Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்களுக்கு உணவு, உதவி சேகரிப்பு:

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை ராணுவ தாக்குதலில் 23 தமிழர்கள் பலி

டிசம்பர் 11, 2006

கொழும்பு: தமிழர் பகுதியில் இலங்கை ராணுவத்தின் குண்டுவீச்சு தாக்குதலில் 23 அப்பாவி தமிழர்கள் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது இலங்கை பாதுகாப்புப் படையினர் வெறித் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாகரையில் கடந்த 2 நாட்களாக நடந்த மோதலில் 100க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இந்நிலையில் இலங்கை ராணுவம் தொடர்ந்து தமிழர்களின் குடியிருப்புகள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 23 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்த பொதுமக்களை செஞ்சிலுவை சங்கத்தினர் கடல் வழியாக படகுகளில் கொண்டு மட்டக்களப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

வம்மி வெட்டுவான், கண்டலடி பகுதியில் இரணுவம் 100க்கும் மேற்பட்ட குண்டுகள் வீசி தாக்கதல் நடத்தின. இதில் கண்டலடி பகுதியில் ஒரு பள்ளி இடிந்து தடை மட்டமானது. மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து தடைமட்டமாயின.

வீடுகளை இழந்த பொதுமக்கள் வாகரை மருத்துவமனையை ஒட்டியுள்ள பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வீடு இழந்தவர்கள் மழையில் நனைந்தபடி தவிக்கின்றனர்.

ஈழத் தமிழர்களுக்கு உணவு, உதவி சேகரிப்பு:

இந் நிலையில் தமிழ் ஈழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் கமிட்டியின் சார்பில் இலங்கை தமிழர்களுக்கு உணவு, உடை, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைத் திரட்டும் பணி நடக்கவுள்ளது.

டிசம்பர் 15ம் தேதி முதல் இரு வாரங்களுக்கு தமிழகத்தில் இந்த உதவிகள் திரட்டப்படும் என கமிட்டியின் தலைவரான பழ.நெடுமாறன் அறிவித்துள்ளார்.

இந்தப் பொருட்கள் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் பசியால் வாடும் ஈழத் தமிழர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

http://thatstamil.oneindia.in/news/2006/12/12/lanka.html

தமிழகமே உங்கள் செயற்பாட்டுக்கு தடைவந்தாலும் உணர்வுகளுக்கு நன்றிகள்

நன்றிகள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

அங்கே தமிழக உறவுகள் எமக்காக உணவு சேர்க்கிறார்கள். ஆனால் சில ஈழத்தில் பிறந்த சில ஈனப்பிறவிகள் எழும்புத்துண்டுக்காக சொந்த இனத்தினை இலங்கை இராணுவத்துடனும், சிங்களப் பேரினவாத சக்திகளுடனும் சேர்ந்து சொந்த சகோதர, சகோதரிகளின் அழிவுக்கு துணை போகிறார்கள்.

தமிழக உறவுகளுக்கு மிக்க நன்றிகள்

நன்றி சகோதரங்களே...

  • கருத்துக்கள உறவுகள்

பட்டினியால் வாடும் ஈழத்தமிழர்களுக்கு உணவு, மருந்துப் பொருட்கள் அனுப்ப முடிவு

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் சென்னையில் 9-12-06 சனிக்கிழமை மாலை பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெற்றபோது 50க்கும் மேற்பட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

"இலங்கையில் யாழ்ப்பாணம் செல்லும் நெடுஞ்சாலையை சிங்கள அரசு மூடியதின் விளைவாக ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பட்டினியால் வாடுகிறார்கள். உணவு, மருந்து பற்றாக்குறைவின் விளைவாக மக்கள் மடியும் அபாயம் உருவாகியுள்ளது. சிங்கள அரசின் மனித நேயமற்ற இந்த நடவடிக்கையை இக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

பட்டினியால் வாடும் நமது சகோதரத் தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள் மருந்துகள் ஆகியவற்றை சேகரிக்கும் இயக்கத்தை டிசம்பர் 15 முதல் 31 வரை தமிழகம் எங்கும் நடத்துவது என்றும் சேகரிக்கப்பட்டப் பொருட்களை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் அனுப்பி வைப்பது என்றும் இக்குழு முடிவு செய்கிறது.

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் அமைப்புகளும் தோழமை அமைப்புகளும் இப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு உணவு, மருந்துப் பொருட்களைத் திரட்டும்படி இக்குழு வேண்டிக்கொள்கிறது."

http://thenseide.com/cgi-bin/Yaazh.asp

தமிழக உறவுகளே அன்று அடைக்கலம் தந்து காத்தீர்கள். இன்று அன்னமிட்டு மீண்டும் உங்கள் பெருந்தன்மையைக் காட்டிவிட்டடீர்கள். நன்றி தொப்புற் கொடி உறவுகளே!

ஈழத்திலிருந்து

ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.