Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய உதவி இல்லாமல் மகிந்த அரசினால் விடுதலைப் புலிகளை வீழ்த்தியிருக்க முடியாது! - பிரதமர் ரணில் கருத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ranil-wickramasinghe-350-news2.JPEG

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரை நடத்துவதற்கு இலங்கைக்கு இந்தியா உதவியது. இந்திய உதவி இல்லாமல் ராஜபக்ஷ அரசால் விடுதலைப் புலிகளை வீழ்த்தியிருக்க முடியாது என தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

   

இலங்கையில் கடந்த 2009ல் விடுதலைப் புலிகளுக்கு எதிராக் நடந்த இறுதிக்கட்டப் போரை நடத்த இந்தியா உதவியது. இந்திய உதவி இல்லாமல் ராஜபக்ஷ அரசால் விடுதலைப்புலிகளை வீழ்த்தியிருக்க முடியாது. இந்திய உதவியைப் பெறுவதற்கு இலங்கையின் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை ராஜபக்ஷ அறிவித்தார். ஆனால், அதை அவர் நிறைவேற்றவில்லை. போரில் உதவியதை இந்திய அரசியல்வாதிகள் வேண்டுமானால் மறுக்கலாம். ஒருவேளை இந்திய அரசியல்வாதிகளுக்கு அம்னீசியா (மறதி நோய்) ஏற்பட்டிருக்கலாம். ஆனால், இந்தியா உதவியது என்பதே உண்மை.

 

இலங்கைப் போரில் மனித உரிமை மீறப்பட்டது குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். அதுவும், 1970 காலகட்டத்தில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண முதல்வர் சி.விக்னேஸ்வரன், பொறுப்பற்ற ஒரு தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். அவரது தீர்மானத்தின்படி விசாரணை செய்தால் இலங்கை அரசு, விடுதலைப் புலிகள் மட்டுமல்லாது அப்பாவி உயிர்கள் பறிபோனதற்கு இலங்கைக்கு அனுப்பபட்ட இந்திய அமைதிப் படையும் காரணமாகும். எனவே படுகொலைகளுக்கு இலங்கையை மட்டும் காரணம் கூறுவது சரியாகாது. விசாரணை அனைத்து தரப்பினரும் மீது நடத்தப்பட வேண்டும்' இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

http://seithy.com/breifNews.php?newsID=127859&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

தான் ஒரு அரசியல் சாணக்கியன் என  மீண்டும் மீண்டும் நிருபிக்கிறார் அங்கிள் ரணில்  ஆனாலும் நிலைமை கவலைக்கிடம் ஏற்கனவே கடனுக்கு SRI LANKA sold. :D  :icon_idea:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியத் தலையீடு ஓவரா இருக்கு.. ஆனால் இந்த அணில் மேற்கு ஆதரவாளர்.. இந்தாளை பெரியண்ணர்தான் தூண்டிவிடுறாரோ??! :unsure:

இந்தியத் தலையீடு ஓவரா இருக்கு.. ஆனால் இந்த அணில் மேற்கு ஆதரவாளர்.. இந்தாளை பெரியண்ணர்தான் தூண்டிவிடுறாரோ??! :unsure:

அண்ணன் அணில் எப்பவும் பெரியண்ணனின் அல்லக்கை தான்.  :D

  • கருத்துக்கள உறவுகள்

ஜே ஆர் காலத்தில் இருந்து இவர் அமெரிக்க கைப்பாவை தான்.

 

தமிழர்கள் மீதும் அவர்களின் விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரையும்.. துன்புறுத்திய நாடு அமெரிக்கா. இன்று மனித உரிமை காவலர் என்ற போர்வையில் தமிழரின் சாவில் தனது பிராந்திய நலனை பாதுகாக்க நிற்கிறது.

 

அமெரிக்காவைப் பொறுத்த வரை.. மனிதாபிமானம்.. அழிவு எல்லாம் ஒன்று தான். எல்லாம் தன் ஆதிக்கத்துக்கு அவசியம் என்றால் செய்து முடிக்கும். 

 

தமிழர்களுக்கு இன்றைய நிலையில்.. உந்த அமெரிக்க தீர்மானத்தை வைச்சுத் தான் முன்னகர வேண்டிய தேவை எழுந்திருப்பது.. துர்ப்பாக்கியம்.. ஆனாலும் அதனை சாணக்கியமாகப் பயன்படுத்துவதன் வாயிலாக.. அமெரிக்காவை தர்ம சங்கடத்துக்குள் மாட்ட வைச்சு காரியம் சாதிக்க தமிழர்கள் முனைய வேண்டும்.  :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
கவுண்டமணியும் செந்திலும் ஒருபடத்தில் ஒரு தொகை காசை சாரத்தில் வைத்து கட்டிக்கொண்டு போவார்கள் 
சிலர் நடந்துவருவதை பார்த்துவிட்டு ... பயத்தில் ஓடிப்போய் பற்றைக்குள் மறைந்து விடுவார்கள்.
அவர்கள் அதை கண்டுவிட்டு இருவரையும் பிடித்து அடிப்பார்கள் 
எமை கண்டு ஏன் ஓடினீர்கள்...?
அப்போ செந்தில் சொல்லுவார் .... அண்ணை இவர்கள் எவளவு அடித்தாலும்.
சாரத்தில் பணம் இருப்பதி சொல்லாதீர்கள் என்று........ செந்திலே போட்டுகொடுப்பார்.
 
இப்ப இவர் சொல்கிறார் நாம எல்லாம் சிறிசு ...
இந்தியாதான் கீரோ என்று. 
 
சீனாவுடனான உறவு எப்படி இருக்கும் ??
இன்னமும் உலகில் என்ன நடக்கிறது என்பது பலருக்கு புரியவில்லை. 

 

கவுண்டமணியும் செந்திலும் ஒருபடத்தில் ஒரு தொகை காசை சாரத்தில் வைத்து கட்டிக்கொண்டு போவார்கள் 
சிலர் நடந்துவருவதை பார்த்துவிட்டு ... பயத்தில் ஓடிப்போய் பற்றைக்குள் மறைந்து விடுவார்கள்.
அவர்கள் அதை கண்டுவிட்டு இருவரையும் பிடித்து அடிப்பார்கள் 
எமை கண்டு ஏன் ஓடினீர்கள்...?
அப்போ செந்தில் சொல்லுவார் .... அண்ணை இவர்கள் எவளவு அடித்தாலும்.
சாரத்தில் பணம் இருப்பதி சொல்லாதீர்கள் என்று........ செந்திலே போட்டுகொடுப்பார்.
 
இப்ப இவர் சொல்கிறார் நாம எல்லாம் சிறிசு ...
இந்தியாதான் கீரோ என்று. 
 
சீனாவுடனான உறவு எப்படி இருக்கும் ??
இன்னமும் உலகில் என்ன நடக்கிறது என்பது பலருக்கு புரியவில்லை. 

 

பலருக்கு புரியாதது தங்களுக்கு புரிந்ததே பெரிய விஷயம் ஐயா.  :D
தங்களுக்கு புரிந்த விஷயத்தை எல்லோருக்கும் புரியும் படியாக 
எடுத்து விடுங்கோவன் ஐயா பெரியவரே.  :D  :lol:  :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

 

பலருக்கு புரியாதது தங்களுக்கு புரிந்ததே பெரிய விஷயம் ஐயா.  :D
தங்களுக்கு புரிந்த விஷயத்தை எல்லோருக்கும் புரியும் படியாக 
எடுத்து விடுங்கோவன் ஐயா பெரியவரே.  :D  :lol:  :icon_idea:

 

ரொம்ப சிம்பிள் ....
"பணம்" 

ஆப்பிள் கொம்பனியில் பில்கேட்ஸ் 2004-2005ஆம் ஆண்டு முதலீடு செய்தார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.