Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பீப் பாடல்: கனடாவிலிருந்து திரும்பாமல் அங்கேயே உட்கார்ந்திருக்கும் அனிருத்

Featured Replies

பீப் பாடல்: கனடாவிலிருந்து திரும்பாமல் அங்கேயே உட்கார்ந்திருக்கும் அனிருத்
 
 
  சென்னை: பீப் பாடல் விவகாரத்தில் நாளுக்குநாள் சிம்பு மற்றும் அனிருத்தின் மீதான பிடி இறுகுவதால் நேற்று இந்தியா திரும்ப வேண்டிய அனிருத் கனடாவிலேயே தொடர்ந்து தங்கியிருக்கிறாராம். இந்த விவகாரத்தில் கோவை போலீசார் சிம்பு மற்றும் அனிருத்தை நேரில் வருகின்ற 19 ம் தேதிக்கு முன்னதாக ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பி உள்ளனர்.
Beep Song: Anirudh Refuge in Canadac

இந்த வழக்கில் சிம்பு தற்போது சட்டப்படி அனைத்தையும் எதிர்கொள்ளத் தயார் என்று கூறியிருக்கிறார். அனிருத் இந்த பாடலுக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று 2 தினங்களுக்கு முன்னர் தனது அறிக்கையில் கூறியிருந்தார். ஆனால் அவரையும் நேரில் ஆஜராகுமாறு கோவை போலீசார் சம்மன் அனுப்பி இருக்கின்றனர். இந்நிலையில் கனடா நாட்டில் தனது குழுவினருடன் கச்சேரி செய்ய சென்றிருந்த அனிருத் நேற்று சென்னை திரும்பவில்லை.

 

அவரது குழுவைச் சேர்ந்த மற்ற இசைக் கலைஞர்கள் மட்டுமே சென்னை திரும்பி வந்தனர். இதனால் நேற்று அனிருத் திரும்புவார் என்று சென்னை விமான நிலையத்தில் காத்திருந்த ஊடகங்கள் ஏமாற்றமடைந்தனர். தற்போதைய நிலவரப்படி கைது நடவடிக்கைகளுக்குப் பயந்து அனிருத் கனடாவிலேயே தொடர்ந்து தங்கியுள்ளதாக கூறுகின்றனர்.

 

மற்றொருபுறம் கனடாவில் இருந்து மும்பை அல்லது ஹைதராபாத் வழியாக அவரை பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து வர அவரது குடும்பத்தினர் முயற்சித்து வருகின்றனராம். ஆனால் அவரது குடும்பத்தினரே தற்போது அவர்களது வீட்டில் இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குழப்பத்தால் அனிருத் 19ம் தேதி கோவை போலீஸில் விசாரணைக்கு ஆஜராவாரா என்பது குழப்பமாகியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் போராட்டத்தின் எதிரொலி : கனடாவிலிருந்து சென்னை திரும்புவதை ரத்து செய்த அனிருத்

[ Thursday, 17 December 2015 ,10:40:47 ]
Aniruth.jpg

சமீபத்தில் கனடாவில் இசை நிகழ்ச்சி நடத்த அங்குள்ள தமிழர்கள் அனிருத்தை அழைத்திருந்தனர். இதற்காக தனது இசைக்குழுவினருடன் ஒரு வாரத்துக்கு முன்பு கனடா சென்று இருந்தார். அப்போதுதான் ஆபாசப் பாடல் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. 

இசை நிகழ்ச்சியை முடித்துவிட்டு நேற்று அவர் சென்னை திரும்ப விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் சென்னைக்கு வரவில்லை. கடைசி நேரத்தில் சென்னை திரும்புவதை ரத்து செய்துவிட்டார். 

அவரது இசைக்குழுவை சேர்ந்த மற்ற கலைஞர்கள் மட்டுமே சென்னை வந்தனர். பொலிஸ் நடவடிக்கை மற்றும் பெண்கள் போராட்டங்கள் காரணமாக அவர் கனடாவிலேயே தங்கி விட்டதாகக் கூறப்படுகிறது.

http://ibctamil.com/cinemas/index/98

  • கருத்துக்கள உறவுகள்
பெண்களை பற்றிய ஆபாச பாடல்: நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் கண்டனம்
 

 
 
201512160215587734_veteran-actor-Y-G-Mah
சென்னை, 

பெண்களை இழிவுபடுத்தி வெளியான ஆபாச பாடலுக்கு நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் கண்டனம் தெரிவித்தார். 

ஒய்.ஜி.மகேந்திரன் கண்டனம்

சிம்பு பாடியதாக வெளியான ஆபாச பாடலுக்கு (பீப் சாங்க்) எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்துகிறார்கள். கவிஞர்கள் வைரமுத்து, பா.விஜய், கங்கை அமரன் ஆகியோரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

தற்போது நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனும் இந்த பாடலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து தனது முகநூல் (பேஸ்-புக்) பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

தூக்கில் போடவேண்டும் 

‘பீப்’ பாடல் என்ற சர்ச்சைக்குரிய பாடல் ஒன்று வெளிவந்து இருக்கிறது. இந்த பாடலுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று அனிருத் தெளிவுபடுத்தியிருக்கிறார். இந்த பாடல் வெளிவர யார்? காரணமாக இருந்தாலும், அவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்த பாடலை வெளியிட்டவரை கண்டுபிடிக்க வேண்டும்.

கேவலமான இந்த பாடலில் எந்த ஒரு உணர்வோ, மெலடியோ இல்லை. குழந்தைகள் குறிப்பிட்ட அந்த பீப் சத்தத்தில் மறைந்திருக்கும் வார்த்தைகள் என்ன? என்று கேட்கையில் பெரியவர்கள் சங்கடப்படக்கூடிய நிலைமையை இந்த பாட்டு ஏற்படுத்தியிருக்கிறது. இந்த பாடலுக்கு இப்போது என்ன தேவை இருக்கிறது? மனநிலை பாதிக்கப்பட்ட மனிதனால் மட்டுமே இதுமாதிரி பாடலை உருவாக்கமுடியும். கல்லறைக்குள் இருக்கும் கவிஞர் கண்ணதாசன் இந்த பாடலால் நிச்சயம் நிம்மதி இழந்திருப்பார். யார் மீதும் தவறான பழிகளை இந்த பாடல் உருவாக்கி விடக்கூடாது. எனவே இதற்கு காரணமானவர் யார்? என்பதை கண்டுபிடித்து அவரை தூக்கில் போடவேண்டும். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

ராஜேஷ்குமார்

‘க்ரைம்’ நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் தனது ‘பேஸ்-புக்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் ஒரு பெண்ணாக இருக்கிற இந்த தமிழ்நாட்டில் சிம்புவும், அனிருத்தும் பெண்களை கொச்சைப்படுத்தும் பாடலை பாடவும், அதை நியாயப்படுத்தவும் துணிந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட துணிச்சலை முதல்-அமைச்சர் ஆரம்பத்திலேயே கிள்ளி எறியவேண்டும். 

நாட்டையே தாயாக எண்ணி அதற்கு பாரத மாதா என்ற அழகான பெயர் சூட்டி நேசித்து வருகிறோம். சிம்பு, அனிருத் போன்றவர்கள் இந்த தேசத்தில் வீசும் காற்றை கூட சுவாசிக்க தகுதியற்றவர்கள். பெண் என்பவள் உடம்பால் மென்மையானவள். ஆனால் உள்ளத்தால் இரும்பை போன்றவள். ஒவ்வொரு பெண்ணும் பூவில் செய்த ஒரு ஆயுதம் என்பதை சிம்பு போன்றவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.