Jump to content

கே இனியவனின் வாழ்த்துக்கவிதைகள்


Recommended Posts

அன்பு உள்ளங்களே 
அனேகரின் வேண்டுகொள்ளுக்கு ஏற்ப பல்வேறு வாழ்த்துக்கவிதைகள் பதிய போகிறேன் உங்கள் ஊகப்படுத்தளுக்கு 
மிக்க நன்றி 

என்றும் உங்கள் கவி 
கவிப்புயல் இனியவன்
எல்லோருக்கும் பொதுவான பிறந்தநாள் கவிதை 

பிறந்து விட்டாய் இந்த 
பூமியை புரிந்து கொள்ள 
பிறந்து விட்டாய் ....!!!

இயந்திரமய உலகம்…….!
எதையும் விந்தையாக செய்யும் 
அதிசய உலகம் ....!!!
விளங்கியும் விளங்காத 
மானிடம்……!
விளங்க முடியாத பாசம் ...
மயங்கி விடாதே ....
நொந்துபோய் வெந்து 
வீழ்ந்து விடாதே ....!!!

தூய சிந்தனைவேண்டும்.
சிந்தித்ததை சீரியதாய் 
செய்ய வேண்டும் ....
உனக்காக எனக்காக 
வாழவேண்டாம் ........
நமக்காக வாழ கற்று கொள்....!!!

வருடங்கள் வருவதும் 
அவை நம்மை கடப்பதும் 
விந்தையில்லையே 
அதற்காக கொண்டாட்டம் 
தேவையில்லையே ....!!!

கடந்த 
வருடத்தில் என்ன ..?
செய்தாய் திரும்பி பார் ...!!!
இந்த 
வருடத்தில் என்ன செய்ய ..?
போகிறாய் .. எண்ணிப்பார் 
பிறந்த நாளில் ஒரு சபதம் எடு 
இருக்கும் தீய குணத்தை 
அழித்துவிடு ....!!!

பிறப்புகளில் உயர் பிறப்பு 
மானிட பிறப்பு ....
இப்பிறப்பில் நீ எல்லாம் 
பெறவும் ....
பெற்றவற்றை உலகிக்கு 
பகிரவும் வாழ்த்துகிறேன் 
மகிழ்கிறேன் உன் பிறந்த 
தினத்தை நினைத்து .....!!!

வாழ்க வளமுடன் 
மிளிர்க தமிழுடன் ....!!!
Link to comment
Share on other sites

நண்பனுக்கு பிறந்த நாள் ...!!!
-------------------------------------------

குணத்தின் குன்றா விளக்கு 
குறையை எடுத்து காட்டுவதில் 
குன்றா மணி விளக்கு ....!!!
என் நண்பனுக்கு இன்று 
பிறந்தநாள் பெருவிழா ....!!!

மற்றவர்களுக்கும் அவன் 
ஒரு மனிதன் எனக்கு அவன் 
நடமாடும் தெய்வம் 
துன்பத்தை துடைப்பவன் 
இல்லை -துன்பமே வராமல் 
தடுப்பவன் ....!!!
இன்று அவனின் பிறந்தநாள் 
மணி மகுடம் ....!!!

என் நண்பனுக்கு என்ன 
கொடுப்பேன் - எதை கொடுப்பேன் 
என்னிடம் உள்ள தீய பழக்கத்தை
அவனுக்காக விட்டு விடுவேன் 
அவனிடம் உள்ள நல்ல பழக்கத்தை
அவனிடம் கேட்காமல் 
எடுத்து விடுவேன் .....!!!

இறைவா எனக்கு வரம் 
கொடு -இந்த ஜென்மத்தில் 
மட்டுமல்ல அடுத்த ஜென்மமும்
இவன்தான் என் நண்பன் ...
இந்த ஜென்மத்தில் அவன் 
பிறந்தநாளில் என் வயது கூட 
வேண்டும் -அவன் வயது குறைய 
வேண்டும் ....!!!

மற்றவர்களுக்கு அவனின் 
பிறந்தநாள் இன்று ..
எனக்கு ஆண்டவன் அவதரித்த 
நாள் இன்று .......!!! 
இதற்கு மேல் என்னடா உனக்கு 
வாழ்த்து .....!!!
 

நண்பா என் பிறந்தநாள் வாழ்த்துகள்...!!!

-------------

தாயை போல் அன்பை தருபவனே ....
தந்தையைப்போல் புத்திமதி சொல்பவனே ....
அண்ணனை போல் ஆபத்தில் உதவுபவனே ....
தம்பியை போல் குறும்பு செய்பவனே ....
மொத்தத்தில் என் குடும்பமாய் இருப்பவனே ....
என் உயிர் நண்பா உனக்கு என் பிறந்தநாள் ...
வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் ....!!!

இனம் தெரியாது என் குணம் தெரியாது ....
வசதி தெரியாது என் வாழ்கை தெரியாது .....
குலம் தெரியாது என் கோத்திரம் தெரியாது ....
தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்று அன்பு ....
ஆபத்தில் உதவும் பண்பு தோள் கொடுக்கும் ....
துணிவு இதுதாண்டா நட்பென்னும் ஜாதி ....
நண்பா உனக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள் ....!!!
 

Link to comment
Share on other sites

ஆருயிர் நண்பா பிறந்தநாள் வாழ்த்துகள் 
-----------

அ-ன்பனே .....
ஆ-ருயிர் நண்பனே .....
இ-னியவனுக்கு இனியவனே ....
ஈ-டில்லா அன்பு உடையவனே ...
உ-னக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் ....!!!

ஊ-ர்போற்றும் பண்பாளனே .....
எ-ன்னுயிர் தோழனே .....
ஏ-ற்றத்திலும் இறக்கத்திலும் 
ஐ-க்கியத்தோடு வாழ்பவனே ....
ஒ-ன்றுனரே உனக்கு வாழ்த்துகள் ....!!!

ஓர் கோப்பையில் உண்டோம் ....
ஓர் உடையை மாற்றி அணிந்தோம் ....
ஓர் உயிர் ஈருடலாய் வாழ்ந்தோம் ....
ஓராயிரம் ஆண்டு வாழ்வாய் நண்பா ....
வாழ்த்துகிறேன் நண்பா வாழ்க வழமுடன் ....!!!

Link to comment
Share on other sites

நண்பனுக்கு( SMS )பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

-----------


நான் வாழ நீ வாழும் நண்பா ...
உனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் .... 
இந்த நாளே மீண்டும் நான் பிறந்தநாள்


|||||||||||||||||||||||

நண்பா 
உன்னை வாழ்த்துவதில் ....
மட்டற்ற மகிழ்ச்சி உன் பிறப்பே ....
எனக்கோ உயர்ச்சி ....!!!

|||||||||||||||||||||||

பிறப்பின் புனித்ததை தாய் தந்தார் ....
உறவின் புனித்தத்தை நீ தந்ததாய் ....
வாழ்த்துகிறேன் உனை பெற்றெடுத்த தாயை ....
பிறந்தநாள் வாழ்த்துகள் .....!!!

|||||||||||||||||||||||

என் இதய அரசனுக்கு எனது 
இதயம் கனிந்த பிறந்தநாள் 
வாழ்த்துக்கள்...!!! 
என் பிறப்பால் பெற்ற பலன் 
உன்நட்பு கிடைத்ததே ....!!!

|||||||||||||||||||||||||

இன்று உனக்கு
பிறந்த நாள் இல்லை..,
இந்த பூமிக்கு நட்பின் ...
வலிமையை சொல்லும் நாள் ...!!!

Link to comment
Share on other sites

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கவிதை 

----------

ஒளி கொண்ட தேவனின் ....
கருணை கொண்ட தேவனின் ..
பிறந்த நாள் - கிறிஸ்துவின் 
பிறந்த நாள் .....!!!

தனக்காக 
வாழாமல் பிறருக்காய் ....
வாழ்தவரின் பிறந்தநாள் ....
கிறிஸ்துவின் பிறந்த நாள் .....!!!

எனக்காக தேவனே ....
இவர்களின் தவறுகளை ...
மன்னித்தருளும்பரமபிதாவே ....
இரங்கிகேட்டவரின்...
பிறந்தநாள் - கிறிஸ்துவின் ....
பிறந்த நாள் .....!!!

தேவனின் பிறந்தநாளை ...
அன்புடன் கொண்டாடுவோம் ...
அருளுடன் கொண்டாடுவோம் ....
பண்புடன் கொண்டாடுவோம் ...
கருணையுடன் கொண்டாடுவோம் ....!!!

உலகில் கருணை பெருகிடவும் ....
மனித நேயம் ஓங்கிடவும் ....
அன்புவெள்ளம் பாய்ந்திடவும் ....
கிறிஸ்துவின் நாளை கொணாடிடுவோம் ...
உலகில் மாற்றத்தை ஏற்படுத்துடுவோம் ....!!! 

கிறிஸ்மஸ் இறை விழாவை ...
கொண்டாடும் அனைத்துள்ளங்களுக்கும் ...
இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துகள் ....!!!

Link to comment
Share on other sites

கிறிஸ்மஸ் குறுங்கவிதைகள்

மானிடரின் மனக்கண் திறக்க ....
மாட்டு தொழுவத்தில் அவதரித்த ,,,,
மாணிக்க ஒளியின் பிறந்தநாள் ...!!!
- நத்தார் புதுவருட வாழ்த்துகள் -

@@@@@

இறையொளியின் சக்திபெற்று ....
இறைவனாக அவதரித்த பாலகன் ...
இறை ஞானத்துடன் வாழ்ந்திடுவோம் ....!!!
- நத்தார் புதுவருட வாழ்த்துகள் -

@@@@@

தட்டுங்கள் இதயங்கள் திறக்கப்படும் 
கேளுங்கள் ஞானம் தரப்படும் ...
தேடுங்கள் இறையருள் கிடைக்கும் ....!!!
- நத்தார் புதுவருட வாழ்த்துகள் -

@@@@@

ஆயிரம் விண்மீன்கள் மின்ன ....
விடிவெள்ளியாய் அவதரித்த பாலகன் ...
வருந்தும் உள்ளங்களின் நம்பிக்கை ஒளி....!!!
- நத்தார் புதுவருட வாழ்த்துகள் -

@@@@@

நடு ராத்திரியில் பிறந்தாலும் ....
உலகத்துக்கு ஒளியூட்டிய.....
உத்தமனின் திருநாள் விழா ....!!!
- நத்தார் புதுவருட வாழ்த்துகள் -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கும் நத்தார் புதுவருட  வாழ்த்துகள் உரித்தாகட்டும் கவிப்புயல்...!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 12/18/2015 at 3:57 PM, suvy said:

உங்களுக்கும் நத்தார் புதுவருட  வாழ்த்துகள் உரித்தாகட்டும் கவிப்புயல்...!

மிக்க நன்றி மிக்க நன்றி மிக்க நன்றி 

Link to comment
Share on other sites

ஆங்கில புத்தாண்டே வருக வருக....!!! 
-------

அழிவை ஏற்படுத்தாமல் .....
அன்பை பெருக்கிட..வருக வருக ....!!!

ஆக்ரோயத்தை காட்டாமல் .....
ஆனந்தத்தை ஏற்படுத்த ..வருக வருக ....!!!

இழப்புகளை ஏற்படுத்தாமல் ....
இன்பத்தை தோற்றுவிக்க ..வருக வருக ....!!!

ஈனச்செயல் புரியாமல் ....
ஈகையை வளர்த்திட ..வருக வருக ....!!!

உலகை உலுப்பாமல்....
உள்ளம் மகிழ்ந்திட ...வருக வருக ....!!!

ஊனங்களை ஏற்படுத்தாமல் ....
ஊர் செழிக்க ..வருக வருக .....!!!

எதிரிகளை தோற்றுவிக்காமல் ....
எளிமையை தோற்றிவிக்க ..வருக வருக....!!! 

ஏமாற்றங்களை ஏற்படுத்தாமல் ....
ஏற்றங்களை தந்திட ..வருக வருக .....!!!

ஐயத்தை தோற்றுவிக்காமல் ......
ஐகியத்தை ஏற்படுத்திட ..வருக வருக ....!!!

ஒற்றர் வேலைகள் பார்க்காமல் ....
ஒற்றுமையை ஏற்படுத்திட ..வருக வருக ....!!!

ஓலமிட மக்களை வைக்காமல் .....
ஓர்மத்தை ஏற்படுத்திட ...வருக வருக ....!!!

ஔடத்தை பாவிக்காமல் .....
ஔவை வாழ்க்கை நெறிப்படி வாழ்ந்திட ....வருக வருக ....!!!

^

கவிப்புயல் இனியவன் 
யாழ்ப்பாணம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Make this my homepage

 

வியாழன், டிசம்பர் 26, 2013

 

 

'கிருஸ்துமஸ்' தினத்தை ஏன் 'நத்தார்' என அழைக்கின்றனர்?

ஆக்கம்:இ.சொ.லிங்கதாசன்

இலங்கைத் தமிழர்கள் 'கிருஸ்துமஸ்' தினத்தை ஏன் 'நத்தார்' என அழைக்கின்றனர்?

மேலேயுள்ள கேள்விக்கு ஒரே வரியில் பதில் சொல்லி விட முடியும். இருப்பினும் எமது தமிழ்நாட்டு உறவுகளுக்கும், ஈழத்தில் பிறந்து வளர்ந்தாலும் காரணம் அறியாமல் ஒரே சொல்லைச் சொல்லிக் கொண்டிருக்கும் எனது தாயக உறவுகளுக்கும், புலம் பெயர் தமிழ் உறவுகளுக்கும் ஒரு சிறிய புரிதலை ஏற்படுத்துவதே எனது இந்தச் சிறிய பகிர்வின் நோக்கமாகும்.
கடந்த சில தினங்களாக முகநூலிலும், இணையங்களிலும் ஒருவருக்கொருவர் 'கிறிஸ்துமஸ்' வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். முகநூலில் எமது இலங்கைத் தமிழ் மக்கள் 'கிருஸ்துமஸ்' வாழ்த்துத் தெரிவிக்கும்போது "இனிய நத்தார் வாழ்த்துக்கள்" என்று எழுதியதைப் பார்த்துப் பல வருட காலமாகத் தமிழக உறவுகள் சிறிது குழப்பம் அடைய நேர்ந்திருக்கலாம். அது என்ன 'நத்தார்' வாழ்த்துக்கள்? என்று சிறிது ஆச்சரியம் அடைந்திருக்கலாம்.சிலவேளை இலங்கைத் தமிழில் சிங்கள மொழியின் தாக்கம் அதிகம் இருப்பதால், மேற்படி  'நத்தார்' என்ற சொல்லும் சிங்களச் சொல்லாக இருக்குமோ? என்று
எண்ணியிருக்கலாம். நீங்கள் அவ்வாறு எண்ணியிருந்தால் உங்கள் கணிப்புத் தவறானது. 'நத்தார்' என்ற சொல் போர்த்துக்கேய மொழிச் சொல்லாகும். போர்த்துக்கேய மொழியில் "இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் என்று கூறுவதற்கு "பெலிஸ் நத்தால்"(Feliz Natal) என்றோ அல்லது "கொம்பிரி மென்டொஸ் பெலோ நத்தால்" (Cumprimentos pelo Natal) என்று கூறுவார்கள். போர்த்துக்கேய ஆட்சி அகன்று ஏறத்தாழ முந்நூற்றைம்பது வருடங்கள் சென்று விட்ட போதிலும் இலங்கை மக்கள் பாலன் பிறப்புத் தினத்தைக் குறிக்கும் 'நத்தால்' என்ற போர்த்துக்கேய மொழி வார்த்தையை அப்படியே இறுகப் பற்றிப் பிடித்துக் கொண்டார்கள். தமிழ் நாட்டைப் போர்த்துக்கேயர் கைப்பற்றவும் இல்லை, ஆட்சி செய்யவும் இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுத் தமிழில் போர்த்துக்கேய வார்த்தைகளின் தாக்கம் மிகக் குறைவு எனலாம். சிங்கள மக்கள் பாலன் பிறப்பை(கிருஸ்துமஸ்) தினத்தைக் குறிப்பதற்குப் போர்த்துக்கேய மொழியில் இருந்து கடன் வாங்கிய 'நத்தால்' என்ற வார்த்தையை அப்படியே உபயோகிக்கின்றனர்.அதாவது சிங்கள மொழியில் 'கிறிஸ்துமஸ்' தினத்தைக் குறிப்பதற்கு 'நத்தால்' அல்லது நத்தாலக் (නත්තලක්) எனவும், சிங்கள மொழியில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக் கூறும்போது 'சுப நத்தாலக் வேவா' (Subha nath-tha-lak vewa/ සුභ නත්තලක් වේවා ) என்றும் கூறுகின்றனர். இலங்கைத் தமிழில் போர்த்துக்கேய வார்த்தையாகிய 'நத்தால்' சிறிது திரிபடைந்து 'நத்தார்' ஆக மாறியது.
எவ்வாறு போர்த்துக்கேயச் சொற்களாகிய அலுமாரி, அலவாங்கு(கடப்பாரை), அலுப்புநேத்தி(சட்டைப் பின்), கதிரை, கழுசான், குசினி, பீங்கான், துவாய், தவறணை போன்ற சொற்களை விட்டு விட முடியவில்லையோ அது போலவே இந்த 'நத்தார்' என்ற சொல்லையும் இலங்கைத் தமிழ் மக்களால் இன்றுவரை விட்டுவிட முடியவில்லை. இலங்கையர்களை முதன் முதலில் ஆண்ட அந்நிய நாட்டவர்கள்(ஐரோப்பியர்கள்) போர்த்துக்கேயர் என்பதுடன் ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகள் எம்மை ஆட்சி செய்த அவர்களின் ஆட்சியின் எச்சங்கள்/அடையாளங்கள் அவ்வளவு சீக்கிரமாக அழிந்து போய் விடுமா என்ன? உங்களுக்கு இன்னுமொரு ஆச்சரியமான தகவலையும் கூற விரும்புகிறேன். அதாவது போர்த்துக்கேயருக்கு அடுத்து சுமாராக நூறு வருடங்கள் இலங்கையை ஆண்ட ஒல்லாந்தர்களின் டச்சு மொழிச் சொற்கள் விரைவாகவே இலங்கைத் தமிழ் மக்களிடமிருந்து விடை பெற்று விட்டன. எஞ்சியிருப்பவை ஒன்றிரண்டுதான். உதாரணத்திற்குச் சில:கந்தோர், தபால், மற்றும் கக்கூசு. இவை மட்டுமன்றி கிறிஸ்துமஸ் தினத்தை நோர்டிக் மொழிகளாகிய டேனிஷ், சுவீடிஷ், நோர்வீஜியன் மொழிகளில் யூல்(Jul) என்று அழைப்பார்கள். இந்தச் சொல்லும் இலங்கைத் தமிழில் கலந்துவிட்டது என்பது எனக்குப் பெரிய ஆச்சரியம்தான். 'கிறிஸ்துமஸ்' தினத்தை 'யூல்' என்று அழைத்த வயதான பெண்மணிகளை/ஆண்களை நான் இலங்கையில் கண்டிருக்கிறேன். அவர்கள் அந்தச் சொல்லை எங்கு கற்றுக் கொண்டார்கள் என்பது எனக்கு இன்னமும் ஆச்சரியமே.
இலங்கையில் மட்டும் கிறிஸ்துமஸ் தினத்திற்கு ஏன் 'நத்தார்' என்று பெயர்? என்று ஆய்வு செய்யப் புகுந்ததால் எனக்குக் கிடைத்த விடையே போர்த்துக்கேய மொழியின் தாக்கம் அது என்பதாகும். உங்கள் கருத்துக்களையும் வரவேற்கிறேன்.உங்கள் அனைவர்க்கும் இனிய 'கிருஸ்துமஸ்' வாழ்த்துக்கள்; மற்றும் பிறக்க இருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு 2014 உங்கள் அனைவர்க்கும் ஏற்றத்தையும், செழிப்பையும் அள்ளித் தர வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

Link to comment
Share on other sites

மிக்க நன்றி நன்றி 
தகவல் அறிந்தேன் 
நன்றி 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை சனாதிபதி தேர்தலுக்கும், இந்தியா தேர்தலுக்கும் வித்தியாசமிருக்கிறது. இந்தியா தேர்தலில் ஒருவருக்கே வாக்களிக்க முடியும். இலங்கை சனாதிபதி தேர்தலில் ஒருவருக்கு மட்டும் அல்லது 1,2,3 விருப்ப வாக்குகள் வாக்களிக்கலாம். 50% வித வாக்குக்கு மேல் ஒருவருக்கும் வாக்குகள் கிடைக்காத பட்சத்தில்  இறுதியாக வந்தவரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகள்  சேர்க்கப்படும். 50% இன்னும் வராவிட்டால் இரூப்பவர்களில் கடைசியாக இருப்பரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகளை சேர்த்து பார்ப்பார்கள். இப்படியே கடைசியாக மிஞ்சும் இருவரில் 50% க்கு மேல் வருபவர் தெரிவு செய்யப்படுவார். ஆனால் இதுவரை நடந்த தேர்தல்களில் முதலாவது வாக்குகலிலேயே வேட்பாளர் ஒருவர் 50%க்கு வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இலங்கையில்  பலர் இம்முறையை கண்டு கொள்வதில்லை. சிவாஜிலிங்கத்துக்கு முதல் வாக்குகளையும் இரண்டாவது மூன்றாவது வாக்குகளில் பொன்சேகாவுக்கும் வாக்களித்திருக்கலாம். அவுஸ்திரேலியா தேர்தல்களிலும் 1,2,3,4 என்று வாக்களிக்கலாம். ஆனால் இங்கு பல தமிழர்கள் தொழில்கட்சிஅல்லது லிபரல் கட்சிக்கே முதலாவது வாக்காகவாக்களிக்கிறார்கள்.  ஆனால் நான் 2009 இல் எமக்காக அதிகளவு குரல் குடுத்த பசுமைக்கட்சிக்கே முதலாவது வாக்கை வழங்கி 2 வதாக பெரிய கட்சியான லிபரல் அல்லது தொழில்கட்சிக்கு வாக்களிப்பதுண்டு.
    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
    • பிற்சேர்க்கை III வெஸ்டேர்ன் மெடிசின் Vs வெதமாத்தையா  அடுத்த பாகத்தை கொடுக்க பிந்தியமைக்கு மன்னிக்கவும். படங்களை போட்டது திரியை எழுத்தில் இருந்து படங்கள் நோக்கி திருப்பி விட்டது. ————— இலங்கை போவதில் ஒரு வசதி - கொஞ்சம் காசை செலவழித்து ஒரு புல் மெடிக்கல் செக்கப் செய்துகொண்டு வரலாம். அதுவும் நவலோக்க, டேர்டன்ஸ், ஆசிரி, லங்கா ஹொஸ்பிட்டல் போன்ற முதல் தர வைத்தியசாலைகளிலேயே £230 க்குள் ஒரு டோட்டல் மெடிக்கல் செக்கப்பை செய்துகொள்ளலாம்.. முன்னர் ஒரு காலம் இருந்தது யூகே NHS என்றால் உலகிற்கே முன்மாதிரி, ஆனால் இப்போ அப்படி இல்லை. எல்லாம் 14 வருட வலதுசாரி மகாராசாக்களின் ஆட்சி தந்த “முன்னேற்றம்”. இப்போதெல்லாம் ஜீ பி யிடம் அப்பாயின்மெண்ட் வாங்குவதை விட நோயில் சாகலாம் என்ற நிலை. அப்படியே ஜி பி யை சந்திக்க முடிந்தாலும், அவர் refer பண்ணி ஒரு ஸ்கான் எடுப்பதற்குள் சித்திரகுப்தன் சீட்டை கிழிக்க ரெடியாகி விடுவார். அத்தோடு இலவசம் என்பதால் கண்ட மாதிரி speculative டெஸ்டுகளும் எடுக்க refer பண்ண மாட்டார்கள். முதலில் தண்ணீர் குடியுங்கள், ரெஸ்ட் எடுங்கள் என்றே சொல்லி அனுப்புவார்கள். ஆகவே உடனடி கவனிப்பு தேவை எனில், ஒன்றில் கணிசமான அளவு பணத்தை கட்டி யூகேயில் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும்.  அல்லது….இலங்கை அல்லது இந்தியா (பல்லு கட்ட போலந்து, துருக்கி) போன்ற நாடுகளுக்கு போய் இப்படி ஒரு செக்கப்பை செய்து வரலாம். இந்த ரிப்போர்ட்டுகள் எல்லாம் எடுக்க ஒரு நாள் செலவாகும். பின்னர் இதை வைத்து ஒரு கன்சல்டண்டுடன் உங்களுக்கு அப்பாயின்மெண்ட்டும் தருவார்கள். இதில் நன்மை என்னவென்றால் - இந்த டெஸ்டுகளில் ஏதாவது கோளாறாக கட்டினால் - அதை நேரடியாக இங்கே ஜி பி யிடம் காட்டும் போது - நோயின் தார்பரியம் அறிந்து வேலை கட…. கட…. என நடக்கும். எனக்கு தெரிந்த சிலர் முன்பே இவ்வாறு செய்திருந்தாலும், இதுவரை நான் செய்ததில்லை. இந்த முறை வயதும் 45 இன் அடுத்த பக்கத்துக்கு போய் விட்டதாலும், கடந்த 3 வருடத்தில் ஜி பி க்கள் தந்த அனுபவத்தினாலும் - ஒரு டெஸ்டை செய்ய முடிவு செய்தேன். இந்தியா போல் அல்லாது, இலங்கையில் health tourism த்தின் பெறுமதி இன்னும் வடிவாக அறியப்படவில்லை. விலைகளும் உள்ளூர் ஆட்களை குறிவைத்தே உள்ளன (வடை, கொத்து, சிகிரியா டிரிக்ஸ் இன்னும் இங்கே வரவில்லை).  ஒவ்வொரு ஆஸ்பத்திரியும், பல வகை வகையான packages வைத்திருக்கிறார்கள்.  ஒன்றிற்கு மூன்றாக தெரிந்த வைத்தியர்களிடம் கதைத்து - ஒரு package ஐ நானும் ஒரு முண்ணனி வைத்தியசாலையில் தெரிந்து கொண்டேன். டெஸ்ட் எடுக்கும் நாள் அதிக நிகழ்வுகள் இன்றி கழிந்தது. ஒவ்வொரு உடல் பகுதிக்குமுரிய இடத்துக்கு அந்த டெஸ்டுக்காக போகும் போது, அவை உள்ளூர் வாசிகளால் நிரம்பியே இருந்தது. எந்த நாட்டிலும், எந்த நிலையிலும் உணவுக்கு அடுத்து நல்ல பிஸினஸ் மருத்துவம் என்பது புரிந்தது. எல்லாம் முடிந்து கன்சல்டேசன் போனால் -கன்சல்டன் - எடுத்த எடுப்பிலேயே எந்த நாடு என்று கேட்டார் - டாக்டரிடம் பொய் சொல்ல கூடாதாமே? ஆகவே எனது “யாழ்பாணம்/மாடகளப்பு/வன்னி/இந்தியா” உத்தியை கைவிட்டு யூகே என உண்மையை சொன்னேன். கண்ணாடிக்கு மேலால் ஒரு பார்வை பார்த்து விட்டு, நான் அங்கேதான் மேற்படிப்பு படித்தேன், “இப்படி ஒரு முழுமையான டெஸ்டை அங்கே உன்னால் செய்யவே முடியாது அல்லவா”, என அவருக்கு ஏலவே தெரிந்த விடயத்தை என்னிடம் உறுதி செய்தார். என்ன இருந்தாலும் என் குஞ்சல்லவா? விட்டு கொடுக்க முடியாதே? ஆம், ஆனால் இங்கும் அரச வைத்தியசாலையில் இப்படி ஒரு முழுமையான டெஸ்டை செய்யமாட்டீர்கள்தானே என்றேன். உனக்கு வாயில் கொலஸ்டிரோல் கூட என்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, ரிப்போர்ட்டுக்கான வியாக்கியானத்தை ஆரம்பித்த வைத்தியர். 40 நிமிட கன்சல்டேசனின் பின், ஏலவே தெரிந்த விடயங்களை தவிர வேறு ஏதும் கோளாறு இல்லை என்பது நிம்மதியாக இருந்தாலும்…. இவ்வளவு செலவழித்துள்ளேனே…ஒன்றும் இல்லையா என இன்னொரு மனம் மொக்குத்தனமாய் ஒரு கணம் சிந்திக்கவும் செய்தது🤣. கடைசியாக…எனி அதர் குவெஸ்சன்ஸ் க்கு வைத்தியர் வர, என் நெடுநாள் உபாதையான சயாடிக்கா கால் வலியை பற்றி சொன்னேன். அக்கம் பக்கம் பார்த்த வைத்தியர், மெல்லிய குரலில் “இதுக்கு இங்கே உள்ள வெதமாத்தையாதான் சரி” என கூற, யாரையாவது ரெக்கெமெண்ட் பண்ண முடியுமா என நான் அவரை விட மெல்லிய குரலில் கேட்டேன். கன்சல்டேசன் அறையை விட்டு கிளம்பும் போது எனது போனில் ஒரு பிரபல வெதமாத்தையாவின் தொடர்பிலக்கமும், விலாசமும் சேமிக்கப்பட்டிருந்தது. ———————- ஆவலோடு காத்திருங்கள்! பிற்சேர்க்கை IV வெதமாத்தையாவும் ஆவா குரூப்பும்
    • 1994 இல் மயிலாப்பூர் சட்டமன்றத்துக்கும் இன்னுமொரு சட்டமன்றத்துக்கும் இடைக்கால தேர்தல் நடைபெற்றது.  யாராவது MLA காலமானால் அல்லது வேறு சில காரணங்களுக்காக இடைக்கால தேர்தல் நடைபெறும். தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெறாமல் ஒன்று இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதினால் முக்கிய தலைவர்களை இத்தொகுதிகளில் அடிக்கடி காணலாம். நான் அடையார் , Besant நகர் பகுதியில் எனக்கு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு. அப்பொழுது பல தலைவர்களை பார்த்திருக்கிறேன். பாட்டாளி மக்கள் தலைவர் இராமதாஸ் சென்ற வாகனத்தில் மன்சூர் அலிகானை வந்திருந்தார். ‘ பிரபாகரன் கிரேட், இராவணன் கிரேட்’ என்று அவர் உரையாற்றினார்.  வைகோவுடன் எஸ் எஸ் சந்திரன் வந்திருந்தார்.  நடிகர் எஸ் எஸ் சந்திரன் மதிமுகவில் அப்பொழுது இருந்தார் கலைஞ்சர் கருணாநிதிஐக்கண்டதும் பல ஆதரவாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட சொன்னார்கள். ஒரு பிள்ளைக்கு ‘ கனிமொழி’ என்று பெயர் சூட்டினார். இன்னுமொரு பிள்ளைக்கு ‘இளவரசன்’ என்று பெயர் சூட்ட, ‘இவர் பெண் குழந்தை’ என்று குழந்தையின் தகப்பனார் சொல்ல ‘இளவரசி’,என்று கலைஞர் பெயர் சூட்டினார்.  ‘அவர்கள் லட்டினுள் மோதிரம் வைத்து குடுக்கிறார்கள் ( அதிமுக கட்சி) . வாங்குங்கள் . ஆனால் வாக்குகளை எமக்கு அளியுங்கள்’ என்றார். பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தருகில் துவிச்சக்கரவண்டியில் வரும்போது காவல்துறையினர் என்னையும் சேர்ந்து பலரை மறித்து நிறுத்தினார்கள். சில நிமிடங்களில் ‘அதோ அந்த பறவை போல’  பாடலை Band குழு ஒன்று இசை அமைக்க வாகனம் ஒன்று வந்தது. பின்னால் வந்த இன்னுமொரு வாகனத்தில் ஜெயலலிதா அவர்கள் துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்பு படைகளுடன் வந்து உரையாற்றினார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் வீட்டின் அருகே செல்லும் போது எப்போதும்கண்டும் காணாமல் மாதிரி செல்வார்.  ஆனால் தேர்தல் என்றதினால் கை குப்பி என்னை பார்த்து வணங்கினார். தமிழக பத்திரிகைகளில் தேர்தல் செய்திகள் வாசிப்பதுண்டு. இதனால் ஓரளவு ஆர்வம்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.