Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கே இனியவன் கவிதைகள்

Featured Replies

  • தொடங்கியவர்
நீ 
ஏன் என்னை காதலித்தாய் ..
காரண காரியம் கேட்காதீர் ...
காதல் ரசனையற்று விடும் ....!!!
கவிதைக்கும் ....
காரண காரியம் கேட்காதீர் ....
கவிதையின் ரசனை ...
கெட்டு விடும் ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்
  • Replies 390
  • Views 39.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
உன் நினைவுகள் ...
என்னுள் ஆணிவேர்போல் ....
அப்பப்போ உதிர்ந்து விழும் ...
இலைகள்போல் சிறு சண்டை ....
பிரிவுகள் நமக்குள் இல்லை ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன் 
 
  • தொடங்கியவர்
நீ 
தந்த காதல் ரோஜா ...
பூத்து வாடிவிட்டது ....
நினைவுகள் தினமும் ...
பூக்கும் நித்தியா கல்யாணி ...
செயல்களால் கருக்கி விடாதே ...!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன் 
  • தொடங்கியவர்
மலரோடு வருவாய் ...
காத்திருந்தேன் ....
எண்ணங்களோடு ...
பூத்திருந்தேன் ....
மாலையோடு..... 
வந்திருகிறாய்......!!! 
+
காதல் சிதறல் 
கே இனியவன்
  • தொடங்கியவர்
நான் உன்னை ...
உயிர் என்று நினைத்தேன் ...
நீ நிழலாக இருந்திருகிறாய்....
என்னை விட வெளிச்சமானது ...
உன் கண்ணில் பட்டதால் ...
மறைந்து விட்டாயே ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்
  • தொடங்கியவர்
கணித அறிவுள்ளவர்களே ....
என் வீட்டு கதவை தட்டுங்கள் ...
அறிஞர் பைதகரஸ்  சொன்னது ...!!!
காதல் உள்ளவர்களே ...
என் கவிதையை பாருங்கள் ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்
  • தொடங்கியவர்
தொடர் பதிவாக வரும் 
மிக்க நன்றி 

Edited by கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்
தொடர் பதிவாக வரும் 
மிக்க நன்றி 

 

Edited by கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் (பாகம் 06)

 

26) என் உயிரே துளிர்விட்டு வளருதடி ....!!!

 

என்னவளே உன்னை தழுவும் ...
போதெல்லாம் வாடிக்கிடக்கும் ....
செடி மீண்டும் துளிர்ப்பதுபோல் ....
என் உயிரே துளிர்விட்டு ....
வளருதடி ....!!!

 

தேவதையே உன் தோள்
என்னை வாழவைக்கும் 
ஜிவனடி....நீயோ 
சாகாவரம் பெற்ற சிரஞ்ச்சீவியடி ...!!!

+

திருக்குறள் : 1106

+

புணர்ச்சிமகிழ்தல்

+

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள். 

+

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 26

 

rose2.png

 

 

27) அந்த சுகத்தை தந்தாய் 

 

என்னவளே 
அழகிய சிற்பமே ...
உன்னிடம் இருந்து தானடி 
மாநிறம் என்ற சொல்லே 
தோன்றியதோ ....?

 

தானே உழைத்து 
தானே கட்டிய வீட்டில் 
குடியிருப்பது ஒரு சுகம் 
அந்த சுகத்தை தந்தாய் 
உயிரே நீ என்னை தழுவும் 
இன்பமடி ....!!!

+

திருக்குறள் : 1107

+

புணர்ச்சிமகிழ்தல்

+

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு. 

+

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 27

 

rose2.png

 

 

28) இன்பசுகம் இதுதானே உயிரே ....!!!

 

என்னவள் எங்கே....?
நான் எங்கே...?
என்று தேடும் அளவுக்கு 
நெருக்கமாகிவிட்டோம் ...!!!

 

நம் 
இருவருக்கும் நடுவில் ...
தூசி கூட நுழைய முடியாது ...
காற்றே புகமுடியாத ..
நெருக்கமடி நமக்குள் ...
காதலின் இன்பசுகம் 
இதுதானே உயிரே ....!!!

+

திருக்குறள் : 1108

+

புணர்ச்சிமகிழ்தல்

+

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு. 

+

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 28

 

rose2.png

 

 

29) அவளிடம் சிறுகோபம்

 

அவள் என்னை சீண்ட 
நான் அவளைசீண்ட
அவளிடம் சிறுகோபம்
தோன்ற அவளிடம் 
கொஞ்சுவதற்கு கெஞ்ச ....!!!

 

சின்ன சின்ன ஊடல் 
நம் கூடலுக்கு நடக்கும் 
ஒத்திகை நாடகமாடி 
இதுதானே அன்பே உன்னை 
கரம் பிடித்ததன் இன்பமடி ...!!!

+

 

திருக்குறள் : 1109

+

புணர்ச்சிமகிழ்தல்

+

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு. 

+

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 29

  rose2.png

 

 

30) முகத்தில் புன்னகையுடன் ...!!!

 

படித்தேன் பல புத்தகம் 
அறிந்தேன் பொது விடயம் 
கசக்கி புளிந்தேன் மூளையை 
தெரிந்தது என் இறந்த கால 
அறியாமை ....!!!

 

கைபிடிதவளே ...
உடல் முழுதும் நகையுடன் 
முகத்தில் புன்னகையுடன் 
இருக்கும் என்னவளே 
உன்னை தழுவ தழுவ 
கிணற்று நீர் ஊற்று எடுப்பது 
போல் பொங்குதடி இன்ப ஊற்று ...!!!

+

திருக்குறள் : 1110

+

புணர்ச்சிமகிழ்தல்

+

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு. 

+

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 30

 

Edited by கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் (பாகம் 07)

31) அழகுக்கும் மென்மைக்கும் -நீ 

 

ஏய் பூக்களின் ராணியே 

மென்மையில் சிகரமாம் நீ 

அழகின் வானமாம் நீ 

பூக்களில் கர்வம் கொண்டவளே 

அனிச்சம் பூவே! - நீ 

எதுவாகவும் இருந்திட்டுப்போ ...!!!

 

என்னவளின் 

அழகுக்கும் மென்மைக்கும் -நீ 

ஏணிவைத்தாலும் எட்டாதவள் 

மென்மைக்கு அனிச்சம் இல்லை 

என் மனைவிதான் இனி மேல் ...!!!

+

திருக்குறள் : 1111

+

நலம்புனைந்துரைத்தல்

+

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் 

மென்னீரள் யாம்வீழ் பவள்.

+

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 31

 

 

heart.gif

 

32) சீ சீ என்னே உன் அறிவு ....!!!

 

ஓ மனமே ....

நீ பூக்களின் ராணிகளை ...

பார்த்திருப்பாய் வியந்திருப்பாய் ...!!!

என் கண்கண்ட என்னவளின் ...

கருவிழிகண்கள் -மனமே... 

நீ இதுவரை கண்ட மலர்களை ....

போல் இருக்கும் என்று மயங்காதே ...!!!

 

மனமே இதுவரை 

பிறர் பார்த்த பூக்களைப்போல் 

என்னவளின் கண்னை 

பார்க்கிறாயே ....!

சீ சீ என்னே உன் அறிவு ....!!!

+

திருக்குறள் : 1112

+

நலம்புனைந்துரைத்தல்

+

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண் 

பலர்காணும் பூவொக்கும் என்று.

+

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 32

 

 

heart.gif

33) தேவதை என் இதயதேவதை ...!!!

 

என் இதய தேவதையே ....

கொல்கிறாய் அழகால் ..?

மினுமினுப்பாய் மூங்கில்போல் 

இருக்கும் தோள்...!

உடம்போ மேனி இளந்தளிர் ...

ஆழ்கடல் தேடி எடுத்த முத்து 

உன் பற்றொடர் ....!

 

நான் இதுவரை முகராத 

நறுமணம் உன் மேனிவாசம் ...

என் இதயத்தை கூர் வேல் 

கொண்டு குற்றும் உன் 

வேல் கொண்ட கண் ....!

அத்தனையும் பெற்ற அழகு 

தேவதை என் இதயதேவதை ...!!!

+

திருக்குறள் : 1113

+

நலம்புனைந்துரைத்தல்

+

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் 

வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.

+

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 33

 

heart.gif

34) பூக்களே தலை குனியும் அழகியே ....!!!

 

உயிரே

அழகையும் கண்ணையும் காணும் 

பாக்கியத்தை குவளை பூக்கள் 

பெற்றிருந்தால் ....!!!

 

உன் 

பொன் நகையையும் 

புன்னகையும் அழகையும் 

காந்த கண்ணையும் கண்டு 

உனக்கு நிகராக தாம் இல்லையே 

வெட்கப்பட்டு வேதனை பட்டு 

தலைகுனியும் -என் அழகியே ...!!!

+

திருக்குறள் : 1114

+

நலம்புனைந்துரைத்தல்

+

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் 

மாணிழை கண்ணொவ்வேம் என்று.

+

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 34

 

 

heart.gif

 

35) உன் இடை மெல்ல சாகப்போகிறது ....!!!

 

மெல்லிடையாளே ....

உன் இடையின் மென்மை..

அறியாதவளே ..

மென்மை ராணி பூவாம் 

அனிச்சம் பூவை காம்போடு 

அணிந்து விட்டாயடி ....!!!

 

போச்சு போச்சு ...

உன் மெல்லிடை ஒடிந்து 

இடையின் ஓசையை இழக்க 

போகிறேன் -பூவின் காம்பின் 

கனம் தாங்காமல் உன் இடை 

மெல்ல சாகப்போகிறது ....!!!

+

திருக்குறள் : 1115

+

நலம்புனைந்துரைத்தல்

+

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு 

நல்ல படாஅ பறை.

+

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 35

 

 

heart.gif

 

 

  • தொடங்கியவர்

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் (பாகம் 08)

khajuraho_sculptures_20070528_0.jpg?itok

 

பூலோக வெண்ணிலா ...!!!

என்னவளே

வெண்ணிலா வானத்தில்

தானே இருக்கும் - நீ

எனக்காக படைக்கப்பட்ட

பூலோக வெண்ணிலா ...!!!

 

நீ

தரையில் நடமாடுவதை

பார்த்த விண் மீன்கள்

தலை சுற்றி நிற்கின்றன

நிலவு ஏன் நிலத்தில்

நடமாடுகிறது ...?

+

திருக்குறள் : 1116

+

நலம்புனைந்துரைத்தல்

+

மதியும் மடந்தை முகனும் அறியா

பதியின் கலங்கிய மீன்.

+

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 36

kiss.gif

 

என்னவளின் அழகில்

 

ஏய் நட்சத்திரங்களே ...

ஏன் குழப்பம் அடைகிறீர்கள்

என்னவளின் முகத்துக்கும்

முழு நிலாவுக்கும் என்ன

வேறுபாடு கண்டீர்கள் ..?

 

தேய்ந்து வளரும் மதி

போல் என்னவளின்

அழகும் வளந்து கொண்டே

செல்கிறது நிலவை ஒத்த

என்னவளின் அழகில்

என்ன குழப்பம்

விண் மீன்களே ..?

+

திருக்குறள் : 1117

+

நலம்புனைந்துரைத்தல்

+

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல

மறுவுண்டோ மாதர் முகத்து.

+

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 37

 

 

kiss.gif

காதலிக்க மனம் தூண்டும் ...!!!

 

வான் மதியே ...

அழகு தேவதையே ...

என்னவளின் அழகுக்கு

நிகரானவளோ ....?

 

என் உயிரானவளின்

அழகுக்கு அழகு அவளே

நீ என்னவளின்

அழகுக்கு நிகராய் ஒளி

வீசுவாயானால் உன்னை

காதலிக்க மனம் தூண்டும் ...!!!

+

திருக்குறள் : 1118

+

நலம்புனைந்துரைத்தல்

+

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்

காதலை வாழி மதி.

+

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்38

 

 

kiss.gif

அழகுக்கு சிகரமானவளே....

 

வெண்ணிலவே

அழகுக்கு சிகரமானவளே....

என்னவளின் கண்கள்

ஆயிரம் ஆயிரம் மலர்

அழகுக்கு நிகரானவை ....!!!

+

என்னவளின் கண்ணுக்கு

நீ ஆசைப்படாதே

அழகு கண்ணை நீ பெற்றால்

சந்தை பூவாக மாறி விடாதே

நான் ரசிக்கும் பூவாக

இருந்து விடு .....!!!

+

திருக்குறள் : 1119

+

நலம்புனைந்துரைத்தல்

+

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்

பலர்காணத் தோன்றல் மதி.

+

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 39

 

 

kiss.gif

வருந்தம் தருகிறதோ ...?

 

பூக்களின்

மென்மை ராணியே

அழகுகளின் ராணியே

அனிச்சம் பூவே ....!!!

 

அன்னப்பறவையே

அழகின் உருவமே

என்னவளின் பாத அழகு

நெருஞ்சிப்பழம் போல்

வருந்தம் தருகிறதோ ...?

+

திருக்குறள் : 1120

+

நலம்புனைந்துரைத்தல்

+

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்

அடிக்கு நெருஞ்சிப் பழம்.

+

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 40

 

 

  • தொடங்கியவர்

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் (பாகம் 09)

_13666324252.jpg?itok=_xW1tIoi

 

உதட்டோரம் என்னவளின் வார்த்தை ...!!!

 

உதட்டோரம் என்னவள் ...

மெல்லிய வார்த்தை ...

ஆயிரம் முத்துக்களை ..

கூடவே கொண்ட பேரழகு 

வெண்மை பற்கள்....!!! 

 

பற்களும் என்னவளின் 

உதடும் உரசி தோன்றிய 

உமிழ் நீர் - பஞ்சா 

அமிர்த்தத்தில் 

பாலும் தேனும் இணைந்த 

கூட்டு கலவையடி....!!!

+

திருக்குறள் : 1121

+

+

காதற்சிறப்புரைத்தல்

+

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி 

வாலெயிறு ஊறிய நீர்.

+

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 41

heart.gif

நான் உடல் அவள் உயிர் ....!!!

 

நானும் என்னவளும் 

நகமும் சதையும் போல் 

என்று சொல்ல மாட்டேன் ...!!!

 

நான் கண் என்றால் அவள் 

பார்வை .....!!!

நான் மொழி என்றால் அவள் 

வார்த்தை ....!!!

நான் உடல் என்றால் அவள் 

உயிர் ....!!!

திருக்குறள் : 1122

+

காதற்சிறப்புரைத்தல்

+

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன 

மடந்தையொடு எம்மிடை நட்பு.

+

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 42

 

heart.gif

விலகிவிடு கருவிழி கண்மணியே ...!!!

 

என் 

கண்ணில் இருக்கும் ...

கருவிழியே கண்மணியே ....

என்னவளின் இடத்தை ..

பிடித்த என் கண்ணின் 

கருவிழியே ....!!!

 

எனக்கொரு 

உதவிசெய் கருவிழியே....! 

என்னவளை 

கருவிழியாக்கபோகிறேன்

என் கண்ணில் இருந்து 

விலகிவிடு கருவிழி 

கண்மணியே ...!!!

திருக்குறள் : 1123

+

காதற்சிறப்புரைத்தல்

+

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும் 

திருநுதற்கு இல்லை இடம்.

+

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 43

 

heart.gif

சடலமானேன் உயிரே ...!!!

 

என்னவளும் நானும் ...

எம்மை மறந்து இணையும் 

தருணத்தில் -என் உடலுக்கு 

உயிராவாள் என் உடல் உயிரை 

உணரும் ....!!!

 

என்னவளே நீ என்னை 

விலகும் போது என் உடலில் 

உயிர் பிரியும் உணர்வடி ...

நீ என்னை பிரியும் போது 

சடலமானேன் உயிரே ...!!!

திருக்குறள் : 1124

+

காதற்சிறப்புரைத்தல்

+

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் 

அதற்கன்னள் நீங்கும் இடத்து.

+

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 44

heart.gif

உன்னை நினைப்பதுமில்லை ..!!!

 

மின்னலின் ஒளி கொண்ட ...

கண் அழகியே ....

வாழ்க்கை துணைவிக்கு 

அனைத்தையும் கொண்ட 

என்னவளே ....!!!

 

உன்னை மறப்பதா ...?

உன்னை நினைப்பதா ...?

உன்னை மறைந்தால்..

தானே நினைக்க - உன்னை 

நினைத்தால் தானே உயிரே 

உன்னை மறப்பதற்கு ...?

உன்னை மறப்பதுமில்லை

உன்னை நினைப்பதுமில்லை ..!!!

திருக்குறள் : 1125

+

காதற்சிறப்புரைத்தல்

+

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் 

ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.

+

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 45

heart.gif

 

 

  • தொடங்கியவர்

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் (பாகம் 10 )

DSC01034.JPG?itok=8We5sR_O

 

கண்ணுக்குள் இருப்பவனே ...!!!

 

என் 

கண்ணுக்குள் இருப்பவனே 

கண்ணாய் இருப்பவனே

என்னை .....

விட்டு எப்படி விலகுவாய் ,,?

 

நான் ஒரு நொடி 

கண் மூடி இமைத்தாலும் 

என் கண்ணுள் இருப்பவன் 

வருத்தபடமாட்டான் ...

பிற ஆண்களை போல் இல்லை 

என்னவன் ..!!!

என்னை புரிந்துகொண்ட நுண் 

அறிவு மிக்கவன் என் ஆடவன் ...!!!

திருக்குறள் : 1126

+

காதற்சிறப்புரைத்தல்

+

கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா

நுண்ணியர்எம் காத லவர். 

+

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 46

 

heart.gif

நீ மறைந்து விடுவாயோ ....?

 

என் 

கண்ணுக்குள் இருக்கும் 

கண்ணாலனே .....!!!

கண் இமைக்க பயப்பிடுவது 

என் மனம் ....!!!

 

என் 

வில் கொண்டகண்ணுக்கு

மை தீட்டவும் தயங்குகிறேன் 

மை தீட்டும் தருணத்தில் 

என்னவனே நீ மறைந்து 

விடுவாயோ என்று மனம் 

வருந்துவதால் - மை 

தீட்ட மாட்டேன் என்னவனே...!!! 

திருக்குறள் : 1127

+

காதற்சிறப்புரைத்தல்

+

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்

எழுதேம் கரப்பாக்கு அறிந்து. 

+

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 47

 

heart.gif

இதயத்தில் குடியிருப்பவனே ...!!!

 

என் நெஞ்சுக்குள்ளே 

குடியிருக்கும் என்னவனே 

இதயமே உனக்கு கோயில் 

நீயே என் இதய தெய்வம் ...!!!

 

என் இதய தெய்வமே 

இதயத்தில் குடி கொண்டு 

வாழ்பவனே - உனக்கு 

சுட்டு விட கூடாது என்பதால் 

சூடான உண்பதையே 

தவிர்த்து விட்டேன் 

என்னவனே ....!!!

திருக்குறள் : 1128

+

காதற்சிறப்புரைத்தல்

+

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்

அஞ்சுதும் வேபாக் கறிந்து. 

+

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 48

 

heart.gif

இரக்கமற்றவன் என்கிறார்களே ...!!!

 

கண்ணுக்குள் கரு விழியாய் 

இருப்பவன் நீயடா ...!!!

கண் இமைக்க விடாமல் 

கலக்கம் செய்பவன் நீ 

கண் இமைத்தால் நீ 

மறைந்து விடுவாயோ ...

என்ற ஏக்கத்தால் கண் 

மூடாது கண் இமைக்காமல் ...

உன்னோடு நானிருக்கிறேன் ...!

நம் காதலை புரியாத... 

என் அயலவர் உன்னை 

இரக்கமற்றவன் என்கிறார்களே ...!!!

திருக்குறள் : 1129

+

காதற்சிறப்புரைத்தல்

+

இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே

ஏதிலர் என்னும் இவ் வூர். 

+

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 49

 

heart.gif

ஓர் உயிராய் வாழ்கிறோம் ...!!!

 

எனக்குள் அவரும் 

அவருக்குள் நானும் 

இரு உடலாக இருந்தும் 

ஓர் உயிராய் வாழ்கிறோம் ...!!!

 

உடல் தான் வேறு

உயிர் ஒன்றுதானே உயிரே 

உயிருக்கு உயிராய் இருக்கும் 

எம்மை புரியாத இவர்கள் 

பிரிந்து இருக்கும் உடலை 

பார்த்து பிரிந்து வாழ்கிறோம் 

என்கிறார்களே ....!!!

திருக்குறள் : 1130

+

காதற்சிறப்புரைத்தல்

+

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்

ஏதிலர் என்னும் இவ் வூர். 

+

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 50

 

heart.gif

 

  • தொடங்கியவர்

கவலை படாதே ..
நான் காதல் தோல்விக்காக 
இறக்க மாட்டேன் ...
நான் இறந்தால் காதல் ..
இறக்க போவதில்லை .....!!!

உன்னை 
நேசித்ததை காட்டிலும் -நம் 
காதலை அதிகம் நேசித்தேன் 
அதனால் தான் காதல் வலியால்
துடிக்கிறேன் .....!!!

என் இதய ஓசையை ஒரு 
முறை என் நெஞ்சில் சாய்ந்து 
கேள் உயிரே - அப்போது 
என்றாலும் என் இதயம் 
இன்பமாக ஒருமுறை இருக்கட்டும் ...!!!
+
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்

  • தொடங்கியவர்

கொஞ்சம் கொஞ்சமாக 
மறந்து வருகிறேன் 
உன் முகத்தை ...!!!

மறக்க மறக்க 
ஊற்றாய் வருகிறது 
உன் நினைவுகள் ...!!!

காதல் என்றால் 
வலி இருக்கலாம் 
வலியே காதலாக 
இருக்குதடி என் வாழ்வில் ...!!!

  • தொடங்கியவர்

நான் 
எங்கே தனிமையில் 
இருந்தேன் -உன் 
நினைவின் வலிகளுடன் 
தானே வாழுகிறேன் ...!!!

உன் 
மடியை ஒருமுறை 
கொடு தூங்க அல்ல 
என் மூச்சை விட ....!!!

தூங்கியதே இல்லை 
கண்ணீருடன் இருக்கும் 
கண்கள் தூங்குவதோ ...?

  • தொடங்கியவர்

அந்த நிமிடம் 
வரை வலியில்லை 
இந்த நிமிடம் வரை 
வலியில்லாமல்
இருந்ததில்லை ....
உன்னை காதலித்ததால் ....!!!

இதயத்தில் என் ஒவ்வொரு 
நரம்பையும் முற்களாக 
மாற்றியவள் -நீ 

என் 
இதயம் ஈரமாக இருப்பதால் 
காத்திருக்கிறேன் முற் செடியில் 
மலர் வரலாம் என்ற சின்ன 
ஆசையுடன் ........!!!

  • தொடங்கியவர்

போதுமடி .....
என் இதயத்தை ....
மிதித்துக்கொண்டு திரிவது ....
எத்தனைமுறை அதுதாங்கும்...
என் இதயம் ஈரமுள்ளத்தால் ....
உன் வலிகளை தாங்கிக்கொண்டு ...
வாழ்கிறது ....!!!


காதல் பிரிவு ஒன்றும் ....
பெரிய வலியில்லை....
என்னை தெரியாததுபோல் ....
நீ நடந்துகொள்வதுதான் ....
காதலில் பெரிய வலி ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

  • தொடங்கியவர்
எத்தனை 
கவிதை எழுதினாலும் ...
முடியவில்லை நிறுத்த ...
உலகில் பெரிய தொடர் கதை ....
உன்னை பற்றிய கவிதை ....!!!
 
ஒரு 
நினைவை மறக்கிறேன்....
மறு நினைவு கவிதையாய் ...
கண்ணீரை நிரப்புகிறது ....
 +
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
  • கருத்துக்கள உறவுகள்

மனதின் வலிகளை வரிகளாக்கி உள்ளீர்கள். பாராட்டுக்கள் கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

மனதின் வலிகளை வரிகளாக்கி உள்ளீர்கள். பாராட்டுக்கள் கவிப்புயல் இனியவன்

மிக்க நன்றி நன்றி 
கருத்துக்கு மிக்க நன்றி 
  • தொடங்கியவர்
உன் பிரிவுக்கு நன்றி ....
இத்தனை வரிகளை நீ தானே ....
தந்தாய் ....
உடல் மண்ணில் மறையும் ....
நாள்வரை உன் எண்ணம் ...
மனதில் இருக்கும் ....
+
காதல் சிதறல் 
கே இனியவன்
  • தொடங்கியவர்
என் இதயம் ...
எத்துனை துயரங்களை ...
சுமக்கிறது  உயிரே ....
கண்ணில் இருந்து கண்ணீர் ...
வரவில்லை ....
இதயத்திலிருந்து வருகிறது ....!!!
+
காதல் சிதறல் 
கே இனியவன்
  • தொடங்கியவர்
விட்டு கொடுத்து வாழ்வதே ....
நல்ல வாழ்க்கை என்றால் ....
தப்பு .....
காதலை விட்டு கொடுத்தவன் ....
எங்கே நல்லவாழ்க்கை ...
வாழுகிறான் ...?
+
காதல் சிதறல் 
கே இனியவன்
  • தொடங்கியவர்

உயிர் நட்பு அரண்போல் காக்கும் ....!

சொத்துகளில் ...
தலையாய சொத்து ....
நாம் தேடிப்பெறும் 
உயர் நட்பே ....!
இதைக்காட்டிலும் ....
வேறு எந்த சொத்தும் ...
சொத்தே அல்ல ...!!!

அருமையான நட்பு ...
அரண்போல் காக்கும் ....!
எவரும் நெருங்க முடியாது ...
அசைக்கவும் முடியாது ..
அசையாத சொத்து நட்பு ...!!!
+
குறள் 781
+
நட்பு
+
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் 
வினைக்கரிய யாவுள காப்பு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் - 01

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.