Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கலாசாரத்தை மீறிய ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்திற்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
 
இன்றைய விஜயத்தின் போது ஜனாதிபதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.குறிப்பாக மக்கள் மட்டுமல்லாது ஊடகவியலாளர்களும் பலத்த சோதனைகளின் பின்னரே கைலாச பிள்ளையார் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
 
இதேவேளை ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினர் கோயிலுக்குள்  கலாசாரத்தை மீறும் வகையில் சப்பாத்து அணிந்து கொண்டு உள்நுழைந்தனர்.
kkkk%20copy.jpg
 

- See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=121824170028213747#sthash.Elh3eGfa.dpuf

தமிழர்களின் கலாச்சாரத்தையே மதிக்காத மைத்திரி 2016 இல் சமஸ்டி தருவார் என்று சொல்வதற்கு ஒரு படித்த கூட்டமும் இருக்கத் தான் செய்கிறது

தமிழர்களின் கலாச்சாரத்தையே மதிக்காத மைத்திரி 2016 இல் சமஸ்டி தருவார் என்று சொல்வதற்கு ஒரு படித்த கூட்டமும் இருக்கத் தான் செய்கிறது

சரி மைத்திரி தரமாட்டார். அவர் மட்டுமல்ல எந்த சிங்கள அரசும் தரப்போவதில்லை. த.தே.கூ வும் தருவதாக சொல்லி ஏமாற்றுகின்றது.

ஆனால், தமிழ் காங்கிரஸ் சொல்லும் சுயாட்சி, இணைந்த வடக்கு கிழக்கு போன்றவற்றினை எவ்வாறு பாராளுமன்றம் செல்வதினூடாக பெறப்போகின்றது என்பதை விளக்குவீர்களா? அல்லது அவர்களும் த.தே.கூ போன்றே  மக்களை ஏமாற்றுகின்றார்களா?

 

சரி மைத்திரி தரமாட்டார். அவர் மட்டுமல்ல எந்த சிங்கள அரசும் தரப்போவதில்லை. த.தே.கூ வும் தருவதாக சொல்லி ஏமாற்றுகின்றது.

ஆனால், தமிழ் காங்கிரஸ் சொல்லும் சுயாட்சி, இணைந்த வடக்கு கிழக்கு போன்றவற்றினை எவ்வாறு பாராளுமன்றம் செல்வதினூடாக பெறப்போகின்றது என்பதை விளக்குவீர்களா? அல்லது அவர்களும் த.தே.கூ போன்றே  மக்களை ஏமாற்றுகின்றார்களா?

தமிழ் மக்கள் இப்போது கையாலாகாத நிலையில் இருப்பது உண்மை. இந்த நிலையில் தமிழர் உரிமைகளைப் பெறுவதென்பது அதுவும் சிங்கள அரசுடன் மட்டும் இணக்க அரசியல் செய்து பெறுவதென்பது மிகக் கடினமானது.

இந்த நிலையில் சர்வதேசத்தின் நெருக்குதல் மூலம் மட்டுமே எதாவது ஒன்றைப் பெறலாம். (அது தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்ற தீர்வாய் இல்லாவிட்டாலும் கூட)

ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவெடுக்கும் மையங்கள் இரண்டான சம்பந்தனும் சுமந்திரனும்  சர்வதேச மத்தியஸ்தம் இன்றி நல்லிணக்கத்தின் மூலம் இதயங்களால் நெருங்கி சிங்கள அரசுடன் பேசி தீர்வு காண முடியும் என நம்பகின்றனர். அந்த நல்லிணக்கத்திற்கான சமிக்ஞையாகத் தான் தேசியக் கொடியை சம்பந்தர் தாங்கியதும் முதல் தடவையாக சிங்கள சுதந்திர தீனத்தில் ஆஜரானதும் தமிழ் மக்களின் வலியை உணர்த்தும் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகளைப் புறக்கணிதததும்.

 

சம்பந்தர் இதனை நேரடியாகக் குறிப்பிட்டிருக்கிறாரா என நானறியேன். ஆனால் சுமந்திரன் சிங்கள அரசியல் நிகழ்ச்சியான சடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது (சுமார் 2 மாதங்களுக்கு முன்னர்) சந்தன பின்வரும் கேள்வியைக் கேட்டார்.

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும் அமெரிக்கா அல்லது ஐ.ஒன்றியத்தினை கூட்டமைப்பு நாடியுள்ளதா என

அதற்கு சுமந்திரன் தெளிவாகவே பதிலளித்தரார் 

நாங்கள் சுதந்திரத்தையும் சேர்ந்தே பெற்றோம் டி எஸ் சேனநாயக்கா இராமநாதன் ஜாயா என மூன்று இனத்தவர்களும் இணைந்தே பெற்றோம். அதே போல எமது பிரச்சினையை ஒன்றாக அமர்ந்து பேசி நாங்களே தீர்த்துக் கொள்ள முடியும் எ;னபதே எமது கொள்கையாக இருக்கிறது தேர்தல் வேளையில் ஏனைய கட்சிகள் மைத்திரிபால சிறிசேனவுடன் உடன்படிக்கைகளை எழுதியே இணைந்து கொண்டன. னொல் தமிழ ;தேசியக் கூட்டமைப்பு எந்தவித உடன்டிக்கையிலும் கையெழுத்திடாமல் முழுமையான ஆதரவை வழங்கினோம். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவே எமது இந்த வெளிப்படையான முடிவு குறித்து தனது ஆச்சரியத்தையும் அன்பையும் வெளியிட்டார்

 

சந்தன மற்றுமொரு கேள்வியைக் கேட்டார்

சர்வதேசம் தலையிட வேண்டும் எனத் தமிழர் கேட்பதாக தென்னிலங்கையில் ஒரு கருத்து நிலவுகிறதே என

அதற்கு சுமந்திரன் சொன்னார்

சிலர் அப்படிக் கோருவது உண்மைதான். அவர்கள் மிகச் சிலரே என்பதையும் அவர்களை தமிழ் மக்கள் கடந்த தேர்தலில் புறக்கணித்திருந்தார்கள் என்பதையும் சிங்கள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 

ஒப்பீட்டு ரீதியாக இங்கே கூட்டமைப்பை விட தமிழ் தேசிய முன்னணியை நம்பலாம். காரணம் அவர்கள் தமது நிலைப்பாடான சுயாட்சி வட கிழக்கு இணைப்பு உள்ளிட்டவற்றை தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள். அதாவது தமது உண்மையான நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள். 

 

ஆனால் கூட்டமைப்பு தேர்தல் மேடைகளிலும் தேர்தல் காலங்களிலும் ஒன்றையும் பின்னர் வேறொன்றையும் சொல்லிக் கொண்டு ஏமாற்று அரசியலை முன்வைக்கிறார்கள்.

 

மீண்டும் ஒரு விடயத்தை சொல்கிறேன் . தற்போதுள்ள சு+ழலில் சுமஸ்டி என்பது வெறும் கோசமாகவே இருக்கப் போகிறது. அது நடைமுறைச் சாத்தியமாக இருக்கப் போவதில்லை. ஆகக் கூடிய பட்சம் ஒற்றையாட்சிக்குள் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் பரவலாக்கப்படலாம். சில வேளைகளல் பொலிஸ் அதிகாரங்களும் வழங்கப்படலாம். அதுவும் சர்வதேசத்தின் அழுத்தத்தின் மூலமே சாத்தியமாகும்.

 

கூட்டமைப்பின் உள்மனதில் இருப்பதும் இதுவாகத் தான் இருக்கும். ஆனால் அதனை வெளியில் சொல்லி மக்களை ஏற்றுக் கொள்ள வைத்து  தீர்வை நோக்கிச் செலுத்த வேண்டிய தலைமை தேர்தல் வாக்குப் பொறுக்குவதற்காக சமஸ்டி வடக்கு கிழக்கு இணண்நத தாயகம் எம்மை நாமே ஆளும் வசதி அது இத என்று மக்களை உசுபப்பேத்திக் கொண்டிரு;ககிறார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சியை கோபப்பட வைத்ததிருப்பதும் இந்த இரட்டை வேடமே.

 

ஆகவே தனது கொள்கையை தொடர்ந்து வலியுறுத்தும் த.தே.முன்னணி இரட்டை வேடம் போடும் கூட்டணியை விட ஒரு படி மேல் என்பதே எனது கருத்து.

Bounce பண்ண போகும் செக் என்றால் நூறு என்றாலும் லட்சம் என்றாலும் ஒன்றுதான் .

சாத்தியமில்லாத ஒரு தீர்வு ஒன்றை வைப்பவர்கள் நிலையும் அதுதான் .

கூட்டமைப்பு தீர்வை பெற்று தருவார்களோ இல்லையோ ஓரளவு யதார்த்தமான சாத்தியமானதைத்தான் சொல்லுகின்றார்கள் .கூட்டமைப்புடன் ஓரளவு நான் ஒத்து போவதற்கு காரணம் அதுதான் .

கற்பனையில் கனவில் முப்பது வருடங்களாக வாழ்ந்தவர்கள் இனியும் அதை தொடரத்தான் நினைக்கிறார்கள் .அதனால் கஷ்டப்படபோவது அவர்களில்லை நாட்டில் இருக்கும் மக்கள் தான் ,.

 

இரண்டு கொட்டை ஒரு பழம்
---------------------------------------------------------
கஜேந்திரன் பொன்னம்பலம் அண்ணை இரண்டு தேசத்தில ஒண்டை கொண்டுவந்து தாறன் என்று களம் இறங்கியிருக்கிறார்.

"தம்பி, உழுற மாடு ஊருக்குள்ளையே உழும், பாராளுமன்றத்தில போய் உழவேண்டியதில்லை "

வன்னியில சனம் அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு அலையுதுகள். இவங்கள் அங்கை போய் வீரம் பற்றிக் கதைக்கிறாங்கள். முல்லைத்தீவுக்குப் போன் போட்டு கேட்டேன் ஒரே கஜேந்திரன் அலை போலகிடக்கு உண்மையோ என்று. அந்தாளுக்கு கோவம் வந்திட்டுப் போல. சொல்லிச்சு அப்பன் கிடந்தானாம் கோவணத்தோட மகன் சொன்னானாம் இழுத்து போத்துவிடப்பா என்று. நாங்கள் பட்ட காயம் ஆறேல்லை கொழும்பில சொகுசாப் படுத்துக் கிடந்திட்டு இரண்டு கொட்டை ஒரு பழம் எண்டு வாறாங்கள் என்று....

Bounce பண்ண போகும் செக் என்றால் நூறு என்றாலும் லட்சம் என்றாலும் ஒன்றுதான் .

சாத்தியமில்லாத ஒரு தீர்வு ஒன்றை வைப்பவர்கள் நிலையும் அதுதான் .

 

இதைத் தான் சொல்கிறேன். சர்வதேசத்தின் மத்தியஸ்தம் இன்றி சிறிலங்காவுடன் பேசுவதென்றால் ஒற்றையாட்சி என்ற ஒன்றைத்தான் மக்களுக்குச் சொல்ல வேண்டும்.

இல்லாமல் சமஸ்டி என்று பேச வெளிக்கிட்டால் அது சாத்தியமில்லாத தீர்வு தான். அதற்கு ஒரு தேசம் இருநாடு என்பதை உட்புகுத்துவதும் Bounce ஆகும் செக் தான். சமஸ்டி என்பதும் Bounce ஆகும் செக் தான்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.