Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியூஸியிடம் முத்தொடர்களையும் இழந்ததையிட்டு கவலையடைகிறோம்

Featured Replies

நியூஸியிடம் முத்தொடர்களையும் இழந்ததையிட்டு கவலையடைகிறோம்

 

நியூ­ஸி­லாந்­து­ட­னான முத்­தொ­டர்­க­ளையும் இழந்த­தை­யிட்டு நாம் மிகவும் கவ­லை­ய­டை­கிறோம். இது எமக்கு மிகப்­பெ­ரிய தோல்­விதான். இதை ஈடு­கட்ட எதிர்­கா­லத்தில் இன்னும் அதி­க­மாக உழைப்போம் என்று தெரி­வித்தார் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்­டி­களின் அணித் தலைவர் அஞ்­சலோ மெத்­தியூஸ்.

angelo-mathews_34057.jpg

நியூ­ஸி­லாந்து தொடர் குறித்த ஊடக­வி­ய­லாளர் சந்­திப்­பொன்று நேற்று இலங்கைக் கிரிக்கெட் நிறு­வ­னத்தின் கேட்போர் கூடத்தில் நடை­பெற்­றது. இதில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணித் தலைவர் அஞ்­சலோ மெத்­தியூஸ் மற்றும் இரு­ப­துக்கு 20 அணியின் தலைவர் சந்­திமால், இலங்கை அணியின் பயிற்­சி­யாளர் ஜெரோம் ஜெய­ரத்ன, அணியின் முகா­மை­யாளர் ஆகியோர் கலந்­து­கொண்­டனர்.

இந்தச் சந்­திப்பில் பெரிதும் பேசப்­பட்ட விடயம், வீரர்­களின் நடத்தை குறித்­துத்தான். இதற்கு பதி­ல­ளித்த இலங்கை அணியின் முகா­மை­யாளர், இதை நான் மறுக்­கவும் மாட்டேன் ஏற்­றுக்­கொள்­ளவும் மாட்டேன். விளை­யாட்­டுத்­துறை அமைச்­ச­ருக்கு இது­கு­றித்து ஒரு அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. அதில் அனைத்தும் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்கும் என்றார்.

அதே­கேள்­விக்கு பதி­ல­ளித்த அஞ்­சலோ மெத்­தியூஸ், இது ஒன்றும் புதி­தல்ல.

தொடர் ஒன்றில் அணி தோல்­வி­ய­டை­யும்­பட்­சத்தில் இது­போன்ற விமர்­ச­னங்­களும் குற்­றச்­சாட்­டுக்­களும் வரும். ஆனாலும் எமது ஓரிரு வீரர்கள் அணியின் சட்­டதிட்­டங்­களை மீறி நடந்­து­கொண்­டார்­கள்தான். அவர்­க­ளுக்கு எதி­ராக உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளது.

அதே­நேரம் தொடர் தோல்­வி­கு­றித்து அவ­ரிடம் கேட்­ட­தற்கு, நாம் அனைத்து வித­மான முயற்­சி­க­ளையும் அதே­வேளை பல வியூ­கங்­க­ளையும் செலுத்­தித்தான் விளை­யா­டினோம். ஆனால் அனைத்தும் பய­னற்று போய்­விட்­டது. மூன்று தொடர்­க­ளிலும் தோல்­வி­ய­டைந்­தை­யிட்டு நாம் மிகவும் கவ­லை­ய­டை­கிறோம்.

சங்கா, மஹேல போன்ற அனு­பவ வீரர்கள் இல்­லா­ததின் இடை வெளி இப்­போ­துதான் விளங்­கு­கி­றது. ஆனால் நான் அதைக் கார­ண­மாக சொல்­ல­மாட்டேன். இளம் வீரர் ­களை நாம் அந்த இடத்­திற்கு தயார்­ப­டுத்­திக்­கொள்­ள­வேண்டும். இந்தத் தொடரில் துஷ்மந்த சமீர, வண்டர்சே போன்ற சிறந்த வீரர்களையும் அடையாளம் கண்டுள்ளோம் என்றார்.

http://www.virakesari.lk/article/2011

 

  • தொடங்கியவர்
சர்வதேச தரத்துக்கு ஒப்பாக உள்ளூர் கிரிக்கெட் இல்லாததே இலங்கை அணியின் வீழ்ச்சிக்கு காரணம் – பயிற்றுநர் ஜெரோம் ஜயரட்ண
2016-01-14 10:13:26

(நெவில் அன்­தனி)

 

14225Jerome-Jayarathne.jpgஇலங்­கையில் உள்ளூர் கிரிக்கெட் போட்­டி­களின் தரம் சர்­வ­தேச தரத்­துக்கு ஒப்­பா­ன­தாக இல்­லா­த­தா­லேயே நியூ­ஸி­லாந்தில் நம் வீரர்­களால் பிர­கா­சிக்க முடி­யாமல் போனது.

 

அதுதான் தோல்­விக்கும் கார­ண­மாக அமைந்­தது என இலங்கை அணி பயிற்­றுநர் ஜெரோம் ஜய­ரட்ண தெரி­வித்தார்.

 

நியூ­ஸி­லாந்­துக்­கான கிரிக்கெட் விஜ­யத்தை முடித்துக் ­கொண்டு நாடு திரும்­பிய இலங்கை அணியின் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ், இரு­ப­துக்கு 20 அணியின் பதில் தலைவர் தினேஷ் சந்­திமால், அணி பயிற்­றுநர் ஜெரோம் ஜய­ரட்ண, அணி முகா­மை­யாளர் ஜெறி வௌட்டர்ஸ் ஆகியோர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனத் தலை­மை­ய­கத்தில் ஊட­க­வி­ய­லா­ளர்­களை நேற்று சந்­தித்­த­போது எழுப்­பப்­பட்ட கேள்வி ஒன்­றுக்கு பதி­ல­ளிக்­கையில் ஜய­ரட்ண மேற்­கண்­ட­வாறு கூறினார்.

 

இலங்கை அணியின் படு மோச­மான வீழ்ச்­சிக்கு என்ன காரணம் என அணி பயிற்றுர் ஜெரோம் ஜய­ரட்­ணவிடம் வின­வப்­பட்­டது. அதற்கு பதி­ல­ளித்த அவர் ‘‘அவுஸ்­தி­ரே­லியா, நியூ­ஸி­லாந்தில் போன்ற உள்ளூர் கிரிக் கெட் கட்­ட­மைப்பு இலங்­கையில் இல்­லா­ததே பிர­தான கார­ண­மாகும். 

 

அந்த நாடு­களில் நடை­பெறும் உள்ளூர் கிரிக்கெட் கட்­ட­மைப்பில் நிலவும் போட்­டித்­தன்மை, வீரர்கள் வெளிப்­ப­டுத்தும் ஆற்றல் என்­பன சர்­வ­தேச தரத்­திற்கு ஒப்­பா­ன­தாகும். அத­னால்தான் தேசிய அணியில் இடம்­பி­டிக்கும் முத­லா­வது சந்­தர்ப்­பத்­தி­லேயே அவர்கள் தங்­க­ளது திற­மையை வெளிப்­ப­டுத்­து­கின்­றனர்.

 

ஆனால், இங்கு அப்­படி இல்லை. உள்ளூர் கிரிக்கெட் போட்­டி­களின் தரம் சர்­வ­தேச தரத்­திற்கு ஒப்­பா­ன­தல்ல. அத­னால்தான் நமது வீரர்கள் சர்­வ­தேச அரங்கில் காலடி எடுத்து வைத்­ததும் சறுக்கி விடு­கின்­றார்கள். இந்த நிலை மாற வேண்டும்’’ எனக் கூறினார்.

 

நியூ­ஸி­லாந்­துக்­கான கிரிக்கெட் விஜ­யத்­தின்­போது இலங்கை அணி வீரர்கள் பொருத்­த­மற்ற வகையில் நடந்து­ கொண்­ட­தாகக் கூறப்­படும் விடயம் தொடர்­பாக அணி முகா­மை­யாளர் ஜெரி வௌட்­டர்­ஸிடம் கேட்­ட­போது, அது குறித்து அலசி ஆராய்ந்து அறிக்கை ஒன்றை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்­திடம் சமர்ப்­பிக்­க­வுள்­ள­தாக தெரி­வித்தார்.

 

இலங்கை வீரர்கள் விடிய விடிய இரவு விடு­தி­களில் இருந்­த­தாகக் கிடைக்­கப்­பெற்­றுள்ள தகவல் குறித்து அறிக்கை ஒன்றை சமர்ப்­பிக்­கு­மாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்­திடம் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர கேட்­டுக்­கொண்­டுள்­ள­தாக ஜெறி வௌட்டர்ஸ் கூறினார்.

 

‘‘வீரர்கள் பற்றி கிடைக்­கப்­பெற்­றுள்­ள­தாகக் கூறப்­படும் தக­வல்கள் எந்த அள­வுக்கு உண்மை என்­பது எமக்குத் தெரி­யாது. அதே­வேளை, அதனை நிரா­க­ரிக்­கவோ, ஏற்­றுக்­கொள்­ளவோ முடி­யாது.

 

நிலை­மை­களை அலசி ஆராய்ந்து விரைவில் அறிக்கை ஒன்றை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்­திடம் சமர்ப்­பிப்போம்’’ என அவர் மேலும் தெரி­வித் தார்.

 

இலங்கை அணி­யி­னரின் ஆற்றல் வெளிப்­பா­டுகள் குறித்து கேட்­ட­போது, ‘‘எமது வீரர்கள் திற­மை­யாக விளை­யா­ட­வில்லை. ஆரம்­பத்தில் திற­மையை வெளிப்­ப­டுத்­தி­ய­ போ­திலும் அதனைத் தொட­ராமல் விட்­டதே வீழ்ச்­சிக்கு காரணம்.

 

ஒரு டெஸ்ட் போட்­டியை வெற்­றி­தோல்­வி­யின்றி முடித்தோம். ஆனால் அதன் பின்னர் அணி பிர­கா­சிக்­கத்­தவ­றி­யது’’ என்றார்.

 

இலங்கை அணியின் வீழ்ச்சி குறித்து அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்­யூ­ஸிடம் கேட்­ட­போது, ‘‘உலகக் கிண்ணப் போட்­டி­களின் பின்னர் எமது அணியின் ஆற்றல் வெளிப்­பாடு சிறப்­பாக அமை­ய­வில்லை என்ற குற்­றச்­சாட்டு தொடர்­கின்­றது.

 

எனினும் நாங்கள் இளம் வீரர்­க­ளு­ட­னேயே மூவகைத் தொடர்­க­ளையும் நியூ­ஸி­லாந்தில் எதிர்­கொண்டோம். தினேஷ் சந்­திமால், துஷ்­மன்த சமீர, குசல் மெண்டிஸ், மிலிந்த சிறி­வர்­தன போன்­ற­வர்கள் தங்­க­ளது முழுத் திற­மை ­யையும் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். அவர்­க­ளுக்கு சிறந்த எதிர்­காலம் இருக்­கின்­றது’’ என பதி­ல­ளித்தார்.

 

பொருத்­த­மற்ற வகையில் வீரர்கள் நடந்­து­கொண்டால் அவர்களுக்கு உடனடி தண்டனை வழங்கப்படுமா என அவரிடம் கேட்டபோது, ‘‘வீரர்கள் தவறாக நடந்து கொண் டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

 

ஆனால் இந்த சுற்றுப் பயணத்தில் எதுவும் பெரிதாக இடம்பெற வில்லை. குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது சகஜம். இவ் விடயத்தில் அணி முகாமையாளர் அறிக்கை சமர்ப் பிப்பார்’’ என்றார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=14225#sthash.NDqkfSiS.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி தொடர்ந்து பல போட்டிகளில் வென்று ...நீங்கள் பாடம்  படிக்க வேண்டும் ....அதனை நாங்கள் பார்த்து ரசிக்க வேண்டும் tw_blush:tw_blush:

 

18 minutes ago, நவீனன் said:

அந்த நாடு­களில் நடை­பெறும் உள்ளூர் கிரிக்கெட் கட்­ட­மைப்பில் நிலவும் போட்­டித்­தன்மை, வீரர்கள் வெளிப்­ப­டுத்தும் ஆற்றல் என்­பன சர்­வ­தேச தரத்­திற்கு ஒப்­பா­ன­தாகும். அத­னால்தான் தேசிய அணியில் இடம்­பி­டிக்கும் முத­லா­வது சந்­தர்ப்­பத்­தி­லேயே அவர்கள் தங்­க­ளது திற­மையை வெளிப்­ப­டுத்­து­கின்­றனர்.

போட்டித்தன்மையா ...இருந்ததால் தானே ....மொத்த சனத்தொகையில்  30% (தமிழர் , முஸ்லிம்கள் )கிரிக்கட்டே விளையாட முடியாது ..... மிகுதி போட்டித்தன்மை உங்கள் 70 % இற்குள் தான் ...... உங்கடை இனம் எங்க இருந்தாலும் அங்கே ஊழல் இருக்கும் பிறகென்ன ஜமாய்க்க வேண்டியது தானே... உங்களுக்கு நீங்கள் கிரிக்கட்டில் ஜெயிப்பதை விட தமிழனும் முஸ்லிமும் கிரிக்கட் விளையாடக்கூடாது என்பது தானே வேண்டும் .... பானையில் இருப்பது தானே அகப்பையில் வரும்  

 

குறித்து வைத்துகொள்ளுங்கள் தமிழன் அணியில்  இல்லாமல் உங்களுக்கு இனியொரு  உலககிண்ணம் இல்லை 
நீங்கள் உலகக்கிண்ணம் வென்றதும் ஒரு தமிழனால் தான் 

Edited by அக்னியஷ்த்ரா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.