Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு: சங்கக்காரா அறிவிப்பு

Featured Replies

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு: சங்கக்காரா அறிவிப்பு

 
குமார் சங்கக்காரா. | படம்: ஏ.பி.
குமார் சங்கக்காரா. | படம்: ஏ.பி.

இலங்கை அணியின் நட்சத்திர பேட்ஸ்மென் சங்கக்காரா, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியே தனது கடைசி டெஸ்ட் போட்டி என்று சங்கக்காரா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான நடப்பு தொடரில் 3-வது டெஸ்ட் போட்டியில் சங்கக்காரா விளையாட மாட்டார். ஆனால் இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு மீண்டும் வந்து, முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடி, 2-வது டெஸ்ட் போட்டி முடிவில் ஓய்வு பெறுகிறார்.

இதுவரை 131 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய சங்கக்காரா 227 இன்னிங்ஸ்களில் 12,271 ரன்களை 58.43 என்ற அதிகபட்ச சராசரியுடன் எடுத்துள்ளார். இதில் 38 சதங்கள் மற்றும் 52 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் 319 ரன்கள். 179 கேட்ச்கள் 20 ஸ்டம்பிங்.

உலகக்கோப்பையுடன் ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்ற சங்கக்காரா, 404 ஆட்டங்களில் 14,234 ரன்களை குவித்துள்ளார், சராசரி 41.98 ஆகும். இதில் 25 சதங்களையும், 93 அரைசதங்களையும் எடுத்துள்ளார் சங்கா. 402 கேட்ச் 99 ஸ்டம்பிங்.

http://tamil.thehindu.com/sports/இந்தியாவுக்கு-எதிரான-2வது-டெஸ்ட்-போட்டியுடன்-ஓய்வு-சங்கக்காரா-அறிவிப்பு/article7361676.ece

  • தொடங்கியவர்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளேன் : சங்கா

 
 

சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

2334.jpg

கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே குமார் சங்கக்கார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வு பெறவுள்ளேன். இந்திய அணியுடனான 2 ஆவது டெஸ்ட் போட்டியுடன்  நான் சர்வதேச கிரிக்கெட்  அரங்கிலிருந்து ஓய்வுபெறவுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/articles/2015/06/27/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE

 

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்,

உங்கள் மேலான (மேலோட்டமான அல்ல ) பார்வைக்கு.

  • தொடங்கியவர்

ஓய்வு பெறுகிறார் சங்ககரா

 

Sangakara, Sri Lanka, Retirement, Test, Cricket

கொழும்பு: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுகிறார் சங்ககரா.      

இலங்கை அணியின் நட்சத்திர வீரர் சங்ககரா, 37. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர் 2000ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக அறிமுகம் ஆனார். இதுவரை 131 போட்டிகளில் 12,271 ரன்கள் எடுத்த இவர், டெஸ்ட் அரங்கில் அதிக ரன் குவித்த வீரர்களில் 5வது இடத்தில் உள்ளார். கடந்த 2014 ‘டுவென்டி–20’ உலக கோப்பை, இந்த ஆண்டு ஒருநாள் உலக கோப்பை தொடருடன், இவ்வகை போட்டிகளில் இருந்து விடை பெற்றார். தற்போது இந்தியாவுக்கு எதிராக ஆகஸ்ட் மாதம் நடக்கவுள்ள தொடருக்குப் பின் டெஸ்ட் அரங்கில் இருந்தும் விடை பெறவுள்ளார்.       

சங்ககரா கூறுகையில்,‘‘ உலக கோப்பை தொடருக்குப் பின் அனைத்து போட்டிகளில் இருந்தும் விடை பெற விரும்பினேன். தேர்வாளர்கள் கேட்டுக் கொண்டதால் கூடுதலாக 4 டெஸ்டில் விளையாட முடிவு செய்தேன். இப்போது நான் ஓய்வு பெறுவற்கான நாள் வந்துவிட்டது,’’ என்றார்.      

இரண்டு டெஸ்ட்: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் இரு டெஸ்டில் தற்போது பங்கேற்றுள்ள சங்ககரா, அடுத்து ஜூலை 3–7ல் நடக்கும் மூன்றாவது டெஸ்டில் பங்கேற்க மாட்டார். ஆகஸ்ட் மாதம் நடக்கும் இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில், ஏதாவது இரண்டில் மட்டும் பங்கேற்று, பிறகு ஓய்வு பெறவுள்ளார்.

http://sports.dinamalar.com/2015/06/1435423855/SangakaraSriLankaRetirementTestCricket.html

  • தொடங்கியவர்

கிரிக்கெட்டுக்கு முழுக்கு: சாதனை வீரர் சங்கக்காராவின் சாதனைகள்!

லங்கை அணின் மூத்த வீரர் சங்கக்காரா, இந்தியாவுக்கு எதிரான தொடரில் 2-வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப் போவதாக திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

sank.jpg

இலங்கையில் தற்போது பாகிஸ்தான் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில்   3-வது டெஸ்ட் போட்டியில் சங்கக்காரா விளையாட மாட்டார் எனத் தெரிகிறது. ஆனால் ஆகஸ்ட் மாதம்  இந்தியாவுக்கு எதிரான தொடரில் மீண்டும் இலங்கை அணிக்காக விளையாடவுள்ளார். அந்த தொடரில் 2வது டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து விடை பெறுகிறார். 

இலங்கை அணிக்காக இதுவரை 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சங்கக்காரா 12 ஆயிரத்து 271 ரன்களை சேர்த்துள்ளார். இதில் இவரது சராசரி 58.43 ஆகும். 38 சதங்கள் மற்றும் 52 அரைசதங்களையும் சங்கக்காரா அடித்துள்ளார்.  அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் 319 ரன்கள் ஆகும்.. அதாடு சிறந்த விக்கெட் கீப்பரான சங்கக்காரா 179 கேட்ச்களை பிடித்துள்ளதோடு  20 ஸ்டம்பிங்குகளையும் செய்துள்ளார். தற்போது டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் சங்கக்காரா மூன்றாவது இடத்தில் உள்ளார்.

அண்மையில் முடிவடைந்த உலகக்கோப்பையுடன் ஒருநாள் போட்டிக்கு முழுக்கு போட்ட சங்கக்காரா 404 ஆட்டங்களில் பங்கேற்று 14 ஆயிரத்து 234 ரன்களை விளாசியுள்ளார்.  25 சதங்களையும், 93 அரைசதங்களும் இதில் அடங்கும். மேலும்  402 கேட்ச் அவுட்களையும் 99 ஸ்டம்பிங் முறையிலான அவுட்களையும் சங்கக்காரா செய்துள்ளார்.

தற்போது 37 வயதான சங்கக்காரா இலங்கையின் கண்டியை சேர்ந்தவர். இவருக்கு யேஹாலி என்ற மனைவியும் இரட்டை குழந்தைகளும் உள்ளன.

http://www.vikatan.com/news/article.php?aid=48654

  • தொடங்கியவர்

ஓய்வை உறுதி செய்தார் சங்கக்காரா

 
 
sanga_2455645f.jpg
 

இலங்கை வீரர் சங்கக்காரா(37) டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதை உறுதி செய் துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக வரும் ஆகஸ்ட்டில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் 2-வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறப் போவதாக குமார் சங்கக்காரா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறிய தாவது: ஓய்வை அறிவிக்க இதுவே சரியான தருணம். உலகக் கோப்பை முடிந்தவுடன் ஓய்வு பெற விரும்பினேன். ஆனால், தேர்வுக் குழுவினர் கேட்டுக் கொண்டதால் தொடர்ந்தேன்.

நான்கு டெஸ்ட்களில் விளை யாட ஒப்புக் கொண்டேன். அந்த ஒப்பந்தத்துக்கு மரியாதை அளிக்க வேண்டும். சொன்ன வாக்கைக் காப்பாற்ற வேண்டும். எனவே, விலகுகிறேன். சாதனைகளுக்காக நீண்ட நாள் விளையாட விரும்ப வில்லை. தனிப்பட்ட சாதனை களுக்காக மட்டுமே விளையாட விரும்ப வில்லை. இது ஓய்வு பெறுவதற்கான தருணம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

132-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் சங்கக்காரா 12,305 ரன்கள் குவித்துள்ளார். 38 சதங்களை விளாசியுள்ளார். தற்போது விளையாடி வருபவர் களிலேயே டெஸ்ட் போட்டியில் அதிக ரன் குவித்தவர் இவர்தான்.

டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் 15,921 என்ற சாதனையும், அதிக சதம் (51) என்ற சாதனையும் சச்சின் வசம் உள்ளது.

http://tamil.thehindu.com/sports/ஓய்வை-உறுதி-செய்தார்-சங்கக்காரா/article7366486.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.