Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயகாந்தன் எழுத்துலகம்

Featured Replies

நாவல்கள் மற்றும் குறுநாவல்கள்
வாழ்க்கை அழைக்கிறது (ஆகஸ்ட் 1957)
கைவிலங்கு (ஜனவரி 1961)

யாருக்காக அழுதான்? (பெப்ரவரி 1962)
பிரம்ம உபதேசம் (மே 1963)
பிரியாலயம் (ஆகஸ்ட் 1965)
கருணையினால் அல்ல (நவம்பர் 1965 )
பாரீசுக்குப் போ! (டிசம்பர் 1966)
கோகிலா என்ன செய்துவிட்டாள்? (நவம்பர் 1967)
சில நேரங்களில் சில மனிதர்கள் (ஜூன் 1970)
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (ஜனவரி 1971)
ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் (ஏப்ரல் 1973)
ஜெய ஜெய சங்கர... (செப்டம்பர் 1977)
கங்கை எங்கே போகிறாள் (டிசம்பர் 1978)
ஒரு குடும்பத்தில் நடக்கிறது... (ஜனவரி 1979)
பாவம், இவள் ஒரு பாப்பாத்தி ! (மார்ச் 1979)
எங்கெங்கு காணினும்... (மே 1979)
ஊருக்கு நூறு பேர் (ஜூன் 1979)
கரிக்கோடுகள் (ஜூலை 1979)
மூங்கில் காட்டினுள்ளே (செப்டம்பர் 1979)
ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும் (டிசம்பர் 1979)
ஒவ்வொரு கூரைக்கும் கீழே... (ஜனவரி 1980)
பாட்டிமார்களும் பேத்திமார்களும் (ஏப்ரல் 1980)
அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள் (ஆகஸ்ட் 1980)
இந்த நேரத்தில் இவள்... (1980)
காத்திருக்கா ஒருத்தி (செப்டம்பர் 1980)
காரு (ஏப்ரல் 1981)
ஆயுத பூசை (மார்ச் 1982)
சுந்தர காண்டம் (செப்டம்பர் 1982)
ஈஸ்வர அல்லா தேரே நாம் (ஜனவரி 1983)
ஓ, அமெரிக்கா! (பெப்ரவரி 1983)
இல்லாதவர்கள் (பெப்ரவரி 1983)
இதய ராணிகளும் ஸ்பெடு ராஜாக்களும் (ஜூலை 1983)
காற்று வெளியினிலே... (ஏப்ரல் 1984)
கழுத்தில் விழுந்த மாலை (செப்டம்பர் 1984)
அந்த அக்காவினைத்தேடி... (அக்டோபர் 1985)
இன்னும் ஒரு பெண்ணின் கதை (ஜூலை 1986)
ரிஷிமூலம் (செப்டம்பர் 1965)
சினிமாவுக்குப் போன சித்தாளு (செப்டம்பர் 1972)
உன்னைப் போல் ஒருவன்
ஹர ஹர சங்கர (2005)
கண்ணன் (2011)

சிறுகதைகள் தொகுப்பு[
ஒரு பிடி சோறு (செப்டம்பர் 1958)
இனிப்பும் கரிப்பும் (ஆகஸ்ட் 1960)
தேவன் வருவாரா (1961)
மாலை மயக்கம் (ஜனவரி 1962)
யுகசந்தி (அக்டோபர் 1963)
உண்மை சுடும் (செப்டம்பர் 1964)
புதிய வார்ப்புகள் (ஏப்ரல் 1965)
சுயதரிசனம் (ஏப்ரல் 1967)
இறந்த காலங்கள் (பெப்ரவரி 1969)
குருபீடம் (அக்டோபர் 1971)
சக்கரம் நிற்பதில்லை (பெப்ரவரி 1975)
புகை நடுவினிலே... (டிசம்பர் 1990)
சுமைதாங்கி
பொம்மை.

http://sinnakuddy1.blogspot.co.uk/2015/04/blog-post_9.html

 

எழுத்தாளர் ஜெயகாந்தன் -எல்லைகளை விஸ்தரித்த எழுத்து கலைஞன்-வீடியோ

 

 

ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் இன்று (புதன்கிழமை) உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 81.
1950-ம் ஆண்டு இலக்கிய வாழ்க்கையை தொடங்கிய ஜெயகாந்தன் தன் படைப்புகளால் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். இலக்கிய நண்பர்களால் ஜே.கே என்று அழைக்கப்பட்டவர்.
சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படத்துறை என ஜெயகாந்தனின் படைப்புலகம் பரந்து விரிந்தது.
ஜெயகாந்தன் எழுதிய கதைகளை வைத்து, 'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்', 'ஊருக்கு நூறு பேர்' ஆகிய மூன்று திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. 'உன்னைப்போல் ஒருவன்', 'யாருக்காக அழுதான்', 'புதுச்செருப்பு கடிக்கும்' ஆகிய மூன்று படங்களை ஜெயகாந்தன் இயக்கினார்.
கடந்த 2002- ம் ஆண்டு இலக்கிய உலகின் உயரிய விருதான ஞானபீட விருது அவருக்கு வழங்கப்பட்டது. சாகித்ய அகாடமி உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள அவருக்கு 2009- ம் ஆண்டு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.
கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று(புதன்கிழமை) இரவு 9 மணிக்கு சிகிச்சைப் பலனின்றி மறைந்தார்.


நன்றி -த இந்து








இளம் வயதில் பலரை போல நானும் வெறி பிடித்த இவரின் வாசகன்...இவரது சிறுகதை நாவல் மட்டுமன்றி இவர் எழுதிய கட்டுரைகள் மற்றும் தொகுப்புகளை தேடி தேடி அலைந்து வாசித்து இருக்கிறேன்...இவர் தன்னை புதுமைபித்தனின்  தீவிர வாசகனாக கூறி கொள்ளுவதுண்டு..இவரை வாசித்த பிறகு தான் புதுமை பித்தனை பலமுறை வாசித்து இருக்கிறேன்.  


பிற்காலத்தில் இவரது அரசியல் தளும்பல்கள் .தமிழ் மொழி எதிரான தமிழருக்கு எதிரான பேச்சுகளில் அதிருப்தி இருந்தாலும் இவரின் எழுத்து துள்ளலுக்கு என்றும் ரசிகனே...

 .இவரது எழுத்து பற்றி பிற்காலத்தில் பலர்  காரசாரமான விமர்சனத்தை வைத்திருந்த்தை அறிந்திருந்தாலும் ...


இன்றும் போற்றும் எனது துரோணருக்கு எனது அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

நான் விரும்பிப் படித்த பல நாவல்களுக்கு ஆசிரியரான ஜெயகாந்தனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. பிற்காலத்தில் அவர் தமிழ் தேசியத்திற்கும் போராளிகளுக்கும் எதிரான கருத்தை வெளியிட்டதால் அவர்மீது வெறுப்பேற்பட்டுவிட்டது.  ஒரு நல்ல ஆக்க இலக்கிய கர்த்தாவான திரு ஜெயகாந்தனின் மறைவையிட்டு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.