்டுவிடாதீர்கள்

நான் மகிழ்ச்சியாய்

இருக்கின்றேன்

இருக்கிறேன் நான்

இங்கே என்று

சொல்லத்தான்

ஆசை...

சொல்லித் தெரிவதில்லையே

பாசம்...

மெளனமாகி

சோகங்களை எனக்குள்

சிலுவையாக்குகின்றேன்

யார் வருவார்

சேர்ந்து தோள்

கொடுக்க?

தேளாகி என்னைக்

கடிக்கின்றபோதெல்லாம்

உன் மனம் ஏனோ

மறந்துபோகிறது

மருந்து போடவும்

நீ தான்

வரவேணும் என்பதை!

ஒருவர் கவிதை வடிக்க அதன் முடிவு சொல்லை வைத்து மற்றவர் கவிதை வடிக்க வேண்டும். கவிதை எதைப்பற்றியதாகவும் எத்தனை வரியாகவும் இருக்கலாம்.

குறிப்பாக புதிதாக கவிதை எழுத இருப்போரும் மற்றும் கவிகள் படைக்கும் பலரும் தங்கள் கவித்திறமையை வளர்க்க ஒர் அடித்தளமாகவும் அமையும் என்பதே எண்ணம்.

வானவில் புதிதாக கவிதை எழுதும் எனக்கு சில சொல்லில் கவிதை கடினமாக இருக்கின்றது அது தான் எங்கள் தலைவனின் வழிகாட்டலை எம் தலைவனின் வழியில் என்று தொடங்கினேன் பெரிதாக வேறுபாடு இருப்பதாக எண்ணவில்லை

வானவில் புதிதாக கவிதை எழுதும் எனக்கு சில சொல்லில் கவிதை கடினமாக இருக்கின்றது அது தான் எங்கள் தலைவனின் வழிகாட்டலை எம் தலைவனின் வழியில் என்று தொடங்கினேன் பெரிதாக வேறுபாடு இருப்பதாக எண்ணவில்லை

அதுதான் போட்டி விதி

அப்படி நான் சொல்லவில்லை நம்ம கப்பியக்க சொல்லி சொல்லி கொடுப்பா :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்தாதி என்றால் கவிதையின் இறுதிச் சொல்லையோ, தொடரையோ வைத்து அடுத்த கவிதையின்தொடக்கமாக கொண்டு எழுதப்படுவது.

அதைக் கொண்டு தான் கவிதை அந்தாதி தொடங்கப்பட்டது.

அதன் படி கவிதைகள் அமைந்தால் மிக மிக சிறப்பான தொகுப்பாக அமையும்.

சில சொற்கள் கடினமாகத்தான் இருக்கும் சகி. அதையும் முயற்சித்து கவிதை வடிப்பது உங்கள் திறமைக்கு கிடைக்கும் ஒரு சவாலாக அமையும்.

கவிதை அந்தாதியுடன் இணைந்திருங்கள் அன்பு உறவே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரவேணும் என்பதை உன் கண்கள் காட்டியபோது

தரவேணும் என் அன்பை என் ஆயுள் உள்ளவரை

பெறவேணும் ஆயுள் நிறைய உன்னுடன் வாழ

ஆசி வேண்டி நின்றேன் இறைவன் சந்நதியில்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.