Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தாரை தப்பட்டை - திரை விமர்சனம்

Featured Replies

தாரை தப்பட்டை - திரை விமர்சனம்

 

சாமிப் புலவன் (ஜி.எம்.குமார்) பிரபலமான இசைக் கலைஞர். இவருடைய மகன் சன்னாசி (சசிகுமார்), தாரை தப்பட்டை மற்றும் கரகாட்டக் குழுவை நடத்தி வருகிறார். அதில் பிரதான நடனக்காரி சூறாவளி (வரலட்சுமி). சூறாவளிக்கு சன்னாசி மீது தீராக் காதல். சன்னாசிக் கும் சூறாவளி என்றால் கொள்ளைப் பிரியம் ஆனால் வெளிக்காட்டுவ தில்லை. செல்லும் இடங்களில் எல்லாம் சூறாவளிக்குச் சிறப்பான வரவேற்புக் கிடைக்கிறது. அவளுடைய ஆட்டத்தைத் தொடர்ச்சியாகக் காணும் அரசாங்க ஊழியர் கருப்பையா (ஆர்.கே.சுரேஷ்) சூறாவளியை மணமுடிக்க விரும்புகிறார்.

“ஆயுளுக்கும் ஆட்டக்காரியாக அவள் அவதிப்பட வேண்டாம் நிம்மதியாக வாழட்டும்” என நினைக்கும் சன்னாசி, தனது காதலைத் தியாகம் செய்கிறான். திருமணத்துக்கு மறுக்கும் சூறாவளியைச் சம்மதிக்கவைக்கிறான். அவனுடைய விருப்பத்துக்காகச் சூறா வளி கருப்பையாவை மணமுடிக்க ஒப்புக்கொள்கிறாள். திருமணமான பின்பு சூறாவளி சந்தோஷமாக இருக் கிறாளா? சன்னாசியின் குழுவுக்கு என்ன நடந்தது போன்றவற்றைத் தனது பாணியில் தாரை தப்பட்டை யாக்கியிருக்கிறார் பாலா.

ஜி.எம்.குமாருக்கு அழுத்தமான வேடம். கர்வமிக்க இசைக் கலைஞராகப் படம் முழுக்க வலம் வருகிறார். மகன் மீது பிரியத்தைக் கொண்டிருந்தாலும் அதை வெளிப்படுத்துவதில்லை அவர். அதைப் போலவே சன்னாசியும். அவருக்கும் தன் தந்தை என்றால் உயிர். மேலும் தனக்குத் தொழில் கற்றுத் தந்த குரு என்பதால் கூடுதல் மரியாதை.

அன்றாட வாழ்வு நடத்த வேண்டி பிணத்தின் முன்னர் பாட்டுப் பாடி ஆட்டம் ஆட நேர்ந்தது பற்றிய வேதனையுடன் வந்தபோது சாமிப்புலவன் நையாண்டி செய்வதால் வெகுண்டு எழுந்து தந்தை யைத் திட்டி, முகத்தில் காறி உமிழ்ந்து விடுகிறார். அந்த அவமானம் சாமிப் புலவனைப் புரட்டி எடுத்துவிடுகிறது. அதைப் போக்கும் வகையில் ஆஸ்திரேலிய ஆளுநர் முன்னிலையில் அவர் பாடும் ‘என்னுள்ளம் கோவில் அங்கே உண்டு தெய்வம்’ பாடல் சுகமான ராகம். மொழிபுரியாத ஆளுநருக்குப் பாடலைப் புரியவைத்ததில் நிறைவு கொண்டு, அவரது பரிசை அவருக்கே தந்து செல்லும்போது கலை மிடுக்கை வெளிப்படுத்துகிறார்.

சூறாவளியாக வரலட்சுமி சரத்குமார். ‘மாமா மாமா’ என்று சன்னாசியையே சுற்றி சுற்றி வருகிறார். மாமனாருடன் அமர்ந்து ஒன்றாக மது அருந்துகிறார். தனது உடம்பைக் கேட்கும் பெரிய மனிதர்களைப் போட்டுப் புரட்டி எடுக் கிறார். தனக்கு அளிக்கப்பட்ட வேடத்தைப் பாலா எதிர்பார்த்த வகையில் நிறைவேற்றியிருக்கிறார். கருப்பையாவாக நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ், நடிகர் விக்ரமின் உடல்மொழியை நினைவு படுத்துகிறார். அப்பாவியாகவும் குரூரமாகவும் வெளிப்படும் இரு வேறு பட்ட முகங்களிலும் நன்றாக வித்தியாசம் காட்டியிருக்கிறார்.

இளையராஜாவின் ஆயிரமாவது படம்! ‘மெலடி’ பாடல்களும் பின்னணி இசையும் நயம்.

ஒளிப்பதிவு இயக்குநர் செழியன் காட்சிகளைத் துல்லியமாகவும் ரசனை யோடும் படம்பிடித்திருக்கிறார். நாட்டுப் புறக் கலைகள் கவனிக்கப்படாமல் போகும் சோகத்தைச் சொல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கும் கதை, திடீரெனத் தடம் மாறிச்செல்கிறது. வழக்கமான பழிவாங்கும் கதையாக மாறிவிடுகிறது. கதையின் பலவீனம் திரைக்கதையைச் சுவாரசியமற்றதாக்குகிறது. தன்மேல் உயிராக இருக்கும் சூறாவளியைக் காதலித்தும் அவளைக் கைப்பிடிக்கா மல் மற்றொருவருக்கு மணமுடித்து வைப்பதற்கான காரணம் அழுத்தமான தாக இல்லை. அந்தமானில் அம்போ வாக நிற்கும் குழுவினர் எப்படித் தாயகம் வந்தார்கள்? சட்டென திரைக்கதை தாவிவிடுகிறது.

நாயகி மது அருந்துவது, அதிர்ச்சிகரமான வார்த்தைகளைப் பிரயோகிப் பது - இதெல்லாம்தான் டிரெண்டா?! மகாத்மா காந்தி சிலையின் முன்பு காசுக்காகக் குறைவான ஆடைகளுடன் ஆடுவது போன்ற அவலச் சுவைக் காட்சியின் காலம் எப்போதோ முடிந்துவிட்டது.

முதலிரவில் தன்னுடன் இருக்கும் நபர் தன் கணவன் அல்ல என்பது தெரி யாமலா ஒரு பெண் இருப்பாள்? நாயகி யைக் கலகக்காரியாக காட்டுவதில் இயக்குநருக்கு இருக்கும் முனைப்பு, அவளை நுண்ணுணர்வு கொண்ட வளாகக் காட்டுவதில் இல்லை.

கதைக்கோ திரைக்கதைக்கோ தேவையற்ற, அளவுக்கு அதிகமான குரூரம், வன்முறை, குரோதம் போன்ற வற்றை வெளிப்படுத்தித்தான் மனித நேயத்தை உணரவைக்க வேண்டுமா?

இந்தத் தப்பட்டைக்கு இல்லை தனி முத்திரை..!

http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article8111204.ece

  • கருத்துக்கள உறவுகள்

தாரை தப்பட்டையில் எங்கட கவிஞ்ர் நடித்திருக்கிறாரோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.