Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புனித மாதத்தில் ரத்த பூமியாக மாறிய சிரியா: 5,000 பேர் பலியான கொடூரம்

Featured Replies

புனித மாதத்தில் ரத்த பூமியாக மாறிய சிரியா: 5,000 பேர் பலியான கொடூரம்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 யூலை 2015, 01:16.24 பி.ப GMT ]
syria_5000dead_001.jpgசிரியாவில் ரம்ஜான் மாதத்தில் மட்டும் 5,000 பேர் பலியாகியுள்ளதாக மனித உரிமை மீறல் தொடர்பாக கண்காணிக்கும் குழு தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவை தலைமையமாக கொண்டு செயல்பட்டு வரும் எஸ்.ஓ.எச்.ஆர் (Syrian Observatory for Human Rights (SOHR) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தனிநாடு அமைக்க போராடிவரும் ஐ.எஸ் தீவிரவாதிகளுகும், சிரிய படையினருக்குமிடையே நடைபெற்ற தாக்குதல்களே இதற்கு காரணம் ஆகும்.

ரம்ஜான் மாதம் தொடங்கி முடிந்த ஒரு மாதத்திற்குள், 224 குழந்தைகள், 222 பெண்கள் உட்பட 220 பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.

மேலும், சிரியா படையினர் மேற்கொண்ட ராணுவ தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், இதில் குழந்தைகள் 100க்கும் மேற்பட்டோர் அடங்குவர்.

இது போல் சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினர் பலரை தலை கொய்து கொன்றுள்ளனர்.

இதுவரை 3 ஆயிரத்து 27 பேர் தலைகொய்து கொல்லப்பட்டுள்ளனர். ஐ.எஸ் அமைப்பில் உள்ள குழந்தை போராளிகள் 52 பேர் அரசு படை தாக்குதலில் உயிரிழந்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈராக்கில் ரமலான் தினத்தன்று ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 120 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

syria_5000dead_002.jpg

syria_5000dead_003.jpg

http://newsonews.com/view.php?22yMC303lOS4e2BnBcb280Mdd3088bc3nBpe43Olx023gAe3

விஷவாயு தாக்குதலை நடத்துகின்றனரா ஐ.எஸ் தீவிரவாதிகள்?
[ ஞாயிற்றுக்கிழமை, 19 யூலை 2015, 07:53.13 மு.ப GMT ]
isis_baby_001.jpgஉலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள் விஷவாயு தாக்குதல் நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் சிரியாவின் ஹசாக்கே என்ற இடத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும், குர்திஷ் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதில், துர்நாற்றம் வீசக்கூடிய மஞ்சள் நிற விஷவாயு தாக்குதலை தீவிரவாதிகள் மேற்கொண்டதாக குர்திஷ் படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள் சாதாரணமாக தயாரிக்கப்பட்டிருந்ததாக கூறியுள்ளனர்.

இந்த விஷவாயுவால், அப்பகுதி மக்களுக்கு குமட்டலும், கண்கள் மற்றும் தொண்டையில் எரிச்சல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இது எவ்வகை வாயு என்பது சரியாக தெரியவில்லை எனவும் குர்திஷ் படையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னதாக ஐ.எஸ் தீவிரவாதிகள் குளோரின் அமிலத்தை பயன்படுத்துவதாக குர்திஷ் பாதுகாப்பு கவுன்சில் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

http://newsonews.com/view.php?22YOlx2bcg80M34edyMCa020BnB4dd3pBn5303ogAO2e4C0883cbclOSe3

 

மரண ஓலங்களும், ரத்தக்களறியுமாக மாறிய ரம்ஜான் திருநாள்: ஐ.எஸ் தீவிரவாதிகளின் வெறியாட்டத்தால் 115 உடல் சிதறி பலி (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 18 யூலை 2015, 06:38.13 மு.ப GMT ]
isis_ramjan_001.jpgஈராக்கில் ரம்ஜான் திருநாள் அன்று ஐஎஸ் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் 115 பேர் பலியாகியுள்ளனர்.

இரண்டாம் இணைப்பு:

இந்த தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது, மேலும் 170 பேர் காயடைந்துள்ளனர்,

உடல் உறுப்புகளை இழந்து தவிக்கும் சிலர் மருத்துவ உதவிகளை எதிர்பார்த்து காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆங்காங்கே சிதறிக்கிடந்த சிறு குழந்தைகளின் உடல்களை தக்காளி பெட்டிகளை காலி செய்து அவற்றில் போட்டு எடுத்துச்சென்றுள்ளனர்.

மேலும், பாதுகாப்பு பணிகள் அங்கு துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

முதலாம் இணைப்பு:

ரம்ஜானை முன்னிட்டு ஈராக்கின் பாக்தாத் அருகேயுள்ள கான்பானி சாத் என்ற இடத்தில் உள்ள மார்க்கெட்டில் விறுவிறுப்பாக வியாபாரம் நடந்து கொண்டிருந்தது.

ஏராளமான மக்கள் கூடி பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த தற்கொலை படை தீவிரவாதி சக்தி வாய்ந்த குண்டை வெடிக்க செய்தான்.

இதனால் அங்கு இருந்த பல கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின. கார்கள் வெடித்து சிதறி தீப்பிடித்து எரிந்தன. இடிபாடுகளுக்குள் சிக்கி பலர் உயிரிழந்தனர். உடல்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன.

இந்த தாக்குதலில் 100–க்கும் மேற்பட்டோர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டு வெடித்ததில் சேத மடைந்தவர்களின் உடல் உறுப்புகள் அங்குள்ள கட்டிடத்தின் கூரைகளில் தொங்குகிறது.

பிணங்களை அகற்றும் பணி நடைபெறுகிறது. சிதறி கிடக்கும் குழந்தைகளின் உடல் உறுப்புகள் காய்கறி பெட்டிகளில் சேகரிக்கப்படுகிறது.

இடிபாடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே இத்தாக்குதலுக்கு ஐ.எஸ்.தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

ஷியா பிரிவினரை குறி வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஹவிஜா நகரில் சன்னி பிரிவினர் மீது நடந்த தாக்குதலுக்கு பழி வாங்கவே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே தீவிரவாதிகள் மேலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் டியாலா மாகாணத்தில் பூங்காக்கள் மற்றும் பொழுது போக்கு இடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

isis_ramjan_002.jpg

isis_ramjan_003.jpg

isis_ramjan_004.jpg

http://newsonews.com/view.php?22yMC303lOI4e2BnBcb280Mdd3088bc3nBpe43Old023gA43

  • கருத்துக்கள உறவுகள்

ஆமை புகுந்த வீடும் 
அமெரிக்கா புகுந்த நாடும் உருப்பட்டதாய் சரித்திரமே இல்லை 

  • தொடங்கியவர்

அப்போ இனி இலங்கையிலும் இதுவா நிலை?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.