Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிப்புயல் இனியவன் காதல் கவிதை

Featured Replies

நீயல்லவோ உயிரே ....!!!

***

பத்து மாதம் 
என்னை சுமந்து பெற்றவள்
என் உயிர் தாய் ....!!!

வாழ்நாள் முழுதும் உன்னை
சுமக்க இருக்கும்
என்னை என்னவென்று ...
அழைப்பாய் உயிரே ...?

உயிரை உயிரால் எடுத்து ...
என் உயிரை சுமப்பவளே ....
தாயின் இன்னொரு பிறப்பு ....
நீயல்லவோ உயிரே ....!!!

+

கே இனியவன் 
காதல் கவிதைகள் 

உன்னை வயிற்றில்
சுமக்கும் பாக்கியம்
தாய்க்கு கொடுத்தாய் ....!!!

உன்னை தோளில்...
சுமக்கும் பாக்கியம்
தந்தைக்கு கொடுத்தாய் ...!!!

உன்னை இதயத்தில் ....
சுமக்கும் பாக்கியத்தை ...
எனக்கு கொடுத்தாய் .....!!!

வாழ்க்கை முழுவதும் ....
ஏதோ ஒருவகை சுமை ....
காதல் எல்லா சுமைகளின் ....
கூட்டு மொத்தம் ....!!!

+
கே இனியவன் 
காதல் கவிதைகள் 

வளர விட்டேன் காதலை ....
மனதில் அதுவே இன்று
என்னை மாற்றி சுற்ற
வைத்து விட்டது....!!!

ஆதரவின்றி அலைகிறேன் ....
புரியாமல் தவிக்கிறேன் .......
ஒரு மனதாககண் மூடி ....
திறக்கிறேன் காணும் ...
பொருளெல்லாம் நீ ....!!!

+
கே இனியவன் 
காதல் கவிதைகள்

  • தொடங்கியவர்

நீயும் நானும் பிரிந்துவிட்டோம் ....
எமக்காக ஊரே கண்ணீர் விடுகிறது ....
பெற்றோர்பன்னீர் தெளிக்கிறார்கள் .....
இரண்டு இதயங்களை சேர்த்துவைக்க ...
விரும்பிய இதயத்தை சேர்த்துவையுங்கள் .....!!!

+
கே இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!

உனக்காக துடித்த இதயம் ....
உன்னையே பார்த்த கண்கள் ....
உனக்காகவே நடந்த கால்கள் ....
உனக்காகவே பேசிய வார்த்தைகள் ....
உனக்காகவே இறக்க இருக்கும் உயிர் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
ஈழக் கவிஞன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!

  • தொடங்கியவர்

என் கவிதை அழகுஎன்றாய் ....
என் குரல் இனிமை என்றாய் ....
என் கண் அழகு என்றாய்....
என் நடை அழகு என்றாய் ....
என் காதல் எப்படி அழகில்லை ...?

+
கவிப்புயல் இனியவன் 
ஈழக் கவிஞன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!

உன்னை நினைக்கும் போதெல்லாம் ....
பன்னீராய் மணக்கும்  நினைவுகள் ....
உன் பிரிவை நினைக்கும் போது ....
வெந்நீராய் கொதிக்கிறது .....
கண்ணீரால் சமன் செய்வேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
ஈழக் கவிஞன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!

  • தொடங்கியவர்

தேடினேன்
தொலைந்து விட்ட இதயத்தைத்
தேடினேன்!

மேகத்தைத்தூது விட்டு
நிலவினில் தேடினேன்!
அலையினைத்தூது விட்டு
கடலினில் தேடினேன்!

தென்றலைத்தூது விட்டு
காற்றினில் தேடினேன்!

கிடைத்திடாக் கவலையால்
தரையினில் தேடினேன்!

அவள் வீட்டு
வாசல் முன் கிடந்தது!

வீசியெறிந்தக்குப்பையாய்
என் இதயம்........

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

எப்போது வருவாய்  ....
காத்திருந்து கலைத்து விட்டது ....
இதயம் ...!!!

என்றாலும் ....
அது உன்னை பாராமல் ....
உறங்கமாட்டேன் என்று ...
அடம்பிடிக்கிறது....!!!

இதயத்தின் வலி ....
இன்னொரு இதயத்துக்கதான் 
புரியும் ....!!!

  • தொடங்கியவர்

இறைவா 
என் இதயத்துக்கு.....
இரண்டு சிறகுகள் தா....
நீண்ட தூரம் சென்று -அவள்....
நினைவுகளோடு உல்லாசமாக ....
அலைவதற்கு ..!

மரணத்தின் தூரத்தை ....
தூரமாக்கியது என்னவளின் ....
அருவியாய் வந்த காதல் ....
நரகமாக இருந்த வாழ்கையை ....
சொர்க்கமாக்கியவள் .....!!!

என்னவளே ....
நீ இந்த உலகத்தில் .....
விரும்பாத ஒன்றை...
நான் இன்னும் விரும்பி ....
கொண்டே இருக்கிறேன்.....!!!

ஆண்டுகள் கடந்தும் ....
என்னில் உனக்கு காதல் ....
வரவில்லை - நானோ ....
உன்னை காதல் செய்கிறேன்....!!! 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

என்னையும் கிள்ளி எறிந்தாய்

அழகாக பூத்த மரத்தில் .... 
இரக்கமற்று பூவை பறித்து ... 
காதல் சொன்னபோது .... 
சற்றே சிந்திருக்க வேண்டும் ....!!! 

இன்பத்தை தந்து 
துன்பத்தை தருவாய் .... 
என்னையும் கிள்ளி எறிவாய்...!!! 

இப்போதுதான் புரிந்தேன் ... 
நம் இன்பத்துக்காக பிறர் ... 
இன்பத்தை பறிக்ககூடாது .....!!!

  • தொடங்கியவர்

காலம் பிரித்து விட்டது
------------
இத்தனை இரக்கமுள்ள ... 
என்னவள் இரக்கமற்று ... 
இருக்கிறாள் -அவளில் .. 
காதலும் நிறைந்திருக்கிறது ... 
காலம் தான் பிரித்திருக்கிறது ...!!! 

காதலுக்கு 
முக்கியம் கொடுத்தால் .... 
போதாது காதலியின் ... 
காரணத்துக்கும் முக்கியம் .... 
கொடுக்கிறேன் .... 
காதலியை இழந்து விட்டேன் .... 
காதலை இழக்க மாட்டேன் ...!!!

நானிருதென்ன பயன்
-------------
நான் வெறும் .... 
சுவாச தொகுதிதான் .. 
நீ காற்றாக இல்லையெனின் .... 
நானிருந்தென்ன பயன் ....? 

நான் வெறும் .... 
கண் தொகுதிதான் .... 
நீ பார்வையாக இல்லையெனின் ... 
நானிருந்தென்ன பயன் .....? 

நான் வெறும் .... 
மூளை தொகுதி தான் .... 
நீ நினைவாக இல்லையெனின் ... 
நானிருந்தென்ன பயன் ....?
  • 1 month later...
  • தொடங்கியவர்

நிலாவை தூக்கி எறிய ...
ஒன்றும் பிரம்மசாரியல்ல ....
நிலவையே நினைத்து...
வாழ கன்னி .......
ராசிக்காரணுமில்லை....!!!

நிலவு இன்பமானது 
நிலாவை நிலாவாக ...
நிதானத்துடன் நிலாவை ...
ரசித்தால் -நிலவு 
குளிர்ச்சியானது .....!!!

அளவுக்கு 
மீறினால் அமிர்தமும் நஞ்சு ...
நிலாவை அளவுக்கு மீறி ...
ரசித்தால் குளிரும் நிலா .....
சுடாது - சுட்டெரிக்கும் ......!!!

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

நான் எப்போது
உன்னை பார்த்தேனோ ..
அப்போதே
என்னை மறந்து விட்டேன்...!!!

அதனால்தான் என் காதலை
உன்னிடம் சொல்லாமல் ..
ஒருதலைக்காதலாய் 
வாழ்ந்துவிட்டேன் ...!!!

+++
கவிப்புயல் இனியவன் 

  • தொடங்கியவர்

நீ 
போவதென்றால் போ...
உன் 
காதல் என்னை விட்டு 
போய் விட்டது என்று ....
நினைத்து விடாதே ...!!!

நீ ..
விலகி நிற்கிறாய் ...!!!
உன் நினைவு ...!!!
என்னை விலகாமலே ..
இருக்கிறது ...!!!
நான் என் நினைவு ....
காதலியுடன் ..
அழகாக வாழ்வேன் ...!!!

+++
கவிப்புயல் இனியவன்

உன்னோடு 
இணைந்து திரிந்த நான்..... 
தனியாக போகிறேன்..
எப்போதோ தொலைத்த ஒன்றை
தேடிக்கொண்டு.....!!!

வளையல் சத்தம் கேட்கிறது 
கொலுசின் ஓசை கேட்கிறது 
சிரிப்பொலிகள் கேட்கிறது 
எல்லாம் பிரம்மையில் ....!!!

தேடித்தேடி 
அலைகின்றேன்
தேடியது கிட்டவில்லை
கிடைத்தது ஒன்று ....
எனக்கு பிடிக்கவில்லை ...!!!

வாழ்க்கையெனும்....
மனச்சோலையில்.... 
வாழ்ந்து கொண்டுடிருக்கிறேன்....
உயிரின் வலிஅறியவில்லை.....
உறங்குகின்றேன் காதலியே.....
உன் நினைவோடு.....!!!

  • தொடங்கியவர்

காதல்
இரு உள்ளங்களின்
ஏக்கம் ....!!!

ஏக்கத்தை புரிந்தவர்கள் 
வெல்லுகிறார்கள் ..
ஏக்கத்தை ...
தொலைத்தவர்கள் ...
தோற்கிறார்கள் ...!!!

உன் முகம் காண 
காத்திருக்கிறது 
நிலா...!!!

உன் மூச்சுக்காய் 
தாத்திருக்கிறது ...
இசை....!!!

உன் வரவுக்காய் ....
நிழல் தரகாத்திருகிறது 
மரம் ....!!!

உன் கண்ணுக்காய்....
காத்திருக்கிறது 
காட்சி ....!!!

^^^
கவிப்புயல் இனியவன் 

என்னை விட்டுசென்ற...
அவளை இன்னும் காதலித்து ...
கொண்டுஇருக்கிறேன்....!!!

அவளை 
மறக்க முடியாமல் இல்லை.... 
இன்னொருத்தியை 
நினைக்கவும் முடியவில்லை ...!!!

^^^
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

அன்பால் 
அடிமையாகினேன் ...
என்று தப்பாய் ....
நினைத்துவிட்டேன் ....!!!

இப்போதான் ....
புரிந்தது என்னை ...
அடிமையாக்கவே ....
அன்பு வைத்திருகிறாய் ...!!!

^^^
கவிப்புயல் இனியவன்

வேண்டாம் என்னை ....
விட்டு விடு ....
காதலித்தது போதும் .....
விலக்கிவிடு ....!!!

தனியாக..... 
இருக்க என்னை.... 
அனுமதித்துவிடு ..
துணை வேண்டாம் ....
அன்பே என்னை ....
மறந்துவிடு ....!!!

பிணமாக 
நடக்க ஆசைப்படுகிறேன் 
உயிர் வேண்டாம் ....
உயிரே என்னை ....
மறந்துவிடு ....!!!

இத்தனையும் சொல்ல ....
துடிக்கிறது மனசு 
முடியவில்லை ....
உயிரே மன்னித்துவிடு ...!!!

இருக்கும் 
ஒவ்வொரு நிமிடமும் ...
ஒவ்வொரு மூச்சும் ...
அன்பே உனக்காகத்தான் ....
என்பதை மறந்துவிடாதே ...!!!

^^^
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

என் 
கவிதைகளை படித்து விட்டு 
கிண்டல் அடிக்கிறாய் நீ ....!!!

உன் கிண்டல்களை 
நான் ரசிப்பதற்காகவே 
நான் கிறுக்கி வைத்தவை 
அவை என்று தெரியாமல்...!!! 

கனவுகளோடு 
பூத்திருந்த என் காதலை 
கானல் நீராக்கியவள் நீ....!!!

என் காதல் கானல் 
நீராய் போனாலும் 
காதலுக்கான காத்திருப்பு 
தொடர்ந்தே இருக்குமடி....!!! 
 

  • தொடங்கியவர்

திரும்பி பார்க்கிறேன் 
அலைந்து பார்க்கிறேன் 
எங்கும் நீ நிற்பதுபோல்....
உணர்கிறேன் ....!!!

உன் 
விழிகள் இன்னும்.... 
என் விழிகளுக்குள்... 
ஊடுருவிக்கொண்டே ....
இருக்கிறது .....!!!

நிஜம் 
என்று பார்கிறேன்
அது 
வெறும் நினைவு மட்டுமே....!!!

^
காதல் கவிதை 
கவிப்புயல் இனியவன் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.