Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு தமிழ்த் தாய்க்குப் பலசிலைகள்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு தமிழ்த் தாய்க்குப் பலசிலைகள்?

செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்!

-    பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன்

அம் சொல் மொழியாள் அருந் தவப் பெண் பிள்ளை

     செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை

      தஞ்சம் என்று எண்ணித் தன் சேவடி போற்றுவார்க்கு

      இன்சொல் அளிக்கும் இறைவி என்றாரே !

-திருமந்திரம் 1109 (திருப்பணந்தாள் பதிப்பு, ஆண்டு 2012)

     

தமிழ்த் தாய்க்கு யார் சிலை எடுக்கிறார்கள் என்பது அரசியல். அதனை ஏற்பதும் எதிர்ப்பதும் அரசியல். ஆயினும் தமிழ்த்தாயின் வடிவம் என்பது, தமிழறின் மரபறிவு, தமிழ்த் தாய்க்கு ஒரு படிமையை உருவாக்கிக் கொள்வது என்பது தமிழரின் இன உரிமை. இதில் தமிழர் அல்லாதார் கவலைப்பட எதுவும் இல்லை.

 

ஒரு மொழியைப் படிமையாக வடிவப்படுத்துவது சரியா? என்ற அடிப்படைக் கேள்விக்கு நேரடியான விடை கூடாது என்பதுதான். அவ்வாறெனில், தமிழுக்கு ஏன் ஒரு படிமை தேவைப்படுகிறது? என்ற வினா எழும். அதற்கு விடை, ‘தமிழ்’ பிறமொழிகளைப் போன்ற ஒரு மொழி இல்லை! என்பது தான். தமிழ்மொழி, தமிழ் இனத்தின் அறிவார்ந்த கலைப்படைப்பு.

 

உலகில் உள்ள மொழிகளுள், பாவைத் தன்மை கொண்ட தன்னேர் இல்லாத ஒரே மொழி தமிழ் மொழி மட்டுமே. மாந்த அழகுணர்வின் பிழிவாக ஒரு பெண் பாவையைக் கட்டமைத்து, அதன் வடிவ இலக்கணக் கூறுகளை மொழியின் மீது திருப்பி ஏற்றியவர்கள் தமிழர்கள் மட்டுமே.

 

தமிழ்த்தாய் என்றாலும், தமிழ்ப்பாவை என்றாலும் தைப்பாவை என்றாலும் பொருள் ஒன்றே. பாவை என்பது உருவகம் அல்ல. அது கோட்பாடு. ஒரு கணக்கு வாய்ப்பாடு.

 

காலச் சுழற்சியைக் கறாராகக் கணக்கிட்டுக் கட்டமைக்கப்பட்ட கனகச்சிதமான ஒரு வடிவமைப்பு. வழிபடுவதற்கும், தவம் இயற்றுவதற்கும், தற்காத்துக் கொள்வதற்கும் தமிழைக் காப்பதற்கும் அது ஒரு போர்க்கருவி. விலைமதிப்பற்ற தமிழ் இன அடையாளம்.

தமிழ் மொழிக்கு இலக்கணம் இருப்பது போல, தமிழ்ப்பாவைக்கும் வடிவ இலக்கணம் இருக்கிறது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையிலும் 120 கூறுகள் கொண்ட அணங்கு போன்ற ஒரு வடிவம், தமிழர் கலைத் தொழில் மரபில் இன்னும் போற்றிக் காப்பாற்றப்பட்டு வருகிறது.

 

‘தொங்கு நூல் பலகை இலக்கணம்’ என்ற வகைப்பாட்டின்படி, ‘பாவை அமைப்பு நுட்பம்’ அறிந்த தமிழ் மரபுக் கலைஞர்கள் பலர் உயிரோடும், விழிப்போடும் இருக்கிறார்கள். அவர்களது மரபறிவின்படியும், தமிழில் அண்மைகாலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் உயர் ஆய்வுகளின் ஓர்மையின் அடிப்படையிலும், தமிழ்ப் புத்தாண்டு தொடர்பாக உண்மைத் தமிழர்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வின் அடிப்படையிலும், தமிழ்ப் பாவையே ‘தைப் பாவை’ என்று அடித்துக் கூற முடியும்! அறிவார்ந்த உலகின் முன்னால் புரியும்படி எடுத்துக் கூறவும் முடியும்!

 

தமிழ் வாழ்வைத் தவ வாழ்வாக மேற்கொண்டுள்ள ஒவ்வொருவரும், அவரவர் விருப்பப்படி தமிழ்த் தாய்க்கு வடிவங்களைப் படைத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு உரிமை இருக்கிறது. உளவியலாக ஒரு தேவையும் இருக்கிறது. உண்மைத் தமிழர் மனம் சோர்வடையும்போது ஆறுதல் தரும் கைக்கருவியாக அதனைப் போற்றலாம். தமிழரின் பகுத்தறிவு மழுங்கிவிடாது. ஏனெனில், பழந்தமிழரின் பகுத்தறிவின் விளைச்சல்தான் தமிழ்த்தாய் படைப்பு.

 

ஒருவேளை ஒரு தமிழ்த்தாய்ப்பாவை தன் கையில் இருந்திருந்தால் முத்துக் குமாரும் செங்கொடியும் நம்மைவிட்டுப் பிரிந்திருக்க மாட்டார்கள்.

 

தமிழர்கள் தமக்குரிய இன அடையாளத்தோடு வாழ வேண்டிய இக்காலத்தில், தாம் உயிராக மதிக்கும் மொழிக்கு வடிவம் தந்து அதனையே இனக்காவலாகக் கருதுவதில் தவறு நேர்ந்துவிடாது.

 

தமிழ்ப்பாவையைக் கையாளும் ஒவ்வொருவரும் தமக்கு எட்டும் தொலைவில் ஒரு தமிழ் ஆசானைத் தேர்ந்து கொள்ள வேண்டியதும் கட்டாயத் தேவை.

 

ஓவியமாக, பாவையாக, படிமையாக சிறிய அளவிலும் பெரிய அளவிலும் எப்படியும் அமைக்கலாம்.

 

சுடுமண், மரம், செம்பு, வெள்ளி, தங்கம் என எப்பொருளிலும் அமைக்கலாம். வரவேற்பறையில், மேசை மீது, நிலைவாசலில், அழகுப்பொருளாக, வழிபடு படிமையாக, எப்படியும் அமைத்துக் கொள்ளலாம். கையிலும், கழுத்திலும் சிறிய  வடிவில் தாயத்தாக கூடக் கட்டிக் கொள்வது மூட நம்பிக்கை ஆகாது. ‘தை இத்துக்’ கட்டுதல் என்பது பாவைக் கட்டோடு தொடர்புடைய செயல் ஆகும். அதுவே தமிழ் மந்திர மரபின் சிறப்பும் ஆகும். தமிழ் ஒலிப்புகளை தைப்பாவை ஏற்றுக்கொள்வாள். ஏவினால் பாய்வாள். கடிகை நூல் என்பது காலக்கணக்கு, தமிழ் ஒலிப்பு, பாவை இவற்றோடு தொடர்புடையது. தமிழ் மரபில் அரசியர் கைகளில் அதனைக் கட்டியிருந்தனர்.

 

தமிழ்ப்பாவை அமைக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்

 

      அரசுகள், அரசியல் அமைப்புகள், அறக்கட்டளைகள், இலக்கிய அமைப்புகள், தமிழ் செல்வந்தர் குழுக்கள் போன்றவை நல்லெண்ணத்தால் தமிழ்த் தாய்க்குச் சிலை எடுக்க விரும்பினால் அதற்கு ஒரு வல்லுநர் குழுவை அமைத்து, மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு வடிவத்தை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு வடிவமைப்பிலும் ஒரு சிறந்த தமிழ்க் கலைஞனை முதன்மைப் படுத்தலாம். அறிஞர்கள் ஏற்றுக்கொள்ளாத வடிவங்களை மக்கள் மீது வலிந்து திணிக்கக் கூடாது.

 

     தமிழ்த் தாய்க்குச் சிலையெடுத்தால் தமிழர்களை ஏமாற்றலாம் என்றால் இராசபக்சேயும் அதற்கு முன் வருவான். தமிழர்கள் ஏமாறக்கூடாது. தமிழர் அல்லாதவர்கள் தமிழ்த் தாய்க்குச் சிலையெடுக்க முயற்சிக்கக் கூடாது.

 

     தனி நிலையில் உயிர் மலர்ச்சி பெற்ற தமிழர் ஒவ்வொருவரும் முயற்சி செய்து அமைக்கும் தமிழ்த்தாய், அவரவர் அகத்தவத்தின் அளவுக்கு ஏற்ப, பொலிவுடன் அமைவாள் என்று எதிர்பார்க்கலாம்.

 

எப்படி அமைக்கலாம்!

1.   பாவையின் உயர அளவு உச்சந்தலை முதல் உள்ளங் கால்கள் வரையிலும் 120 கூறுகள் கொண்டதாக இருக்க வேண்டும்.

2.   உடலின் மேற்பகுதி உச்சந்தலை முதல் அரை வரையிலும் 60 கூறுகள் இருக்க வேண்டும் (ஒரு கூறு என்பது அடிப்படை அலகு. அதனை அவரவரே கற்பித்துக் கொள்ளலாம். ஒரு கூறு இவ்வளவு என்று அறிதியிட்ட பின் அதனையே மடக்கி விரித்து அளவு கோலாகக் கையாள வேண்டும். வேறு அளவு கோலைப் பின்பற்றக் கூடாது.)

3.   இரண்டு கைகள், இரண்டு கால்கள் கொண்ட இலக்கியத் தலைவி போன்ற சாயலில் அமைக்கலாம்.

4.   அகவை பன்னிரண்டுக்குரிய வளர் இளம் பாவையாக அமைக்கலாம்.\

5.   ஒரு பெண்ணுக்குரிய பொதுவான சிறந்த வடிவப் பண்புகள் அனைத்தும் இருக்கலாம்.

6.   பழந்தமிழ் இலக்கியங்கள் பெண்மையை வியக்கும் அனைத்துக் கூறுகளும் அளவு கோலாகக் கருதப்படலாம்.

7.   நின்ற கோலம், அமர்ந்த கோலம், வளைந்த கோலம், போர்க் கோலம், தவக் கோலம் என அவரவர் விரும்பியவாறு அமைத்துக் கொள்ளலாம். எப்படி அமைக்கப்பட்டாலும், ‘120’ கூறுகொண்ட வாய்ப்பாடு மட்டும் மாறக் கூடாது.

8.   கைகளில் ஏடு, எழுத்தாணி, மலர், விளக்கு, நெற்கதிர் என எப்பொருளையும் தரலாம். தராமலும் முத்திரைகளால் அழகுற அமைக்கலாம்.

9.   அமைதி தவழும் முகம், நேரிய பார்வை, நேர்த்தியான தோற்றம், எளிமையான அணி கலன்கள், பொருத்தமான உடை எனப் பெருமிதமான பூரிப்புடன் கூடியதாகத் தமிழ்த்தாயின் படிம வடிவமைப்பு திட்டமிடப்பட வேண்டும்.

10. அரசிக்கு உரிய ‘அரசபூரிமம்’ தலையில் அணி செய்ய வேண்டும்.

 

எப்படி அமைக்கக் கூடாது!

 

1.   60+60=120 கூறுகள் அற்ற, மாறுபட்ட அளவுகளில் திட்டமிடக்கூடாது.

2.   மிகையான பருமனில் அமைக்கக் கூடாது.

3.   நலிவுற்ற தோற்றத்தில் அமைக்கக் கூடாது.

4.   எந்த ஒரு குறிப்பிட்ட பெண்ணையும் பார்த்துப் படியெடுத்து அமைத்து விடக் கூடாது.

5.   முறுக்கேறிய தசைகள், எலும்பு நரம்புகள் தோன்ற அமைக்கக் கூடாது.

6.   முதிர் தோற்றம் கூடாது. கீழும் மேலும் பார்க்கக் கூடாது

7.   இரண்டுக்கு மேற்பட்ட கைகளையுடைய மிகு கற்பனை வடிவமாக அமைக்கக் கூடாது.

8.   ஆரிய வைதிக அடையாளங்களை ஏற்றக் கூடாது.

9.   ‘தை’ முதல் நாளைத் தவிர வேறெந்த நாளையும் குறிவைத்து வணங்குதற் பொருட்டான ஒரு வடிவத்தைத் தமிழர்கள் கண்டிப்பாகக் கற்பிக்கக் கூடாது.

10. தமிழைத் தவிர வேறு எந்த மொழியாலும் தமிழ்த்தாயை வழிபடக்கூடாது.

 

குறிப்பு: ‘பாவை’ ஒரு கோட்டோவியக் கோட்பாடாக வரைவு செய்யப்பட்ட நூல் ‘நெளிவிலிருந்து நிமிர்வுக்கு’ களஞ்சியம் அறக்கட்டளையினரால் வெளியிடப்பட்டுள்ளது.

 தொடர்புக்கு: 984247790, 9962519582

 

___---ooo000OOO000ooo---___

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.