Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

19வது அரசமைப்பு திருத்தம்: கோத்தபாய, நாமல் ராஜபக்ச ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியா நிலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
19வது அரசமைப்பு திருத்தம்: கோத்தபாய, நாமல் ராஜபக்ச ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியா நிலை!
526c9e6a-3b35-45e5-9329-c7a5821f5c821.jp

 

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டமூலத்தின் மூலம் சிறிலங்காவின் முன்னாள் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச ஆகியோர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சிறிலங்காவின் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச போட்டியிடத் திட்டமிட்டிருந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19வது திருத்தச்சட்டமூலம் அவரை தேர்தலில் போட்டியிட முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்ட 19வது திருத்தச்சட்டமூலம், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களை சிறிலங்காவின் தேர்தல்களில் போட்டியிடத் தடை விதித்துள்ளது. கோத்தபாய ராஜபக்ச இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ளவர் என்பதால் அவர் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது.

இதேவேளை, 2021ஆம் ஆண்டு இடம்பெறவிருந்த ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்சவை போட்டியிட வைக்கும் எண்ணத்துடன் சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேற்கொண்டிருந்த திட்டங்களும் தோல்வியில் முடிவடைந்துள்ளன.

சிறிலங்கா அரசியலமைப்பின் 19வது திருத்தச்சட்டமூலத்தின் ஊடாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் ஆகக்குறைந்த வயதெல்லை 32இலிருந்து 35ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால், 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெறவுள்ள அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்சவினால் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இதன்போது நாமல் ராஜபக்ச 35 வயதை பூர்த்தி செய்திருக்கமாட்டார்.

1986ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி பிறந்த நாமல் ராஜபக்ச அடுத்த ஜனாதிபதி தேர்தல் முடிந்து மூன்று மாதங்களின் பின்னரே, ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடும் தகைமையைப் பெறுவார். இதனால், சிறிலங்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 19வது திருத்தச்சட்டடமூலத்தில் ஜனாதிபதி வேட்பாளரின் குறைந்தபட்ச வயதெல்லையை அதிகரித்தமைக்கு, நாமல் ராஜபக்சவை போட்டியிட முடியாமல் தடுப்பதே முக்கிய காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கோத்தபாய ராஜபக்ச சிறிலங்கா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் குடியுரிமையைக் கொண்டுள்ளார் என்பதை சிறிலங்காவின் குடிவரவு, குடியகல்வு திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

சிறிலங்கா படைத்தரப்பில் இருந்து ஓய்வுபெற்ற அவர், 10 ஆண்டுகளாக அமெரிக்காவில் தங்கியிருந்தார். இந்நிலையில் சிறிலங்காவின் ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச பதவியேற்றதும், 2005ஆம் ஆண்டு நாடு திரும்பிய அவர், சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளராக பதவியேற்றிருந்தார்.

கோத்தபாய ராஜபக்சவை அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வைப்பதற்கு சிங்கள, பௌத்த பேரினவாத அமைப்புக்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருந்தன. அத்துடன், தான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடக்கூடும் என கோத்தபாய ராஜபக்சவும் அண்மையில் இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார்.

ஆனால், சிறிலங்காவில் இரட்டைக் குடியுரிமை கொண்ட ஒருவரை 19வது திருத்தச்சட்டமூலம் எந்தவகையிலும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்காது. இந்நிலையில், கோத்தபாய ராஜபக்ச அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டுமானால், அவர் அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்ய வேண்டும் என சட்டநிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 19வது திருத்தச்சட்டமூலம் தடை விதிக்கவில்லை என்றும் சட்டநிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

பசில் ராஜபக்ச அமெரிக்க குடியுரிமை கொண்டவர் அல்ல என்றும், அவர் அமெரிக்க வதிவிட உரிமையை மட்டுமே அவர் கொண்டவர் என்பதால் தேர்தலில் போட்டியிடத் தடையில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

பசில் ராஜபக்ச அமெரிக்க வதிவிட உரிமையை மட்டுமே கொண்டவர் என்பதால், அவர் தேர்தலில் போட்டியிட அரசியலமைப்பு ரீதியான தடை இருக்காது என்று அரசியலமைப்பு விவகார சட்டநிபுணர் ஜெயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டு இடம்பெறவிருந்த ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்சவை போட்டியிட வைக்கும் எண்ணத்துடன் சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேற்கொண்டிருந்த திட்டங்கள் தோல்வியில் முடிவடைந்துள்ளன.

சிறிலங்கா அரசியலமைப்பின் 19வது திருத்தச்சட்டமூலத்தின் ஊடாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் ஆகக்குறைந்த வயதெல்லை 32இலிருந்து 35ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால், 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெறவுள்ள அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்சவினால் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இதன்போது நாமல் ராஜபக்ச 35 வயதை பூர்த்தி செய்திருக்கமாட்டார்.

1986ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி பிறந்த நாமல் ராஜபக்ச அடுத்த ஜனாதிபதி தேர்தல் முடிந்து மூன்று மாதங்களின் பின்னரே, ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடும் தகைமையைப் பெறுவார். இதனால், சிறிலங்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 19வது திருத்தச்சட்டடமூலத்தில் ஜனாதிபதி வேட்பாளரின் குறைந்தபட்ச வயதெல்லையை அதிகரித்தமைக்கு, நாமல் ராஜபக்சவை போட்டியிட முடியாமல் தடுப்பதே முக்கிய காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆயினும், நாட்டுக்குத் தலைமை தாங்கும் ஜனாதிபதி அதற்குரிய தகைமையுடையவராக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஜனாதிபதி வேட்பாளரின் வயதெல்லை அதிகரிக்கப்பட்டதாக சிறிலங்காவின் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

http://ponguthamizh.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=526c9e6a-3b35-45e5-9329-c7a5821f5c82

  • கருத்துக்கள உறவுகள்

தனிநபர்களை கருத்தில் கொண்டு அரசியல் சட்டங்கள் திருத்தப்படுகின்றன என்று சொல்லியிருக்கினம்.. நல்ல நாடு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா அமேரிக்காவினால் அவசர அவசரமாய் முன் தள்ளபட்ட 19 ஓட்டெடுப்பு சொறிலங்கா மீண்டும் சைனாவின் பக்கம் போகாதபடி பார்த்துகொள்ளும் என நம்புகின்றார்கள் . நாப்பது நாயுடன் வருபவர் என்ன சொல்றார் என பாப்பம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.