Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2016 ஆம் ஆண்டுக்குள் தீர்வை பெற்றுத்தருவோம் - இரா.சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sammanthan_2.jpg

தமிழ்­பேசும் மக்கள் வட­க்கு, கி­ழக்கில் இம்­முறை நல்­ல­தொரு வெற்­றியை ஈட்­டித்­த­ரு­வார்­க­ளே­யானால் 2016ஆம் ஆண்டு தமிழ் மக்­க­ளுக்­கான தீர்வை நிச்­சயம் பெற்­றுத்­த­ருவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் திரு­கோ­ண­மலை மாவட்ட முதன்மை வேட்­பா­ள­ரு­மா­கிய இரா.சம்­பந்தன் தெரிவித்தார்.

நடை­பெ­ற­வுள்ள தேர்தல் செயல்­முறை தொடர்பில் கட்­சியின் மாவட்ட கிளைக் காரி­யா­ல­யத்தில் நேற்­றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வேட்­பா­ளர்கள் மற்றும் ஆத­ர­வா­ளர்கள் மத்­தியில் விளக்­க­ம­ளித்து உரை­யாற்றும் போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தனது அர­சியல் பய­ணத்தை முடிக்க விரும்­பு­கி­றது. கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் போன்­ற­வர்கள் தமது அர­சியல் பய­ணத்தை இப்­பொ­ழுது தான் ஆரம்­பித்­துள்­ளோ­மென்று கூறு­கி­றார்கள். எம்மைப் பொறுத்­த­வரை எமது அர­சியல் பய­ணத்தை தொடர்ந்தும் நீடிக்க முடி­யாது. எமது அர­சியல் பய­ணத்தை முடிக்க விரும்­பு­கிறோம்.

தொடர்ந்தம் நீட்­டிக்­கொண்­டு­போக நாம் விரும்­ப­வில்லை. வடக்கு கிழக்­கி­லுள்ள தமிழ் மக்கள் நடை­பெ­ற­வுள்ள தேர்­தலில் உயர்ந்த வெற்­றி­யொன்றை கூட்டமைப்புக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும். அவ்­வாறு தரு­வார்­க­ளானால் 2016ஆம் ஆண்­டுக்குள் எமது மக்­களின் பிரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்­வொன்றை கண்டே தீருவோம். அதற்கு மக்கள் ஆத­ரவு எமக்கு வேண்டும்.

நடை­பெ­ற­வுள்ள தேர்தல் மிக முக்­கி­ய­மா­ன­தாகும். இந்த தேர்தல் மூலம் ஏற்­படும் விளை­வுகள் எதிர்­கா­லத்தில் ஒரு தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும். இதனை எமது அர­சியல் பய­ணத்தில் முக்­கி­ய­மான மைல் கல்­லாக கரு­த­வேண்டும். யுத்தம் முடிந்த பின்னர் நடை­பெற்ற தேர்­தல்­களில் கிழக்கு மாகா­ண­சபை தேர்­தலும் வட மாகாண சபை தேர்­தலும் மிக முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­வை­யாகும். எமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை இந்த மாதம் இறுதி வாரத்தில் வெளி­யி­ட­வுள்ளோம். அதில் எமது அர­சியல் இலக்கு உட­னடித் தேவைகள் தமிழ் மக்­களின் நிலைப்­பா­டுகள் அபி­லா­ஷைகள் தொடர்பில் தெளி­வாக கூறுவோம்.

எங்­களைப் பொறுத்­த­வரை நாம் ஒரு திற­மான வெற்­றியைப் பெற­வேண்டும். எமது இலக்கு 20 ஆச­னங்­க­ளாகும். கொழும்பில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்புபோட்டியிடாமைக்கு என்ன காரணம்?

எங்கள் கவனம் முழு­வதும் வட­கி­ழக்கை நோக்­கி­யதாகும். வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் பூரண இறைமை பெற்று போதிய சுயாட்சி அதி­கா­ரத்தை பெற்று தாமே தம்மை ஆளும் அதி­கா­ரத்தை உண்­டாக்கும் வகையில் இந்த தேர்தல் பயன்படுத்தவேண்டும். வடக்கு­கி­ழக்­குக்கு வெளியே நாம் அதிக மக்­களைக் கொண்­ட­வர்­க­ளாக காட்­டினால் வட­கி­ழக்கில் நாம் எடுக்க வேண்­டிய உறு­தி­யான நிலை பல­வீனம் அடைந்து விடும். அக்­கா­ர­ணத்தின் நிமித்­தமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேல் மாகா­ணத்தில் போட்­டி­யி­ட­வில்லை. போட்­டி­யிட்­டி­ருந்தால் இன்­னு­மொரு தேசி­யப்­பட்­டி­யலை நாம் பெற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்­பட்­டி­ருக்கும். வடக்கு ­கி­ழக்கு மக்கள் அடைய வேண்­டிய உரிமை பல­வீனம் அடைந்­து­வி­டக்­கூ­டாது என்­ப­த­னா­லேயே நாம் போட்­டி­யி­ட­வில்லை.

வடக்­குக்கும் கிழக்­குக்கும் திரு­கோ­ண­மலை ஒரு பால­மாக அமைய வேண்டும். வடக்கில் எது­வித பாதிப்பும் ஏற்பட முடி­யாது. இது தமிழ் மக்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் பிர­தே­ச­மாகும். அது போன்­றதே மட்­டக்­க­ளப்பு மாவட்டம். மட்­டக்­க­ளப்பில் 75 வீத­மான மக்கள் தமிழ் மக்கள் என்­பதை யாம­றிவோம். இந்த இரண்டு தமிழ்ப்­பி­ர­தே­சத்­துக்கு இடையில் பால­மாக அமை­வது திரு­கோ­ண­மலை. இப்­பாலம் பல­மாக இருக்க வேண்டும். இது பல­மாக அமைய தெற்கும் வடக்கும் உத­வி­யாக இருக்க வேண்டும். இப்­பா­லத்தை பல­மாக வைத்­தி­ருப்­பதில் தமிழ் மக்­க­ளு­டைய பங்­க­ளிப்பு அதி­க­மாகும். திரு­கோ­ண­மலை மக்கள் 80 வீதம் வாக்­க­ளிப்­பார்­க­ளாக இருந்தால், நாம் இரண்டு ஆச­னங்­களை இம்­மா­வட்­டத்தில் பெற­மு­டியும். தமிழ் மக்­களே இதில் ஆர்வம் கொண்­ட­வர்­க­ளாக இருக்க வேண்டும்.

திரு­கோ­ண­ம­லையில் பல தமிழ்க் கட்­சிகள் போட்­டி­யி­டு­கின்­றன. ஈ.பி.டி.பி கட்சி, தமிழர் விடு­தலைக் கூட்­டணி மற்றும் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­ப­லத்தின் தமிழ்க் காங்­கிரஸ் என்பவற்றைக் குறிப்பிடலாம்.அகில இலங்கை தமிழ் காங்­கி­ரஸின் கொள்­கையும் அவர்­களின் செயற்­பா­டு­களும் அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­ப­டு­வதாகும், அதில் அமைச்சர் பதவி ஏற்­பது, ஒற்­றை­யாட்சி முறை­யொன்றை ஏற்றுக் கொள்­வது என்பன உள்ளன. இதுதான் அவர்­களின் கொள்கை செயற்­பாடு. அந்த அடிப்­ப­டையில் தான் ஜி.ஜி பொன்­னம்­பலம் செயற்­பட்டார்.

செல்வா–பண்டா, செல்வா –டட்லி ஒப்­பந்­தங்­களை எதிர்த்தார். எமது இனத்தை மண்ணை பாது­காப்­ப­தற்­காக இந்த ஒப்­பந்­தங்கள் தந்தை செல்­வாவால் மேற்­கொள்­ளப்­பட்­டன. தந்தை செல்­வாவின் முக்­கி­ய­மான நோக்கம் வட­கி­ழக்கில் வாழும் தமிழ் மக்­களின் அடை­யா­ளங்கள் மாற்­றி­ய­மைக்­கப்­ப­டக்­கூ­டாது என்­பதாகும். அதற்காகவே அந்த ஒப்­பந்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. இதை அகில இலங்கை தமிழ்க் காங்­கிரஸ் எதிர்த்­தது. சமஷ்டி கேட்ட போது ஜி.ஜி.பொன்­னம்­பலம் எதிர்த்தார். இன்று அவ­ரு­டைய சின்­னத்தில் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் போட்­டி­யி­டு­கிறார்.

சைக்கிள் சின்­னத்தில் இரண்டு தேசம் ஒரு நாடு என்று கூறும் தமிழ் மக்கள் தேசிய முன்­னணி இப்­பொ­ழுது போட்­டி­யி­டு­கி­றார்கள். தமிழ்க் காங்­கிரஸ் சின்­னத்தில் கஜேந்­திர குமார் பொன்­னம்­பலம் தான் இப்­பொ­ழுது அர­சியல் பய­ணத்தை ஆரம்­பித்­துள்ளேன் என்று கூறுகிறார். எங்களைப் பொறுத்தவரை நாம் எமது அரசியல் பயணத்தை முடிக்கின்றோம். எனது கணிப்பின்படி 2016ஆம் ஆண்டு முடியும் முன் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய நியாயமான அரசியல் தீர்வை ஏற்படுத்தி எமது மக்கள் போதிய சுயாட்சியைப் பெற்று வடகிழக்கு பிராந்தியத்தில் தங்கள் ஆட்சியை நடத்த கூடிய நிலைமையை ஏற்பட வேண்டும். ஏற்படுத்துவோமெனக் கூறுகின்றோம் என்றார். இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி,வேட்பாளர் க.துரைரட்ண சிங்கம் ஆகியோரும் உரையாற்றினர்.

http://www.virakesari.lk/articles/2015/07/17/2016-ஆம்-ஆண்டுக்குள்-தீர்வை-பெற்றுத்தருவோம்

சம்பந்தர் அவர்கள் திட்டவட்டமாக 2016 ஆம் ஆண்டு முடியும் முன் தீர்வு பெற்றுத்தரப்படும் எனது தெளிவாகக் கூறியிருக்கின்றார். அதுதாவது 2016 மார்கழித் திங்கள் 31 ஆம் நாளுக்கு முன்னதாக. பிறகு அரைகுறைய வந்து நிண்டுகொண்டு 2016 தைத்திங்கள் 1 ஆம் நாள் புலம்பக்கூடாது. வருடப்பிறப்பண்டு ஊழையிடுவது நல்ல சகுனமல்ல! :grin:

  • Replies 51
  • Views 3.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

(2016 உடன்) "எமது" அரசியல் பயணத்தை முடிக்கின்றோம். 2017 தை 1 முதல் தமிழரசுக்கட்சியும் இல்லை கூட்டமைப்பும் இல்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.