Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்கள் பலரை 30 வருடங்களாக பாலியல் அடிமைகளாக தடுத்துவைத்ததாக பிரிட்டனில் வசிக்கும் தோழர் பாலாவுக்கு எதிராக வழக்கு

Featured Replies

பெண்கள் பலரை 30 வருடங்களாக பாலியல் அடிமைகளாக தடுத்துவைத்ததாக பிரிட்டனில் வசிக்கும் தோழர் பாலாவுக்கு எதிராக வழக்கு
 

1332436.jpgபிரிட்­டனில் வசிக்கும் இந்­திய வம்­சா­வ­ளியைச் சேர்ந்த நபர் ஒருவர் பெண்கள் பலரை அடி­மை­க­ளாக வைத்­தி­ருந்­த­தா­கவும் பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­ய­தா­கவும் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ளார்.

 

அர­விந்தன் பால­கி­ருஷ்ணன் எனும் இந்­நபர் தனது சொந்த மக­ளையே 30 வரு­டங்­க­ளாக வீட்டில் அடைத்­து­ வைத்தி­ருந்­ததாக பிரித்­தா­னிய வழக்குத் தொடு­நர்கள் குற்றம் சுமத்­தி­யுள்­ளனர்.

 

75 வய­தான பால­கி­ருஷ்­ணனுக்கு எதி­ரான வழக்கு பிரித்­தா­னிய நீதி­மன்­றத்தில் தற்­போது நடை­பெற்று வரு­கி­றது.

 

கம்­யூனிஸ்ட் பிர­மு­கர்­களில் ஒரு­வ­ரான அர­விந்தன் பால­கி­ருஷ்ணன், தோழர் பாலா (கொம்ரேட் பாலா) என அழைக்­கப்­ப­டுபவர்.

 

ஆனால், இவர் லண்­டனில் தன்னைக் கட­வு­ளாக சித்­த­ரித்­துக்­கொண்டு, மதக் குழு­வொன்றை ஸ்தாபித்து, அப்­பாவிப் பெண்­களை வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­ய­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ளார். 

 

இந்­தி­யாவின் கேரளா மாநி­லத்தை பிறப்­பி­ட­மா­கக்­கொண்ட பால­கி­ருஷ்ணன், சிங்­கப்பூரில் அமெ­ரிக்க கடற்­படைத் தள­மொன்றில் இலி­கி­த­க­ராக (கிளார்க்) பணி­யாற்­றி­யவர். பின்னர் இவர் பிரிட்­டனில் குடி­யே­றி­யவர்.

 

கம்­யூனிஸ்ட் சீனாவின் ஸ்தாப­க­ரான மா வோ சேதுங்கின் கொள்­கை­களைக் கொண்ட இவர், 1970களில் பிரிட்­டனில் தொழி­லாளர் நிறு­வகம் எனும் அமைப்­புக்கு ஏரா­ள­மா­னோரை தனது பேச்­சாற்­றலால் ஈர்த்­தவர். 

 

1332437.jpgபின்னர் தான் சொல்­வ­தை­யெல்லாம் நம்­பக்­கூ­டிய தொண்டர் குழு­வொன்றை அர­விந்தன் பால­கி­ருஷ்ணன் ஸ்தாபித்தார்.

 

அவர்­களில் 3 பெண்­களை பால­கி­ருஷ்­ணனும் அவ­ருக்கு நெருக்­க­மா­னோரும் 30 வரு­டங்­க­ளாக அடைத்து வைத்து பாலியல் தேவைக்கு பயன்­ப­டுத்­தி­ய­தாக லண்­ட­னி­லுள்ள சௌத்வார்க் கிறவுண் நீதி­மன்­றத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 

1979 ஆம் ஆண்டு அர­விந்தன் பால­கி­ருஷ்ணின் மனைவி சந்ரா பட்­டானி நீரி­ழிவு கார­ண­மாக வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார்.

 

அதன்­பின்­னரே, பால­கி­ருஷ்­ணனை பின்­தொ­டர்ந்த 5 பெண்கள் கொண்ட குழு ஒரு பாலியல் குழுவாக மாற்றப்பட்டது.

 

இவர்களில் பிரிட்டன் அயர்லாந்து, மலேஷியாவைச் சேர்ந்த 3 பெண்கள் பாலியல் அடிமைகளாக தடுத்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

1332434.jpg

 

அனைத்­தையும் கட்­டுப்­ப­டுத்­தக்­கூ­டிய சக்தி தனக்கு உள்­ளது என தன்னை பின்­தொ­டர்ந்­த­வர்­க­ளிடம் பால­கி­ருஷ்ணன் கூறினார் என வழக்குத் தொடு­நர்கள் தெரி­வித்­துள்­ளனர். 

 

பிரித்­தா­னிய வழக்குத் தொடு­நர்­கள் இது தொடர்­பாக தெரி­வித்­துள்­ள­தன்­படி, பால­கிருஷ்­ணனினால் தடுத்­து ­வைக்­கப்­பட்­டி­ருந்த அயர்­லாந்து பெண்­களில் ஒருவர் பால­கி­ருஷ்ணன் மூலம் பெண் குழந்­தை­யொன்றை பெற்றார்.

 

ஆனால், அத்தாய் தனது குழந்­தையை கொஞ்­சவோ தாய்ப்­பாலூட்­டவோ பால­கி­ருஷ்­ணனும் அவ­ருக்கு நெருக்­க­மான ஏனை­யோரும் அனு­ம­திக்­க­வில்லை. அந்த குழந்தை ''பொதுச் சொத்­தா­கி­யது''.

 

1332435.jpg

 

தோழர் என அக்­கு­ழந்தை அழைக்­கப்­பட்­டது. அவ­ருக்கு துணை­யாக யாரும் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. 

 

அச்­சி­றுமி 13 வய­தா­ன­போது அவரின் தாய் இறந்தார். அது­வரை அவரின் தாய் யார் என்­பது அச்­சி­று­மிக்கு தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.

 

பால­கி­ருஷ்­ணனின் மக­ளான இச்­சி­றுமி ஒரு சில தட­வைகள் மாத்­தி­ரமே வீட்டை விட்டு அழைத்துச் செல்­லப்­பட்டாள்.

 

1332438.jpgஅவள் பாட­சா­லைக்கோ, வைத்­தி­ய­சா­லைக்கோ ஒரு­போதும் அழைத்­துச்­செல்­லப்­ப­டாமல் அடைத்து வைக்­கப்­பட்­டி­ருந்தாள்.

 

இள­மைப்­ப­ரு­வத்தில் பேசு­வ­தற்கு யாரு­மற்று தவித்த இச்­சி­றுமி, சுவர்­க­ளுடன் பேசிக்­கொண்­டி­ருந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.

 

2013 ஆம் ஆண்டு தனது 30 ஆவது வயதில் அவர் தப்பிச் சென்றார்.

 

தன்னால் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருந்த பெண்­க­ளிடம் மிக வன்­மு­றை­யாக பால­கி­ருஷ்ணன் நடந்­து­கொண்­ட­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ளார்.

 

தப்பிச் செல்ல முற்­பட்ட ஒரு பெண்ணை அர­விந்தன் பால கிருஷ்­ணனும் அவரின் குழு­வி­னரும் மிக மோச­மாக தாக்­கி­ய­தாக கூறப்­ப­டு­கி­றது. 

 

சர்வ வல்­லமை கொண்ட பால­கி­ருஷ்னண் தம்மை ஒரு தொடு­கையின் மூலம் கொன்­று­விடக் கூடியவர் என அப்பெண்கள் நம்பவைக்கப்பட்டனர்.

 

இதனால், இப்பெண்கள் அங்கு 30 வருடங்களாக மிக அச்சத்துடன் வசித்தனர்.

 

தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபடுவதை ஒரு பாக்கியமாக பாலகிருஷ்ணன் காட்டிக்கொண்டார்.

 

அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த பெண்கள் அவருடன் பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு அட்டவணையிடப்பட்டு அழைக்கப்பட்டனர் எனவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சட்­ட­வி­ரோ­த­மாக தடுத்­து­வைத்­தமை, பாலியல் வல்­லு­றவு, தாக்­குதல், சிறுவர் துன்­பு­றுத்தல் உட்­பட பல குற்­றச்­சாட்­டுகள் பால­கி­ருஷ்­ண­னுக்கு எதி­ராக சுமத்­தப்­ப­ட்டுள்­ளன.

 

இக்­குற்­றச்­சாட்­டு­களை பால­கி­ருஷ்ணன் நிரா­க­ரித்­துள்ளார். வழக்கு விசா­ரணை தொடர்­கி­றது.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=gossips&news=13324#sthash.NcQ4Slm4.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவுக்கும், கமரேட் பாலா 5 அடி உயரம் கூட இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
41 minutes ago, Nathamuni said:

இவ்வளவுக்கும், கமரேட் பாலா 5 அடி உயரம் கூட இல்லை.

உது விசர்க்கதை.......:grin:
"கடுகு சிறிதென்றாலும் காரம் பெரிது" எண்ட விசயம் தம்பியருக்கு தெரியாது போலை :cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.