Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போர்க்களத்தில் ஒரு பூ! இசைப்பிரியா தொடர்பான திரைப்படத்துக்கு இந்தியாவில் தடை

Featured Replies

இலங்கையின் இறுதிப்போரில் கொல்லப்பட்ட இசைப்பிரியாவை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற திரைப்படத்துக்கு இந்திய திரைப்பட மத்தியக்குழு அனுமதி வழங்க மறுத்துள்ளது.

அண்டை நாடுகளுடன் நட்புரிமை உறவு என்ற அடிப்படையிலேயே இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த திரைப்படத்துக்கான அனுமதி மறுக்கப்பட்டமைக்கான உத்தியோகபூர்வ கடிதம் இன்னும் தமக்கு கிடைக்கவில்லை என்று திரைப்படத்தின் தயாரிப்பாளர் கே கணேசன் தெரிவித்துள்ளார்.

நட்பு நாடு என்ற அடிப்படையில் அணுகாது தமிழக அரசாங்கமே இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், இந்த திரைப்படத்துக்கான அனுமதி மறுக்கப்பட்டமை வியப்பானது என்று கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இந்த திரைப்படத்துக்கான அனுமதி மறுக்கப்பட்டமையை நடிகரும் திரைப்பட தணிக்கை குழுவின் பிராந்திய தலைவருமான எஸ்.வி.சேகர் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் படுகொலைகள் இடம்பெறுகின்ற போது அவற்றை திரைப்படமாக காட்ட அனுமதியில்லை. இது திரைப்பட தணிக்கை நூலில் தெளிவாக கூறப்பட்டுள்ளதாக சேகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

http://www.tamilwin.com/show-RUmtyFRaSUhw5E.html

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

//அண்டை நாடுகளுடன் நட்புரிமை உறவு என்ற அடிப்படையிலேயே இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.//

 

ஒரு படம் அண்டை நாடுகளுடன் நட்புரிமையை பாதித்துவிடும் என்பது - அதன் வலிமையை அதாவது நட்புரிமையின் வலிமையை தெளிவாக நமக்கு எடுத்துக் காட்டுகிறது. தமிழர்கள் நன்கு சிந்திக்கவும்.

 

// இந்தநிலையில் இந்த திரைப்படத்துக்கான அனுமதி மறுக்கப்பட்டமையை நடிகரும் திரைப்பட தணிக்கை குழுவின் பிராந்திய தலைவருமான எஸ்.வி.சேகர் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் படுகொலைகள் இடம்பெறுகின்ற போது அவற்றை திரைப்படமாக காட்ட அனுமதியில்லை.//

 

சமூகத்தில் படுகொலைகள் நடைபெறுகிறதா? அல்லது இடம்பெறுகிறதா?

 

இடம் பெறுவது படங்களில் மட்டும்தான். இசைப்பிரியாவின் படுகொலை இடம்பெற்றதா? நடைபெற்றதா?

 

சமூகத்திலா?  அல்லது ராணுவத்தாலா?

விளக்கினால் நலம்.

எஸ் .வீ  சேகர் ஒரு தமிழ் எதிர்ப்பாளி .... அதுவும் எங்கள் போராட்டத்திக்கு எதிரானவன் .....
தானும் ஒரு ஆள் என்று கருத்து சொல்றான்.. 
 
எத்தனை படத்தில் தமிழ் நாட்டில் இடம் பெற்ற கொலைகளை படமாக எடுத்து உள்ளார்கள் ...அண்ணருக்கு அது தெரியலையோ .... உதவாக்கரை .....
 
ஒரு அப்பாவி பெண்ணை சீரழித்ததை வெளி உலகத்திக்கு காட்ட இவ்வளவு எதிர்ப்பா .....
  • தொடங்கியவர்
தமிழ்நாட்டில் தயாரித்த படத்தை வேறு நாடுகளில் வெளியிட முடியாதா? அல்லது இணையத்தில் வெளியிட முடியாதா?
 
கிந்திய எப்போழுதும் தமிழ் மற்றும் தமிழர்களுக்கு எதிரி என்பதை மீண்டும் மீண்டும் இவ்வாறன நடவடிக்கைகள் மூலம் காட்டுகின்றது. 
 
சமூகத்தில் படுகொலைகள் இடம்பெறுகின்ற போது அவற்றை திரைப்படமாக காட்ட அனுமதியில்லை என்றால், சமூகத்தில் நடைபெறும் பாலியல் வல்லுறவு போன்ற கீழ்த்தரமான சம்பவங்களை எப்படி திரைபடத்தில் காட்ட முடியும்? ஆனால் இவை சம்பந்தமான பல திரைப்படங்கள் தமிழில் வந்துள்ளன. அவற்றுக்கு எப்படி அனுமதி கிடைத்தது?
 
மொத்தத்தில், ஈழம் சம்பந்தமான பெரும்பாலான படங்களுக்கு தடை போடவேண்டும் என்பது கிந்திய தணிக்கை குழுவில் எழுதபடாத சட்டம் போலும்.
 
ஒரு உண்மைச் சம்பவம் தொடர்பான படத்தை வெளியிட தடை போடும் அரசுக்கு வல்லரசு கனவு வேற...  :unsure:
 
  • தொடங்கியவர்

ஆதராம் இருக்கா ? இலங்கை எமது நட்ப்பு நாடு: சிங்கள அடிவருடி ஜெயந்தி முரளிதரன் கூச்சலிட்டார் !

இசைப் பிரியாவின் வாழ்க்கை வரலாற்றை "போர்க்களத்தில் ஒரு பூ" என்ற தலைப்பில் தமிழ் நாட்டில் படமாக்கி இருக்கிறார் கணேசன். கடந்த 12ம் திகதி ,அவர் குறித்த படத்தை தணிக்கை குழுவுக்கு காண்பித்து சர்டிபிக்கேட் எடுக்க முனைந்துள்ளார். மதியம் 11 மணி முதல் 1.40 மணிவரை படத்தை பார்த்த அதிகாரி, ஜெயந்தி முரளிதரன் கணேசனை அழைத்து தயாரிப்பாளர் யார் என்று பதற்றமாக கேட்டுள்ளார். அவர் வரவில்லை படத்தை இயக்கியது நான் தான். என்னிடம் நீங்கள் தாராளமாகப் பேசலாம் என்று கணேசன் கூறியுள்ளார். என்னையா படம் எடுத்திருக்கிறீர்கள் ? இசைப் பிரியாவை இலங்கை ராணுவம் தான் கொன்றது என்று காட்டி இருக்கிறீர்கள். அதற்கு ஆதாரம் உண்டா என்று படு கோபமாக அவர் கேட்டுள்ளார். பல செய்திகள் இது தொடர்பாக வெளியாகி உள்ளது என்று கணேசன் எவ்வளவோ எடுத்துக் கூறியுள்ளார்.

ஆனால் எதனையும் செவி மடுக்காத தணிக்கை அதிகாரி , ஜெயந்தி முரளிதரன் இலங்கை எமது நட்ப்பு நாடு. அந்த நாட்டு ராணுவ வீரரை தாக்கி படம் எடுத்து அதனை வெளியிட நான் அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார். இலங்கை எமது நட்ப்பு நாடு இல்லை , என்று செல்வி ஜெயலலிதா தமிழக சட்ட மன்றில் தீர்மானம் கொண்டுவந்ததை அவர் ஜெயந்திக்கு ஞாபகப்படுத்தியுள்ளார். அதனையும் ஏற்க்க அவர் மறுத்து படத்திற்கு தடை விதித்துள்ளார். அந்த அளவு சிங்கள பாசம் அவருக்கு இருக்கிறது.

வேண்டும் என்றால் ‘ரிவைசிங் கமிட்டி’க்கு நீங்கள் பரிந்துரை செய்துகொள்ளுங்கள். அவர்கள் தீர்மானிக்கட்டும். பிறகு வேண்டுமானால் உங்கள் விருப்பப்படி, மும்பையோ அல்லது டெல்லி எப்.சி.ஏ.டி ரைபூனலுக்கு போகிறேன்’, என்று கணேசன் கூறியுள்ளார். ஆனால் அவர் அதற்கும் மறுத்துவிட்டார். இசைப்பிரியா இறந்த நாளன்று இந்த படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தோம். அது முடியாமல் போய்விட்டது என்பதை வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறேன் என்று கணேசன் தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் படத்தை தடைசெய்ததற்கு எதிர்த்து மேல் முறையீடு செய்ய கணேசன் உள்ளதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

http://www.athirvu.com/newsdetail/3469.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.