Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது உடனடியான பணி!

Featured Replies

மாவீரர் தினத்தில தேசியத் தலைவர் நிகழ்த்திய மாவீரர் தின உரை தமிழ் மக்கள் மத்தியில் உற்சாகத்தையும் புத்துணர்வையும் தோற்றுவித்துள்ளது. ஈழப் பிரச்சனையில் தலையிட்ட வெளிநாடுகள் இதுவரை பாடி வந்த "ஐக்கிய இலங்கை" என்று பல்லவிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

கடைசியாக நடந்த ஜெனீவாப் பேச்சுவார்த்தையின் போது மேற்குலகம் முன்வைத்த நான்கு கோட்பாடுகளில் "ஐக்கிய இலங்கை" என்பது முக்கியமான கோட்பாடாக இருந்தது. அப்பொழுது நாம் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தோம்.

"ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு" என்கின்ற கோட்பாடு ஒரு பாரிய அத்துமீறல் ஆகும். தமிழினம் பல ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொடுத்து சுதந்திர தனியரசு அமைப்பதற்கு போராடி வருகிறது. ஆயினும் கடந்த 5 வருடங்களாக பேச்சுவார்த்தை மேசையில் தமிழீழத்தை வலியுறுத்தாது தமது நல்லெண்ணத்தை விடுதலைப்புலிகள் வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆகவே சிறிலங்கா அரசும் பதிலுக்கு "ஐக்கிய இலங்கை" என்பதை அரசியல் தீர்வு பற்றி பேசுவதற்கு முன்னம் வலியுறுத்தாது இருப்பதே சரியாக இருக்கும். ஆனால் சிறிலங்கா அரசு தொடர்ந்தும் "ஐக்கிய இலங்கையை" வலியுறுத்துவதன் மூலம் ஒரு பகை நடவடிக்கையை மேற்கொள்கிறது என்றே கொள்ள வேண்டும். தற்பொழுது மேற்குலகமும் வெளிப்படையாக "ஐக்கிய இலங்கை, ஒருமைப்பாடு" என்று பேசுவது மிகவும் பக்கசார்பானதும் ஏற்றுக்கொள்ள முடியாததும் ஆகும்.

இப்படி விடுதலைப்புலிகளின் நல்லெண்ணத்தை கண்டுகொள்ளாது "ஐக்கிய இலங்கை" என்ற கோட்பாட்டையே மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்த உலக நாடுகளுக்கு தற்பொழுது தங்களுடைய நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது.

தேசியத் தலைவர் உலக நாடுகளை நோக்கி தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கான போராட்டத்தை அங்கீகரிக்குமாறு அன்பான வேண்டுகோளை விடுத்துள்ளார். உலக நாடுகளை தமிழீழத் தனியரசை அங்கீகரிக்க செய்வதற்கான உந்துதலை வழங்க வேண்டியது அந்தந்த நாடுகளில் வாழுகின்ற தமிழ் மக்களின் மாபெரும் கடமையாகும்.

இதை விட தமிழ் மக்கள் முன் முக்கியமான ஒரு பணி இருக்கிறது. தமிழினத்திற்கு என உலகில் ஒரு நாட்டை அமைக்கின்ற போராட்டத்திற்கு நல்லாதரவு வழங்கி பக்கபலமாக செயற்பாடுமாறு தேசியத் தலைவர் உலகத் தமிழினத்தை நோக்கி அன்போடு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால் தமிழிகத்தில் வெளிவருகின்ற தினத்தந்தி, விடுதலை போன்ற சில ஊடகங்களே தேசியத்தலைவரின் மாவீரர்தின உரைக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதியுள்ளன. மற்றைய பெரும்பாலான ஊடகங்கள் தேசியத் தலைவரின் தமிழ்நாட்டு மக்களுக்கான அழைப்பை இருட்டடிப்பு செய்துள்ளன. முக்கியத்துவம் கொடுக்க தவறியுள்ளன. தனியரசு தீர்மானம் பற்றி செய்தி போட்ட ஊடகங்களும் தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்லப்பட்ட செய்தியை மறைத்து விட்டன. தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய மாபெரும் எழுச்சியை மழுங்கடிப்பதே இந்த இருட்டடிப்பின் நோக்கமாக இருக்கும்.

ஆகவே உலகத் தமிழினத்தின் பெருந்தலைவராகிய வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தமிழினத்தை நோக்கி விடுத்திருக்கின்ற செய்தியை உலகில் வாழுகின்ற எட்டுக் கோடிக்கும் மேற்பட்ட தமிழிர்களிடம் கொண்டு போய் சேர்க்கின்ற கடமை எமக்கு உண்டு. இதுவே நாம் உடனடியாக செய்ய வேண்டிய முதலாவது பணியாக இருக்கிறது.

நல்ல கண்ணோட்டம் சபேசன்.

பிந்தி என்றாலும் செய்திகள் போய்ச் சேரும் சேர வேண்டும்.

அங்கீகாரம் கிடைக்கும் வரை உதவிகள் வழங்கல்களிற்கு பக்கபலமாக இருக்க வேண்டியது தமிழ்நாடு. அந்த மிகமுக்கியமானதும் பாரிய பங்கிற்கும் முழுத் தமிழ்நாட்டின் ஆதரவும் எழுச்சியும் தேவை. இந்தியாவின் ஏனைய தரப்புகளின் எதிர்ப்புகளை வென்று அனுசரணையை பெற வேண்டும்.

அங்கீகாரம் கிடைக்கும் வரை தாயகத்து மக்கள் நம்பி இருக்கப் போவது புலம் பெயர்ந்த தமிழரையும் தமிழ்நாட்டையும் தான். அங்கீகாரத்திற்கான காலம் பல வருடங்களா சில வருடங்களா? அந்த சவாலிற்கு நாம் தயாரா? இவை பற்றி ஊடகங்கள் கவனம் செலுத்தாது சிறீலங்காவின் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று ஆய்வு செய்வதில் தலையங்கங்கள் தீட்டுவதிலும் தான் நேரத்தை வீணடிக்கிறது.

சிங்கள இனவாதம் மகாவம்ச மனோபாவத்தில் இருந்து விடுவிக்க முடியாது திண்டாடுவது போல்தான் எம்மில் பலரும் முக்கியமாக ஊடகங்களின் மனோபாவமும் சிறீலங்கா தலைவர்களை விமர்சித்து பொழுது போக்குவதில் இருந்து விடுதலை பெற்றதாக தெரியவில்லை.

தலைவரின் உரையை சரியாக புரிந்து கொண்டவர்களிற்கு விளங்க வேண்டும் இனி சிறீலங்காவோடு பேசுவது என்பது இலங்கைத் தீவில் சிறீலங்கா தமிழீழம் என்ற 2 நாடுகளிற்கான எல்லைகளை தீர்மானிக்கும் பேச்சாகத்தான் இருக்கும். இதை இந்தியா உட்பட சகல சர்வதேச சக்த்திகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும். எவ்வளவு காலம் சென்றாலும் எந்தளவு அவலத்திலும் மத்தியில் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளும் வரை எம்மை நாமே பராமரித்து பாதுகாப்பதற்கு தயாராக வேண்டும். இந்த அடுத்த கட்ட சவால்கள் பற்றித்தான் நாம் இன்று கவனம் செலுத்த வேண்டும்.

இனியாவது சிறீலங்காவில் இருந்து முழுமையாக பிரிந்து சென்று அனைத்துப் பொறுப்புகளையும் நாம் ஏற்று செயற்படுத்த வேண்டிய கடமைகள் சாவல்கள் பற்றி விடையங்களில் ஊடகங்கள் கவனம் செலுத்தினால் பொருத்தமாக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.