Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனைவிக்கு தெரியாமல் பணம் சேமித்தால் என்ன நடக்கும்? புத்தாண்டில் நடந்த ருசிகர சம்பவம்!

Featured Replies

மனைவிக்கு தெரியாமல் பணம் சேமித்தால் என்ன நடக்கும்? புத்தாண்டில் நடந்த ருசிகர சம்பவம்!

 

Germany%20money.jpgமனைவிக்கு தெரியாமல் கணவர் லட்சக்கணக்கான பணத்தை பழைய பையில் போட்டு சேமித்து வந்துள்ளார். அந்த பையை மனைவி, குப்பை லாரியில் வீசியதால், கணவன் மயக்க நிலைக்கே சென்று விட்டார். கடைசியில் காவல்துறை மூலம் குப்பைகளை எரித்து மறுசுழற்சி செய்யும் மையத்திற்கு சென்று பணம் கண்டெடுக்கப்பட்டது. இந்த ருசிகர சம்பவம் ஜெர்மனி நாட்டில் அரங்கேறியுள்ளது.

பவேரியா மாகாணத்தில் உள்ள நூரம்பர்க் என்ற நகரில் 55 வயதுடைய ஒருவர்,  தன்னுடைய மனைவியுடன் வசித்து வருகிறார். புத்தாண்டு தினத்தில் வீட்டிற்கு உயர்ந்த பொருள் ஒன்றை வாங்குவதற்காக அவர் லட்சக்கணக்கான பணத்தை சேமித்து வந்துள்ளார். மனைவிக்கு தெரிந்தால், எளிதில் செலவாகிவிடும் என்பதால், மனைவிக்கு தெரியாமலேயே சேமிக்க முடிவு செய்துள்ளார்.

மனைவியின் பார்வையில் படாத இடம் எது என தீர்மானிக்கையில், மனைவியின் உபயோகம் இல்லாத ஒரு பழைய கைப்பை வீட்டில் இருந்ததை கண்டு அதற்குள் தினமும் பணத்தை ரகசியமாக சேமித்து வந்துள்ளார்.

இந்நிலையில், புத்தாண்டு வருவதை தொடர்ந்து கணவன் வெளியே சென்றிருந்த நிலையில், நேற்று மனைவி வீட்டை சுத்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரது பழைய கைப்பை குப்பை பையாக தோற்றமளிக்க, அதனை திறந்துக்கூட பார்க்காமல், மூட்டைக்கட்டி எடுத்துச்சென்று குப்பை தொட்டியில் வீசிவிட்டு வந்துள்ளார்.

இதனிடையே, வீட்டிற்கு திரும்பி வந்த கணவன், வீட்டில் மனைவியின் கைப்பை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரிடம் உண்மையை கூறி புலம்பியுள்ளார். லட்சக்கணக்கான பணத்தை தெரியாமல் குப்பை தொட்டியில் வீசி விட்டேனே என இருவரும் அழுது புலம்பியவாறு அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்ற காவல்துறையினர், அப்பகுதியில் குப்பைகளை எரித்து மறுசுழற்சி செய்யும் மையத்திற்கு உடனடியாக சென்றுள்ளனர். ஆனால், அங்கு செல்வதற்கு முன்னதாக அப்பகுதியில் இருந்து சேகரித்து இரண்டு லாரி குப்பைகளை ஏற்கனவே எரித்து விட்டனர். இதனை கண்டு தம்பதி இருவரும் மயக்க நிலைக்கே சென்றுள்ளனர்.

எனினும், அங்கு 2 லாரிகள் நின்றுகொண்டு இருந்ததை கண்டு அவற்றை பரிசோதனை செய்ய கணவன் விரும்பியுள்ளார். லாரியில் இருந்து ஒவ்வொரு குப்பை மூட்டையாக பிரித்து பார்த்த வந்த கணவனின் முகம் பிரகாசமானது. மனைவி வீசிய அந்த கைப்பை பத்திரமாக அங்கேயே இருந்துள்ளது. மேலும், அதில் வைக்கப்பட்டிருந்த பணம் அனைத்தும் அப்படியே இருந்துள்ளது. காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்த தம்பதியர் மகிழ்ச்சியாக வீடு திரும்பினர்.

http://www.vikatan.com/news/world/57096-woman-throws-away-1000s-of-euros-in-cash.art

விகடனின் புதுவருட  டும் ஆக வும் இந்த செய்தி இருக்கலாம்.

  • தொடங்கியவர்

உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால்  ஒன்றும் செய்ய முடியாது.

ஜேர்மன் செய்திகளில் இந்த விடயம் நான் அறிந்ததுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொருத்தர் பக்கத்தில லோட்டொ எண்கள் தெரிவு செய்து அதை "அட்மிட்" பண்ணாததால் 343 கோடி தவற விட்டுள்ளார்....!

"வருந்தி அழைத்தாலும் வாராத வாரா , பொருந்துவன போமின் என்றால் போகா"

" கண்ணா கிடைக்க இருப்பது கிடைக்காமல் போகாது, கிடைக்காதது எப்போதும் கிடைக்காது"  :)

அதுக்காக காதலியும் மனைவியும்போல் என்று உங்களின் மைன்ட் வாய்ஸ் சுக்கெல்லாம் கம்பனி பொறுப்பேற்காது...!!  :mellow:

14 hours ago, நவீனன் said:

உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால்  ஒன்றும் செய்ய முடியாது.

ஜேர்மன் செய்திகளில் இந்த விடயம் நான் அறிந்ததுதான்.

மன்னிக்கவும் நவீனன். ஜேர்மன் செய்திகளில் அறிந்தது என்றால் உண்மையாக தான் இருக்கும்.

  • தொடங்கியவர்
19 hours ago, trinco said:

மன்னிக்கவும் நவீனன். ஜேர்மன் செய்திகளில் அறிந்தது என்றால் உண்மையாக தான் இருக்கும்.

இதுக்கு எல்லாம் ஏன் மன்னிப்பு நண்பரே

இப்படியான செய்திகளை நான் பொதுவாக உறுதிபடுத்தாமல் இணைப்பதும் இல்லை.

அதுவும் முக்கியமாக ஜேர்மன் செய்திகள் என்னும்போது..:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 3.1.2016 at 9:52 AM, நவீனன் said:

லட்சக்கணக்கான பணத்தை தெரியாமல் குப்பை தொட்டியில் வீசி விட்டேனே என இருவரும் அழுது புலம்பியவாறு அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்ற காவல்துறையினர், அப்பகுதியில் குப்பைகளை எரித்து மறுசுழற்சி செய்யும் மையத்திற்கு உடனடியாக சென்றுள்ளனர்.

இனி வருமானவரி சிக்கல் அது இது எண்டு எல்லாம் வரப்போகுதே tw_lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.