Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கத்தோலிக்க திருச்சபை இறந்த ஆத்துமாக்களை நினைவு கூறும் தினம் இன்று!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கத்தோலிக்க திருச்சபையானது நவம்பர் மாதம் மூன்று விதமான ஆத்துமாக்களை நினைவு கூறுகின்றது ஒன்று வெற்றிக் கொண்ட ஆத்துமாக்கள் இரண்டாவது துன்புறும் ஆத்துமாக்கள் மற்றையது இவ்வுலகில் போராடும் ஆத்துமாக்கள்.
 
இவற்கமைய நேற்று முதலாம் திகதி கத்தோலிக்க திருச்சபையானது வெற்றிக் கொண்ட சகல புனிதர்களுடைய திருவிழாவைக் கொண்டாடியது.
 
இன்று 2ந் திகதி துன்புறும் மரித்த ஆத்துமாக்களை நினைவு கூர்ந்து இம்மாதம் முழுதும் விஷேடமாக இவர்களுக்காக செபிக்கின்றது.
 
இன்று திங்கள்கிழமை (02) அணைத்து சேமக்காலைகளிலும் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு மக்கள் தங்கள் உறவுகளின் கல்றைகளுக்குச் சென்று அவர்களுக்காக செபிப்பது வழமையாகும்.
 
இதற்கமைய மன்னார் மறைமாவட்டதில் கத்தோலிக்கர் செறிந்து வாழும் பேசாலை சேமக்காலையில் அருட்பணி செபமாலை அடிகளார் ஆத்துமாக்களுக்கான திருப்பலி ஒப்புக்கொடுப்பதையும் கல்லறைகளை மக்கள் தரிசித்து செபிப்பதையும் படங்களில் காண்கின்றீர்கள்.
unnamed (19) unnamed (20) unnamed (21) unnamed (22) unnamed (23) unnamed (24) unnamed (25) unnamed (26) unnamed (27) unnamed (28)

Share the post "கத்தோலிக்க திருச்சபை இறந்த ஆத்துமாக்களை நினைவு கூறும் தினம் இன்று! (படங்கள் இணைப்பு)"

Edited by colomban

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சடங்கு பைபிளில் எங்கும் சொல்லப்படவில்லை அது போக கிறிஸ்தவர்கள் போற்றும் இயேசுவானவர் பூமியில் வாழும்போது இப்படி ஒரு சடங்கை அனுசரித்ததாகவோ அல்லது அனுசரிக்கும்படி கேட்டுக்கொண்டதாகவோ சரித்திரம் இல்லை! இறந்த ஆன்மாக்களுக்காக வேண்டுவது என்பது நகைப்புக்கிடமானது. ஒருவர் உயிருடன் வாழும்போது அவர் செய்த நன்மை தீமைகளே அவருக்கு சுவனமா அல்லது இபிலிசு வாழுகின்ற நரகமா எனத் தீர்மானிக்கப்படும். பாவமன்னிப்பின் நிச்சயத்தை ஒருவர் மரணம் அடையமுன்னர் பெற்றுக்கொள்ளவேண்டும். இதை வாலி சொல்லவில்லை உங்கள் கர்த்தர்தான் சொல்லி இருக்கிறாரு. 

 

  • 1 month later...

ஒரு மனிதன் இறந்த பின் செல்லும் இடமாக கிறீஸ்தவர்கள் நம்புவது 
1.மோட்ஷம் 
2.உத்தரிக்கிறஸ்தலம் 
3.நரகம் 
அவர் அவர் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்ப இது தீர்மானிக்கப்படுகின்றது.

உத்தரிக்கிறஸ்தலதில் அவர்களுக்காண தண்டனை குடுக்கப்பட்ட பின் மோட்ஷம் அனுப்பப்படுவார்கள். அனேகமானவர்கள் உத்தரிக்கிறஸ்தலம் சென்று தான் மோட்ஷம் செல்லவேண்டியிருக்கும். ஒரு சிலரே நேராக  மோட்ஷம் செல்ல முடியும். இந்த உத்தரிக்கிறஸ்தலத்தில் இருக்கும் ஆத்துமாக்கள் மோட்ஷம் செல்ல வேண்டி அன்றாட திருப்பலிகளில் வேண்டுதல் செய்வதும், கார்த்திகை மாதத்தை அவர்களுக்கு சிறப்பாக ஒதுக்கி செபிப்பதும் இன்று நேற்று தொடங்கவில்லை. 

இதை Surveyor சொல்லவில்லை......கிறீஸ்தவம் சொல்கின்றது.

ஒவ்வொரு மதமும் தமெக்கென்று ஒரு கோட்பாட்டுடன் செயல்படுகின்றது. சும்மா நகைக்குறது, கனைக்குறதுக்கு மதங்களை இழுப்பது பொருத்தமானதில்லை. 

 

On 03/11/2015 at 7:10 AM, வாலி said:

இந்தச் சடங்கு பைபிளில் எங்கும் சொல்லப்படவில்லை அது போக கிறிஸ்தவர்கள் போற்றும் இயேசுவானவர் பூமியில் வாழும்போது இப்படி ஒரு சடங்கை அனுசரித்ததாகவோ அல்லது அனுசரிக்கும்படி கேட்டுக்கொண்டதாகவோ சரித்திரம் இல்லை! இறந்த ஆன்மாக்களுக்காக வேண்டுவது என்பது நகைப்புக்கிடமானது. ஒருவர் உயிருடன் வாழும்போது அவர் செய்த நன்மை தீமைகளே அவருக்கு சுவனமா அல்லது இபிலிசு வாழுகின்ற நரகமா எனத் தீர்மானிக்கப்படும். பாவமன்னிப்பின் நிச்சயத்தை ஒருவர் மரணம் அடையமுன்னர் பெற்றுக்கொள்ளவேண்டும். இதை வாலி சொல்லவில்லை உங்கள் கர்த்தர்தான் சொல்லி இருக்கிறாரு. 

 

உலகிலுள்ள எல்லா மதங்களும், சமூகப் பிரிவுகளும் தங்களுக்கு என்று சில பல சம்பிருதாயங்களை பின்பற்றி வருகின்றார்கள். இவை அவர்களின் புனித நூல்களில் கூறியும் இருக்கலாம் கூறாமலும் இருக்கலாம். ஆனால் அவை சரியோ பிழையோ  நீண்ட காலங்களாக நடைமுறையில் உள்ளன, அவர்கள் நம்பிக்கையுடன் அதைப் பின்பற்றி வருகின்றார்கள். இதனால் உங்களுக்கு என்ன வந்தது?

நீங்கள்தான் எல்லாம் தெரிந்தவர் என்ற மனப்பான்மையில் ஒருவரது மதநம்பிக்கையை கேலி செய்வது எக்காரணம்கொண்டும் ஏற்றுகொள்ள முடியாதது.

அவ்வாறான ஒரு மதப்பிரிவினரின் மதநம்பிக்கை மற்றும் அவர்களது சம்பிருதாயங்களை நகைப்புக்கிடமானது என்று கூறுவது ஒரு நல்ல மனிதனுக்கு அழகில்லை.

ஒருவரது மத நம்பிக்கையை எள்ளி நகையாடுவது கள உறவுகளுக்கிடையில் விரிசலை உண்டுபண்ணும். நிர்வாகம் இதைக் கவனிக்குமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


இப்ப கிறிஸ்மஸ் வரப்போகின்றது, ஏசு டிசம்பர் 25 பிறக்கவில்லை என கருத்தெழுத போகின்றார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Surveyor said:

உலகிலுள்ள எல்லா மதங்களும், சமூகப் பிரிவுகளும் தங்களுக்கு என்று சில பல சம்பிருதாயங்களை பின்பற்றி வருகின்றார்கள். இவை அவர்களின் புனித நூல்களில் கூறியும் இருக்கலாம் கூறாமலும் இருக்கலாம். ஆனால் அவை சரியோ பிழையோ  நீண்ட காலங்களாக நடைமுறையில் உள்ளன, அவர்கள் நம்பிக்கையுடன் அதைப் பின்பற்றி வருகின்றார்கள். இதனால் உங்களுக்கு என்ன வந்தது?

நீங்கள்தான் எல்லாம் தெரிந்தவர் என்ற மனப்பான்மையில் ஒருவரது மதநம்பிக்கையை கேலி செய்வது எக்காரணம்கொண்டும் ஏற்றுகொள்ள முடியாதது.

அவ்வாறான ஒரு மதப்பிரிவினரின் மதநம்பிக்கை மற்றும் அவர்களது சம்பிருதாயங்களை நகைப்புக்கிடமானது என்று கூறுவது ஒரு நல்ல மனிதனுக்கு அழகில்லை.

ஒருவரது மத நம்பிக்கையை எள்ளி நகையாடுவது கள உறவுகளுக்கிடையில் விரிசலை உண்டுபண்ணும். நிர்வாகம் இதைக் கவனிக்குமா?

நீங்கள் எனக்கும் நிர்வாகத்துக்கும் வகுப்பெடுத்தது போதும்.  பைபிளிலும் சொல்லப்படவில்லை, அறிவியலிலும் இதற்கு இடமில்லை எனவே இது நகைப்புக்கிடமானதே. 

உதாரணமக இந்துக்களின் சனிபகவான் விரதம் பற்றி வந்த இணைப்பு ஒன்றை அறிவியலுக்கு முரணானது என நிர்வாகம் நீக்கியிருந்தது. அது இந்துக்களின் நம்பிக்கையும் சம்பிரதாயத்திலும் கைவைக்கும் செயல் இல்லையா?  

3 hours ago, colomban said:


இப்ப கிறிஸ்மஸ் வரப்போகின்றது, ஏசு டிசம்பர் 25 பிறக்கவில்லை என கருத்தெழுத போகின்றார்கள்.

 

கொழும்பான் உண்மையில் இயேசு டிசம்பர் 25 பிறக்கவில்லை, பைபிளில் கூறப்பட்ட காலத்தைப் பார்த்தால் அது மார்ச் இறுதியில் அல்லது ஏப்பிரல் தொடக்கத்தில் ஆக இருக்க வேண்டும். ஆனால் இயேசு இப்பூமியில் பிறந்தார் என்பது நிச்சய்மான ஒன்று.  இயேசு எப்போது பிறந்தார் என்பது முக்கியமல்ல அவர் பிறந்தார் என்பதே முக்கியம். அந்தவகையில் ஒருவன் மனம் திரும்பி இயேசுவை ஏற்றுக் கொள்ளும் எந்த நாளும் கிறிஸ்மஸ் திருநாளே. எனவே டிசம்பர் 25 கொண்டாடுவதில் தப்பில்லை. 

 

On 13.12.2015 at 5:04 PM, வாலி said:

நீங்கள் எனக்கும் நிர்வாகத்துக்கும் வகுப்பெடுத்தது போதும்.  பைபிளிலும் சொல்லப்படவில்லை, அறிவியலிலும் இதற்கு இடமில்லை எனவே இது நகைப்புக்கிடமானதே. 

உதாரணமக இந்துக்களின் சனிபகவான் விரதம் பற்றி வந்த இணைப்பு ஒன்றை அறிவியலுக்கு முரணானது என நிர்வாகம் நீக்கியிருந்தது. அது இந்துக்களின் நம்பிக்கையும் சம்பிரதாயத்திலும் கைவைக்கும் செயல் இல்லையா?  

கொழும்பான் உண்மையில் இயேசு டிசம்பர் 25 பிறக்கவில்லை, பைபிளில் கூறப்பட்ட காலத்தைப் பார்த்தால் அது மார்ச் இறுதியில் அல்லது ஏப்பிரல் தொடக்கத்தில் ஆக இருக்க வேண்டும். ஆனால் இயேசு இப்பூமியில் பிறந்தார் என்பது நிச்சய்மான ஒன்று.  இயேசு எப்போது பிறந்தார் என்பது முக்கியமல்ல அவர் பிறந்தார் என்பதே முக்கியம். அந்தவகையில் ஒருவன் மனம் திரும்பி இயேசுவை ஏற்றுக் கொள்ளும் எந்த நாளும் கிறிஸ்மஸ் திருநாளே. எனவே டிசம்பர் 25 கொண்டாடுவதில் தப்பில்லை. 

வாலி இஞ்சை ஒருத்தரும் வகுப்பெடுக்கவில்லை,

அரைகுறை விளக்கத்துடன் வந்து சொறிவேலை பார்க்கவேண்டாம் என்றுதான் கூறியுள்ளேன்.

ஒவ்வொரு கிறிஸ்தவனும் இறக்கும் போது என்ன நம்பிக்கையுடன் இறக்கின்றான், கிறிஸ்தவத்தின் அடி நுனி, பைபிள் என்றால் என்ன? போன்ற அடிப்படை விளக்கம் இல்லாமல் அலம்பவேண்டாம் என்பதே எனது வேண்டுகோள்.

சும்மா அங்கையிங்கை பொறுக்கினதை வைத்து கதைப்பதில் வேலையில்லை. சரியான விளக்கத்தை பெற்றுவிட்டு கதைக்கவேண்டும். சும்மா பொதுவெளியில் நகைக்க முன்னர்.................

.

இத்துடன் உங்களுடன் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.    

 

 

*****

Edited by மோகன்
***** நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Surveyor said:

 

வாலி இஞ்சை ஒருத்தரும் வகுப்பெடுக்கவில்லை,

அரைகுறை விளக்கத்துடன் வந்து சொறிவேலை பார்க்கவேண்டாம் என்றுதான் கூறியுள்ளேன்.

ஒவ்வொரு கிறிஸ்தவனும் இறக்கும் போது என்ன நம்பிக்கையுடன் இறக்கின்றான், கிறிஸ்தவத்தின் அடி நுனி, பைபிள் என்றால் என்ன? போன்ற அடிப்படை விளக்கம் இல்லாமல் அலம்பவேண்டாம் என்பதே எனது வேண்டுகோள்.

சும்மா அங்கையிங்கை பொறுக்கினதை வைத்து கதைப்பதில் வேலையில்லை. சரியான விளக்கத்தை பெற்றுவிட்டு கதைக்கவேண்டும். சும்மா பொதுவெளியில் நகைக்க முன்னர்.................

.

இத்துடன் உங்களுடன் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.    

 

 

*****

எனக்கு நீங்கள் ஒருவரும் பைபிள் சொல்லித் தரவேண்டாம். சொறிவேலை பார்த்தது நானல்ல. மீண்டும் சொல்கிறேன் பைபிளில் இப்படி ஒரு சடங்கோ, கருத்தோ எழுதப்படவில்லை.

 

 

Edited by Surveyor

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.