Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண் தொலைக்காட்சி நிருபரிடம் ‘மரியாதைக் குறைவாக’ நடந்து கொண்ட கிறிஸ் கெயில்

Featured Replies

பெண் தொலைக்காட்சி நிருபரிடம் ‘மரியாதைக் குறைவாக’ நடந்து கொண்ட கிறிஸ் கெயில்

 
படம்: ட்விட்டர்.
படம்: ட்விட்டர்.

ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் டி20 லீகில் மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணிக்காக ஆடிவரும் கிறிஸ் கெயில் இன்று தனது இன்னிங்ஸ் முடிந்த பிறகு பேட்டி கண்ட சானல் 10 பெண் நிருபரிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதாக பிக்பேஷ் லீக் கடுமையாக சாடியுள்ளது.

இன்று முடிந்த ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கெயில் ஆடும் மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி வெற்றி பெற்றது. இதில் கெயில் 15 பந்துகளில் கெயில் 41 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார்.

ஆட்டமிழந்த பிறகு சேனல் 10 தொலைக்காட்சி செய்தியாளர் மெல் மெக்லாஃப்லின் கெயிலை பேட்டி கண்டார், அப்போது கெயில், “நானே உங்களிடம் வந்து பேட்டி கொடுக்க விரும்பினேன். அதன் காரணமாகவே உங்கள் முன் நிற்கிறேன். உங்கள் கண்களை முதல் முறையாக பார்க்கவே இங்கு வந்துள்ளேன். இட்ஸ் நைஸ். இந்தப் போட்டியில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன் அதன் பிறகு நாம் மது அருந்தலாம். don't blush baby" என்று பேசியுள்ளார்.

கெயிலின் இந்தப் பேச்சை கண்டு சற்றே அந்த நிருபர் அதிர்ச்சியடைந்தாலும் பிறகு, “நான் வெட்கப்படவில்லை” என்று கூறி வழக்கமாக நேர்காணலைத் தொடர் ந்தார்.

இதனையடுத்து பிபிஎல் லீக் தலைவர் எவரார்ட் கெயில் மீது நடவடிக்கை பாயும் என்று கூறியுள்ளார். மேலும், இந்த பிபிஎல் கிரிக்கெட்டை சிறுவர்கள் முதல் குடும்பத்தினராக அனைவரும் பார்க்கின்றனர், ஆகவே இப்படிப்பட்ட பேச்சை அங்கு ஏற்றுக் கொள்ள வழியே இல்லை என்று அவர் சாடியுள்ளார்.

கெயில் ஆடும் மெல்போர்ன் ரெனகேட் அணியின் தலைமைச் செயலதிகாரி ஸ்டூவர்ட் கோவெண்ட்ரி, “இத்தகைய நடத்தையை ஏற்கமுடியாது” என்றார்.

மெல் ஒரு பத்திரிகையாளர் அவர் தனது கடமையைச் செய்து வருகிறார், அவரிடம் இப்படிப் பேசியிருப்பது அநாகரிகமானது, எனவே இனி அவரை போட்டிகளில் ஆட அனுமதிக்க மாட்டோம் என்று சேனல் 10 டேவிட் பர்ஹாம் கூறியதோடு கெயில் மன்னிப்பு கேட்டாக வேண்டும் என்றார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/article8065187.ece?homepage=true

 

 

  • தொடங்கியவர்

உங்களுக்கு அறிவிருக்கா கெய்ல் ? ட்விட்டரில் தெறிக்கும் ரசிகர்கள்..!

 

பெண் நிருபரிடம், தரக்குறைவாக கமென்ட் அடித்த, மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கிரிஸ் கெய்லுக்கு கடும் கண்டனங்கள் குவிந்துவருகிறது.

நேற்று ஆஸ்திரேலியாவில் நடந்த பிக்பாஷ் கிரிக்கெட் தொடரில், மெல்பர்ன் ரெனகேட்ஸ் அணிக்காக விளையாடிய கெய்ல் 15 பந்துகளில், 41 ரன்கள் குவித்தார். அந்த இன்னிங்க்ஸ் முடிந்து, கெய்லிடம் பேட்டி எடுக்க வந்த பெண் நிருபர் மெல் மெக்லாக்ளின்,  இது குறித்து கேள்வி கேட்க, “ நானே உங்களிடம் பேட்டி தர வரலாம் என இருந்தேன். அதனால்தான் வந்தேன். உங்களது கண்களை முதல்முறையாக பார்க்கவே வந்திருக்கிறேன். போட்டி முடிந்தவுடன் நாம் மது அருந்தலாம்” என சொல்லி சிரித்துவிட்டு, அதோடு நிறுத்தாமல், “வெட்கப்படாத பேபி” என மீண்டும் எல்லை மீறினார். இதனை சாதுர்யமாக சமாளித்த மெக்லாக்ளின்,  “நான் வெட்கப்படவில்லை...” எனக்கூறி தப்பித்தார்.


 

ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் அரங்கில், நேரலையாக ஒளிபரப்பப்படும் ஒரு நிகழ்ச்சியில் ஒரு பெண்ணை இப்படி விமர்சித்தது ரசிகர்களை மிகவும் கோபப்படுத்தியது. கிரிக்கெட் வீரர்கள் உட்பட, கெய்லை இந்த செயலுக்காக கண்டித்துள்ளனர். அதோடு மெக்லாக்ளினின் ரசிகர்கள் ட்விட்டர், பேஸ்புக் என கெய்லை திட்டித்தீர்த்து வருகின்றனர்.

யார் இந்த மெல் மெக்லாக்ளின் ?

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற விளையாட்டு தொகுப்பாளர் மெல் மெக்லாக்ளின். தற்போது ஆஸ்திரேலியாவின் 'நெட்வொர்க் 10' என்னும் சேனலில் பணிபுரிகிறார். இதற்கு முன்பு பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் சேனலில் இருந்த போது, உலகம் முழுக்க புகழ்பெற்ற தொகுப்பாளராக விளங்கினார் மெக்லாக்ளின். பெண் தொகுப்பாளர்கள் என்றால் அழகாக இருப்பார்கள் என்பதோடு மட்டும் நின்றுவிடாமல், கால்பந்து, கிரிக்கெட் என விளையாட்டுகளுக்கு ஏற்ப, நிபுணத்துவத்தோடு , விளையாட்டு செய்திகளை துல்லியமாக சொல்வது மெக்லாக்ளின் ஸ்டைல்.

 

காமன்வெல்த் போட்டிகள், ஒலிம்பிக் போட்டிகள், கால்பந்து போட்டிகள் என எல்லாவகை விளையாட்டுகளிலும் சிறப்பாக வர்ணனை செய்து, ரசிகர்களை கட்டிப்போட்டவர்.

 

 

 

2zdm5.gif அதோடு மட்டுமில்லாமல், அழகாக இருப்பதால், நமது ஊர் மந்த்ரா பேடி போல, தீவிர ரசிகர்களும் கிடைத்தார்கள். வீரர்களிடம், களத்திற்கே சென்று பேட்டி எடுப்பது, விமர்சனங்களை கூட, வீரர்கள் முகம் சுளிக்காதவாறு, அழகாக எடுத்துக்கூறுவது, நேரலை நிகழ்ச்சிகளில் சின்ன சின்ன குறும்புகள், சாமர்த்தியமாக செயல்படுதல் என “மிஸ் பர்பெக்ட் “ ஆக இருந்ததால், அழகாக இருக்கிறார் என்பதை தாண்டி, திறமையான தொகுப்பாளர், விமர்சகர் என பெயர் பெற்றார் மெக்லாக்ளின்.

 

பல முன்னணி வீரர்களும், மெல்லிடம் தனி மரியாதை காட்டுவார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்நிலையில் 2013 ல் பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து விலகினார் மெக்லாக்ளின் . அப்போது, சமூக வலைதளங்களில் ரசிகர்களின் பாசமழையில் நனைந்தார். அடுத்து என்ன செய்யப்போகிறார் என இருந்த நிலையில், டென் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். தற்போது ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் கிரிக்கெட் தொடருக்காக தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் மெக்லாக்ளின்.

 

இது முதல்முறையல்ல..!

 

மெல்லிடம், இப்படி வீரர்கள் சீண்டுவது முதல்முறையல்ல. ஏற்கனவே கடந்த ஆண்டு, மேற்கிந்திய தீவுகள் அணியின் ட்வைன் பிராவோ, இதே போல, அத்துமீறினார். ஒரு போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற பிராவோ, “நான் மெல்லிடம் ஒரு ஹலோ சொல்ல விரும்புகிறேன். அதுவும் அழகான மெல்லிடம்... இந்த சிட்னியில் அவரை பார்த்தது மகிழ்ச்சி... இன்னும் கூட, மெல் மிகவும் அழகாக இருக்கிறார் என்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன்...!” என அசடு வழிந்தார் பிராவோ.

 

அப்போது வர்ணனையாளராக இருந்த ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங்,  “இது கொஞ்சம் சங்கடமானது” என்றார். ஆனால் அப்போது இது பெரிதாக பேசப்படவில்லை. ஆனால் கெய்ல் தற்போது உளறியிருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. கெய்ல் இப்படி நடந்துகொள்வதும் முதல்முறையல்ல. கடந்த ஆண்டு, ஜமைக்கா நாட்டு பெண் நிருபர் ஒருவருக்கு அளித்த பேட்டியிலும், கொச்சை வார்த்தைகளை பயன்படுத்த, ஜமைக்க பெண் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தது.

 


மன்னிப்புக்கேட்டார் கெய்ல்

 

கெய்லின் இந்த செயலை கண்டித்து ரெனகேட்ஸ் அணி, 10,000 டாலர் அபராதம் விதித்திருக்கிறது. அதோடு இந்த பிரச்னை குறித்து கருத்து தெரிவித்திருக்கும் கெய்ல்,  “அது ஒரு சிம்பிள் ஜோக். அதனை வேறு மாதிரி புரிந்து கொண்டு சீரியசான பிரச்னையாக்கி விட்டனர். இது தனிப்பட்ட முறையில் யாரையும் காயப்படுத்தி இருந்தால், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மெல்லிடமும் நான் மன்னிப்புகேட்கிறேன்” என அறிவித்துள்ளார்.

 

gaylefb-story_647_010416090005.jpg

 

என்ன சொல்கிறார் மெல்?

 

“அவர் மன்னிப்பை நான் ஏற்றுக்கொண்டேன். அதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை.15 பந்தில் 41 ரன் அடித்திருந்தார் கெய்ல். அதைப்பற்றி கேட்க மிகவும் ஆவலாக இருந்தேன். ஆனால் எதிர்பாராத விதமாக இப்படி நடந்துவிட்டது. அவர் அப்படிக்கேட்டதும், நானும் கொஞ்சம் அதிர்ச்சியடைந்துவிட்டேன். இப்போது அதைப்பற்றி பெரிதாக நினைக்கவில்லை. என்னுடைய வேலையை இன்னும் நன்றாகத்தான் பார்ப்பேன். இதனால் எந்த கவலையும் இல்லை. எல்லா அனுபவத்திலும் ஏதாவது கற்றுக்கொள்ளலாம். அப்படித்தான் இதையும் பார்க்கிறேன்.

 

எப்போதும் நான் நேர்மறை சிந்தனை கொண்டவள். பெண்கள் விளையாட்டுத்துறையில் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் நிறைய சவால்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும். அதில் இதுவும் ஒன்று. இதோடு இந்த பிரச்னையை முடித்துக்கொள்வோம்.

 

எனக்கு நான் செய்யும் வேலை மிகவும் பிடிக்கும். எனவே இதைப்பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன். ஆனால் உலகம் முழுதும் இருந்து, இந்த பிரச்னைக்காக பல பேர் எனக்காக குரல் கொடுப்பதுதான் மகிழ்ச்சி. மக்கள் இதைப்பற்றி பேசுகிறார்கள் என்பதே எனக்கு சந்தோஷம்” என்கிறார் மெல்.

 

தற்போது இந்த பிரச்னைக்கு பிறகு உலகம் முழுக்க மேலும் பாப்புலர் ஆகிவிட்டார் மெல் மெக்லாக்ளின்.

 

ஏற்கனவே, கெய்லின் இன்ஸ்டாகிராம் பக்கம் பெண்களுடன் மது அருந்துவது, உல்லாசமாக இருப்பது என A கிளாஸ் பக்கமாக இருக்கிறது. தற்போது, இந்த விஷயம் மூலம் மேலும் பேட் பாய் இமேஜ் கிடைத்துள்ளது கெய்லுக்கு.

 

http://www.vikatan.com/news/sports/57242-twitter-reaction-on-gayles-misbehaviour.art

 

  • கருத்துக்கள உறவுகள்

கெய்ல் ஒரு வழிசல் பேர்வழிதான்!

  • தொடங்கியவர்

கெயிலுக்கு அபராதம்: மன்னிப்பு கேட்டார்

 

  • 21.jpg

பெண் நிருபரிடம் தகாத முறையில் பேசிய பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயிலுக்கு மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி ரூ.4.66 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
 இந்நிலையில், தாம் விளையாட்டாகவே அந்த நிருபரிடம் அவ்வாறு பேசியதாகவும், அது அவரை காயப்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் கிறிஸ் கெயில் தற்போது கூறியுள்ளார்.
 கெயிலிடம் வசூலிக்கப்படும் அபராதத் தொகை, ஜேன் மெக்ராத் நடத்தும் புற்றுநோய் அறக்கட்டளைக்கு வழங்கப்படும் என்று ரெனிகேட்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 முன்னதாக, சம்பந்தப்பட்ட பெண் நிருபர் பேட்டியெடுத்தபோது, அவரது கண்களை புகழ்ந்து பேசிய கெயில், தன்னுடன் மது அருந்த வருமாறு அழைப்பு விடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

http://www.dinamani.com/sports/2016/01/06/%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/article3213390.ece

  • தொடங்கியவர்

உலககோப்பையின் போது கெய்ல் அருவருப்பாக நடந்துகொண்டார்: ஆஸ்திரேலிய பெண் புகார்

 
 
மெல் மெக்லாக்ளின் - கெயில்
மெல் மெக்லாக்ளின் - கெயில்

மேலும் சில பெண் நிருபர்களிடமும் சேட்டை

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் மீது மேலும் சில பெண் நிருபர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 2015ம் ஆண்டு உலககோப்பையின் போது கெய்ல் அறுவருக்கத் தக்க வகையில் நடந்து கொண்டதாக பெண் ஒருவர் புகார் கூறியுள்ளார்.

பிக்பாஷ் டி 20 தொடரில் மெல்பர்ன் ரெனகேட்ஸ் அணிக்காக விளையாடி வரும் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் கடந்த சிலதினங்களுக்கு முன்பு நெட்வோர்க் 10 சானலின் பெண் நிருபர் மெல் மெக்லாக்ளினிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டார்.

15 பந்தில் 41 ரன் எடுத்த கெய்லிடம் போட்டியின் இடையே மெக்லாக்ளின் பேட்டி எடுத்தார். அப்போது “உங்கள் கண்களை முதல் முறையாக பார்க்கவே இங்கு வந்துள்ளேன். மிகவும் நன்றாக உள்ளது. ஹரிகேன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அதன் பிறகு நாம் மது அருந்தலாம். வெட்கத்தில் உங்கள் முகம் சிவக்கிறது என்று கூறினார் கெய்ல்”.

அபராதம்

கெய்லின் இந்த செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு முன்னாள் வீரர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கெய்லுக்கு சுமார் ரூ.4.65 லட்சம் அபராதம் விதித்து மெல்பர்ன் ரெனகேட்ஸ் அணி உத்தரவிட்டது.

பெண் நிருபர் மற்றும் ரசிகர் களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண் டுள்ள அணி நிர்வாகம், கெய்லிடம் வசூலிக்கப்படும் அபராத தொகை ஜேன் மெக்ராத் அறகட்டளைக்கு நன்கொடையாக வழங்கப்படும் எனவும் தெரிவித்தது.

இதற்கிடையே கெய்ல் தனது செயலுக்காக மன்னிப்பு கோரினார். எனது செயலால் பெண் நிருபர் பாதிக்கப்பட்டிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தீங்கான எண்ணத்தில் நான் கூறவில்லை. இது ஒரு எளிய ஜோக். விளையாட்டு நடை பெறும்போது இதுபோன்ற கேளிக் கைகள் சகஜம். அதில் இருந்து நாம் நகர்ந்து செல்ல வேண்டும் என்று தெரிவித்தார் கெய்ல்.

இதை ஏற்ற மெக்லாக்ளினும் இந்த சம்பவத்தை மறந்து விட்டு மற்ற விஷயங்கள் கவனம் செலுத்த விரும்புவதாக தெரிவித்தார்.

மோகம் கொண்டவர்

இந்நிலையில் கெய்ல் பலமுறை இதுபோன்று பெண்களிடம் அவ மரியாதையாக நடந்துள்ளது தற் போது வெளிச்சத்துக்கு வந்துள் ளது. மெக்லாக்ளினிடம் கெய்ல் நடந்துகொண்ட விதத்தை தொடர்ந்து மேலும் பல பெண் நிருபர்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் சானல் நிருபர் நேரோலி மெடோவ்ஸ் கூறும்போது, “கிறிஸ் கெய்ல் இதுபோன்ற செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபடுகிறார். அவர் கொடூரத்தனமான பழக்கத்தை கொண்டுள்ளார். 2011ம் ஆண்டு நான் அவரை நேர்காணல் செய்தேன். அப்போது அவர், என்னை மன்னித்துவிடுங்கள் உங்களது அழகான முகத்தை கண்டு நீங்கள் கேட்ட கேள்வியை மறந்து விட்டேன். மறுபடியும் கேள்வியை திருப்பி கேட்க முடியுமா என்று கேட்டார்” என்று தெரிவித்தார்.

9 நியூஸ் நிருபர் யோனி ஸம்ப்ஸன் கூறும்போது, “ஒருநாள் டிவிட்டர் வழியாக கெய்ல் தொடர்பு கொண்டார். அப்போது அவர் என்னை இரவு விருந்துக்கு அழைத்து செல்வதாக கூறியிருந்தார். ஆனால் நான் கெய்லை சந்தித்ததில்லை. என்னை பொறுத்தவரையில் கெய்ல், பெண்கள் மீது மோகம் கொண்டவராக உள்ளார். இந்த வார்த்தை கடினமானது தான். ஆனால் அவர் அதைத்தான் செய்து வருகிறார்” என்று தெரிவித்தார்.

உலககோப்பையில்

இதற்கிடையே ஆஸ்திரேலி யாவில் 2015ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலககோப்பை போட்டி யின் போது கெய்ல் தன்னிடம் அறுவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டதாக பெண் ஒருவர் சிட்னி ஹெரால்டு பத்ரிகைக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அந்த பெண், 2015ம் ஆண்டு உலககோப்பையில் சிட்னியில் தங்கியிருந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்காக நான் பணிபுரிந்தேன்.

ஒருநாள் வீரர்கள் அறைக்கு நான் சான்ட்விட்ஜ் கொண்டு சென்றேன். அப்போது கெய்லுடன் மற்றொரு வீரரும் அறையில் இருந்தார். கெய்ல் துண்டு மட்டுமே அணிந்திருந்தார். என்னை பார்த்ததும் அவர் அதை அவிழ்த்து விட்டு ‘இதை’ பார்த்திருக்கிறாயா என்று கேட்டார். அதிர்ச்சியடைந்த நான் அங்கிருந்து உடனடியாக வெளியேறினன்.

இதுதொடர்பாக மேற்கிந்திய தீவுகள் அணியின் மேலாளர் ரிட்சர்ட்ஸனிடம் புகார் செய்தேன். இதைத்தொடர்ந்து அவர் அனைத்து வீரர்களுக்கும் இ-மெயில் அனுப்பினார். அதில் பணியாளர் களிடம் அனைவரும் மரியாதை யாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் கூறிப்பிட்டிருந்ததாக தெரி வித்துள்ளார்.

கிண்டல் வாசகம்

மெக்லாக்ளின் விவகாரத்தில் கெய்லுக்கு ரூ.4.65 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சக நாட்டு வீரர் பிராவோவுடன் தான் இருக்கும் ஒரு புகைப்படத்தை கெயில் இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் செக்ஸ் செல்ஸ் என்று எழுதப்பட்டுள்ள டி சர்டை அணிந்துள்ளார்.

மேலும் தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை கிண்டல் செய்யும் விதமாக “என் பை காலியாக உள்ளது. எனவே எனது இரவு உணவுக்கான பணத்தை பிராவோ கொடுக்கிறார்” என்று எழுதியுள்ளார்.

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/article8076108.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.