Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரித்தானியத் தேர்தலில் பிரதமர் கமரனின் வெற்றி: ஓர் கண்ணோட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியத் தேர்தலில் பிரதமர் கமரனின் வெற்றி: ஓர் கண்ணோட்டம்

Cameron-wife1-247x300.jpg

கரு

ஐக்கிய இராச்சியத்தில் நேற்று இடம்பெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஆளும் பழமைவாதக் கட்சி அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்று ஆட்சியமைத்திருப்பதுடன், அதன் தலைவர் டேவிட் கமரன் மீண்டும் பிரதமராகியிருக்கிறார்.

 

பொருளாதாரம் அபிவிருத்தி, தேசிய சுகாதார சேவைகளைத் தரப்படுத்துதல், குடிவரவு, குடியகல்வுக் கட்டுப்பாடு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்த அங்கத்துவம் போன்ற மிக முக்கியமான விடயங்களை அடிப்படையாகக் கொண்டே இம்முறைத் தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

கொள்கை ரீதியாக ஆளும் கூட்டணிக்கட்சிகளுக்கும், பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் அற்றதொரு நிலையில் மக்கள் தேர்தலைச் சந்தித்திருந்தார்கள்.

குறிப்பாக இது ஒரு நாட்டின் தலைமைத்துவப் பண்புகளைக் கணிப்பதற்கான ஒரு தேர்தலாகவே பெரும்பாலும் பார்க்கப்பட்டது.

 

Cameron-relect.jpg

 

இந்த நிலையில் நேற்றையதினம் மிகவும் அமைதியான முறையில் மொத்தம் 650 ஆசனங்களுக்காக இடம்பெற்ற இந்தத் தேர்தலில், ஆளும் பழமைவாதக் கட்சி சுமார் 331 ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றீயிட்டியிருக்கிறது. கடந்த 2010 ஆம் ஆண்டுத் தேர்தலுடன் ஒப்பிடும்போது சுமார் இரண்டு மில்லியன்கள் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுள்ள பழமைவாதக்கட்சி தனது ஆசனங்களை 24 ஆல் அதிகரித்திருக்கிறது.

 

இது டேவிட் கமரனின் தலைமைத்துவத்திற்குக் கிடைத்துள்ள வாக்குகளாகவே பெரிதும் பார்க்கப்படுகிறது.

 

தொழிற்கட்சி 26 ஆசனங்களை இழந்து 232 ஆசனங்களைப் பெற்றிருக்கும் அதேவேளை, கமரனின் முன்னாள் பங்காளிக் கட்சியான லிபரல்  ஜனநாயகக் கட்சி இந்தத் தேர்தலில் 48 ஆசனங்களை இழந்து வெறும் எட்டு ஆசனங்களை மட்டுமே கைப்பற்றியிருக்கிறது. இதற்கு முன்பிருந்த அமைச்சரவையில் பிரதான அமைச்சர்களாகப் பங்குவகித்திருந்த எட்வேர்ட் டேவி, வின்ஸ் கேபிள் போன்றவர்களுடன் கட்சியின் மூத்த உறுப்பினர்களான சைமன் ஹியூஸ், டனி அலெக்ஸாண்டர் மற்றும் டேவிட் லோஸ் போன்றோரும் தத்தமது தேர்தல் தொகுதிகளில் தோல்வியடைந்திருக்கிறார்கள்.

 

ஆனால் நிக்கோலா ஸ்ரேர்ஜோன் அம்மையார் தலைமையிலான ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதுடன் அங்கேயுள்ள 59 ஆசனங்களில் 56 களைக் கைப்பற்றியிருக்கிறது. இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிகுறித்து பிறிதோரிடத்தில் விரிவாக நோக்குவோம்.

 

தோல்விகளும், இராஜினாமாக்களும்

 

Ed-miliband.jpg

 

ஆசிய நாடுகளைப் போலல்லாது,  இந்தத் தேர்தலில் தத்தமது கட்சிகளை அதல பாதாளத்திற்குச் இட்டுச் சென்ற கட்சித் தலைவர்கள் தேர்தல் முடிவுகள் அறிவித்தவுடனேயே கட்சியின் தோல்விக்கான முழுப்பொறுப்பினையும் ஏற்றுக்கொண்டு பதவி விலகியிருக்கிறார்கள்.

 

இன்று மாலையே அமுலுக்குவரும் வகையில் தொழிற்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ள எட் மிலிபாண்ட், கட்சியின் தோல்விக்கு தானே முழுப்பொறுப்பு என்றும், பிரிட்டனில் தொழிற்கட்சிக்குக் “காத்திரமானதொரு தலைமைத்துவம்” தேவைப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

 

பல்வேறு தேசியப் பிரச்சனைகள் அரசியல் ரீதியாகப் ஆளுங்கட்சிக்கு எதிராகப் பயன்படுத்தப்படக்கூடிய வாய்ப்புக்கள் இருந்தும் அதனை சரியாகப் பயன்படுத்துவதற்கும், கொள்கை ரீதியிலான முடிவுகளை எடுப்பதற்கும் தலைமைத்துவம் தவறியதன் காரணமாகவே தொழிற்கட்சி மிகமோசமான தொடர்தோல்வியைச் சந்திக்க நேரிட்டது என்கிறார்கள் நோக்கர்கள்.

 

அக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஹரியட் ஹேர்மன் அக்கட்சியின் தற்காலிக தலைமைப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டிருக்கிறார். எட் மிலிபாண்டின் அண்ணன், முன்னாள் வெளிநாட்டமைச்சர் டேவிட் மிலிபாண்ட் இந்தப் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்றும் ஊகங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

 

Nick-Clegg.jpg

 

அதேபோன்று, லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவர் நிக் கிளெக்கும் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து உடனடியாகப் பதவி விலகியுள்ளதோடு, கட்சியின் தோல்விக்கு தாம் உப்புச்சப்பில்லாத கொள்கைகளைக் கொண்ட பழமைவாதக் கட்சியுடன் ஆட்சியில் பங்கேற்றமையே காரணம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

மூன்றாவது தேசியக் கட்சியாக விளங்கிய இவரது கட்சி இப்போது தெளிவான கொள்கைகளைப் பின்பற்றாத காரணத்தினால் துவண்டுபோயிருக்கிறது. அத்துடன் அதன் முக்கிய பல தலைவர்கள் தோல்வியடைந்திருப்பதனால் தலைமைத்துவ வெற்றிடமொன்றையும் அக்கட்சி சந்தித்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.

 

Nigel-Farage.jpg

 

அதேபோன்று, பிரிட்டன் சுயாதீனக் கட்சியின் தலைவர் நைஜெல் பராஜும் கட்சியின் தோல்வியைக் காரணங்காட்டிப் பதவி விலகியிருக்கிறார். இந்தக் கட்சி இங்கிலாந்தின் மூன்றாவது பெரிய கட்சியாக இந்தத் தேர்தலில் வலுப்பெறுமென்று எதிர்வுகூறப்பட்டிருந்தது. ஆனாலும், தேசியவாதக் கொள்கைகளைக் கொண்ட கட்சியாகக் கருதப்படும் பிரிட்டன் சுயாதீனக் கட்சி தனது வாக்குவங்கியை 14 சதவீதத்தினால் பெருக்கிக் கொண்டுள்ளபோதிலும், அது ஒரு ஆசனத்தினை மட்டுமே பெற்றிருக்கிறது. அதன் தலைவர் நைஜெல் பராஜ், கென்ற் பிரதேசத்தில் அமைந்துள்ள தனது சொந்த ஆசனமான தானெற் தெற்கு தொகுதியில் தோல்வியடைந்திருக்கிறார்.

ஆகமொத்தம், பழமைவாதக் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருப்பது அது ஏற்கனவே மேற்கொண்ட பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளையும், கொள்கைகளையும் வலுவாக அமுல்படுத்துவதற்கு வழிகோலியிருக்கிறது.

 

ஆனாலும், தேர்தல் வெற்றியொன்று மட்டுமே ஒரு கட்சியினதும், ஒரு நாட்டினதும் அரசியல் ஸ்திரத்தன்மையினை வலுப்படுத்தவதாகவோ, சிக்கல்களை விலக்கிக்கொண்டு விட்டதாகவோ அமைந்துவிடாது.

 

ஸ்கொட்லாந்தின் எதிர்காலம்

 

SNP.jpg

 

அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் முகம்கொடுத்துவரும் இழுபறிநிலை காரணமாக, ஐக்கிய இராச்சியத்திலிருந்து சுதந்திரத்தைக் கோரிநிற்கும் ஸ்கொட்லாந்தின் எதிர்காலத்தினைத் தீர்மானிக்கும் நோக்கில் கடந்த வருடம் அங்கு சர்வஜன வாக்கெடுப்பொன்று நடாத்தப்பட்டது. அதில் அந்த மக்கள் தாம் ஐக்கிய இராச்சியத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்க விரும்புவதாகவே விருப்பம் வெளியிட்டிருந்தனர்.

 

ஆனாலும், ஸ்கொட்லாந்தின் சுயாதீனத்திற்காகக் குரல் கொடுத்துவரும் ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி நேற்றைய தேர்தலில் வரலாறு காணாத அமோக வெற்றியினைப் பெற்றிருப்பது புதிய அரசிற்கு ஒரு அதிர்ச்சி வைத்தியமாகவே இருக்கப் போகிறது.

 

ஐக்கிய இராச்சியத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கப்போவதாக கடந்த வருடம் விருப்பம் வெளியிட்டிருந்த ஸ்கொட்லாந்து மக்கள், நேற்றைய தேர்தலில் ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியை அமோகமாக ஆதரவளித்திருப்பது, மக்கள் சுயாதினமாகவே செயற்படப்போவதாக, அல்லது பிரிந்து செல்வதற்காக வழங்கிய ஆணையாகக் கருதலாமா?

 

இது குறித்து ஸ்கொட்லாந்தினைப் பூர்வீகமாகக் கொண்டவரும், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விருதுகளைப் பெற்ற ஆவணப்படங்கள் மூன்றை இயக்கியவருமான கலம் மக்ரே அவர்களிடம் தொடர்புகொண்டு கேட்டேன்.

 

“ஸ்கொட்லாந்து தேசியக் கட்சிக்கு கிடைத்துள்ள இந்த வெற்றியானது சமஷ்டியையோ, சுதந்திரத்தையோ அல்லது விரிவான அரசியல் பகிர்வினைக் குறிக்கிறதோ இல்லையோ, அது அந்த மக்களின் தனியான விருப்பத்தினை வெளிப்பாடாகவே அமைந்திருக்கிறது. அத்துடன் அது சுயநிர்ணய உரிமையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி நிற்கிறது என்பதுடன் இது குறித்த கேள்வியையும் உயிர்ப்பாக வைத்திருக்கிறது,” என்று கலம் மக்ரே கொழும்பு மிரரிடம் தெரிவித்தார்.

இதனாலேயே என்னவோ, பிரதமர் கமரன் இரண்டாம் முறை பதவியேற்றதன் பின்னர் ஆற்றிய உரையில் சகல தேசங்களுக்குமான அதிகாரப் பகிர்வு குறித்து அர்ப்பணிப்புடன் செயற்படப்போவதாகத் தெரிவித்திருக்கிறார்.

 

“ஏற்கனவே, அரசியல் கட்சிகள் இணங்கிக் கொண்டதற்கமைய, வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வட அயர்லாந்து போன்ற தேசங்களுக்கு உரிய அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க இந்தப் புதிய பாராளுமன்றம் பாடுபடும்,” என்று தெரிவித்த அவர் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பது குறித்தும் கருத்துக்கணிப்பு ஒன்று நடாத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

 

இந்தத் தேர்தலில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள் சிலர் போட்டியிட்டிருந்த போதிலும் அவர்கள் எவரும் வெற்றிபெறவில்லை. ஆனாலும் பழமைவாதக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சிங்களப் பெரும்பான்மையினத்தைப் சார்ந்த ரணில் ஜயவர்தன 35,000 ற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஹம்ஷயர் வடகிழக்குப் பகுதியில் பெருவெற்றி பெற்றிருக்கிறார்.

 

David-Cameron.jpg

 

பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டிற்குச் சென்றிருந்த பிரதமர் டேவிட் கமரன் வடக்கே யாழ்ப்பாணம் சென்று போரினால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்திருந்தது மட்டுமன்றி, போர்க்குற்றக் குற்றச்சாட்டுக்கள் குறித்த ஐ.நா தலைமையிலான சர்வதேச விசாரணை ஒன்றிற்கு அழுத்தம் கொடுக்கப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.

 

இந்த விசாரணைக் கமிஷன் ஏற்படுத்தப்பட்டது மட்டுமன்றி, அதன் விசாரணைகள் நிறைவுபெற்று அது குறித்த அறிக்கையும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனீவாவில் வெளியிடப்படவிருக்கிறது.

 

அதன் விளைவுகள் எவ்வாறிருக்கும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கு அந்த விசாரணை அறிக்கை வழிவகுக்குமா என்பதற்கெல்லாம் அப்பால், தமிழர்களைப் பொறுத்தவரை கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றிய ஒரு சர்வதேச தலைவராகவே பிரதமர் டேவிட் கமரன் விளங்குகிறார் என்பது மறுக்கப்பட முடியாத ஒரு உண்மை.

 

http://www.colombomirror.com/tamil/?p=4412

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.