Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீனவ சமுதாயத்திற்கு தொடரும் துயரம்... விடிவு தருமா 2016?

Featured Replies

மீனவ சமுதாயத்திற்கு தொடரும் துயரம்... விடிவு தருமா 2016?

 

லங்கை கடற்படையினரின் அத்துமீறல்களால் தமிழக மீனவர்கள் அடைந்து வரும் இன்னல்கள் கடந்த 32 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த ஆண்டின் இறுதி நாளான் இன்றுடன் இந்த இன்னல்கள் தீருமா? பிறக்க போகும் புதிய ஆண்டில் தங்கள் வாழ்வில் புதுவசந்தம் வீசுமா? என்ற எதிர்பார்ப்புடன் தமிழக மீனவர்கள் புத்தாண்டின் விடியலை நோக்கியிருந்த நிலையில், இன்று (31-ம் தேதி) காலை நாகை மாவட்டம் அக்கரை பேட்டை பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற 29 மீனவர்களையும், 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து செல்லப்பட்டுள்ளனர்.

fishers2015-01.jpg

இலங்கையில் விடுதலைபுலிகள் மற்றும் ராணுவத்தினர் இடையேயான மோதல் கடந்த 1983-ம் ஆண்டில் தீவிரமடைந்தது. அந்த மோதல் கடந்த 2009 மே 17-ல் முடிவுக்கு வந்தது. இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கம் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. ஆனால், புலிகளுக்கு உதவுகிறார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வந்த தாக்குதல்கள் மற்றும் சிறை பிடிப்புகள் இன்று வரை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. புலிகள் இயக்கம் அழிக்கப்படும் வரை தமிழக மீனவர்கள் புலிகளுக்கு உதவுவதாக கூறிவந்த இலங்கை அரசு, கடந்த சில ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிவந்து மீன்பிடிப்பில் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றசாட்டை சுமத்தி வருகிறது.

fishers2015-02.jpg

இந்த குற்றசாட்டின் அடிப்படையில் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி முதல் இன்று (31-ம் தேதி) வரை 23 முறை தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்து செல்லப்பட்டு உள்ளனர். கடந்த ஓர் ஆண்டு காலத்தில் மட்டும் 456 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் தமிழக மீனவர்களின் உடமையான 71 படகுகளும் சிறைபிடிக்கபட்டுள்ளன. இவை தவிர பலமுறை தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கும் உள்ளாகி இருக்கின்றனர். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 456 மீனவர்களில் 362 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 94 மீனவர்கள் இன்னும் விடுவிக்கப்படாமல் இலங்கை சிறையில் இருந்து வருகின்றனர் (ராமநாதபுரம் மாவட்டம் 33, புதுக்கோட்டை 18, நாகபட்டினம் 33, காரைக்கால் 10). இதேபோல் 71 படகுகள் இலங்கை கடற்பகுதியான ஊர்காவல்துறையில் பிடித்து வைக்கப்பட்டுள்ளது.

fishers2015-03.jpg

இலங்கை அரசோ, இலங்கை கடற்படையினரோ தமிழக மீனவர்கள் மீது கூறி வரும் குற்றச்சாட்டுகளில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பதை கடந்த காலங்களில் நடந்த சிறைபிடிப்பு சம்பவங்களின் எண்ணிக்கையை கொண்டே கண்டு கொள்ளலாம். இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைபுலிகளுக்கும் இடையே மோதல் நடந்து வந்த 1996 முதல் 2009 இடையிலான 13 ஆண்டுகளில் 88 சம்பவங்களில் 1136 மீனவர்களே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், கடந்த 2014, 2015 ஆகிய 2 ஆண்டுகளில் மட்டும் 916 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர்.

fishers2015-08.jpg

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறை பிடித்து செல்லப்படும் போதும், தாக்குதல்களில் ஈடுபடும் போதும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதி தனது எதிர்ப்பை பதிவு செய்வதுடன் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை அவர்களது படகுகளுடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவார். இதனை தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மட்டும் விடுவிக்கப்பட்டு வந்தனர். ஆனால், மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகள் திருப்பி தரப்படவில்லை. இத்துடன் கடந்த 2 மாதங்களுக்கு முன் சிறைபிடிக்கப்பட்ட 94 மீனவர்களும் தற்போது வரை விடுவிக்கப்படவில்லை.

இந்திய கடல் பகுதிக்குள் சுமார் 2 கடல் மைல் தொலைவு உட்புகும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்கள் தமிழக மீனவர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் நிலையில், தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகளும் ஏனோ அதில் உரிய அக்கரையை காட்டுவதில்லை.

fishers2015-04.jpg

கடலில் ஏற்படும் நிகழ்வுகளின் போது உயிரிழக்கும் மற்றும் காணாமல் போகும் மீனவர்களின் நிலை மிகவும் பரிதாபத்துகுரியதாக உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இலங்கையை இந்தியா தோற்கடித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த இலங்கை கடற்படையினர் அன்றைய தினம் மீன் பிடிக்க சென்றிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை கொடூரமாக தாக்கி கடலில் வீசினர். கை, கால், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இவர்களது உடல் தமிழக கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்கியது. இந்த கொடூர சம்பவம் நடந்து 5 ஆண்டுகளை நெருங்கிவிட்ட நிலையில் கூட உயிரிழந்த மீனவர்களின் இறப்பு சான்றுகள் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினர் அரசால் வழங்கப்பட வேண்டிய எந்த உதவியையும் பெற முடியாமல் வறுமையில் வாடி வருகின்றனர்.

fishers2015-06.jpg

இதே போல் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 3 பேர் கடலில் மூழ்கினர். டேனியல், வில்சன், எஸ்ரோன் ஆகிய அந்த 3 மீனவர்களின் கதி என்னவென்று இன்று வரை தெரியவில்லை. அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா அல்லது இறந்து விட்டார்களா என தெரியாத நிலையில், மீனவர்களின் குடும்பத்தினர் அரசு வழங்கும் உதவிகளையும் பெற முடியாமல் வாடி வருகின்றனர். கடந்த செப்டம்பரில் கடலில் தவறி விழுந்த வில்வராஜ் மற்றும் நவம்பரில் கடலில் படகு மூழ்கியதால் காணாமல் போன மீனவர்கள் முனியசாமி, சுடலைமணி, அந்தோணி ஆகியோரது நிலையும் இன்று வரை என்னவென்று தெரியவில்லை. இவர்களுடன் மீன்பிடிக்க சென்ற மீனவர் ஜாகிர்உசேனின் உடல் மட்டும் இலங்கை கடல் பகுதியில் கரை ஒதுங்கியது.

fishers2015-07.jpg

இந்நிலையில், கடலுக்கு சென்று கரை திரும்பாத இந்த மீனவர்களின் நிலை குறித்து விரைவாக கண்டுபிடிக்கவோ அல்லது அவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்து பாதிப்புக்குள்ளான மீனவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கவோ முயலாமல், காலம் தாழ்த்தியே வருகிறது. கரை திரும்பாத மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற படகுகளின் உரிமையாளரிடம் பெயரளவுக்கு புகார் பெற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் காணவில்லை என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்வதுடன் அரசின் கடமை நின்று விடுகிறது. 7 ஆண்டுகளுக்கு பின்னரே கடலில் மாயமான மீனவரின் குடும்பத்தினர் அது தொடர்பான சான்றுகளை பெற்று அரசின் உதவிகளை பெறும் நிலை நீடிக்கிறது.

கடலுக்கு சென்றாலும் துயரம், காணாமல் போனாலும் தொடரும் அவலம் என தமிழக மீனவர்கள் அவர்களது குடும்பத்தினர் அடைந்து வரும் வேதனைகள் ஆண்டுக்கு ஆண்டு கூடி கொண்டே இருக்கிறது. வரும் புதிய ஆண்டிலாவது இது போன்ற இன்னல்கள் நேராமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் மீன்பிடி தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான மீனவர்களின் வாழ்வில் நிம்மதியை ஏற்படுத்த வேண்டும்.

ஆட்சியாளர்கள் ஆவண செய்வார்களா என்ற எதிர்பார்ப்புகளுடன் மீனவ சமுதாயம் காத்திருக்கிறது...

http://www.vikatan.com/news/coverstory/57063-tribulations-continue-fishing-community.art

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பதிவை நான் படிக்கவில்லை. ஆனால் உண்மை தெரியாமல் சும்மா உணர்ச்சி வசப்படும் எழுத்துக்களையும் படங்களையும் போடுவதால் பயனில்லை. இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி வருபவர்களே கைதுசெய்யப்படுகின்றனர். அதுமட்டுமல்ல எமது மீனவரின் உடமைகளை சேதப்படுத்துவதும் எமது கடல்வளங்களை அழிப்பதும் இவர்கள். கச்சதீவு தவிர்ந்த வேறு பகுதிகளுக்குள் அத்துமீறி மீன் பிடிப்பதும். பின்னர் கச்சதீவில் இலங்கை கடற்படை வந்து பிடித்தது என்றும் பொய்சொல்லுவதும் இவர்கள் வாடிக்கை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.