Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆலயங்களில் சேரும் நிதியை ஏழை மாணவர்களின் கல்விக்கு தருமாறு வேண்டுகோள்

Featured Replies

article_1424325845-DSC00662.JPG

 

இந்து ஆலயங்களில் சேர்த்துவைக்கப்படும் பணத்தின் ஒருபகுதியை  அந்தந்தப் பிரதேசங்களில்  வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மாணவர்களின் கல்விக்கு பயன்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று  சம்பந்தப்பட்டவர்களிடம் தான்  வேண்டுகோள் விடுத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று -1 கோட்டக்கல்வி அதிகாரி எம்.பாலசுப்பிரமணியம்  வியாழக்கிழமை (19) தெரிவித்தார்.

 

தமிழரசுக் கட்சியின் இந்து விவகார அலுவல்களுக்கு பொறுப்பானவரும் மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவைத்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரனிடமே இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

 

இது பற்றி எம்.பாலசுப்பிரமணியம் மேலும் தெரிவிக்கையில், கடந்த முப்பது வருடகால யுத்தத்தினால்  மட்டக்களப்பு மாவட்டம் மோசமாக பாதிக்கப்பட்டது. அதேவேளை, இயற்கை இடர்களான சூறாவளி, மழை, வெள்ளம், வரட்சி  போன்றவற்றாலும் பாதிக்கப்படுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்படுகின்றது.  இதன் காரணமாக வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள  குடும்பங்களிலுள்ள பிள்ளைகளின் கல்வியும் பாதிப்படைகின்றது. இவ்வேளையில், பொது அமைப்புக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள  மாணவர்களுக்கு கைகொடுத்து உதவவேண்டும்;. குறிப்பாக, ஆலயங்களில் உள்ள பணம் அந்தந்தக் கிராம மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக பயன்படுத்தப்பட வேண்டும். இது பற்றி ஆலய அறங்காவலர்கள் அதிக அக்கறை எடுத்துச் செயற்படவேண்டும்.

 

இது விடயமாக இந்து விவகாரங்களிலும் ஆலய நடவடிக்கைகளிலும் அதிக ஈடுபாடு காட்டிவரும் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனிடம் தான் வேண்டுகோள் விடுத்தபொழுது, அது பற்றி ஆலய அறங்காவலர்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்திருக்கின்றார்.

 

வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள  மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் ஆலயங்கள் அக்கறை எடுக்குமாக இருந்தால், அது வறுமைப்பட்ட சமூகத்தில் சிறந்த கல்விப் பெறுபேறுகளை அடைய உதவும்' எனக் கூறினார். இந்த விடயம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரிடம் கேட்டபொழுது, 'பல ஆலயங்கள் அதிக நிதி வளத்துடன் இருந்தாலும், அந்த நிதி வளத்தைக்கொண்டு அந்த ஆலய பரிபாலகர்கள் சமூக சேவைகளைச் செய்ய முன்வருவதில்லை என்ற பரவலான குற்றச்சாட்டு உள்ளது.

 

உண்மையில் இந்த விடயம் சீர்தூக்கிப் பார்க்கப்படவேண்டும். சமூக சேவைக்கு உதவாமல் வெறுமனே ஆலயங்களில் பணத்தைச் சேர்த்து வைப்பதில் அர்த்தமில்லை. இது விடயமாக எல்லா ஆலய நிர்வாகத்தினரோடும் கலந்து பேசி ஆலயங்களிலுள்ள பணத்தை வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மக்களின் நல்வாழ்வுக்கு பயன்படுத்த வழிவகை காணவேண்டும்' எனக் கூறினார்.

 

 http://www.tamilmirror.lk/140072#sthash.cAG6QB8J.dpuf

உண்மை தான். நான் கடந்த வருடம் யாழ்ப்பாணம் சென்ற போது கேள்விப்பட்ட விடயம் என்னவெனில்; சில கோவில் நிவர்கம் தமது வருமானத்துக்கு வரி கட்டுவதை தவிர்ப்பதற்கு, இருக்குற நல்ல கோவிலையும் இடித்துவிட்டு திரும்ப புதிதாய் கட்டுகினம். கோவில்களில் திருத்த வேலைகள் செய்வது நல்லது தான். அனால் நல்ல கோவில்லை இடித்துவிட்டு மீண்டும் கட்ட வேண்டிய தேவை இல்லை. அதுக்கு பதிலாக அந்த பணத்தில் வேறு நல்ல காரியம் செய்தால் எமது சமுதாயத்துக்கு நல்ல இருக்கும். அனால் பெரும்பாலான கோவில் நிர்வாகம் இதை விரும்புவது இல்லை என்பது நிதர்சனமான உண்மை.   :(  :(

 

ஒவ்வொருத்தரும் தங்கட உழைப்புக்காக தெருவுக்குத் தெரு கோயில கட்டி கொள்ளையடிக்கிரங்கள். இவங்க தான் தங்கட வருமானத்த கொண்டு போய் கொடுக்க போறாங்கள். சிரிப்பயிருக்கு.
 
இந்த கோயில்களில் கொண்டு போய் பணத்தை கொட்டுற மோட்டு சனத்தை சொல்லோனும். ஒரு அகதிகள் ஏழைகளுக்கு உதவியெண்ட முகத்தை சுளிச்சு கொண்டு நிப்பீனம். ஆனா கோயில் திருவிழா கும்பாபிசேகம் எண்டு சொன்னா ஆயிரக்கணக்கில பணம் போடுவினம். 
  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருத்தரும் தங்கட உழைப்புக்காக தெருவுக்குத் தெரு கோயில கட்டி கொள்ளையடிக்கிரங்கள். இவங்க தான் தங்கட வருமானத்த கொண்டு போய் கொடுக்க போறாங்கள். சிரிப்பயிருக்கு.

 
இந்த கோயில்களில் கொண்டு போய் பணத்தை கொட்டுற மோட்டு சனத்தை சொல்லோனும். ஒரு அகதிகள் ஏழைகளுக்கு உதவியெண்ட முகத்தை சுளிச்சு கொண்டு நிப்பீனம். ஆனா கோயில் திருவிழா கும்பாபிசேகம் எண்டு சொன்னா ஆயிரக்கணக்கில பணம் போடுவினம். 

 

 

இது ஒரு பெரும் சமூகச்சிக்கல்...

ஆனால் செய்யப்படவேண்டிய ஒன்று...

எனது ஊரில்

சாப்பாட்டுக்கு வழியின்றி மூக்கை சிந்தி நிற்கும் சிறுவர்கள் உள்ள இடத்தில் வாழும் அதே மக்கள் தான்

ஆறரைக்கோடிக்கு கோபுரம் கட்டுகிறார்கள்

அதை கேட்க ஒருத்தரும் இல்லை

நிலமை இதுதான்.. :(  :(  :(

Edited by விசுகு

பெரும் பெருமையும் நிலைத்து  நிக்கணும் என்பதுதான் பல  மனிதர்களின் ஆசை  ஆக இவ்வாறன செயல்கள்  தொடர்த்து இருக்கும் ..

உபயம் ..ஐரோப்பா பேரன் 

நாம் புலம் பெயர்ந்ததால் வந்தவினைகளில் இதுவுமொன்று. கோவில்கள் யாவும் வர்ணமயம். ஆனாலும் எமது சமுதாயத்தில் கோவில்களை வெறும் வழிபாட்டிடங்களாக மட்டும் பார்க்க முடியாது. அன்று சனசமூக நிலையங்கள் ஆற்றிய பங்கு அளவிட முடியாதது. இளைஞர்கள் சேரவும் கருத்துக்களைப் பரிமாறவும் உரிய இடமாகவிருந்தது. ஏன் இயக்கங்களே இங்குதான் உருவாக்கம் கொண்டது, வளர்ந்தது. இன்றைய இலத்திரனியல் காலத்தில் வயது போனவர்கள் சந்திக்குமிடமாகவும் கருத்துக்களை பரிமாறும் இடமாகவும் கோவில் உள்ளது. பலர் தமது கவலைகள் பிரச்சனைகளை இறைவனுடன் பகிந்து கொள்கின்றார்கள். இது ஒரு விதத்தில் மனோதத்துவ கலந்துரையாடல் போன்றதே (psychiatric counseling). இன்றைய போருக்குப் பின்னான காலத்தில் கோவிலின் இருப்பு அவசியமானது.
 
புலம் பெயர்ந்தவர்கள் பலர் தமது பாடசாலைக்கும் கோவிலுக்கும் உதவி செய்கின்றார்கள். இதன் பலனை பல பாடசாலைகளில் பார்க்கக் கூடியதாக உள்ளது. பாடசாலைகளின் தரம், உபகரணங்களின் தொகை உயரந்துள்ளது. பாடசாலைகள் கோவில்கள் ஒவ்வொரு தமிழனின் அடையாளம், பெருமையாக உள்ளது. அதற்கு உதவி செய்வதும் ஒரு வித மனநிறைவைத்தரும் ஒரு விடயமாகவே உள்ளது.
 
இவ்வாறு கோவில்கள் பாடசாலைக்கு கிடைக்கும் நிதி வீண்விரயமாகாது இருப்பதனை உறுதி செய்ய வேண்டும். மிகுதியான நிதியை வைத்து பல நற்காரியங்களைச் செய்யலாம். சம்பந்தப்பட்டவர்கள்தான் சிந்திக்க வேணடும். இங்கு பொதுப்படையாக எல்லோர் மீதும் குற்ற சாட்டவும் முடியாது. பல கிருஸ்தவ ஆலயங்கள், தெல்லிப்பளை துர்க்கை அம்மன் போன்றவை பல விடயங்களை சமூகத்திற்கு செய்கிறார்கள். எனது ஆதங்கம் மற்றவர்களும் இவர்களைப் பின்பற்ற வேண்டும் என்பதே!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.