Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அடுத்த வாரம் முக்கிய பேச்சுவார்த்தை

Featured Replies

278 அரசியல் கைதிகளை விடுவித்துக் கொள்வது தொடர்பில் முக்கியமான பேச்சுவார்த்தை ஒன்று அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இதனைத் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பில் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை அடுத்த வாரம் சந்திக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 நீண்டகாலமாக காரணம் இன்றி தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை துரிதமாக விடுவித்துக் கொள்ளும் பொருட்டு இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை கடந்த வாரம் நடைபெறவிருந்த போதும், தவிர்க்கமுடியாத சில காரணங்களால் அடுத்த வாரம் வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.pathivu.com/news/40490/57//d,article_full.aspx

278 தமிழ் அரசியல் கைதிகளை அரசாங்கம் விடுதலை செய்ய உள்ளது – சுமந்திரன்
 
sumanthiran_CI.jpg

 

278 தமிழ் அரசியல் கைதிகளை அரசாங்கம் விரைவில் விடுதலை செய்ய உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு தமிழ் சமூகம் நீண்ட காலமாக போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

கைதிகளை விடுதலை செய்வது குறித்து நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

யாரை முன்னதாக விடுதலை செய்வது எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து பேசப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பல கைதிகளுக்கு எதிராக இதுவரையில் வழக்குத் தொடரப்படவில்லை எனவும். பலர் சந்தேகத்தன் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சிலர் சிறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதி அமைச்சருடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/120345/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

விட்டிட்டு.. பிறகு ரகசியமா பிடிக்கிறதில்லை... இல்ல விபத்தில் கொல்வதில்ல. இதுவும் சம்பூர் விடிவிப்புப் போல அறிக்கை அரசியல் என்ற நிலையில் நிற்காமல் இருப்பதோடு வினைத்திறனான அறிவிப்பு இங்கு அவசியம்.

 

முன்னர் மகேஸ்வரியும் - டக்கிளசும் செய்த அதே அரசியலை சம் - சும் கும்பல்.. செய்யாமல்.. பகிரங்க பொதுமன்னிப்பு அறிவித்தலின் கீழ் எல்லா அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும். அதுதான் அவர்களை இயல்பு வாழ்க்கைக்குள் திரும்ப வைப்பதோடு வாக்குப் பொறுக்கி அரசியலுக்காக அப்பால் அவர்களின் விடுதலையை சாத்தியமாக்கும். வாக்குப் பொறுக்கி அரசியலுக்காக.. அரசியல் கைதிகளையும் அவர் தம் துன்பங்களையும் பாவிப்பது மக்கள் முதுகில் சவாரி செய்வதற்கு ஒப்பாகும். :icon_idea:

Edited by nedukkalapoovan

 

278 தமிழ் அரசியல் கைதிகளை அரசாங்கம் விடுதலை செய்ய உள்ளது – சுமந்திரன்
 
sumanthiran_CI.jpg

 

278 தமிழ் அரசியல் கைதிகளை அரசாங்கம் விரைவில் விடுதலை செய்ய உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு தமிழ் சமூகம் நீண்ட காலமாக போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

கைதிகளை விடுதலை செய்வது குறித்து நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

யாரை முன்னதாக விடுதலை செய்வது எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து பேசப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பல கைதிகளுக்கு எதிராக இதுவரையில் வழக்குத் தொடரப்படவில்லை எனவும். பலர் சந்தேகத்தன் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சிலர் சிறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதி அமைச்சருடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/120345/language/ta-IN/article.aspx

 

 

நல்ல செயல்,

 

வெறும் அரசியல் இலக்கில்லாமல் பொதுவான பல நமைகளை செய்வீர்கள் என்பது எதிர்பார்ப்பு.

 

இருந்தாலும் பல அல்லகைளை எலாவே வென்றுவிட்டீர்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.