Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எவன்கார்ட் சம்பவம்;இந்த வாரம் கோட்டாபய கைதாவார்

Featured Replies

Gota1-300x168.jpg

 

எவன்கார்ட் சம்பவம் தொடர்பாக நிறுவனத் தலைவர் உட்பட உயர் மட்ட அதிகாரிகள் ஐவரை உடனடியாகக் கைது செய்வதற்குத் தேவையான உத்தரவை சட்ட மா அதிபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திக்கு எதிர்வரும் தினங்களில் வழங்குவாரென சட்டமா அதிபர் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
இச் சம்பவம் தொடர்பாக இதுவரை ஐந்து விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. இதனுடன் தொடர்பான “ஆவண” கோவைகள் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.
 
இந்த விசாரணைகளின் போது மோசடிகளுக்கு நேரடியாக பொறுப்பு கூறும் ஐவர் அடையாளம் காணப் பட்டுள்ளனர்.
 
எவன்கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி பணிப்பாளர் மஞ்சுள குமார. முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோதாபய ராஜபக்ஷஇ ரக்னா லங்கா பணிப்பாளர் பாலித்த பெர்னாண்டோஇ பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலர் டி. எம். எம். ஜயரத்ன ஆகியோரே அந்த ஐவரும் ஆவர். சட்டமா அதிபருக்கு இந்த ஐவர் தொடர்பாக சிபார்சு செய்யப்பட்டும்இ அவர்களை இதுவரை கைது செய்யாமை தொடர்பாக அரச உயர்மட்ட அமைச்சின் கவனம் திரும்பியுள்ளது.
 
இந்த நபர்கள் பயங்கரவாத தடுப்பு சட்டத்துக்கு மேலதிகமாக வெடிக்கும் மருந்துகளை வைத்திருந்தமைக்கு எதிராக கைது செய்யப்படலாம் என சட்டவல்லுனர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
 
இந்த நிலைமையை அறிந்துள்ள எவன்காட் நிறுவனப் பிரதானிகள் உட்பட மற்றோர் தாம் கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் நோக்குடன் ஏற்கனவே சகல பிரதான பத்திரிகை களையும் இலக்கு வைத்து விசேட ஊடக நடவடிக்கைகளையும் சமீபத்தில் ஆரம்பித்திருந்தன.
 
இதற்காக இவர்கள் 5000 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட பணத்தை செலவிட்டுள்ளனர்.
 
இதன் மூலம் மக்கள் மத்தியில் பாராட்டைப் பெறுவது அவர்களின் இலக்காகி உள்ளது.
 
  • தொடங்கியவர்

மிக், லங்கா வைத்தியசாலை விவகாரம்: கோட்டாபய நாளை கைதாகும் சாத்தியம்?

 

Gotabaya_Rajapaksa%20with%20miltary_CI.j



முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை நாளை 11 ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு பொலிஸ் நிதி மோசடி தடுப்பு பிரிவு (பிவியிளி) கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளது.

மிக் கொடுக்கல் வாங்கல் மற்றும் லங்கா வைத்தியசாலை பங்கு விற்பனை மோசடி தொடர்பில் விசாரணை நடத்தவென இவர் அழைக்கப்பட்டுள்ளார்.

அடுத்த வாரத்தில் கோட்டாபய கைதாகலாமென தகவல்கள் கசிந்த நிலையில் அதனை உறுதி செய்யும் விதமாக அவர் நாளை திங்கட்கிழமை விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். இந்த விசாரணையைத் தொடர்ந்து அவர் கைதாகலாம் எனக் கூறப்படுகின்றது.

எவன்கார்ட் விவகாரமே அவர் மீதான பிரதான குற்றச்சாட்டாக உள்ள நிலையில் இந்த விடயம் பற்றி நாளைய விசரணையில் கேள்விகள் கேட்கப்படாதென தெரி கிறது. இதனால் கைது விவகாரத்தை முழுமையாக உறுதி செய்ய முடியாதுள்ளதாக ஊடகங்கள் செய்திகளை வெளி யிட்டுள்ளது.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/119574/language/ta-IN/article.aspx

எட உவணை உள்ளை தள்ளுறதிட்கு இவ்வளவு படம் போடுறாங்கள் என்டா, இரகசியமா ஆட்டையை போட்டவங்களை எங்க பிடிக்கப்போறாங்கள்!!!!!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

எட உவணை உள்ளை தள்ளுறதிட்கு இவ்வளவு படம் போடுறாங்கள் என்டா, இரகசியமா ஆட்டையை போட்டவங்களை எங்க பிடிக்கப்போறாங்கள்!!!!!!!!!!!!!!!!

 

பாராளுமன்றத்தில்

  • கருத்துக்கள உறவுகள்

சம்மந்தன் ஐயா சுமந்திரன் அவர்களுக்கு கிடைத்த இன்னொரு வெற்றியாக
இது சர்வதேச அரசியலில் இடம்பெறும்.

ஈழதமிழர்களுக்கு விடிவை தராது பின்னடித்தால்
எமது தலைவர் என்ன முடிவை அவர்களுக்கு
கொடுப்பார் எனபதற்கு இதுவே ....
ஒரு பீதியை சர்வதேசத்தில் உருவாக்கும். 

 

Mahinda%20Sampanthan%20Sumanthiran.jpg

  • தொடங்கியவர்

கோட்டாவை கைது செய்வதற்கு இடைக்கால தடை

 

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரிக்கும்  வரையிலும் அவரை கைதுசெய்வதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

 

http://www.tamilmirror.lk/146032#sthash.QymqE2sc.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.