Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கென்யா பல்கலைக்கழகத்தில்.....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கென்யா பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதத் தாக்குதல்: 147 மாணவர்கள் பலி.

 

security.jpg

 

கென்யாவில் பல்கலைக்கழக வளாகத்தில் கிறிஸ்தவர்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் வியாழக்கிழமை நிகழ்த்திய தாக்குதலில் 147 மாணவர்கள் உயிரிழந்தனர். 79 பேர் காயமடைந்தனர்.
 
கென்யாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள காரிஸா நகர பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில் வியாழக்கிழமை அதிகாலை பலர் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு நுழைந்த பயங்கரவாதிகள், சரமாரியாகச் சுட்டனர். பயங்கரவாதிகளின் தொடர் தாக்குதலில் பலர் காயமடைந்ததாக அங்கிருந்து தப்பிய மாணவர்கள் தெரிவித்தனர்.
 
அந்தப் பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தாலும், மாணவர் விடுதியில் ஏராளமானோரை பயங்கரவாதிகள் பிணைக் கைதிகளாகச் சிறை பிடித்து வைத்தனர். சோமாலியாவைச் சேர்ந்த அமைப்பான அல்-ஷபாப், கிறிஸ்தவர்களைக் குறிவைத்தே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக அங்கிருந்து தப்பிய மாணவர் ஒருவர் தெரிவித்தார்.
 
இந்த தாக்குதலில் 147 மாணவர்கள் உயிரிழந்ததாகவும், 79 பேர் காயமடைந்ததாகவும் கென்யா உள்துறை அமைச்சர் ஜோசஃப் என்கேசரி தெரிவித்தார்.
 
பலத்த காயமடைந்த பலர் நைரோபி நகருக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.
 
இதனிடையே, பாதுகாப்புப் படையினர் 16 மணி நேரத்துக்குக்கும் மேல் நடத்திய தொடர் தாக்குதலில் 4 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இதன்மூலம் இத்தாக்குதல் முடிவுக்கு வந்ததாக அமைச்சர் ஜோசஃப் தெரிவித்தார்.
 
அல்-ஷபாப் பொறுப்பேற்பு: இதற்கிடையே, அல்-ஷபாப் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அலி முகமது ரகே, அந்த அமைப்புக்குச் சொந்தமான வானொலியில் கூறுகையில், ""எங்கள் அமைப்பைச் சேர்ந்த "வீரர்'கள் பல்கலைக்கழக வளாகத்துக்குள் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்'' என்றார்.
 
கென்யாவின் தலைநகர் நைரோபியில் அமெரிக்கத் தூதரகத்தில் கடந்த 1998ஆம் ஆண்டு அல்-காய்தா நடத்திய தாக்குதலில் 224 பேர் கொல்லப்பட்டனர். அந்தத் தாக்குதலுக்குப் பிறகு மோசமான பயங்கரவாதத் தாக்குதல் தற்போது காரிஸா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டுள்ளது.
 
மோடி கண்டனம்: இந்தப் பயங்கரவாதத் தாக்குதலுக்கு, பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சுட்டுரைப் பதிவில், "இந்தத் தாக்குதல் மிகவும் கொடூரமானது, கடும் கண்டனத்துக்குரியது' என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
 
 

 

  • கருத்துக்கள உறவுகள்

இது கண்டிக்கத்தக்க பயங்கரவாதமே அதில் சந்தேகமில்லை.

 

இதனை பயங்கரவாதம் என்று ஐநாவு சொல்லுது.

 

சந்திரிக்கா அம்மையா நாகர்கோவிலில் பள்ளிக் குழந்தைகள் மீது விமானக்குண்டு வீச்சு தாக்குதல் நடாத்தி பல குழந்தைகளைக் கொன்றதை மட்டும் எப்படி மறைத்தார்கள்.. ஏன் மறைத்தார்கள்.. பயங்கரவாதம் என்று உச்சரிக்க தயங்குகிறார்கள்..?!

 

அதே போல் மகிந்த ராஜபக்ச அரசு.. செஞ்சோலையில் பள்ளிச்சிறார்கள் மீது விமானக் குண்டு வீச்சு நடத்தி பல குழந்தைகளைக் கொன்றதே அதை எப்படி மறைத்தார்க்கள்.. ஏன் மறைக்கிறார்கள்.. பயங்கரவாதம் என்று உச்சரிக்க தயங்குகிறார்கள்..??!

 

ஆக வலியவர் செய்தால்.. அது பயங்கரவாதமில்லை. நாங்க மறைப்பம். எழியவர்.. செய்தால்.. அது பயங்கரவாதமே தான். 

 

இப்படியான உலகில்.. இந்த மனிதரை மனிதரே அழிக்கும் இந்த இழி நிலை அழியும்..?! எப்படி அழியும்..?!  :icon_idea:  :(  :rolleyes:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது கண்டிக்கத்தக்க பயங்கரவாதமே அதில் சந்தேகமில்லை.

 

இதனை பயங்கரவாதம் என்று ஐநாவு சொல்லுது.

 

சந்திரிக்கா அம்மையா நாகர்கோவிலில் பள்ளிக் குழந்தைகள் மீது விமானக்குண்டு வீச்சு தாக்குதல் நடாத்தி பல குழந்தைகளைக் கொன்றதை மட்டும் எப்படி மறைத்தார்கள்.. ஏன் மறைத்தார்கள்.. பயங்கரவாதம் என்று உச்சரிக்க தயங்குகிறார்கள்..?!

 

அதே போல் மகிந்த ராஜபக்ச அரசு.. செஞ்சோலையில் பள்ளிச்சிறார்கள் மீது விமானக் குண்டு வீச்சு நடத்தி பல குழந்தைகளைக் கொன்றதே அதை எப்படி மறைத்தார்க்கள்.. ஏன் மறைக்கிறார்கள்.. பயங்கரவாதம் என்று உச்சரிக்க தயங்குகிறார்கள்..??!

 

ஆக வலியவர் செய்தால்.. அது பயங்கரவாதமில்லை. நாங்க மறைப்பம். எழியவர்.. செய்தால்.. அது பயங்கரவாதமே தான். 

 

இப்படியான உலகில்.. இந்த மனிதரை மனிதரே அழிக்கும் இந்த இழி நிலை அழியும்..?! எப்படி அழியும்..?!  :icon_idea:  :(  :rolleyes:

 

நான் இந்த செய்தியை இணைக்கும்போது என் மனதில் இருந்ததும் நாகர்கோவிலும் செஞ்சோலையும் தான்.... :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.