Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வீதிகளில் வீசி எறியப்படும் குப்பைகள். உரிய முறையில் அகற்றாத யாழ்.மாநகர சபை:

Featured Replies

வீதிகளில் வீசி எறியப்படும் குப்பைகள். உரிய முறையில் அகற்றாத யாழ்.மாநகர சபை:

 

வீதிகளில் வீசி எறியப்படும் குப்பைகள். உரிய முறையில் அகற்றாத யாழ்.மாநகர சபை:



யாழில் தற்போது வீதிகளில் வீசி எறியப்படும் குப்பைகளால் பாரிய தொற்று நோய் அபாயமும், சுகாதார சீர்கேடுகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றன. அவற்றுக்கான தீர்வுகள் எட்டப்படாமலே இருக்கின்றான.

வீடுகளில் சேரும் கழிவு பொருட்களை மாநகர சபை உரிய முறையில் அகற்றாத காரணத்தால் சிலர் தமது வீட்டு கழிவுகளை பைகளில் கட்டி வீதிகளில் வீசி எறிகின்றனர்.

தமது வீடு துப்பரவாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தம் வீட்டு கழிவுகளை மற்றவர்களின் வீடுகளுக்கு முன்பாக வீசி எறிகின்றனர். இதற்கு 'மாநகர சபை ஒழுங்க குப்பை அள்ள வாறதில்லை' என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

அதனை விட பல குற்ற சாட்டுக்கள் மாநகர சபை மீது மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் சிலர் முன்வைக்கின்றனர்.

அதாவது தமது ஒழுங்கைக்குள் மாநகர சபையின் குப்பைகளை அகற்றும் வாகனங்கள் வாறதில்லை என்றும் , உக்காத கழிவுகளை தான் அகற்றுவோம் உக்க கூடியவையை உங்கள் வீடுகளுக்குள் கிடங்கு வெட்டியோ அல்லது எரிந்தோ அகற்றுங்கள் என கூறுகின்றார்கள் .அவ்வாறு செய்ய எல்லா வீடுகளிலும் இட வசதிகள் இல்லை. எனவும், கழிவு பொருட்களை உரப்பைகளில் கட்டி வீட்டு வாசலில் வைக்குமாறும் தாம் அதனை வாகனத்தில் வந்து அகற்றுவோம் என கூறினார்கள். ஆனால் அவர்களின் வாகனம் வாறதில்லை என பல்வேறு வகையான குற்ற சாட்டுக்களை மாநகர சபை மீது முன் வைக்கின்றனர்.

மாநகர சபை குப்பைகளை கொட்டி வந்த கல்லுண்டாய் வெளிகளில் குப்பை கொட்ட கூடாது என மல்லாகம் நீதவான் நீதிமன்றில் அப் பகுதி மக்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அது தொடர்பான வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருவதனால் கல்லுண்டாய் வெளிகளில் குப்பைகளை கொட்ட வேண்டாம் என நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதனால் குப்பைகளை கொட்ட இடமில்லை என மாநகர சபை கூறுகின்றது.

மாநகர சபை குப்பைகளை அகற்ற வில்லை என்றாதால் அதனை பைகளில் கட்டி வீதிகளும் மற்றவர்களின் வீட்டுகளுக்கு முன்னால் தூக்கி வீசலாமா ? என்கின்ற கேள்வியும் , குப்பை கொட்ட இடமில்லை அதனால் குப்பைகளை அள்ளவில்லை என மாநகர சபை கூறிவிட்டு குப்பைகளை அகற்ற நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளது விடலாமா ?என்ற கேள்வியும் எழுகின்றது. இதற்கான பதில்களை உரியவர்கள் தான் வழங்க வேண்டும்.

வீதிகளில் வீசி எறியப்படும் குப்பைகளால் தொற்று நோய் அபாயம் சுகாதார சீர்கேடுகள் மற்றும் தூர்நாற்றத்தால் அசௌகரியங்கள் என்பன ஏற்படுகின்றன.

இதனால் பாதிப்பினை எதிர்நோக்கும் மக்கள் தாம் மாநகர சபைக்கு அறிவித்தால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற குற்றசாட்டு முன்வைக்கபடுகின்றது. குப்பைகளை கொட்டியுள்ளர்கள் அவற்றை அகற்றுங்கள் என கூறினால் , நீண்ட காலதாமதத்திற்கு பின்னரே வந்து அகற்றுவார்கள். என்கின்றனர்.

தொடர்ந்து குப்பைகளை கொட்டுகின்றார்கள் என்று மாநகர சபைக்கு முறைப்பாடு செய்தால் அவ்விட்டத்தில் " குப்பைகளை கொட்டாதீர்கள் " என அறிவித்தல் பலகையை நாட்டி விட்டு செல்கின்றார்கள். அதன் பின்னரும் குப்பைகளை கொட்டுகின்றார்கள் என மாநகர சபையிடம் முறையிட்டால் இதற்கு மேல தாம் என்ன செய்வது என மாநகர சபையினர் கைவிரிக்கின்றார்கள்.

அது தொடர்பில் பொலிசாரிடம் முறைப்பாடு செய்தால் கொட்டுகின்றவர்களை அடையாளம் காட்டுங்கள் தாம் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம் என கூறுகின்றார்கள். கொட்டுகின்றவர்களை அடையாளம் தெரியும் என்றால் நாமே அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போமே .. என பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றார்கள்.

அத்துடன் மழையினை தொடர்ந்து டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. அதானல் அடுத்து வரும் வாரங்களில் டெங்கு நோய்களை ஒழிக்கும் குழுவினர் வீடுகளுக்கு வரவுள்ளனர். அவர்கள் வீட்டு வளவில் டெங்கு நோய் பரவ கூடிய வகையில் சிரட்டைகுள்ளையோ அல்லது சிறு பாத்திரம் ஒன்றினுள்ளோ நீர் இருந்தால் அதற்கு வீட்டு உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

ஆனால் எம் வீட்டுக்கு அருகில் மற்றவர்களால் வீசப்படும் குப்பைக்குள் நீர் தேங்கி டெங்கு பரவாதா ? அதற்கு யார் மீது நடவடிக்கை எடுக்க போகின்றார்கள் அதற்கும் எம் மீது தான் நடவடிக்கை எடுப்பார்களா ? என்ற கேள்வியினையும் எழுப்பு கின்றார்கள்.

மழைகாலத்தில் இலையான்களின் பெருக்கம் அதிகளவில் காணப்படும். அந்த நிலையில் வீதிகளில் வீசப்படும் குப்பைகளில் இருந்து பெருகும் இளையான்களால் அருகில் உள்ள வீடுகளிலும் இலையான்களின் பெருக்கம் அதிகமாக காணப்படுகின்றது. இதனால் தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம் உண்டு.

கடந்த வாரங்களில் பெய்த கடும் மழை காரணமாக தொற்று நோய்கள் பரவும் அபாயங்கள் உள்ளன குறிப்பாக வயிற்றோட்டம், வயிற்றுளைவு, செங்கமமாரி, நெருப்புக்காய்ச்சல் போன்ற தெற்று நோய் அதிகளவில் பரவும் வாய்ப்புக்கள் உள்ளன.அதிலும் 15 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களை இந்நோய் அதிகளவில் தாக்கும் அபாயம் உள்ளது.

குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்கள் , பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை தொற்று நோய் மிக விரைவில் தொற்றிக்கொள்ளும் அபாயம் உள்ளது எனவும்

வருட ஆரம்பத்தில் இருந்து இதுவரை 9 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வயிற்றுளைவினாலும், 5 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வறிய்றோட்டத்தினாலும், 150 ற்றும் மேற்பட்டவர்கள் நெருப்புக் காய்ச்சலினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும்,

யாழ்ப்பாணம், சங்காணை, சண்டிலிப்பாய், ஊர்காவற்றுறை, சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை போன்ற பிரதேசங்களில் உள்ளவர்களை இந் நோய்கள் மிக வேகமாகத் தாக்குவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது எனவும் ,

எனவே அவற்றில் இருந்து மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு யாழ்.பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவு வைத்திய அதிகாரி வைத்தியர் சு. சிவகணேஸ் எச்சரித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126250/language/ta-IN/article.aspx

இதை நான் எழுதினால் சோம்பேறி மரத்தைச் சுற்றி வெட்டித் தாள் என கருத்திடுவார்கள். நேற்று மாலை வைமன் றோட் பக்கம் போகவேண்டி இருந்தது. அங்கு உள்ள வெறும் காணிக்கு முன் ஆட்டுத் தோல்கள், தலையைக் (அஜித் இல்லை ஆட்டுத்தலை) கண்டேன். மாநகரசபை ஊளியர்களிற்கு சம்பளம் (+கிம்பளம்) தாராளமாக கிடைக்கின்றது. மாநகரசபை உத்தியோகத்தரினூடாக கொடுத்த அழுத்தத்தினால் ஒருநாள் வந்தார்கள். நானும் கிம்பளம் கொடுத்துப் பார்த்தேன். அண்ணை குப்பையை றோட்டில வையுங்கோ எடுக்கிறோம் ஒழுங்கைக்குள்ளை எல்லாம் வரமுடியாது என்றார்கள். றோட்டில வைச்சா நாய், பூனை கிழறும், பக்கத்து வீட்டுக்காரன் கண்டால் அடிப்பான்.

என்னிடம் ஆதாரங்கள் இருக்கு. ஏதாவது விதத்தில் யாழை சுத்தமாக்க ஐடியா இருந்தால் எனது பங்கும் நிச்சயமாக அதில் இருக்கும்.

சும்மா சண்டை பிடிப்பவர்கள் எமது நகரை அழகாக வைத்திருப்பதற்கும் தமது எழுத்தை, நேரத்தை பாவிக்கலாமே. இல்லை யாழ் இப்படி இருந்தால்தான் நாங்கள் விடுமுறையில் வந்து ஒஸ்லோ இப்படி, ரொரன்டோ அப்படி என்று பீலா விடலாம் என்றால் தயவு செய்து கருத்திட வேண்டாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பனங்கொட்டை தாட்டு சந்தோசப்படுறதுக்கு முதல் குப்பை கூளங்களை அகற்றி நாட்டை சுத்தமாய் வைச்சிருக்க அலுவலை பாக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.