Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவில் செய்யாத குற்றத்துக்காக 25 ஆண்டுகள் சிறையில் இருந்தவருக்கு ரூ.40 கோடி நஷ்டஈடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அமெரிக்காவில் செய்யாத குற்றத்துக்காக 25 ஆண்டுகள் சிறையில் இருந்தவருக்கு ரூ.40 கோடி நஷ்டஈடு!
[Wednesday 2015-06-24 07:00]
செய்யாத குற்றத்துக்காக 25 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த அப்பாவி கறுப்பினத்தவர் ஒருவக்கு அமெரிக்க அரசு ரூ. 40 கோடி  நஷ்டஈடு வழங்கியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் புருக்ளின் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜொனாதன் பிளெமிங். கடந்த 89ம் ஆண்டு ஒரு கொலை குற்றத்துக்காக இவரை போலீசார் கைது செய்தனர். கொலை நடந்த சமயத்தில் தான் புளோரிடாவில் இருந்ததாக பிளெமிங் கூறினார். ஆனால் கொலை நடந்த இடத்தில் கிடைத்த ஆதாரங்களை வைத்து பிளெமிங் தான் கொலை செய்தார் என போலீசார் உறுதியாக நம்பினர்.

செய்யாத குற்றத்துக்காக 25 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த அப்பாவி கறுப்பினத்தவர் ஒருவக்கு அமெரிக்க அரசு ரூ. 40 கோடி நஷ்டஈடு வழங்கியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் புருக்ளின் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜொனாதன் பிளெமிங். கடந்த 89ம் ஆண்டு ஒரு கொலை குற்றத்துக்காக இவரை போலீசார் கைது செய்தனர். கொலை நடந்த சமயத்தில் தான் புளோரிடாவில் இருந்ததாக பிளெமிங் கூறினார். ஆனால் கொலை நடந்த இடத்தில் கிடைத்த ஆதாரங்களை வைத்து பிளெமிங் தான் கொலை செய்தார் என போலீசார் உறுதியாக நம்பினர்.

  

அரசு வக்கீலும் போலீஸ் கொடுத்த ஆதாரங்களை வைத்து வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கில் புருக்ளின் நீதிமன்றம் பிளெமிங்குக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேல் கோர்ட்களும் இவரது அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தன. தான் நிரபராதி என பிளெமிங் தொடர்ந்து கூறிவந்தார். பொய் வழக்குகள் குறித்து ஆய்வு நடத்தும் அமைப்புகளுக்கு பிளெமிங் ெதாடர்ந்து கடிதம் எழுதி வந்தார். இவரது வழக்கை ஹார்வர்டு பல்கலைக்கழக சட்ட பேராசிரியர் தலைமையிலான குழு ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது. கொலை நடந்த சமயத்தில் புளோரிடாவில் இருந்ததாக பிளெமிங் கூறிய தகவல் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.

புளோரிடாவில் உள்ள ஓட்டல் ஒன்றில் கொலை நடந்த சமயத்தில் பிளெமிங் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன. ஆயிரம் மைல் தொலைவில் உள்ள ஓட்டல் ஒன்றில் கொலை நடப்பதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பு பிளெமிங் சாப்பிட்டதற்கான பில் ஆதாரங்கள் புருக்ளின் மாவட்ட அரசு வக்கீலிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 25 ஆண்டு சிறைவாசத்துக்கு பின்னர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

அப்போது அவரிடம் ரூ.100 டாலர்கள் மட்டுமே இருந்தன. செய்யாத குற்றத்துக்காக தனது வாழ்நாளில் பாதி நாட்களை சிறையில் கழித்தமைக்காக நஷ்ட ஈடு தர வேண்டும் என வக்கீல் மூலம் நியூயார்க் அரசுக்கு நோட்டீஸ் கொடுத்தார். இதனை பரிசீலித்த அரசு வக்கீல் பிளெமிங்குக்கு ரூ. 40 கோடி நஷ்டஈடு அளிக்க ஒப்புக் கொண்டார். இதற்கான ஒப்பந்தத்தில் பிளெமிங் நேற்று கையெழுத்திட்டார். இந்த பணத்தில் தனது குடும்பத்தினருடன் புதிய வாழக்கையை தொடங்கப்போவதாக பிளெமிங் தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=134714&category=WorldNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.