Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனவாதிகளின் கூச்சலும் ஆர்ப்பாட்டமும்

Featured Replies

ஐ.நா தூதுவர் அலன் ரொக்கின் குற்றச்சாட்டை கண்டித்து பௌத்தமத குருக்களும் ஜேவிபி கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம்

[Monday November 20 2006 02:18:30 PM GMT] [யாழ் வாணன்]

un-protest-20.jpg

சிறுவர் மற்றும் ஆயுத மோதல் தொடர்பான ஐ.நா வின் சிறப்பு பிரதிநிதி அலன் ரொக் இலங்கையில் சிறுவர் படைகளில் பலவந்தமாக இராணுவத்தினரால் சேர்க்கப்படுகிறார்கள் என வெளியிட்டிருந்த அறிக்கையினை கண்டித்து இன்று திங்கள் கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்தின் முன்னால் ஆர்பாட்டம் இடம்பெற்றது.இவ் ஆர்ப்பாட்டத்தில் பௌத்தமத குருக்களும் ஜேவிபி பாரளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இது தான் முதல் முறை பாதுகாப்பு படையினர் மீது சிறுவர்களை கருணா அணியுடன் இணைந்து பலவந்த்மாக் படையில் இணைக்கின்றனர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளமை என ஜேவிபியின் பாரளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.இவ் ஆர்ப்பாட்டத்தில் ஐ.நா தூதுவரின் அறிக்கையினை கண்டித்து பதாதைகளும் கோஷங்களையும் எழுப்பி ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டோர் ஆர்ப்பாட்டத்தை நடத்தியமை குறிப்பிடத்தக்கது

http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

பிரிட்டனை இணைத்துக் கொண்டால் மக்கள் போராட்டம் வெடிக்கும்-ஜாதிக ஹெல உறுமய

[Monday November 20 2006 08:09:31 AM GMT] [tharan]

இலங்கையில் இன்று உருவாகியுள்ள தீர்க்கமுடியாத பிரச்சினைக்கு எம்மை அடிமைப்படுத்திய பிரித்தானியர்களே காரணமாகும்.

எனவே, இதனை தீர்க்க மீண்டும் அவர்களில் ஒருவரான பேர்ல் மேர்பியை இணைத்துக் கொள்ள முனைவது மீள் அடிமைத்தனத்திற்கான பிரவேசமாகுமென எச்சரிக்கை விடுக்கும் ஜாதிக ஹெல உறுமய அரசாங்கம் தேசிய பிரச்சினை தீர்வுக்கு அனுசரணையாளராக பிரிட்டனை இணைத்துக் கொள்ள முனைந்தால் ஆதரவை விலக்கிக் கொள்வதோடு மக்கள் போராட்டங்களை நடத்துவோமென்றும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளர் சம்பிக்க ரணவக மேலும் கருத்து தெரிவிக்கையில்;

வட பகுதி தமிழர்களுக்கு விசேட சிறப்புரிமைகளை வழங்கி எமது நாட்டிற்குள் பிரச்சினையை உருவாக்கியவர்கள் பிரிட்டிஷ்காரர்கள். அவர்களை மீண்டும் எமது பிரச்சினயை தீர்ப்பதற்கு இணைத்துக் கொள்ள முனைவதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதனை வன்மையாக எதிர்க்கின்றோம்.

போல் மேர்பி கூறியிருப்பது போல் பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தில் இராணுவத்தினர் வெற்றிபெற முடியாதென்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. எமது படையினரின் வெற்றியை இன்று தடுத்து நிறுத்தியவர்கள் சர்வதேச சமூகமே ஆகும். இல்லாவிட்டால் முகமாலையூடாக அர்ப்பணிப்புடன் படையினர் முன்னேறியிருப்பார்கள். அதே தவறை அன்று இந்தியா செய்தது.

அத்தோடு வட அயர்லாந்தை பிரிட்டிஷார் பலாத்காரமாக அடிமைப்படுத்தியிருந்தனர். எனவே, அவர்களின் போராட்டத்தை நாமும் ஆதரித்தோம். அயர்லாந்து மக்களை பிரிட்டன் சங்காரம் செய்தது.

ஆனால், இலங்கையிலிருப்பது விடுதலைப் போராட்டமல்ல பயங்கரவாதமேயாகும்.

வட அயர்லாந்து போராட்டத்தை பற்றிப் பேசும் பிரிட்டன் பிரதிநிதி போல் மேர்பி ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். எமது நாட்டை பிரிட்டிஷார் ஆக்கிரமித்த போது 1845 ஆம் ஆண்டு கைச்சாத்திட்ட கண்டி உடன்படிக்கையில் இலங்கை சிங்களவர்களுக்கு உரிமையான நாடு என்பதை ஏற்றுக் கொண்டது.

வெளிநாட்டு தலையீடுகளை அதிகரிப்பதற்காக அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை வழங்கவில்லை. எனவே, அவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படுமானால் 1987 இல் உருவான நிலைமை நாட்டில் ஏற்படுமென சம்பிக ரணவக தெரிவித்தார்.

http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

Edited by saanakiyan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.