Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆயுதக்கொள்வனவு குறித்த முக்கிய அறிக்கை ஜனாதிபதி செயலகத்தில் இருந்து மாயம்! - நாடாளுமன்றில் ரணில் தகவல் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதக்கொள்வனவு குறித்த முக்கிய அறிக்கை ஜனாதிபதி செயலகத்தில் இருந்து மாயம்! - நாடாளுமன்றில் ரணில் தகவல் 
[Friday 2015-12-04 09:00]

ஆயுதக்கொள்வனவு தொடர்பான முக்கியமான அறிக்கை ஜனாதிபதி செயலகத்திலிருந்து காணாமல்போயுள்ளதாக நாடாளுமன்றில் தகவல் வெளியிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இதுகுறித்து பொலிஸாரினூடாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஆயுதக்கொள்வனவு தொடர்பான முக்கியமான அறிக்கை ஜனாதிபதி செயலகத்திலிருந்து காணாமல்போயுள்ளதாக நாடாளுமன்றில் தகவல் வெளியிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இதுகுறித்து பொலிஸாரினூடாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 
ஆயுதக்கொள்வனவு தொடர்பான முக்கியமான அறிக்கை ஜனாதிபதி செயலகத்திலிருந்து காணாமல்போயுள்ளதாக நாடாளுமன்றில் தகவல் வெளியிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இதுகுறித்து பொலிஸாரினூடாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
  
இதேவேளை, இந்த அறிக்கை காணாமல்போயுள்ளமை பாரிய பிரச்சினை என்று இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்தபோதே இவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

வாசுதேவ நாணயக்கார தனது கேள்வியில், உயர்நீதிமன்ற (முன்னாள்) நீதியரசர் ஷிராணி திலகவர்தனவின் தலைமையில் நியமிக்கப்பட்ட ஆயுதக்கொள்வனவு தொடர்பாக ஆராய்வதற்கான ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து வினவியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா, "2000 2005ஆம் ஆண்டுவரை இலங்கை அரசால் கொள்வனவு செய்யப்பட்ட அதிகப் பெறுமதியான ஆயுதங்கள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்பிப்பதற்காக 27.04.2006 அன்று ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவின் அறிக்கையை 28.01.2008 அன்று பிற்பகல் 4.30 மணிக்கு சமர்ப்பிக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த அறிக்கை ஜனாதிபதி செயலகத்தில் இல்லை.

இது பாரிய ஆபத்தான நிலை ஆகும். இவர் (வாசுதேவ நாணயக்கார) அந்த அரசில் இருந்தார். அப்போது இது ஞாபகத்துக்கு வரவில்லை. 8 ஆண்டுகளின் பின்னர் ஞாபகத்துக்கு வந்துள்ளது. இதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். இந்த ஆயுதக்கொள்வனவு குறித்து 22.01.2015 அன்று ஜனாதிபதி செயலகச் செயலாளர், மேலதிக செயலாளரால் ஷிராணி திலகவர்தனவுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இருப்பினும் அதற்கு இதுவரை பதில் இல்லை" என்று குறிப்பிட்டார்.

இதனிடையே குறுக்கீடு செய்து விளக்கமொன்றை முன்வைத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, "இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி சார்பில் நான் பொறுப்புடன் பதிலளிக்கின்றேன். ஜனாதிபதி செயலகத்தில் அறிக்கை இல்லை. இந்த அறிக்கையுடன் வாகனம், பொருட்கள் காணாமல்போயுள்ளன. இந்த ஆயுதக்கொள்வனவு குறித்து அஜித் பி. பெரேரா எதிர்க்கட்சியிலிருந்தபோது கேள்வி எழுப்பியிருந்தார். அப்போது மஹிந்த ராஜபக்ஷ அரசில் பிரதம கொறடாவாக இருந்த தினேஷ் குணவர்தன அது இரகசிய அறிக்கை என்று கூறினார். எனது இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க பொலிஸாரூடாக நடவ டிக்கை எடுக்கப்படும்'' - என்றார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=146199&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.