Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமக்காக வாழ்வை தியாகம் செய்தவர்களைப் பேணி காப்பாற்ற...........

Featured Replies

எமக்காக வாழ்வை தியாகம் செய்தவர்களைப் பேணி காப்பாற்ற வேண்டியது எமது சமூகத்தின் கடமையாகும். ஆனால் அதனை எவ்வளவு பெயர் மனதில் முன்னிறுத்தி செயற்படுகின்றார்களென்பது கேள்விக்குறியே. மல்லாவி பாண்டியன்குளம் பகுதியில் முள்ளந்தண்டு செயலிழந்த நிலையில் நீண்ட காலமாக படுத்தபடுக்கையாக இருந்திருந்த 35 வயதேயான முன்னாள் போராளியொருவர் அண்மையில் இயற்கை எய்திருந்தார். படுக்கை புண் முள்ளந்தண்டை தாக்கியதினால் மரணம் 

சம்பவித்துள்ளது. எனினும் இயற்கை எய்திய முன்னாள் போராளியான அவ்விளைஞரது புகழுடலை மயானத்திற்கு எடுத்துச் செல்லக்கூட வசதியற்றதாககே அவரது குடும்ப நிலை இருந்துள்ளது.இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் சிலர் ஜெர்மனின் உதவும் இதயங்கள் அமைப்பினருக்கு அறிவித்துள்ளனர். விரைந்து தொழிற்பட்ட அவ்வமைப்பினர் தமது இணைப்பாளர் ச.சஜீவன் மூலம் அப்போராளியின் இறுதிக்கிரியைகள் நடைபெற வழி செய்துள்ளனர்.

10982846_10153153721399396_7503536254947

காலமறிந்து செயற்பட்டவர்களுக்கு எமது நன்றிகலந்த வணக்கங்கள் உரித்தாகுக!

  • 1 year later...

 

 

10 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு 10 சிறப்பு கழிவறைகள் கட்டிக் கொடுக்கிறது கனடிய தமிழர் அறக்கட்டளை

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட 10 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு 10சிறப்பு கழிவறை கட்டிக் கொடுக்க கனடிய தமிழர் அறைக்கட்டளை (Canadian Tamil Community Trust)முன்வந்துள்ளது. ஒரு கழிவறை கட்ட உரூபா 135,000 இலட்சம் என்ற அடிப்படையில் . மொத்தம் 10கழிவறைகள் கட்ட உரூபா 1,350,000 செலவாகிறது. முதற் தவணையாக இந்தச் சிறப்புக் கழிவறைகளைக் கட்டும் துணுக்காய் ஒளி வாழ்வு அமைப்புக்கு உரூபா 500,000 இலட்சம் வங்கி மூலம் அனுப்பப்பட்டுள்ளது. உதவி பெறும் பயனாளிகள் முல்லைத்தீவு மாவட்ட தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தா அவர்களால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள்.

 

சென்ற ஆண்டு முல்லைத் தீவு மாவட்டத்தில் 5, கிளிநொச்சி மாவட்டத்தில் 5 மொத்தம் 10 சிறப்பு கழிவறைகள் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு செந்தில்குமரன் நிவாரண நிறுவனம் உரூபா 1,200,000 இலட்சத்தில் கட்டிக் கொடுத்து உதவியது.

 

உருத்துரபுரத்தைச் சேர்ந்த முன்னாள் போராளி செல்லத்துரை கிருபானந்தன் சிறையில் இருந்து அண்மையில் விடுதலையானார். இவருக்கு 3 ஏக்கர் நிலம் உருத்திரபுரத்தில் இருக்கிறது. அதனைத் துப்பரவு செய்து தோட்டம் செய்வதற்கு வேண்டிய தண்ணீர் இறைக்கும் யந்திரம், குழாய்கள் இன்னபிற பொருட்களுக்கு ததேகூ (கனடா) உறுப்பினர்கள் 3 பேர் சேர்ந்து கடந்த வாரம் உரூபா108,500 அவரது வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இவ்வாறான சிறு சிறு உதவிகளை புலம்பெயர் தமிழர்கள் செய்யும் போது ஒரு சில முன்னாள் போராளிகள் அல்லது மாவீரர் குடும்பங்களது வாழ்வாதாரத்தையாவது நிமிர்த்த முடியும்.

 

நக்கீரன் .


 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Gari said:

 

 

10 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு 10 சிறப்பு கழிவறைகள் கட்டிக் கொடுக்கிறது கனடிய தமிழர் அறக்கட்டளை

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட 10 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு 10சிறப்பு கழிவறை கட்டிக் கொடுக்க கனடிய தமிழர் அறைக்கட்டளை (Canadian Tamil Community Trust)முன்வந்துள்ளது. ஒரு கழிவறை கட்ட உரூபா 135,000 இலட்சம் என்ற அடிப்படையில் . மொத்தம் 10கழிவறைகள் கட்ட உரூபா 1,350,000 செலவாகிறது. முதற் தவணையாக இந்தச் சிறப்புக் கழிவறைகளைக் கட்டும் துணுக்காய் ஒளி வாழ்வு அமைப்புக்கு உரூபா 500,000 இலட்சம் வங்கி மூலம் அனுப்பப்பட்டுள்ளது. உதவி பெறும் பயனாளிகள் முல்லைத்தீவு மாவட்ட தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தா அவர்களால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள்.

 

சென்ற ஆண்டு முல்லைத் தீவு மாவட்டத்தில் 5, கிளிநொச்சி மாவட்டத்தில் 5 மொத்தம் 10 சிறப்பு கழிவறைகள் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு செந்தில்குமரன் நிவாரண நிறுவனம் உரூபா 1,200,000 இலட்சத்தில் கட்டிக் கொடுத்து உதவியது.

 

உருத்துரபுரத்தைச் சேர்ந்த முன்னாள் போராளி செல்லத்துரை கிருபானந்தன் சிறையில் இருந்து அண்மையில் விடுதலையானார். இவருக்கு 3 ஏக்கர் நிலம் உருத்திரபுரத்தில் இருக்கிறது. அதனைத் துப்பரவு செய்து தோட்டம் செய்வதற்கு வேண்டிய தண்ணீர் இறைக்கும் யந்திரம், குழாய்கள் இன்னபிற பொருட்களுக்கு ததேகூ (கனடா) உறுப்பினர்கள் 3 பேர் சேர்ந்து கடந்த வாரம் உரூபா108,500 அவரது வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இவ்வாறான சிறு சிறு உதவிகளை புலம்பெயர் தமிழர்கள் செய்யும் போது ஒரு சில முன்னாள் போராளிகள் அல்லது மாவீரர் குடும்பங்களது வாழ்வாதாரத்தையாவது நிமிர்த்த முடியும்.

 

நக்கீரன் .


 

நல்ல செய்தி

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.