Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உதயனுக்கு சர்வதேச விருது:- இலங்கையில் சர்வதேச விருது பெறும் முதலாவது பத்திரிகை

Featured Replies

உதயனுக்கு சர்வதேச விருது:-

இலங்கையில் பெறும் முதலாவது பத்திரிகை.

உதயனுக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் ""நில எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு'' வருடாந்தம் பிரசித்தி பெற்ற ஊடகவியலாளருக்கும் ஊடகங்களுக்கும் சர்வதேச மட்டத்தில் வழங்கப்படும் விருதுகளில் ஒன்றே உதயனுக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளைத் தெரிவிப்பதற்கான ஊட கங்களின் உரிமைக்கும், செய்திகளை அறிந்து கொள்வதற்கான மக்களின் உரிமைக்குமாக உதயன் போராடி வருவதற்காகவே இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்ட பிரிவில் மொத்தம் நான்கு நாடுகளைச் சேர்ந்த ஊடகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவற்றில் ஒன்று உதயன்.

மற்றைய மூன்றும் பர்மா, லெபனான், ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஊடகங்கள் ஆகும்.

இலங்கையில் முதல் முறையாக உதயனுக்கே இந்த விருது கிடைத்துள்ளது.

உதயனுக்கு இந்த விருது வழங்கப்பட்டதன் மூலம் இலங்கையின் ஊடகத்துறை முழுவதுமே பாராட்டுகிறது என்று ஊடகத்துறையினர் பலரும் கருத்துத் தெரிவித்தனர்.

நான்கு பிரிவுகளாக விருதுகள் வழங் கப்பட்டுள்ளன.

1. பத்திரிகைச் சுதந்திரத்துக்காகத் தனது அர்ப்பணிப்புடனான சேவையை நிரூபித்த பத்திரிகையாளர்கள். இவர்கள் இந்த ஆண் டின் பத்திரிகையாளர்கள்.

2. செய்திகளைத் தெரிவிப்பதற்கும், அவற்றை அறிந்து கொள்வதற்குமான உரி மைக்காகப் போராடும் செய்தி ஊடகங் கள்.

3. பத்திரிகைச் சுதந்திரத்தைப் பாதுகாப்ப வர்கள்.

4. இலத்திரனியல் துறையில் அதாவது இன்டர்நெட்டில் செய்திகளையும், தகவல் களையும் வழங்குவதிலிருந்து தடுத்து நிறுத் தப்பட்டவர்கள்.

இந்த நான்கு பிரிவுகளிலும் மொத்தம் 10 பேருக்கும் நான்கு செய்தி ஊடகங் களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.

பரிசு பெற்ற ஊடகவியலாளர்கள் 10 பேரும் முறையே எரித்திரியா, மியான்மர், கொலம்பியா, சிரியா, சீனா, கியூபா, மெக் ஸிகோ, துருக்மெனிஸ்தான், கொங்கே ஜனநாயகக் குடியரசு ஆகிய நாடுகளைச் சேர்ந் தவர்கள் ஆவர்.

35 பேரைக் கொண்ட சர்வதேச ஜுரி கள் குழு ஒன்றே பரிசுக்குரிய ஊடகவிய லாளர்களையும், ஊடகங்களையும் தெரிவு செய்தது. விருதுகள் பெறுவோரினதும் ஊடகங்களினதும் விவரங்கள் இம்மாதம் 8ஆம் திகதி வெளியிடப்பட்டன.

ஜுரிமாரின் கருத்துப்படி "உதயன்' அதிக வாசகர்களைக் கொண்ட தினசரிப் பத்தி ரிகை, 20 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. வட இலங்கையில் யுத்தம் நடந்து கொண்டு இருந்தாலும், "உதயன்' ஆரம்பம் முதலே நடுநிலைக் கொள்கை பிறழாமல் இயங்கி வருகிறது. "உதயன்' பத்திரிகை ஊழியர்களில் ஐவர் இந்த வருடம் கொல்லப்பட்டுள்ளார்கள். அவர் களில் இருவர் இந்த வருடத்தின் உலகப் பத்திரிகைத் தினத்தன்றே கொல்லப்பட் டார்கள்.

கொழும்பிலிருந்து வெளிவரும் உதய னின் சகோதரப் பத்திரிகை "சுடர் ஒளி' அலு வலகம் மீது கடந்த செப்டெம்பர் மாதத் தில் தாக்குதல் நடந்தது.

யாழ்ப்பாணத்தில் "உதயன்' பத்திரிகை யில் அறிக்கைகளைப் பிரசுரிக்குமாறு அங் குள்ள பத்திரிகையாளர்கள் இரு தடவை கள் துப்பாக்கி முனையில் பலவந்தப்படுத்தப்பட்டார்கள்.

இப்படித் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விருது வழங்கும் நிகழ்வு நேற்று (12.12.2006) செவ்வாய்க்கிழமை பிரெஞ்சு நேரப்படி இரவு 7.30 மணிக்கு பாரிஸ் நகரில் நடைபெற்றது.

www.uthayan.com

Edited by YARLVINO

உண்மைக்கும் நேர்மைக்கும் அஞ்சாமைக்கும் கிடைத்த பரிசு. வாழ்த்துக்கள்.

ஈழத்திலிருந்து

ஜானா

  • தொடங்கியவர்

திரு-வித்தியாதரன் அவர்களுக்கும் உதயனில் பணிபுரியும் மற்றும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

இந்த செய்தி உண்மையானதாய் -இருந்தால்......

உதயனுக்கு - வாழ்த்து நாங்க சொல்லி என்ன -ஆக போகுது...?

சந்திக்கும் உயிரபாயம்-.....

உங்க துணிவு - அதுக்கு - நீங்க கொடுத்த விலை-...

ஏராளம்-!!

வேணும் எண்டால் - சுய நலத்தோட நன்றி - !!

Edited by வர்ணன்

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

பல உயிர்த்தியாகங்கள் செய்து, தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு உரமூட்டும் உதயனுக்கு இவ் விருது கிடைத்ததயிட்டு பெருமைப்படுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதயனுக்கு சர்வதேச விருது:-

இலங்கையில் பெறும் முதலாவது பத்திரிகை.

உதயனுக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் ""நில எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு'' வருடாந்தம் பிரசித்தி பெற்ற ஊடகவியலாளருக்கும் ஊடகங்களுக்கும் சர்வதேச மட்டத்தில் வழங்கப்படும் விருதுகளில் ஒன்றே உதயனுக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளைத் தெரிவிப்பதற்கான ஊட கங்களின் உரிமைக்கும், செய்திகளை அறிந்து கொள்வதற்கான மக்களின் உரிமைக்குமாக உதயன் போராடி வருவதற்காகவே இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்ட பிரிவில் மொத்தம் நான்கு நாடுகளைச் சேர்ந்த ஊடகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவற்றில் ஒன்று உதயன்.

மற்றைய மூன்றும் பர்மா, லெபனான், ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஊடகங்கள் ஆகும்.

இலங்கையில் முதல் முறையாக உதயனுக்கே இந்த விருது கிடைத்துள்ளது.

உதயனுக்கு இந்த விருது வழங்கப்பட்டதன் மூலம் இலங்கையின் ஊடகத்துறை முழுவதுமே பாராட்டுகிறது என்று ஊடகத்துறையினர் பலரும் கருத்துத் தெரிவித்தனர்.

நான்கு பிரிவுகளாக விருதுகள் வழங் கப்பட்டுள்ளன.

1. பத்திரிகைச் சுதந்திரத்துக்காகத் தனது அர்ப்பணிப்புடனான சேவையை நிரூபித்த பத்திரிகையாளர்கள். இவர்கள் இந்த ஆண் டின் பத்திரிகையாளர்கள்.

2. செய்திகளைத் தெரிவிப்பதற்கும், அவற்றை அறிந்து கொள்வதற்குமான உரி மைக்காகப் போராடும் செய்தி ஊடகங் கள்.

3. பத்திரிகைச் சுதந்திரத்தைப் பாதுகாப்ப வர்கள்.

4. இலத்திரனியல் துறையில் அதாவது இன்டர்நெட்டில் செய்திகளையும், தகவல் களையும் வழங்குவதிலிருந்து தடுத்து நிறுத் தப்பட்டவர்கள்.

இந்த நான்கு பிரிவுகளிலும் மொத்தம் 10 பேருக்கும் நான்கு செய்தி ஊடகங் களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.

பரிசு பெற்ற ஊடகவியலாளர்கள் 10 பேரும் முறையே எரித்திரியா, மியான்மர், கொலம்பியா, சிரியா, சீனா, கியூபா, மெக் ஸிகோ, துருக்மெனிஸ்தான், கொங்கே ஜனநாயகக் குடியரசு ஆகிய நாடுகளைச் சேர்ந் தவர்கள் ஆவர்.

35 பேரைக் கொண்ட சர்வதேச ஜுரி கள் குழு ஒன்றே பரிசுக்குரிய ஊடகவிய லாளர்களையும், ஊடகங்களையும் தெரிவு செய்தது. விருதுகள் பெறுவோரினதும் ஊடகங்களினதும் விவரங்கள் இம்மாதம் 8ஆம் திகதி வெளியிடப்பட்டன.

ஜுரிமாரின் கருத்துப்படி "உதயன்' அதிக வாசகர்களைக் கொண்ட தினசரிப் பத்தி ரிகை, 20 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. வட இலங்கையில் யுத்தம் நடந்து கொண்டு இருந்தாலும், "உதயன்' ஆரம்பம் முதலே நடுநிலைக் கொள்கை பிறழாமல் இயங்கி வருகிறது. "உதயன்' பத்திரிகை ஊழியர்களில் ஐவர் இந்த வருடம் கொல்லப்பட்டுள்ளார்கள். அவர் களில் இருவர் இந்த வருடத்தின் உலகப் பத்திரிகைத் தினத்தன்றே கொல்லப்பட் டார்கள்.

கொழும்பிலிருந்து வெளிவரும் உதய னின் சகோதரப் பத்திரிகை "சுடர் ஒளி' அலு வலகம் மீது கடந்த செப்டெம்பர் மாதத் தில் தாக்குதல் நடந்தது.

யாழ்ப்பாணத்தில் "உதயன்' பத்திரிகை யில் அறிக்கைகளைப் பிரசுரிக்குமாறு அங் குள்ள பத்திரிகையாளர்கள் இரு தடவை கள் துப்பாக்கி முனையில் பலவந்தப்படுத்தப்பட்டார்கள்.

இப்படித் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விருது வழங்கும் நிகழ்வு நேற்று (12.12.2006) செவ்வாய்க்கிழமை பிரெஞ்சு நேரப்படி இரவு 7.30 மணிக்கு பாரிஸ் நகரில் நடைபெற்றது.

www.uthayan.com

Congradulations to Mr Vidyadharan and his team his team you really deserve it.

உதயனுக்கு எமது வாழ்த்துக்கள்.

உதயனுக்கு எமது வாழ்த்துக்கள்.

உதயனுக்கு எனது நன்றி !!!

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் தொடங்கி சமூக அறிவுரை வரை இளைய சமூகத்தைக் குறிவைத்து அவர்கள் விரும்பும் வடிவங்களில் தந்த நமதறிவறிந்த முதல் பத்திரிகையான முச்சந்தி முரளி உதயனுக்கு பாராட்டுக்கள்..!

சிங்கள பெளத்த பேரினவாத பயங்கரவாத அரசின் விமானப்படையினதும் தாக்குதலுக்கு இலக்காகிப் பல தடவைகளும் 1995 ஆக்கரமிப்புக்குப் பின்னர் நேரடி இராணுவ மற்றும் ஒட்டுக்குழுக்களின் அழுத்தங்களுக்கும் மத்தியில் தமிழ் தேசியப் பிறழ்வின்றி சேவை வழங்கி வரும் உதயனுக்கு இவ்விருது போய்ச் சேர்வது வரவேற்கத்தக்க ஒன்றே ஆகும். :blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதயனுக்கு வாழ்த்துக்கள் !!!

இந்த விருது மூலம் உதயனின் நடுநிலமை நேர்மை போன்றவை விலை பேசப்படவில்லை என்று நம்புவோமாக.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.