Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்களுக்கு அரசியல் கற்பிக்க வேண்டாம் – புலம்பெயர் அமைப்புக்களுக்கு நெத்தியடி கொடுத்த தாயக மக்கள்.

Featured Replies

இக் கருத்து ஒட்டு மொத்தத்தமிழ் மக்களினது அல்ல செய்தியாளர் மற்றும் ஒரு சிலரினதுமாகும்.இங்கு ஒரு விடயம் குறிப்பிடவேண்டியுள்ளது.சரியோ தவறோ தெரியவில்லை.கனடாவிலிருக்கும் பல முதுதமிழர் உட்பட  ஹரி ஆனந்த சங்கரி அவர்கள் சுமந்திரன் உட்பட கூட்டணியினர் வெல்ல வேண்டும் என்பதற்காக தங்களினனைத்து வளங்களையும் பயன் படுத்தியிருந்தனர்.சில வேளைகளில் இவர்கள் வழியில் குறுக்கீடுகள் வரும் என்பதைகூட பொருட்படுத்தாது தமது தாயக மக்களுக்காக உழைத்திருந்தனர்.இப்படியான நிலையில் கட்டுரையாளருக்கு எப்படி இவைகள் தெரியாமல் போனது? இதிவிட அனேகமான புலம் பெயர் தமிழருக்கு புலம் பெயர் நாடுகளில்குடியுரிமை மற்றும் வதிவிட அனுமதி உண்டு. அவர்களின் பிள்ளைகள் தாயகத்துக்கு குடி பெயர ஒரு வீதம் கூட சந்தர்ப்பம் கிடையாது. இன் நிலையில் எதற்காக அவர்கள் தாயகத்திற்காக உழைக்க வேண்டும்.சொந்த பந்தங்களைக் காக்க வேண்டும்.வசூலுக்கு மட்டும் உறவுகளா?வெளி நாடுகளில் குளிர் பனியென்று பொருட் படுத்தாது உழைத்த காசில் ஆடம்பர வாழ்க்கை வாழும் தாயக உறவுகளே! இளம் சந்ததியினரே!இனிமேலும் நாங்களும் எங்கள் பிள்ளைகளுக்கு சேர வேண்டியதை உங்களுக்கு தரப் போவதில்லை.னாங்களும் எமது நாட்டின் சமூக அரசியல் நீரோட்டத்தில் பயணிக்க வேண்டியுள்ளது.அதே போல புலம் பெயர் அகதித் தமிழனின் பிள்ளைகள் பட்டப் படிப்பிற்காக கடன் எடுக்க வேண்டியும் இருக்காது.புலம் பெயர் தமிழர்களின் விரிசலான பெற்றோர்  பிள்ளைகளுக்கான உறவுகள் கூட மேம்படும்.(அண்மையில் நண்பர் ஒருவரின் மகள் பின்வருமாறு என்னிடம் கூறியிருந்தார் "அங்கிள் அப்பா உழைக்கின்ற காசெல்லாம் சொந்தக் காரருக்கு அனுப்பவே சரி; நாங்கள் கடனெடுத்து பகுதி நேர வேலை செய்து படிக்கின்றோம்.என்று நொந்து கொண்டார்.அதைவிட பல வருடங்களாக ஸ்காபுரோவில் இருக்கும் அந்த அப்பாவால் பிள்ளைகளை இதுவரை காலத்தில்  சி என் ஈ எனப்படும் பொருட்காட்சியகத்துக்கு கூட அழைத்து செல்லக்கூட இயலவில்லையாம்.கட்டுரையாளருக்கு நன்றிகள்.எம்மை நாமே திருத்திக்கொள்வோம்

 

முன்னரே எழுதியதுதான் .

நாட்டில் உள்ள மக்களுக்கும் புலம் பெயர்ந்த பெரும்பான்மையான மக்களும் எதுவித பிரச்சனையுமில்லை பிரச்சனை பணத்தை அடித்து ஊடகங்களை வைத்திருக்கும் சில அமைப்புகள் தான் .

முன்னரே எழுதியதுதான் .

நாட்டில் உள்ள மக்களுக்கும் புலம் பெயர்ந்த பெரும்பான்மையான மக்களும் எதுவித பிரச்சனையுமில்லை பிரச்சனை பணத்தை அடித்து ஊடகங்களை வைத்திருக்கும் சில அமைப்புகள் தான் .

அதனென்ன பணத்தை அடித்து ,நீங்களோ  ,நாங்களோ இருக்கிறது  கனடியன் உழைத்து கஸ்டப்பட்டு கட்டின வரிப்பணத்தில, அதுக்குள்ள மற்றவர்களை  பார்த்து  அடிச்ச பணமா.  வருக்குள்ள  20 டொலர் கொண்டு வரவில்லை,  டோல் எடுத்து தன்னை தன்னிறைவாக்கி கொண்டு  இப்ப  மற்றவரக்களுக்கு  அடிச்ச பணம் என்டு விளக்கம் கொடுக்கிறோம்

தற்கொலை செய்து கொண்ட முன்னாள் போராளி குடும்பத்துக்கு உதவி (படங்கள் இணைப்பு)

 

 

unnamed (20)முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைபாலையில் வசித்து வந்த முன்னாள் போராளியான ஆ.பிரஸ்லின் அவர்கள் மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக ஏற்பட்ட வலி தாங்க முடியாமலும் ,வைத்திய செலவுக்கு யாரும் உதவாத நிலையிலும், குடும்ப வறுமையும் அவரை வாட்டிய நிலையில் 08.08.2015 அன்று தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் .

இவரின் இந்த இழப்பால் மனைவி அருள் மேரி ,மற்றும் 6 வயது .3 வயது .9 மாத அவரின் 3 பெண் பிள்ளைகளும் மிக கஷ்டப்பட வேண்டிய நிலைக்கு தள்ளபட்டார்கள் .

எனினும் அவரின் நிலையை செந்தணல் வெளியீட்டக உரிமையாளரும் ,கவிஞரும் ,சமுக ஆர்வலருமான வன்னியூர் செந்தூரன் அவர்கள் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் ) அவர்களிடம் தெரிவித்ததன் மூலம் கனடா வாழ் ராம் சிவா அவர்களினால் தமிழ் விருட்சம் ஊடாக ஒரு தொகை பணம் ,அரிசி ,மா ,சீனி ,அங்கர் ,பருப்பு ,கிழங்கு என ஒரு மாத உலர் உணவு பொதிகளும் ,பிள்ளைகளுக்கு ஆரோக்கிய உணவுகளும் ,படிக்கும் ஒரு பெண் பிள்ளைக்கு புத்தக பை ,கொப்பிகள் ,கொம்பாஸ் என உதவிகள் 21.08.2015 அன்று அவர்களது இல்லத்துக்கு சென்று வழங்கிவைக்க பட்டது

இந்த நிகழ்வில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் ,செயலாளர் மாணிக்கம் ஜெகன் ,காவிய பிரதீபா வன்னியூர் செந்தூரன் ,பண்டாரவன்னியன் விளையாட்டு கழக தலைவர் சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கி இருந்தனர் .

பிரஸ்லினின் அம்மா ஆ.அந்தோணியாபிள்ளை தனது மகன் பட்ட வேதனைகளையும் ,துன்பங்களையும் அழுதவாறே சொன்ன போது சென்றவர் மனம் எல்லாம் கலங்கியது ,முன்னாள் போராளிகள் படும் வேதனைகளை நினைத்து கனத்த மனதுடன் விடை பெற்றோம் .

அதே போல் வவுனியா மரகாரம்பளையில் வசிக்கும் சோதிநாதன் ,பாக்கியலட்சுமி ஆகியோர் சாப்பாடுக்கே கஷ்ட படுவதாக சமூக ஆர்வலர் மாணிக்கம் தமிழ் விருட்சத்துக்கு தெரிய படுத்தவே அந்த குடும்பத்துக்கும் .அரிசி ,மா ,சீனி உட்பட்ட அத்தியாவசிய உலர் உணவு பொருட்கள் கனடா வாழ் ராம் சிவா நிதி அனுசரணையில் வழங்கி வைக்க பட்டன .

வறுமையின் நிமித்தம் 2 பிள்ளைகள் சிவன் அருளகத்தில் வைத்து படிப்பிக்கும் அவர்கள் 6ம் ஆண்டு படிக்கும் ஒரு பெண் பிள்ளை பெரியவளாகியும் அவர்கள் முறைப்படி சிறு சடங்கு செய்யவே கையில் பணம் இல்லாத படியில் ஒரு அறையில் முடங்கி உள்ளார் வெளியில் வராமல், இது சம்மந்தமாக தமிழ் விருட்சம் பெண்கள் அமைப்புகளிடமும் தெரிய படுத்தி உள்ளனர் ,
அந்த சிறு பெண் பிள்ளையை வெளியில் கொண்டுவர சமூக அமைப்புகள் முன் வர வேண்டும் எனவும் தமிழ் விருட்சம் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர் .

 

unnamed (20) unnamed (32) unnamed (31) unnamed (30) unnamed (29) unnamed (28) unnamed (27) unnamed (26) unnamed (25) unnamed (24) unnamed (23) unnamed (22) unnamed (21)

http://ttnnews.com/தற்கொலை-செய்து-கொண்ட-முன/

உங்கள் பா.உக்கள் மூலம் காப்பாறுங்கள். இவர்களை கை விட்டு விடாதீர்கள்

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி உதவி செய்ததை போட்டோ பிடிச்சு விளம்பரம் செய்யவும், ஊரார் பணத்தை அனுப்பிப் போட்டு நாம் சொந்த காசை அனுப்பியமாரி மார்தட்டவும், நாங்க சொன்னபடி வோட்டுப் போடாட்டி காசனுப்ப மாட்டோம் என்று கீழ்தரமாக பொது வெளியில் எழுதவும்தான் நீங்கள் லாயக்கு.

உண்மையில் நீங்கள் செய்வது உதவியல்ல, படம், ஆங்கிலத்தில் சொல்வதானால் self gratification. உங்கள ஈகோ வை குசிப்படுத்தல்.

ஊரில் மக்கள் புலம்பெயர்ந்தோரை வெறுக்க இப்படியான சீன் போடுதலும் ஒரு முக்கிய காரணி.

இப்படி உதவி செய்ததை போட்டோ பிடிச்சு விளம்பரம் செய்யவும், ஊரார் பணத்தை அனுப்பிப் போட்டு நாம் சொந்த காசை அனுப்பியமாரி மார்தட்டவும், நாங்க சொன்னபடி வோட்டுப் போடாட்டி காசனுப்ப மாட்டோம் என்று கீழ்தரமாக பொது வெளியில் எழுதவும்தான் நீங்கள் லாயக்கு.

உண்மையில் நீங்கள் செய்வது உதவியல்ல, படம், ஆங்கிலத்தில் சொல்வதானால் self gratification. உங்கள ஈகோ வை குசிப்படுத்தல்.

ஊரில் மக்கள் புலம்பெயர்ந்தோரை வெறுக்க இப்படியான சீன் போடுதலும் ஒரு முக்கிய காரணி.ஊஊ 

ஊரில ஒரு பழமொழி சொல்வார்கள்  இருந்தாலும் குற்றம் ,நின்றாலும் குற்றம்   அதே நிலை தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.