Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அன்று பிரபாகரன்! இன்று ரணில்! – என்னை எதுவும் செய்யமுடியாது!! – மஹிந்த

Featured Replies

அன்று பிரபாகரன்! இன்று ரணில்! – என்னை எதுவும் செய்யமுடியாது!! – மஹிந்த

அன்று பிரபாகரன் என்னைக் கொல்லவேண்டும் என்றார். இன்று ரணில் என்னை துடைத்து வீச வேண்டும் என்கிறார். ஆனால் இந்த மஹிந்த ராஜபக்‌ஷவை ஒருபோதும் அப்படி செய்து விட முடியாது. அடிப்படைவாதிகள் இப்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து விட்டனர்.

எனவே இனி எங்களால் இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.” இப்படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்திருக்கிறார்.

அனுராதபுரத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பெருமளவிலான மக்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் அவர் பேசுகையில் மேலும் தெரிவித்த முக்கிய விடயங்கள் வருமாறு:

“நாம் இன்று நாட்டுக்கு உயிரூட்டும் பயணத்தை ஆரம்பித்துள்ளோம். ஜனவரி 9 ஆம் திகதி இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்னரே நான் மெதமுலனவுக்கு சென்று விட்டேன்.

மக்களை நானே முதலில் சந்தித்தேன் அதற்குப் பின்னர் மக்கள் என்னைப் பார்க்க என் வீட்டுக்கு வந்தனர். இதுதான் மக்கள் என் மீது வைத்துள்ள பாசமும் மரியாதையும்.

2005 இல் நாம் அரசாங்கத்தை அமைத்தபோது பல இடங்களில் மின்சாரம் இல்லை. சீரான வீதிகள் இல்லை. உலகின் மிகப் பயங்கரமான தீவிரவாதிகளே இருந்தனர். அவர்களை ஒழித்துக் கட்டினோம். மின்சாரம் வழங்கினோம், தரமான வீதிகளை அமைத்ததுடன் வடக்குக்கு ரயில் சேவையையும் தொடங்கினோம். வடக்கில் தேர்தலையும் நடத்தினோம். இல்லாவிடின் ரணில் போன்றவர்களால் இவ்வாறு செயற்பட முடியுமா?

ஜனவரி 8 ஆம் திகதிக்குப் பின்னரும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை என்னிடமே வைத்திருக்க முடியும். ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லை. கட்சியைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தியாகங்களை செய்தேன். நல்லாட்சியின் மாற்றம் குறித்து அனைவரிடமும் விசாரணை நடத்தினர்.

பிக்குகளிடம் கூட விசாரணை தொடர்ந்தது. 1978 இன் பின்னர் ஆட்சியாளர்கள் பிரபாகரனிடம் மண்டியிட்டனர். வடக்கில் இராணுவத்தைத் தோற்கச் செய்ய நாட்டை புலிகளுக்குக் காட்டிக் கொடுத்தனர். ஆனால் தவறிக்கூட அவ்வாறு நடக்கவில்லை. மக்கள் பணத்தை நான் ஒருபோதும் கொள்ளையடிக்கவில்லை.

இந்த ராஜபக்‌ஷ ஒருபோதும் மதுபான சாலைகளுக்கு அனுமதி கொடுக்கவில்லை. இன்று நாடு போதைப் பொருள் நிறைந்துள்ளது. பாடசாலைகளிலும் விற்கப்படுகின்றன. யுத்தத்தை முடித்து நாம் செய்த அபிவிருத்தியை 100 நாட்களில் நிறுத்திவிட்டனர்.

வடக்கில் பெண்கள் தனியாகச் செல்ல அச்சப்படுகின்றனர். இந்நிலையில் விடுதலைப் புலிகள் இருந்தால் நல்லது எனக் கூறுகிறார்கள்.

இந்த நிலைமைக்கு நாட்டைக் கொண்டு வந்தவர்கள் யார்? அன்று பிரபாகரன் மஹிந்தவைக் கொல்ல வேண்டும் என்றார் அதேபோல இன்று ரணில் ராஜபக்‌ஷவைத் துடைத்து வீச வேண்டும் என்கிறார்.

ஆனால் இந்த மஹிந்த ராஜபக்‌ஷவை ஒருபோதும் அப்படி செய்து விட முடியாது. நான் சிறு வயதிலிருந்தே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருக்கிறேன். கட்சிக்காக சிறைவாசம் அனுபவித்தேன். தாயான கட்சியிலிருந்து பிள்ளைகள் விட்டுப் போகும்போது இந்தப் பிள்ளைதான் தாய்க்குத் துணையாக இருந்தது.

நான் வேட்புமனு தொடர்பில் கதைக்கப்போவதில்லை மக்கள் அதற்குப் பதிலளிப்பர்.”  என்றார்.

211421

http://www.jvpnews.com/srilanka/116952.html

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா  வாங்கையா!

ஆறு மாசம் முன்னாடி இப்படித்தான் கூட்டம் கூடியது. கடைசில  பார்த்தா  ஆப்பு இறுக்கியது.

இப்ப, மீடியா துணை இல்லை, ஜனாதிபதி எதிர்ப்பு. பத்தாததுக்கு, உள்ள வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறி விட்டுது.

உந்த கப்புல சிந்து பாடுறது எண்டால் எப்படி என்று ஆகஸ்ட் 17 அன்னைக்கு தெரியும். பாத்திருவோம். 

ஆசை, பாலாய்ப் போன அதிகார ஆசை யாரை விட்டுது ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரபாகரன் எனும் பெயர் இந்த உலகை விட பெறுமதியானது. :)

ஆதி முதல் அந்தம் வரைக்கும் பயன்படுகின்றது. பயன்படுத்தப்படுகின்றது.:innocent: 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.