Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளை தடைசெய்ய சிறீலங்கா அரசு நடவடிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கட்டியம் கூறும் "கைங்கரியம்'!

இனப்பிரச்சினை விவகாரத்தில், சமாதானத்திற்கான கதவை இறுக்கிப் பூட்டிவிடுவதற்கு அரசாங்கம் தன்னாலான சகல முயற்சிகளையும் மிக வேகமாக மேற்கொண்டு வருகிறது. அது விடயத்தில் அரசிடம் வேகம் மட்டுமின்றி தீவிரமும் அளவு மீறிய ஆவேசமும் காணப்படுகின்றன.

சமாதானப் பேச்சுகளின் அனுசரணையாளரான நோர்வேயின் விசேட பிரதிநிதி ஹன்சன் போவரின் உத்தேச கிளிநொச்சி விஜயத்தைத் தடுத்து வைத்திருக்கின்றது அரசு.

அனுசரணைப் பணிக்கு நோர்வேயை அழைத்தது அரசுதான். விடுதலைப்புலிகள் அல்லர்; உண்மையே.

அந்த அதிகாரத்தனத்துடன், இறுமாப்புடன் அனுசரணையாளர் விடயத்தில் அரசாங்கம் தலையிட்டிருக்கின்றது. இது எந்த வகையிலும், என்ன காரணம் கொண்டும் ஏற்புடையதல்ல.

அரசுக்கு விருப்பமானால் மட்டும் வருவதற்கும் போ என்றால் போவதற்கும் அனுசரணையாளரைக் கிள்ளுக் கீரையாகக் கருதிச் செயற்படுவதும், அவர்கள் மீது சட்டாம்பிள்ளைத் தனத்தைக் காட்டுவதும் மிகவும் வெறுக்கத்தக்கது; அநாகரிகமானது.

முடிவில்லாமல் நீண்டு சென்றுகொண்டிருந்த போரை நிறுத்தி, இனப்பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு ஒன்றைக் காண்பதற்கு உதவவேண்டும் என்ற நல்லெண்ணத்துடனேயே, மதிப்பார்ந்த அனுசரணைப் பணியை நோர்வே ஏற்றுக்கொண்டது. அதற்கான சுயநலமான காரணங்கள் இருக்கலாம்; இல்லாது விடலாம். அது வேறு விடயம்

அனுசரணைப் பணியின் பெறுமதியை சற்றும் உணராமல், ராஜதந்திர ரீதியான உரிய மதிப்பளிக்காமல், சமாதானத் தூதுவர் போவரை கிளிநொச்சிக்குச் செல்லவிடாமல் தடுத்ததை அரசு எந்த வகையில் நியாயப்படுத்தப் போகின்றது?

போவர், தாம் திட்டமிட்ட நாளில், கிளிநொச்சிக்குச் சென்றால் அவருக்கு உயிராபத்து வந்துவிடும் எனக் கருதியா, அரசு அவ்வாறு நடந்துகொண்டது? விடுதலைப் புலிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுப்பதற்கும் போவரின் கிளிநொச்சி விஜயத்திற்கும் என்ன தொடர்பு?

நூலிழையில் அசைந்து கொண்டிருக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுவதற்காகவே சமாதானத் தூதுவர் இந்த நாட்டுக்கு வந்தார்.அது அவரின் கடமை; அனுசரணையாளர் என்ற வகையிலான பொறுப்பு.

தன்னுடன் தொங்கிக்கொண்டிருக்கும் இனவாத கடுங்கோட்பாட்டாளர்கள் விரும்புவது போன்று, நோர்வேயை அனுசரணைப் பணியில் இருந்து நீக்க வேண்டும், துரத்திவிட வேண்டும் என்று அரசு விரும்பினால், அதனை வெளிப்படையாகச் சொல்வது தானே.

நாட்டின் சகல இன மக்களினதும் எதிர்பார்ப்புக்கு ஆளான சமாதானப் பேச்சை நல்லடக்கம் செய்வதற்கு அரசாங்கம் முடிவு செய்வதற்கும்

சமாதானத் தூதுவர் அதற்கு முன்னதாக விடுதலைப் புலிகளைச் சந்திப்பதற்கும் என்ன சம்பந்தம்; ஏது தொடர்பு? விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு என்ன என்று நேரில் சென்று அறிவதற்கு அனுசரணையாளரான அவருக்கு உரிமை இல்லையா?

சமாதானப் பேச்சுக்களை முடித்துக்கொள்வதற்காக விடுதலைப் புலிகளைத் தடைசெய்வதாகவோ அல்லது பயங்கரவாதச் தடைச் சட்டத்தை மீண்டும் அமுலுக்கு கொண்டு வருவதாகவோ அரசாங்கம் நாளை புதன்கிழமை நிச்சயமாகவே முடிவு எடுக்குமாயினும் கூட, அதற்கு முதல் போவர் புலிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசுவதால் குந்தகம் எதுவும் ஏற்பட்டு விடாதே! தீர்மானிக்கப் போவது இலங்கை அரசாங்கம் தானே; நோர்வேயோ அல்லது போவரோ அல்லவே!

ஹன்சன் போவரை கிளிநொச்சி செல்லாது தடுப்பதற்கு தர்க்கரீதியான காரணம் தான் எதுவும் அரசிடம் உண்டா?

நோர்வேயை அதன் விசேட தூதுவரை இவ்வாறு அவமரியாதையாக நடத்தினால், அனுசரணைப்பணி யிலிருந்து அது தானாகவே விலகிவிடும்.அப்போது அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கும் தீவிரவாத சக்திகளையும் போர் விரும்பிகளான தென்னிலங்கையின் எண்ணிக்கையில் குறைந்த சிறிய கூட்டத்தினரையும் சாந்தப்படுத்திக்கொள்ளலாம் என்று அரசாங்கம் கருதியதா?

நோர்வேயை அதனது பணியிலிருந்து வெளியேற்றி, போர் வெறியைத் தனித்துக்கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் உள்ளூர நினைத்தால், நோர்வேயின் பணி தேவையில்லை என்று வெளிப்படையாகக் கூறி விடை கொடுக்கலாமே!

நாட்டில் மீண்டும் போரை நடத்தி, மக்களையும் அதனையும் குட்டிச்சுவராக்குவதற்கு கங்கணம் கட்டிக்கொண்டுவிட்ட அரசை, நோர்வேயினால் தடுக்க முடியுமா என்ன? ஒவ்வொருவரும் தத்தமது விதியை அல்லது வினையை தாமே தமக்குள் விதைக்கிறார்கள். வெளியார் அல்லர்!

அரசு தனது விதியை தானே நிர்ணயித்துக்கொள்ளலாம். நன்னோக்கத்துடன் உதவ வந்த நோர்வோயினதோ அல்லது வேறு தரப்புகளினதோ விதிகளை அல்ல.

இனப்பிரச்சினைக்குப் பேச்சுக்கள் ஊடாகவே தீர்வு காணப்படும். போரின் மூலம் அல்ல என்ற "" மஹிந்த சிந்தனை''யுடன் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி

இப்போது யுத்தத்தின் மூலம் தீர்வுகாண உத்தேசித்து விட்டார் என்பதற்கு கட்டியம் கூறி நிற்கிறது, சமாதானத் தூதுவர் போவரின் கிளிநொச்சி விஜயத்தை தடுத்து நிறுத்திய பெரும் ""கைங்கரியம்''!

-உதயன்

---------------------------

புலிகள் அமைப்புத் தொடர்பாக

ஓரிரு நாள்களில் முக்கிய முடிவு

தடை அல்லது கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு

அரசு ஆராய்கின்றது என்கிறார் ரம்புக்வெல

புதிய அவசரகாலச் சட்ட விதிகளையும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தையும் மீண்டும் அமுலுக் குக் கொண்டுவர ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்திருக்கின்றார்.

விடுதலைப் புலிகளின் தாக்குதல் அச்சுறுத்தல்கள் அதிகரித்திருப்பதைக் காரணம் காட்டி, பாதுகாப்பு நடவடிக்கைகளை இறுக்க வசதியாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மீண்டும் அமுல் செய்வது குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது. விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களை முன்னெடுக்கின்ற வேளையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சாதக பாதகங்கள் குறித்து சிரேஷ்ட அமைச்சர்களுடனும், சட்ட நிபுணர்களுடனும் ஜனாதிபதி நீண்ட கலந்துரையாடல்களை நடத்தியிருக்கிறார்.

வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் அதன் பிறகு சனிக்கிழமை கூட்டப்பட்ட விசேட கூட் டம் ஒன்றிலும் அமைச்சர்கள், சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள், சட்ட வரைஞர்களுடன் ஜனாதிபதி இது குறித்து நீண்ட நேரம் ஆலோசனை கலந்தார்.

கடந்த ஆட்சிக் காலங்களில் தமிழ் மக் கள் மிகவும் துன்புறுத்தப்படவும், அடக்கி ஒடுக்கப்பட்டு அவர்களது உரிமைகள் மீறப்படுவதற்கும் அடிப்படையாக விளங் கியது இந்தப் பயங்கரவாத தடுப்புச் சட் டம். அந்தச் சட்டம் 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்தம் நடைமுறைக்குக் கொண்டுவரப் பட்டது வரை அமுலில் இருந்தது.

தற்போது மீண்டும் அந்தச் சட்டத்தை அமுல் செய்வதற்கு அரசு முடிவு செய்தி ருக்கிறது.

போர் நிறுத்த உடன்படிக்கை செத்துப் போய்விட்டது என்றும், தமிழ் மக்களுக் குத் தனித் தமிழீழமே ஒரே தீர்வு என்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபா கரன் தனது மாவீரர் தின உரையில் கூறியி ருப்பதும்

ஜனாதிபதியின் சகோதரரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரு மாகிய கோட்டபாய ராஜபக்ஷ மீது கொள்ளுப் பிட்டியில் கடந்த வெள்ளியன்று நடத்தப் பட்ட தற்கொலைத் தாக்குதல் சம்பவமுமே அரசு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை உடனடியாக அமுலுக்குக் கொண்டு வரு வது என்ற தீர்மானத்தை எடுக்கக் காரணங் களாய் அமைந்தன என்று கூறப்படு கிறது.

போர்நிறுத்தம் செல்லுபடியற்றதாகி விட்டது என்று புலிகளின் தலைவர் அறி வித்திருப்பது நாடு முழுவதையும் அச்சு றுத்தலுக்கு உள்ளாக்கி இருப்பதாக அரசு கூறுகிறது. புலிகளின் நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கு பொலிஸாருக்கும், பாது காப்புப் படையினருக்கும் மேலும் அதிகாரங்களும், சட்ட ரீதியான ஏற்பாடுகளும் அவசியமாகின்றன. அவசரகாலச் சட்டம், தற்போது அமுலில் இருந்தாலும் அதன் கீழ் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் புலிகளை ஒடுக்குவதற்குப் போதா என்று கடும் போக்குச் சிங்களக் கட்சிகள் அரசிடம் வற்புறுத்தி வருகின்றன.

சிரேஷ்ட அமைச்சர்கள்

மாறுபட்ட கருத்து

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட அன்று கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் அமைச் சரவைக் கூட்டம் நடைபெற்றது. தாக்குத லில் உயிர்தப்பிய கோட்டபாய ராஜபக்ஷ வும் அதில் கலந்து கொண்டார்.

தலைநகரில் புலிகளின் தாக்குதல்கள் கட்டுமீறி பாதுகாப்பு உத்தரவாதமற்ற சூழ் நிலை உருவாகி இருப்பது குறித்து கூட் டத்தில் கலந்துகொண்ட சிரேஷ்ட அமைச் சர்கள் சிலர் சீற்றத்துடன் கருத்து வெளியிட்டனர் என்று கூறப்படுகிறது.

சகோதரர் கோட்டபாய மீதான தாக்கு தல் காரணமாக ஜனாதிபதி ராஜபக்ஷம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராகக் காணப் பட்டார் என்று கூறப்படுகிறது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தி புலிகள் இயக்கத்தின் நடவடிக்கைகளை அடியோடு ஒடுக்குவது பற்றி அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

1998இல் தலதா மாளிகை மீது நடத்தப் பட்ட தாக்குதலின் பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்தமை பற்றியும் அமைச்சர்கள் விவாதித்தனர். மீண்டும் புலிகள் இயக்கத்தைத் தடை செய்யவேண்டும் என்ற கருத்தும் கூட்டத்தில் மோலோங்கியது.

எனினும், கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு சில சிரேஷ்ட அமைச்சர்கள், சமாதா னப் பேச்சுகளுக்கான முயற்சிகளை அடி யோடு இல்லாமற் செய்து விடும் என்று கூறி வாதிட்டனர் எனவும் அறிய வருகிறது.

போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகி விட்டதாகப் புலிகள் இன் னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்க வில்லை. நோர்வேயும் அதனை இன்னும் உறுதிசெய்யவில்லை. நாட்டில் சமாதா னத்தை உருவாக்குமாறு இந்தியாவும், சர்வ தேச சமூகமும் வற்புறுத்துகின்றன. இந் தக் கட்டத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அமுல் செய்வதும், புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்து அதனை நாட்டில் தடை செய்வதும் சமாதானத்துக்காக எஞ்சியிருக்கும் அற்ப சொற்ப வாய்ப்புகளையும் அடியோடு இழக்கச் செய்துவிடும் என்று சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர் கருத்து வெளியிட்ட னர் என்று தெரி கிறது.

எனினும், கோட்டபாய ராஜபக்ஷ மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் ஏற் படுத்திய அதிர்ச்சியும், ஆத்திரமும் சிரேஷ்ட அமைச்சர்கள் பலரிடமும் மேலோங்கிக் காணப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

அமைச்சரவைச்

செயலாளரின் கருத்து

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தையும், புலிகள் அமைப்பு மீதான தடையையும் இப்போது உடனடியாக அமுலுக்குக் கொண்டுவந்தால், அது ஜனாதிபதி தனது சகோதரர் தாக்குதலுக்கு இலக்காகியதற்காக தனிப்பட்ட முறையில் அக்கறை எடுத்து இந்நடவடிக்கைகளைச் செய்கி றார் என்ற கருத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் என்று இந்தக் கூட்டத்தில் அமைச்சரவைச் செயலாளர் கருத்துத் தெரிவித்தார் எனவும் அறியவந்தது.

வெள்ளியன்று மாலை நடைபெற்ற இந்த அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர் மறுநாள் சனிக்கிழமை சிரேஷ்ட அமைச்சர்களுடன் ஜனாதிபதி மற்றொரு விசேட கூட்டத்தை நடத்தினார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இலங் கையில் பெருமளவில் மனித உரிமைகள் மீது மீறப்படுவதற்கும், பாதுகாப்புப் படைகளின் தான்தோன்றித் தனமான செயற்பாடுகளுக்கும் காரணமாய் அமைந் தது என்று சர்வதேச அமைப்புகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது.

எனவே, தற்போது அதனை மீண்டும் அமுலுக்குக் கொண்டு வரும் நிலையில் அதில் செய்யக்கூடிய திருத்தங்கள், நீக் கங்கள் என்பன குறித்து சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகளுடனும், சட்ட வரைஞர் திணைக்கள ஆலோசகர்களு டனும் மற்றும் சிரேஷ்ட அமைச்சர்களு ட னும் ஜனாதிபதி இந்தக் கூட்டத்தில் ஆராய்ந்தார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வருவது சம்பந்த மான முதற்கட்ட நடவடிக்கை பெரும்பா லும் இந்த வாரமளவில் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

-உதயன்

-----------------------------------------------------------

போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின்

பணிகள் வழமைபோல் தொடரும்

அரசியல் நடவடிக்கைகளால் மாற்றம் இருக்காது

அரசியல் நடவடிக்கைகளால் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பணி களில் மாற்றம் எதையும் செய்துவிட முடி யாது. தற்போது நடைமுறையில் உள் யுத்தநிறுத்த உடன்படிக்கையில் மாற்றம் எதுவும் செய்யப்படாதவரை குழுவின் வழமையான பணிகள் தொடரும்.

இவ்வாறு போர்நிறுத்தக் கண்காணிப் புக் குழுவின் தரப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

விடுதலைப் புலிகள் குறித்துச் சில முக் கிய முடிவுகளை நாளை புதன்கிழமை அரசு எடுக்கவுள்ளதால் நோர்வேயின் சமாதா னத் தூதுவரை கிளிநொச்சிக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது.

அதேபோன்று போர்நிறுத்தக் கண் காணிப்புக் குழுவுக்கும் அரசிடம் இருந்து ஏதாவது அறிவுறுத்தல் கிடைத்ததா என்று கேட்டபோதே கண்காணிப்புக் குழு வின் பேச்சாளர் ரி.ஒமர்சன் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.

இப்போது நடைமுறையில் உள்ள யுத்தநிறுத்த உடன்படிக்கையின் பிரகாரம் எமது வழமையான போர்நிறுத்தப் பணி கள் தொடரும்.

நோர்வேயை அவர்களது பணியை ஓரிரு நாள்கள் இடைநிறுத்துமாறு கேட்டி ருப்பதால் எமது பணிகள் நிறுத்தப்பட மாட்டா.

போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு வின் செயற்பாட்டில் எந்தவிதமாற்றமும் இல்லை. சமாதான முயற்சிகளில் நோர்வே அனுசரணையாளர்களும் கண்காணிப்புக் குழுவினரும் வெவ்வேறு வகைகளைச் சார்ந்த கடமைகளை கொண்டுள்ளனர்.

எமது நடவடிக்கைகளை இடைநிறுத்த வேண்டுமானால் போர்நிறுத்த ஒப்பந்தத் தில் மாற்றம் செய்யப்படவேண்டும்.

அரசியல் நடவடிக்கைகள் எமது பணி களில் எந்தவிதமாற்றத்தையும் கொண்டு வரமாட்டா.

போர்நிறுத்த உடன்படிக்கை தொடர் பான செயற்பாடுகள் குறித்த விளக்கங் களை தமிழீழ விடுதலைப் புலிகளின் அர சியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வன் மூலம் கடந்த வாரம் பெற்றுள் ளோம். இப்படி கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்

----------

புலிகளைத் தடை செய்வதில்

அவசர முடிவு வேண்டாம்!

ஜனாதிபதியிடம் கோருவார் ரணில்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீது மீண்டும் தடை கொண்டுவருவதில் அவசரம் காட்ட வேண்டாம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்திக்கும்போது ரணில் விக்கிரமசிங்க அவரிடம் கோருவார்.

இவ்வாறு ஐ.தே.கட்சி வட்டாரங்கள் நேற்றுத் தகவல் வெளியிட்டன. இந்திய விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியி ருக்கும் எதிர்க்கட்சித் தலைவர், இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவைச் சந்தித்துப் பேச இருக்கிறார்.

அலரி மாளிகையில் இன்று காலை 10 மணிக்கு இச்சந்திப்பு நடைபெறுமென ஜனாதி பதி செயலக வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.

புலிகளைத் தடைசெய்ய வேண்டுமென ஜே.வி.பி., ஹெல உறுமய ஆகியன அரசுக்கு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததென அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

சமாதான முயற்சிகளுக்கும், நாட்டின் எதிர்காலத்துக்கும் போர்நிறுத்தப் புரிந்து ணர்வு உடன்படிக்கையே அடிப்படை. இதனையே தனது இந்திய விஜயத்தின் போது ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தி இருந்தார்.

இந்தக் கட்டத்தில் அவசரப்பட்டு புலி களைத் தடை செய்தால் உடன்படிக்கை முற்றாகச் செயலிழந்து விடும். சமாதான முயற்சிகளும் அடியோடு புரண்டு விடும் என்று ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி யி டம் நேரில் வலியுறுத்துவார் என்று தெரி விக்கப்பட்டது.

-----------------

புலிகளைத் தடைசெய்யும் முடிவை

அரசு தீர்க்கமாக ஆராய வேண்டும்

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கருத்து

தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்வது குறித்த முடிவு களை எடுப்பதற்கு முன்பு இவை சம்பந்தமாக மேலும் தீர்க்கமாக ஆலோசிக்க வேண்டும். அரசை ஆத் திரமூட்டச் செய்யும் சம்பவங் கள் நடைபெற்றபோதிலும் அரசு அதிகூடிய பொறுமையைக் கடைப் பிடிக்கவேண்டியது இன் றைய நிலையில் அவசியமானது.

இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கி ரஸ் தலைவர் ரவூப் ஹக் கீம் தெரிவித்துள் ளார்.

இலங்கை வந்துள்ள நோர்வே விசேட சமாதான தூதுவர் ஜோன்ஹன்சன் போவர், இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கார் மற்றும் பிரதிநிதிகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை நேற்று அவரது இல்லத்தில் சந்தித் துப் பேச்சு நடத்தினர். இப் பேச்சுக்களை தொடர்ந்து ஊடகங்களுக்கு விவரங்களை வெளியிட்டபோதே ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீமுடன்

கட்சியின் பிரதிச் செய லாளர் நாயகம் சட்டத்தரணி நிசாம் காரி யப்பர், தேசிய கொள்கைப் பரப்புச் செய லாளர் ஏ.எம்.எம்.நௌசாத், சர்வதேச விவ காரங்களுக்கான ஆலோசகர் சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ் ஆகியோரும் கலந்துகொண் டனர்.

அவர் மேலும் தெரி வித்திருப்பதாவது :

அண்மையில் நடைபெற்ற தாக்குதல் களின் பின்னணியில் இலங்கை அரசு புலி களின் செயற்பாடுகள் சம்பந்தமாகக் கொண் டுள்ள கடுமையான நிலைப்பாடுகள் சமா தானப் பேச்சுகளுக்கு உறுதுணையாக கிளிநொச்சிக்கு போவதற்கு எத்தனிக்கின்ற நோர்வே விசேட சமாதான தூதுவரின் பயணம் தடுக்கப்பட்டுள்ளமை குறித்த சந்தேகங்கள் என்பன தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அவதானித்து வருகிறது. எவ் வாறான ஆத்திரமூட்டும் செயற்பாடுகள் நடைபெற்றாலும் கூட அரசு இயன்றவரை பொறுமைகாக்க வேண்டும் என்றே மு.கா. விரும்புகிறது.

அத்துடன், சர்வதேச சமூகத்தின் அனு சரணையோடு நடைபெற்றுக்கொண்டிருக் கின்ற பேச்சுகளை முழுமையாக நம்பியி ருக்கின்ற பொதுமக்கள், ஓரளவுக்கு சர்வ தேச சமூகத்தை அனுசரித்து இவ்வாறான முடிவுகளை எடுப்பது சாலச் சிறந்தது என்று அபிப்பிராயம் கொண்டிக்கின்றனர் என வும் இச்சந்திப்பில் சுட்டிக்காட்டினார்.

கிழக்கு மாகாணத்தில் நிலவுகின்ற பாது காப்பு சூழல் சம்பந்தமாகவும் இன்று நாட் டிலுள்ள அரசியல் களநிலவரத்தில் புதி தாக ஏற்படக்கூடிய மாற்றங்கள் சம்பந்த மாகவும் குறிப்பாக சர்வ கட்சி மகாநாட் டில் பிரதான எதிர்க்கட்சியும் பங்குபற்று கின்ற சந்தர்ப்பத்தில் ஒரு தீர்வுப்பொதி சம்பந்தமான இணக்கப்பாடு ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் இருக்கிறதா? என்பது குறித்த விடயம் சம்பந்தமாகவும் நோர்வே விசேட சமாதான தூதுவர் ஜோன் ஹன்சன் போவர், ரவூப் ஹக்கீமிடம் கேட்டறிந் தார் என்று தெரிவிக்கப்பட்டது.

-உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே போயிட்னம். சிங்கள அடிவருடிக் கூட்டங்கள். மகிந்தவின் பெடியர் கடற்படையில் என்றும் நாட்டுக்காக கஸ்டப்படும் கூட்டம் என்றும் பெருமை எழுதினவை, தன் தம்பிக்காறனுக்காக புலிகள் தடை என்று புறப்பட்ட மகிந்தவின் சகோத பாசம் இவைக்கு விளங்கவில்லையோ!

ஏன் பிறந்தாய் மகனே ஏன்பிறந்தாயோ?

இல்லையொரு பிள்ளையென்று ஏங்குவோர் பலரிருக்க

ஏன்பிறந்தாய் மகனே ஏன்பிறந்தாயோ?

:D

இலங்கையில் புலிகளைத் தடை செய்வது குறித்து மகிந்த - ரணில் சந்தித்து கலந்துரையாடல்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது. அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட பின்னர் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகள், தமிழீழ விடுதலைப்புலிகள் மீது மீண்டும் தடைவிதிக்குமாறு விடுக்கப்பட்டுள்ளமை குறித்து இன்றைய சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியும் எதிர்க்கட்சி தலைவரும் தமது இந்திய விஜயத்தின் பின்னர் இடம்பெறும் இந்த சந்திப்பு முக்கியமாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

www.pathivu.com

"சகோதரர் கோட்டபாய மீதான தற்கொலைத் தாக்குதல் காரணமாக இலங்கைப் பயங்கரவாத ஜனாதிபதி ராஜபக்ஷ மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராகக் காணப்படுகின்றார் என்று கூறப்படுகிகின்றது!"

தமிழ் மக்கள் மீதான இலங்கை பாதுகாப்புப் படைகளின் தான்தோன்றித் தனமான கொலைத்தாக்குதல்கள் காரணமாக தமிழ் மக்கள் தலைவர் வே.பிரபா கரன் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராகக் காணப்படுகின்றார் என்று கூறப்படுகிகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.