Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யேர்மன் கைல்புறோன் கந்தசாமி கோவில் தும்பளை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குடாநாட்டில் ஏற்பட்டகடும் மழைகாரணமாக பலகிராமங்கள் வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளானது. இம் மக்கள் இடம்பெயர்ந்து பொதுமண்டபங்களில் தங்கவேண்டியநிலைஏற்பட்டது. இவர்களுக்குதேவையான அத்தியவசிய உலர் உணவுபொருட்கள் தேவைப்பட்டது.

இதனைகருத்தில் கொண்டு புலம்பெயர் தமிழர்கள் உதவமுன் வந்தனர். இந்தவகையில் வடமராட்சிகிழக்கு, தும்பளை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியவசிய உதவிகளை ஜேர்மனியில் இருக்கும் கையல்புறோன் கந்தசாமிகோவில் நிர்வாகத்தினர் வழங்கியிருந்தனர். கந்தசஸ்டி தினத்தில் கோவிலுக்குவரும் பத்தர்கள் வழங்கியநிதியினை இம் மக்களின் உணவுதேவைக்காக வழங்கப்பட்டது.

கையல்புறோன் கந்தசாமிகோவில் நிர்வாகத்தினர் தொடர்ந்து தாயகமக்களுக்கான வாழ்வாதார உதவிகளையும் செய்துவருகின்றனர். கடவுளைநம்பினோர் கைவிடப்படார். என்றவாக்கினை நிறைவேற்றியகோவில் நிர்வாகத்தினருக்கு மக்கள் நன்றியைதெரிவித்தனர். இவ் உதவி வலிவடக்கு பிரதேசசiயின் முன்னால் துணைதவிசாளர் எஸ். சஜீவன் மூலம் வழங்கப்பட்டது.

KovilUthavi0

KovilUthavi1

KovilUthavi2

KovilUthavi3

KovilUthavi4

KovilUthavi5

செய்தி: Tamils24.com

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்வுதரும் செய்தி. கைல்புறோன்வாழ் மக்களை ஒரளவு நானும் அறிவேன். ஊர்கூடி உறவாடுவதில் முன்னிற்பவர்கள். ஏதாவதொரு தமிழர்களுடைய பொது நிகழ்ச்சி அந்த ஊரில் நடைபெறுவதாக இருந்தாலும், அங்குள்ள தமிழர்கள் அனைவரும் அதற்கான உதவிகளையும் தந்து ஒன்றுகூடி வருவார்கள். 

கைல்புறோனில் 'ஆச்சிதுணை' என்ற வணிக நிலையம் ஒரு தமிழரால் நடாத்தப்பட்டு வந்தது. அவருக்கு வயதான காரணத்தினால் தற்போது நிலையம் இயங்குவதில்லை. இருந்தும் அது தொடங்கிய காலத்திலிருந்து இன்றைய காலவரையிலும் அவரும் அவரது பிள்ளைகளும், தாயகத்தில் போரினாலும், இயற்கை அழிவுகளினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்துவரும் உதவிகள் அளப்பரியது. அந்தச் செய்திகளை, அவர்களுடன் நெருங்கிப்பழகிய ஒருசிலர்மட்டுமே அறிந்துள்ளனர்.

இத்தன்மையான தமிழ் மக்களைக்கொண்ட ஊரில் குடிகொள்ளவந்த கந்தசுவாமிக் கடவுளும் பாதிப்புற்ற மக்களுக்கு உதவிடும் செய்தி ஆச்சரியமானது அல்ல.     

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.