Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊரில் இருந்து கடிதம் (மடல்)

Featured Replies

எப்போதோ நீ எழுதிய கடிதம்

இப்போதுதான்

எனக்குக் கிடைத்தது

ஊர் எப்படி? உறவினர் எப்படி?

உருக்கமுடன் கேட்டிருந்தாய் தோழனே

நீயும் நானும்

அப்போது பார்த்ததுபோல்

இப்போது நம் கிராமம் இல்லை

விமானத்தாக்குதல்களால்

ஊரார் வீடெல்லாம்

ஊனமாகிப்போய்விட்டது

உன் வீடும் தப்பவில்லை

எழில் மிக்க எமது கிராமம்

எழிலுக்கு எழிலூட்டிய

அம்மன் ஆலயம் கூட

ஆக்கிரமிப்பாளரின் அராஜகத்தால்

அடியோடு சாய்ந்து விட்டது தோழா

வடை கடித்து

தேனீர் அருந்தி

வகைவகையாய் வம்புக்கதை

வாய் வலிக்க கதைத்து சிரித்த

வல்லிபுரத்தாரின் கடையும்

பொல்லாத தக்குதலால்

பொழிவிழந்து போய்விட்டது

நீயும் நானும்

பத்திரிகை படித்து

நாட்டு நடப்பு எல்லாம்

அலசி ஆராந்த்

அந்த வாசிகசாலை

இருந்த் இடமே தெரியவில்லை

உன் பிரியத்துக்குரிய பத்மாவை

தினமும் நீ

இரகசியமாக சந்தித்த

இராசர் மடமும்

கூலிப்படையினரின்

குடிலாக ஆகிவிட்டது

முன் வீட்டு முருகன்

பக்கடத்து வீட்டுபாமா

மாடிவீட்டு மாதவன்

சுட்டுக் கொல்லப்பட்டேர் பட்டியலில்

இன்னும் இருக்குதடா தோழா

சுட்டுக் கொல்லப்பட்டோர்

எரிக்கப்படவும் புதைக்கப்படவும்

சுடுகாட்டில்த்தான் இடமில்லை

அதனால் வீட்டிலும் வீதியிலும்

விதைத்து விட்டோம் தோழா

நாடு நாடாய் நாயாய் அலைந்து

நல்லபடியாக கனடாவில் வசிப்பதாகவும்

என்னையும் கூப்பிடப்போவதாய்

அன்புடன் எழுதி இருந்தாய்

ஆனால்....

நான் வரமாட்டேன்

இப்போது மட்டுமல்ல

ஒரு போதும் வரமாட்டேன்

ஒரு பொழுது

தமிழிழத்தின் கொடி பறக்கும்

தமிழிழம் நிச்சயம் நிதர்சனமாகும்

அதுவரையில்

என்னையும் தாக்குப்பிடித்து

தாயக மீட்பு என்னும் புனிதப்போரில்

தொடர்ந்திடுவேன் ... தொடர்ந்திடுவேன்....

அமரர் குரும்பசிட்டி தமிழன்பன் அவர்களுடைய கவிதை இது

அவருக்கு காலம் சென்றேனும் கடிதம் கிடைத்ததே..

கிடைக்காமலே..போன கடிதங்கள் எத்தனை..

அறியாமல் விட்ட அவலங்கள் எத்தனை..

புதைக்கப்பட்ட கண்ணீர் கதைகள் எத்தனை..

நன்றி இலக்கியன் இணைத்தமைக்கு..

ஊரில் இருந்து வந்த கடிதத்தை கவி வரியில் தந்த கவிவள்ளல் இலக்கியனுக்கு வாழ்த்துக்கள். நல்லா இருக்கு கவிதை.

நல்ல கவிதை இலக்கியன் இங்கு இணைத்ததுக்கு நன்றிகள்

  • தொடங்கியவர்

கருத்துதந்த விகடகவி ஈழவன் இருவருக்கும் நன்றி

ஊரில் இருந்து வந்த கடிதத்தை கவி வரியில் தந்த கவிவள்ளல் இலக்கியனுக்கு வாழ்த்துக்கள். நல்லா இருக்கு கவிதை.

கருத்துதந்த வெண்ணிலாவுக்கு நன்றி

இந்தகவிதை என்னுடைய ஆக்கமல்ல

இலக்கியன்... நல்ல வரிகள்....மனதை பிசைகின்றது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.