Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒவ்வொருவர் கேப்டன்சியும் வித்தியாசமானதே: தோனி

Featured Replies

ஒவ்வொருவர் கேப்டன்சியும் வித்தியாசமானதே: தோனி

 

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 பவுலர்களுடன் கோலி களமிறங்கியது குறித்து தோனி கூறும்போது, ஒவ்வொரு தனிநபரும் தலைமைத்துவ அணுகுமுறையும் வித்தியாசமானதாகவே இருக்கும் என்று கூறியுள்ளார்.

 

இது குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த தோனி, “இது ஒரு நல்ல கேள்வி. நாம் ஒருநாள் போட்டிகள் பற்றி பேசுவோம். ஒவ்வொரு தனிநபரும் வித்தியாசமனவரே. நீங்கள் அனைவரும் கேள்வி கேட்கிறீர்கள் ஆனால் உங்கள் கேள்வி வித்தியாசமாக இல்லையா அது போல்தான் இதுவும்.

 

அணி தலைமைத்துவத்தைப் பொறுத்தவரை நாம் இயல்பான நிலையில் அனைத்தையும் வைத்துக் கொள்ள விரும்புகிறோம். ஆனால் அதே சமயத்தில் தனிநபர்கள் வித்தியாசமானவர்களாக இருப்பது அவசியம். அனைவரும் ஒரே மாதிரியாகச் செயல்படுவது விருப்பத்துக்குரியதல்ல. தனிநபர் குணாதிசியம் என்பது மிக முக்கியமானது” என்றார்.

 

இந்திய-வங்கதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி பற்றி தோனி கூறும்போது, “இரு அணிகளும் தொழில் நேர்த்தியுடன் ஆடினர். இரு அணிகளும் வெற்றி பெறுவதற்காக விளையாடினர். ஆனால் களத்தில் இரு அணியினரிடையே அமைதியான போக்கு நிலவியது என்பது என்னைப் பொறுத்தவரையில் மிக முக்கியமான விஷயமாகும். இது நல்ல அறிகுறி. சரியான திசையில் செல்வதாகவே கருதுகிறேன்” என்றார்.

 

உலகக் கோப்பை கிரிக்கெட் காலிறுதியில் நடுவர் தீர்ப்புகள் இந்தியாவுக்குச் சாதகமாக அமைந்ததாக வங்கதேசம் குற்றம்சாட்டியது மற்றும் இந்தத் தொடர் பழிவாங்கும் தொடராக இருக்குமோ என்ற ரீதியில் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்ப, தோனி அவருக்கேயுரிய நடுநிலைமை கலந்த நகைச்சுவையுடன், “என்ன சர்ச்சை? நீங்கள் எந்தப் போட்டியை குறிப்பிடுகிறீர்கள்? அது நடந்து 4-5 மாதங்கள் ஆகிவிட்டது. கடந்த 2 நாட்கள் நடந்த விஷயங்களை நான் நினைவில் கொள்வேன். அதற்குள் நாம் செல்ல வேண்டாம். அது ஒரு கிரிக்கெட் ஆட்டம்” என்றார்.

 

பாகிஸ்தானை வங்கதேசம் 3-0 என்று வீழ்த்தியதைப் பார்த்தீர்களா என்ற கேள்விக்கு, “மற்ற நாடுகள் ஆடுவதை பார்க்க முடிவதில்லை, காரணம் ஆண்டு முழுதும் விளையாடி வருகிறோம். எங்களிடம் வீடியோ ஆய்வாளர் என்பவர் இருக்கிறார். அது ஒரு பெரிய சாதகம், இதற்கு மேல் இதுபற்றி ஒன்றும் கூற முடியாது.

 

முதல் தர கிரிக்கெட்டில் நல்ல அணிகள் வேண்டும். வங்கதேச அணியில் வளரும் பல வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். அதாவது அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை நன்றாகவே பயன்படுத்திக் கொள்கின்றனர்.

 

பெரிய அளவில் நல்ல வீரர்கள் கொண்ட குழு இருப்பது அவசியம். அவர்களும் நிறைய போட்டிகளை ஆடி வருகின்றனர், எனவே முன்னிலை வீரர்கள் காயமடையும் போது அவர்களுக்கு சரியான மாற்று வீரர்களை அணியில் எடுக்க சிறந்த மாற்று வீரர்களை கொண்ட குழு அவசியம்.

 

இப்போது புதிய சீசன் தொடங்கியுள்ளது. எனவே சிறந்த 11 வீரர்களை நாம் களத்தில் இறக்குவது அவசியம்

வங்கதேச அணி ஒருநல்ல ஒருநாள் போட்டி அணியாகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இரு இன்னிங்ஸ்களிலும் சிறப்புற சீரான ஆட்டம் தேவை, வருங்காலத்தில் அதிலும் வங்கதேச அணி முன்னேறும் என நான் நம்புகிறேன்” என்றார் தோனி.

 

 

2017 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2019 உலகக் கோப்பை பற்றி...

"நம் அணியின் டாப் 4 அல்லது 5 வீரர்களை எடுத்துக் கொண்டால், அவர்கள் நல்ல உடற்தகுதியுடன், ஓரளவுக்கு நல்ல பார்மில் இருந்தால் அவர்கள் அடுத்த உலகக் கோப்பை அல்லது சாம்பியன்ஸ் டிராபி வரை செல்வார்கள். ஆனால் முதல் 4 தவிர 5,6 மற்றும் 7-ம் நிலைகளை வலுவாக்க வேண்டும். குறிபாக 7-ம் நிலை என்பது மிக முக்கியமானது.

 

நம்பர் 7 பேட்ஸ்மெனாக இருப்பவர் 10 ஓவர்களையும் வீச வேண்டியுள்ளது. எனவேதான் நாங்கள் இன்னமும் ஆல்ரவுண்டர்களைத் தேடுகிறோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கவனித்தால் குறிப்பாக துணைக்கண்டங்களில் கீழ்வரிசை வீரர்களுக்கு பேட்டிங் வாய்ப்பு அவ்வளவாக கிடைப்பதில்லை.

டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் சிறப்பாக ஆடிவிடுவதால் 5,6,7 ஆம் நிலை வீரர்களுக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைப்பதில்லை. 10-15 போட்டிகளுக்கு ஒருமுறை 5 அல்லது 6 விக்கெட்டுகள் விரைவில் விழும்போது மட்டும்தான் 7-ம் நிலை வீரர் இறங்கி 50-60 ரன்களை எடுக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது"

 

வங்கதேச ரசிகர்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் பற்றி..

"இங்கு கிரிக்கெட்டை மிகவும் நேசிக்கிறார்கள். அவர்கள் நாட்டு அணிக்கு ஆதரவு அளிக்க வருகை தருகிறார்கள். சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் உள்ளூர் ரசிகர்கள் மைதானத்துக்கு வருகை தந்து தங்கள் அணிகளை உற்சாகப்படுத்துவது மிக முக்கியமானதே. இதனால் 100%க்கும் மேல் ஆட்டத்திறனை வெளிப்படுத்த உத்வேகம் கிடைக்கும்.

 

போக்குவரத்து நெரிசல் மோசமாகவே உள்ளது, ஆனால் இங்குள்ள மக்கள் நேசத்துக்குரியவர்கள். போக்குவரத்தை விட்டுவிட்டால் இது ஒரு அருமையான இடம்” என்றார் தோனி.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF/article7325749.ece

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.