Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளம் நடிகர்களின் கள நிவாரணப் பணிகளும் கமல்ஹாசனின் ஜன்னலோர வேடிக்கையும்!

Featured Replies

இளம் நடிகர்களின் கள நிவாரணப் பணிகளும் கமல்ஹாசனின் ஜன்னலோர வேடிக்கையும்!

 
 
சித்தார்த், ஆர்.ஜே.பாலாஜி, கமல்ஹாசன் | கோப்புப் படம்
சித்தார்த், ஆர்.ஜே.பாலாஜி, கமல்ஹாசன் | கோப்புப் படம்

சித்தார்த், ஆர்.ஜே.பாலாஜி, விஷ்ணு விஷால் உள்ளிட்ட பல இளம் திரையுலக பிரபலங்கள் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் களத்தில் இறங்கி இரவு, பகல் பார்க்காமல் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கமல் ஒரு பேட்டியில் ''ஒரு பாதுகாப்பான அறையில் அமர்ந்து கொண்டு என் சக சென்னை மக்கள் மழையிலும் வெள்ளத்திலும் அவதிப்படுவதை ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன். உண்மையில் எனக்கு இப்படி இருப்பது வெட்கமாக இருக்கிறது'' என்று கூறியுள்ளார்.

நடிகர்களின் களப் பணி

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திரையுலகினர் மீட்புப் பணியில் ஈடுபட்டதை சமூக வலைதளங்கள் கொண்டாடி வருகின்றன.

நடிகர் சித்தார்த், ஆர்ஜே பாலாஜி ஆகியோர் சைதாப்பேட்டை, அண்ணாநகர், பூந்தமல்லி உள்ளிட்ட பல பகுதிகளுக்குச் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு பிஸ்கட்டுகள், உணவு, பாய், போர்வை ஆகியவற்றையும் வழங்கி வருகிறார்கள்.

இதுகுறித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். பல இடங்களில் இருந்தும் ஆர்வலர்களிடம் இருந்தும் உதவிகள் வருகின்றன. எங்கள் பணிகள் தொடரும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சித்தார்த்தின் ட்விட்டர் பக்கம் https://twitter.com/Actor_Siddharth

நடிகை குஷ்பு சென்னை பட்டினப்பாக்கம் பகுதியிலும், ஷாலினி அஜித் மந்தைவெளி பேருந்து நிலையம் அருகிலும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு, சுமார் 2000 பேருக்கு உணவளித்தனர்.

இசையமைப்பாளர் இளையராஜா தான் வசிக்கும் பகுதிகளுக்கு அருகே உள்ள பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, நிவாரண உதவிகளை வழங்கினார்.

சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியீடு

பின்னணிப் பாடகர் சின்மயி சென்னையில் மீட்புப் பணிகள் நடக்கவேண்டிய இடங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படும் பொருட்கள் ஆகியவற்றைப் பற்றி ட்விட்டரில் செய்திகளை வெளியிட்டு வருகிறார்.

சின்மயியின் ட்விட்டர் பக்கம் https://twitter.com/Chinmayi

மலையாள நடிகர் மம்முட்டி அடையாறு, வில்லிவாக்கம், வளசரவாக்கம், வடபழனி உள்ளிட்ட சென்னையில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் செயல்படும் மீட்புக் குழுவின் தொடர்பு எண்ணை தன் முகநூல், ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினார். மேலும் அவர்கள் தங்குவதற்கான இடங்களையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

கமல் கருத்து

இந்த சூழலில் கமல் ஒரு பேட்டியில் மழை பாதிப்பு குறித்து கூறுகையில், ''ஏழைகளுக்கும், நடுத்தர வகுப்பினருக்கும் இது ஒரு கெட்ட கனவு. பணக்காரர்கள் பிறர் படும் துன்பம் கண்டு வெட்கப்படவேண்டும். நான் பெரிய பணக்காரன் இல்லையென்றாலும் ஒன்றும் செய்யமுடியாமல் வேடிக்கை பார்ப்பது எனக்கே வெட்கத்தை உண்டாக்குகிறது.

மக்களின் வரிப்பணம் எங்கு செல்கிறது எனத் தெரியவில்லை. நான் கருப்புப் பணம் வைத்திருப்பவன் அல்ல, ஒழுங்காக வரி கட்டுபவன். நான் உழைத்துச் சம்பாரித்துக் கட்டிய வரிப்பணம் உரியவர்களுக்குப் போய்ச் சேர்வதில்லை என நன்றாகத் தெரிகிறது.

இது போன்ற அசாதாரண நிகழ்வுகள் ஏற்பட்டால் உடனே எங்களைப் போன்றவர்களிடம் இருந்து பொருளாதார உதவிகளை அரசு எதிர்பார்க்கிறது, ஆனால் அதற்காகத்தான் அரசை நாம் நியமித்துள்ளோம் என்பதை மறந்துவிடுகின்றனர். அரசோடு ஒப்பிடுகையில் நான் குறைவாகவே சம்பாதித்தாலும், கொடுக்க வேண்டியது என் கடமை என்பதும் எனக்குத் தெரியும். கண்டிப்பாக நான் நிதியளிப்பேன்.

ஆனால், அது மக்களின் ரத்தத்தை உறிஞ்சிய பணக்காரனின் பணம் அல்ல, மக்களை உண்மையாகவே நேசிக்கும் ஒருவனின் பணம். அரசு எல்லோரையும் ஒன்றாக நடத்தினால் ஏழை,பணக்காரன் பேதம் ஒழிந்து போகும்" என்று கமல் தெரிவித்துள்ளார்.

கடும் எதிர்ப்பு

கமலின் கருத்துகளுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

''உலக நாயகன் வெறுமனே வேடிக்கை மட்டும் பார்ப்பவராக இருந்தால் வெட்கப்பட வேண்டியதுதான்.''

''படம் வெளியாவதில் தடை ஏற்பட்டபோது நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று சொன்னவர், மக்கள் பாதிக்கப்பட்டதைக் கண்கூடாகப் பார்த்த பிறகும் வீட்டை விட்டே வெளியேறவே யோசிக்கிறாரே!'' என்று சிலர் சமூக வலைதளங்களில் கொந்தளித்துள்ளனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article7949075.ece?widget-art=four-rel

  • கருத்துக்கள உறவுகள்

கமலஹாசன்.. சுப்பிரமணியம் சுவாமி ரேஞ்சில அறிக்கை விடப் பழகிட்டார். உதவி செய்ய பின்னடிக்கிறார்.

இடைத்தர நடிகன்.. லாரன்ஸ் 1 கோடி வெள்ள உதவி செய்திருக்கிறார்... ரஜனி சில இலட்சங்கள் மட்டும் தானாம். கமல் அதுவும் இல்லை. சர்க்காரை திட்டுவதோடு சரி. :rolleyes:tw_angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.