Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுநராக ஜொன்டி றோட்ஸ்

Featured Replies

இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுநராக ஜொன்டி றோட்ஸ்
 

இலங்கை கிரிக்கெட் அணியின் களத்­த­டுப்பு பயிற்­று­ந­ராக தென் ஆபிரிக்காவின் முன்னாள் வீரர் ஜொன்டி றோட்ஸ் குறு­கிய காலத்­திற்கு பதவி வகிக்க­வுள்ளார்.

 

இவர் நேற்று இரவு இலங்­கையை வந்­த­டையத் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது.

 

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்தின் இடைக்­கால நிரு­வாக சபைத் தலைவர் சிதத் வெத்­த­மு­னியின் முயற்­சியின் பய­னா­கவே ஜொன்டி றோட்ஸின் வருகை அமைந்­துள்­ளது.

 

அவுஸ்­தி­ரே­லி­யா­விலும் நியூ­ஸி­லாந்­திலும் நடை­பெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­க­ளின்­போது இலங்கை அணி­யி­னரின் களத்­த­டுப்பு தரம் குன்­றி­யி­ருந்­ததை அடுத்தே ஜொன்டி றோட்ஸ் அழைக்­கப்­பட்­டுள்ளார்.

2h4ccjd.jpg

நடந்து முடிந்த எட்­டா­வது இண்­டியன் ப்றீமியர் லீக் இரு­பது 20 கிரிக்கெட் போட்­டியில் சம்­பி­ய­னான மும்பை இண்­டியன்ஸ் அணியின் களத்­த­டுப்புப் பயிற்­று­ந­ராக ஜொன்டி றோட்ஸ் செயற்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

களத்­த­டுப்பில் திருப்பம் ஒன்றை ஏற்­ப­டுத்தும் வகையில் அதிசிறந்த களத்தடுப்­பாளர் என்ற பெய­ரையும் புக­ழையும் பெற்ற ஜொன்டி றோட்ஸ், 1992 முதல் 2003வரை சர்­வ­தேச கிரிக்கெட் அரங் கில் வலம்­வந்தார்.

 

52 டெஸ்ட் போட்­டி­களில் 3 சதங்­க­ளுடன் 2532 ஓட்டங்ளைப் பெற்றார்.

 

245 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 2 சதங்களுடன் 5935 ஓட்டங்களைப் பெற்றார்.

 

http://www.metronews.lk/article.php?category=sports&news=10280

  • தொடங்கியவர்

இலங்கை அணியின் களத்தடுப்பில் சுறுசுறுப்பை ஏற்படுத்துவாரா ஜொன்டி?

 

9baal3.jpg

அவுஸ்­தி­ரே­லி­யா­விலும் நியூ­ஸி­லாந்­திலும் கூட்­டாக நடத்­தப்­பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­களில் இலங்கை அணி­யினர் களத்­த­டுப்பில் ஆர்வமின்றி செயற்­பட்­டதை அடுத்து அவர்­க­ளுக்கு தென் ஆபி­ரிக்­காவின் ஜொன்டி றோட்ஸ் விசேட பயிற்­சி­களை வழங்கி வரு­கின்றார்.

 

ஜொன்டி றோட்ஸ் சுமார் இரண்டு வார காலம் இலங்­கையில் தங்­கி­யி­ருந்து களத்­த­டுப்பு பயிற்­சி­களை வழங்­குவார்.

 

சில தினங்­க­ளுக்கு முன்னர் கெத்­தா­ராம ஆர். பிரே­ம­தாஸ விளையாட்டரங்கில் இலங்கை வீரர்­க­ளுக்கு ஜொன்டி றோட்ஸ் பயிற்சி அளிப்­பதை ஆரம்­பித்தார்.

 

அதனை நேர­டி­யாக அவ­தா­னிக்கும் வாய்ப்பு மெட்­ரோ­ நியூஸ்க்கும் கிடைத்தது.

 

வீரர்­க­ளுக்கு சிறந்த அறி­வு­ரை­களை வழங்­கிய ஜொன்டி றோட்ஸ், களத்தடுப்பில் எவ்­வாறு செயற்­ப­ட­வேண்டும் என்­பதை செயல்­மு­றை­யிலும் செய்­து­காட்­டினார்.

 

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்தின் இடைக்­கால நிரு­வாக சபை­யி­னரின் அழைப்பின் பேரில் ஜொன்டி றோட்ஸ், குறு­கிய கால பயிற்­சி­யா­ள­ராக இங்கு வருகை தந்­துள்ளார்.

 

உலகக் கிண்ணப் போட்­டிகள் ஆரம்­ப­மா­வ­தற்கு முன்­னரே இலங்கை வீரர்களது களத்­த­டுப்பு குறித்து சந்­தேகம் நில­விய நிலையில் இங்­கி­லாந்தின் முன்னாள் பிராந்­திய கிரிக்கெட் வீரர் ட்ரவோ பெனி, களத்­த­டுப்பு பயிற்றுவிப்பா­ள­ராக இங்கு கட­மை­யாற்­றி­யி­ருந்தார்.

 

ட்ரவோ பெனியும் சரி ஜொன்டி றோட்ஸும் சரி நவீன தொழில்­நுட்ப முறைகளுடன் பயிற்­சி­களை அளித்­தாலும் வீரர்கள் சோம்­பே­றி­க­ளாக இருந்தால் அப் பயிற்­சி­களால் பலன் கிடைக்­காது என்­பதை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனம் உண­ர­வேண்டும்.

 

1996இல் அர்­ஜு­னவின் தலை­மை­யி­லான இலங்கை அணியில் இடம்­பெற்ற வீரர்கள் அனை­வரும் அர்ப்­ப­ணிப்­பு­டனும் பொறுப்­பு­ணர்­வு­டனும் செயற்­பட்டு களத்­த­டுப்பில் தங்­க­ளது திற­மையை 100 வீதம் வெளிப்­ப­டுத்­தி­ய­தா­லேயே அவ் வருடம் இலங்கை உலக சம்­பி­யனானது.

 

இந்த வெற்­றியில் துடுப்­பாட்டம், பந்­து­வீச்சு என்­ப­னவும் பிர­தான பங்கு வகித்தி­ருந்­தன.

 

ஆனால், இன்று களத்­த­டுப்பில் விரல் விட்டு எண்­ணக்­கூ­டி­ய­வர்­களே சிறந்து விளங்­கு­கின்­றனர்.

 

அது மட்­டு­மல்­லாமல் வீர­ருக்கு வீரர் உற்­சா­கப்­ப­டுத்தும் தன்­மையும் பெருமளவில் குறைந்­துள்­ளது.

 

இந்தக் குறை­பா­டுகள் அனைத்­தையும் ஜொன்டி றோட்ஸ் சீர்­செய்து இலங்கையில் அதி சிறந்த களத்­த­டுப்­பா­ளர்­களை அதா­வது சோம்பேறித்தனமற்ற சுறு­சு­றுப்­பான களத்­த­டுப்­பா­ளர்­களை உரு­வாக்­கு­வாரா என கிரிக்கெட் பிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

 

உலக கிரிக்கெட் அரங்கில் களத்­த­டுப்பில் சோர்­வுற்ற அணிகள் என வருணிக்கப்­படும் இலங்­கைக்கும் பாகிஸ்­தா­னுக்கும் இடை­யி­லான தொடர்கள் இம் மாதம் ஆரம்­ப­மா­க­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

http://www.metronews.lk/article.php?category=sports&news=10350

  • தொடங்கியவர்

‘‘பந்தைக் காவி மின்னல் வேகத்தில் இலக்கை நோக்கி எறிவதன் மூலமே சிறந்த களத்தடுப்பாளராகலாம்’’- ஜொன்டி றோட்ஸ்

 

அதிசிறந்த களத்­த­டுப்­பாளர் என்றால் பிடி­களை எடுப்­ப­துவும் பந்தை தடுப்­ப­துவும் அல்ல, மாறாக பந்தைத் தடுத்து நிறுத்தி மின்னல் வேகத்தில் இயங்கி இலக்கை நோக்கி பந்தை வேக­மாக வீசுவதாகும் என இலங்கை கிரிக்கெட் அணி­க­ளுக்கு தற்­கா­லிக பயிற்சி அளித்­து­வரும் தென் ஆபிரிக்­காவின் ஜொன்டி றோட்ஸ் தெரி­விக்­கின்றார்.

 

மேலும் களத்­த­டுப்­புக்கு வயது எல்லை இல்லை எனவும், கலிஸ், மிஸ்பா உல் ஹக் போன்­ற­வர்கள் இதற்கு சிறந்த உதா­ர­ண­கர்த்­தாக்கள் எனவும் ஜொன்டி றோட்ஸ் தெரி­வித்தார்.

இலங்­கையில் கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்­க­ளுக்கு குறு­கிய கால களத்­த­டுப்புப் பயிற்சி அளிக்க வந்­துள்ள ஜொன்டி றோட்ஸ், கெத்­தா­ராம விளை­யாட்­ட­ரங்கு கேட்­போர்­கூ­டத்தில் செய்­தி­யா­ளர்­களை நேற்று சந்­தித்து தனது பணிகள் குறித்து விளக்­கினார்.

 

இலங்கை வீரர்­க­ளது களத்­த­டுப்பு பற்றி கேட்­ட­போது, ‘‘இலங்­கையில் அதி சிறந்த களத்­த­டுப்­பா­ளர்கள் பலர் இருக்­கின்­றனர்.

 

அவர்கள் களத்­த­டுப்­பிற்­கான தொழில்­நுட்பத் திறனைக் கொண்­டுள்­ளார்கள்.

 

சிலர் பிடி­களை எடுப்­ப­திலும் பந்தை தடுப்­ப­திலும் சிறப்­பாக செயற்­ப­டு­கின்­றனர்.

 

ஆனால் அவர்கள் இலக்கை நோக்கி பந்தை எறி­வதில் ஆர்வம் காட்­டு­வது மிகக் குறைவு.

 

பந்தை தடுத்து நிறுத்தி மின்னல் வேகத்தில் இலக்கை நோக்கி பந்தை எறி­வதன் மூலம் ஒரு களத்­த­டுப்­பாளர் பூர­ணத்­துவ களத்­த­டுப்­பா­ள­ரா­கின்றார்.

 

கனிஷ்ட வீரர்­க­ளுக்கும் சிரேஷ்ட வீரர்­க­ளுக்கும் இந்த நுட்­பங்­களை நான் பயிற்­று­வித்து வரு­கின்றேன்.

 

அவர்கள் வெகு­வி­ரைவில் களத்­த­டுப்பில் முன்­னேற்றம் அடைவர்  என நம்புகின்றேன்’’ என அவர் கூறினார்.

 

மேலும் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர் கிரிக்கெட் போட்­டி­க­ளி­லேயே களத்தடுப்பா­ளர்கள் சுறு­சு­றுப்­பாக செயற்­பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

 

‘‘டெஸ்ட் போட்­டி­களில் களத்­த­டுப்பில் ஈடு­ப­டு­வ­தற்கும் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர் கிரிக்கெட் போட்­டி­களில் களத்­த­டுப்பில் ஈடு­ப­டு­வ­தற்கும் பாரிய வித்தியாசம் உள்­ளது.

 

டெஸ்ட் போட்­டி­களில் வேகப்­பந்­து­வீச்­சா­ளர்கள், தேர்ட் மேன் நிலையில் ஆசு­வா­ச­மாக இருக்க முடியும். ஆனால் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர் கிரிக்கெட் போட்­டியில் அவர்கள் சுறு­சு­றுப்­புடன் செயற்­ப­ட­வேண்­டி­யுள்­ளது.

 

அத்­துடன் துடுப்­பாட்ட வலு விளை­யாட்­டின்­போதும் களத்­த­டுப்­பா­ளர்கள் நுட்பத்­தி­ற­னு­டனும் அதி வேகத்­து­டனும் செயற்­ப­டு­வது அவ­சியம்.

 

அதற்­கான ஆலோ­ச­னை­களை இலங்கை வீரர்­க­ளுக்கு நான் வழங்கி வருகின்றேன்’’ என ஜொன்டி றோட்ஸ் மேலும் குறிப்­பிட்டார்.

 

வீரர்கள் தொடர்ச்­சி­யாக களத்­த­டுப்பில் சோபிக்கத் தவ­று­வ­தற்கு காரணம் என்­ன­வென அவ­ரிடம் கேட்­ட­போது, ‘‘சில வீரர்கள் சோர்வுத் தன்மை காரணமாக களத்­த­டுப்பில் தொடர்ச்­சி­யாக பிர­கா­சிக்க முடி­யாத நிலை ஏற்படு­கின்­றது.

 

அவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் பயிற்று­நர்கள் அவர்­களை ஊக்குவிக்கவேண்டும்.

 

களத்­த­டுப்பில் 100 வீத திற­மையை வெளிப்­ப­டுத்த ஒவ்­வொரு வீரரும் கடுமை­யாக உழைக்­க­வேண்டும். எல்லைக் கோட்­டுக்கு அருகே களத்தடுப்பில் ஈடு­ப­டு­ப­வர்கள் பந்து எல்லைக் கோட்டைக் கடப்­பதை தடுத்து நிறுத்­து­வது மிக அவ­சி­ய­மாகும்.

 

நான் கிரிக்கெட் விளை­யா­டிய காலத்தில் கவர் பொய்ன்ட் நிலையில் களத்தடுப்­பா­ள­ராக இரு­பு­றங்­க­ளுக்கும் தாவி 20, 30 ஓட்­டங்­களைக் கட்டுப்படுத்­தி­யுள்ளேன்.

 

ஆனால் நான் துடுப்­பாட்­டத்தில் எடுக்கும் ஓட்­டங்கள் மட்­டுமே கவ­னத்தில் கொள்­ளப்­பட்­டது. இன்று நிலைமை மாறி­யுள்­ளது.

 

களத்­த­டுப்பின் முக்­கி­யத்­துவம் அதி­க­ரித்­துள்­ளது’’ என அவர் தெரிவித்தார்.

 

இலங்­கையின் ஜெஹான் முபாரக் களத்­த­டுப்பில் ஈடு­ப­டும்­போது அங்கும் இங்கும் தாவு­வ­துடன் மட்­டு­மல்­லாமல் மிக உய­ர­மாகத் தாவி பந்தைப் பிடிப்பது பிர­மிக்க வைக்­கின்­றது எனக் குறிப்­பிட்ட ஜொன்டி றோட்ஸ், அவரைப் போன்று மற்­றை­ய­வர்­களும் திற­மையை வெளிப்­ப­டுத்­து­வார்கள் என நம்புவதாகவும் கூறினார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=10419#sthash.HcDEjF9F.dpuf

  • தொடங்கியவர்

ஜொன்டியின் பயிற்சியளிப்பில் திருப்தி : சிதத் வெத்­த­முனி
 

2wrgn03.jpg

தென்­னா­பி­ரிக்கக் கிரிக்கெட் அணியின் நட்­சத்­திர வீரர் ஜொன்டி ரோட்ஸ் இலங்கை அணி வீரர்­க­ளுக்கு களத்­த­டுப்பு பயிற்­சி­ய­ளித்­தமை எமக்கு பூரண திருப்­தி­ய­ளிக்­கி­றது. அதேபோல் வீரர்­களும் புதிய அனு­ப­வங்­களைப் பெற்­றுக்­கொண்­டனர் என்று இலங்கைக் கிரிக்­கெட்டின் தலைவர் சிதத் வெத்­த­முனி தெரிவித்தார்.

இலங்கைக் கிரிக்­கெட்டில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்இ ஜொன்டி ரோட்ஸ் எமது வீரர்­க­ளுக்கு பயிற்­சி­ய­ளிக்க முன்­வந்­த­மைக்கு அவ­ருக்கு நன்­றி­களைத் தெரி­வித்­துக்­கொள்­கிறோம்.

 

அதே­நேரம் அவரின் பயிற்­சியின் மூலம் எமது வீரர்­க­ளுக்கு புதிய அனுபவம் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. இது ஆரோக் ­கி­ய­மான விட­யமும் கூட. பயிற்­சி­யின்­போது நான் எமது வீரர்­களைச் சந்­தித்­துப்­பே­சினேன். அவர்­களும் ஜொன்­டியின் பயிற்சிகளை விரும்புவதாகத் தெரிவித்தனர்.

 

ஜொன்டி மட்டுமல்லாது எதிர்காலத்தில் இன்னும் பலகிரிக்கெட் ஜாம்பவான்களை வர வழைத்து குறுகிய கால பயிற்சிகளை வழங்க எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

 

 

http://www.virakesari.lk/articles/2015/06/10/%E0%AE%9C%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%C2%AD%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.