Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பல்வேறு துறைகளில் கோலோச்சும் அனந்த கிருஷ்ணன், ஓர் இலங்கைத் தமிழர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அஜான் சிறீபன்னோ - த/பெ. அனந்த கிருஷ்ணன் !பாரதி தம்பி

 

ர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கு தொடர்பாக, தொழிலதிபர் அனந்த கிருஷ்ணன் என்கிற பெயர் அடிக்கடி அடிபடுவதைப் பார்த்திருப்போம். தொழிலதிபரான இவர், மலேசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர். ஃபோர்ப்ஸ் பத்திரிகை மதிப்பீட்டின்படி இவரது சொத்து மதிப்பு சுமார் 65 ஆயிரம் கோடி ரூபாய். உலகப் பணக்காரர்கள் பட்டியலில், வருடம் தவறாமல் இடம்பிடிக்கிறார் அனந்த கிருஷ்ணன். ஆனால் இவரது ஒரே மகன், புத்த துறவியாக மாறி, பிச்சையெடுத்துச் சாப்பிடுகிறார்... நம்ப முடிகிறதா? 

கட்டுமானம், எண்ணெய் விநியோகம், ஊடகத் துறை எனப் பல்வேறு துறைகளில் கோலோச்சும் அனந்த கிருஷ்ணன், ஓர் இலங்கைத் தமிழர். இவரது அப்பா காலத்திலேயே மலேசியாவில் செட்டில் ஆனவர்கள். மெல்போர்ன் மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழகங்களில் படித்த அனந்த கிருஷ்ணனுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி, தாய்லாந்தைச் சேர்ந்தவர். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள். இரண்டாவது மனைவி, பிரான்ஸைச் சேர்ந்தவர். இவருக்கு ஒரு மகள். மொத்தத்தில் இரண்டு மனைவிகள், இரண்டு மகள்கள், ஒரு மகன். அந்த ஒரே மகனின் பெயர் முரளிஸ்ரீ.

p30a.jpg

இவரின் அம்மா தாய்லாந்தைச் சேர்ந்தவர் என்பதால், வீட்டில் தாய்லாந்தின் புத்த மதக் கலாசாரம் பின்பற்றப்பட்டது. அதன்படி, ஆண் பிள்ளைகள் சில நாட்களேனும் துறவு வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும். அப்படி தனது 20-வது வயதில் துறவு வாழ்வை மேற்கொள்ள புத்தமடத்துக்குச் சென்றார் முரளிஸ்ரீ. போனவர்... போனவர்தான், வரவே இல்லை. நாட்கள் வாரங்களாகி, வாரங்கள்... மாதங்களாகின. முரளிஸ்ரீயைத் தேடிச்சென்று அழைத்தால் வீட்டுக்கு வர மறுத்தார். 'எனக்கு இந்த வாழ்க்கைதான் பிடித்திருக்கிறது’ என்றார். பெற்றோர் சொல்லியும் கேட்கவில்லை. அனந்த கிருஷ்ணன் உள்பட குடும்பத்தினருக்கு புத்தமதக் கலாசாரத்தின் மீது பற்று இருந்ததால், முரளிஸ்ரீயை கொஞ்சம் விட்டுப்பிடிக்கலாம் என இருந்தனர்.

'பிறந்ததில் இருந்தே செல்வச் செழிப்பில் வளர்ந்தவன், ஓர் ஆசையில் கிளம்பிவிட்டான். அவனால் தாக்குப்பிடிக்க முடியாது. திரும்பவும் வந்துவிடுவான்’ என்றே எண்ணினார் அனந்த கிருஷ்ணன். ஆனால், அதன் பிறகும் மூன்று ஆண்டுகளுக்கு முரளிஸ்ரீ வீடு திரும்பவில்லை.

தாய்லாந்து எல்லைப் பகுதியில் உள்ள காடுகளில் முரளிஸ்ரீயைச் சந்தித்தபோது உடல் இளைத்து, துறவு வாழ்வின் முழுமையை  எட்டியிருந்தார். இப்போது அவர் பெயர் முரளிஸ்ரீ அல்ல; அஜான் சிறீபன்னோ (Ajahn Siripanno).  மார்பின் குறுக்கே செந்நிற ஆடை அணிந்து, தீர்க்கமான கண்களுடன் சிரித்த அஜான் சிறீபன்னோ, இனி ஒருபோதும் முரளிஸ்ரீயாகத் திரும்பிவரப்போவது இல்லை என்பதை உறுதியாக உணர்ந்தார் அனந்த கிருஷ்ணன்.

2010-ல் கோலாலம்பூரில் நடந்த புத்தத் துறவிகளின் மாநாட்டுக்கு வந்தார் அஜான். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் புகழ்பெற்ற கோலாலம்பூர் கே.எல் டவரில் உள்ள அலுவலகத்தில் அனந்த கிருஷ்ணனைப் பார்க்க வந்தார். யார் எனத் தெரியாததால் பாதுகாவலர்கள் அவரை அலுவலகத்துக்குள் விட மறுக்க... நீண்ட கால ஊழியர் ஒருவர் அவரை அடையாளம் கண்டு அழைத்துச் சென்றார். மலேசியாவின் மிக உயர்ந்த கட்டடத்தில், மிகப் பெரிய கோடீஸ்வர தந்தைக்கும் அவரது துறவி மகனுக்குமான சந்திப்பு நடந்தது.

p30b.jpg

மகனாகிய புத்த துறவியை, தன்னுடன் ஒரு விருந்துக்கு அழைத்தார் அனந்த கிருஷ்ணன். 'நான் புத்த துறவி. தானம் பெற்றுத்தான் பசி போக்க வேண்டும்’ எனச் சொல்லி, அதை ஏற்க மறுத்தார் அஜான். திரும்பிச் செல்ல தனி விமானம் ஏற்பாடு செய்வதாக அனந்த கிருஷ்ணன் சொன்னதையும் நிராகரித்துவிட்டு, பேருந்தில் ஏறிச் சென்றார்.

எனினும், தன் தந்தையுடனான தொடர்புகளை அஜான் முறித்துக்கொள்ளவில்லை. அனந்த கிருஷ்ணன், தனது 70-வது பிறந்த நாளின்போது மகன் தன்னுடன் இருக்க வேண்டும் என விரும்பினார். அஜான் இதற்குச் சம்மதிக்க... ஒரு தனி ஜெட் விமானத்தில் அனந்த கிருஷ்ணனும் அஜானும் இத்தாலி பறந்து சென்றனர்.

2012-ம் ஆண்டு மலேசியாவின் பினாங் பகுதியில் தியானத்தில் ஈடுபட்டிருந்த அஜானைச் சந்திக்க வந்தார் அனந்த கிருஷ்ணன். ஏழெட்டு பாதுகாப்பு அதிகாரிகளுடன்           பி.எம்.டபிள்யூ காரில் வந்து இறங்கியவர், அங்கு தனக்குச் சொந்தமான 30 அறைகள்கொண்ட பங்களாவில் தங்கினார். பின்னர், சிறு குடிலில் தங்கியிருந்த அஜானை அங்கு சென்று சந்தித்துத் திரும்பினார்.

அஜான் பின்பற்றுவது, தேரவாத புத்தம். இதன் கொள்கைப்படி ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு மட்டுமே சாப்பிட வேண்டும். பகல் 12 மணிக்குப் பிறகு திட உணவுகளைச் சாப்பிடக் கூடாது. கோடீஸ்வரப் பின்னணியில் இருந்து வந்த அஜான், இதை முழுமையாகப் பின்பற்றுவது மட்டும் அல்ல... பிரபலமான ஆன்மிகச் சொற்பொழிவாளராகவும் இருக்கிறார்; பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். அஜானுக்கு, தமிழ் உள்பட எட்டு மொழிகள் தெரியும். இப்போது தாய்லாந்து-பர்மா எல்லையோரக் காட்டுப் பகுதியில் ஒரு மடத்தின் தலைவராக இருக்கிறார்.

செல்வச் செழிப்பைத் துறந்து துறவியாக மாறிய அஜானை, பலரும் புத்தருடன் ஒப்பிடுகின்றனர். ஆனால், 'ஏன் இவரை மட்டும் கொண்டாடுகிறீர்கள்... மல்ட்டி மில்லியனர் பின்னணியில் இருந்து வந்தவர் என்பதாலா? ஏழ்மைப் பின்னணிகொண்ட புத்த துறவிக்கும் இவருக்கும் என்ன வித்தியாசத்தைக் கண்டீர்கள்? துறவி என வந்துவிட்ட பிறகு எல்லோரும் ஒன்றுதான். தனது தந்தையின் பல்லாயிரம் கோடி சொத்துக்களுக்கு ஒரே ஆண் வாரிசான அஜான், அவற்றின் மூலம் லட்சக்கணக்கான ஏழைகளை துன்பத்தில் இருந்து மீட்டிருக்கலாம். அதுதான் நடைமுறையில் பயன்தரத்தக்கது. துறவியானதால் இவருக்கு மனஅமைதி கிடைக்கக்கூடும். அதனால் மக்களுக்கு என்ன பயன்?’ என இவரை விமர்சிப்போரும் உண்டு.

ஆனால், துறவி அஜான் சிறீபன்னோ சொற்பொழிவுகளில் திரும்பத் திரும்பச் சொல்லும் வாக்கியம் ஒன்றுதான்.

'பணம், ஒருபோதும் மன அமைதியைக் கொண்டுவராது!’

நன்றி விகடன் 

Edited by பெருமாள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.