Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தமிழர்களுக்கு விரைவில் விடியல் ஏற்படும்: தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி நம்பிக்கை

Featured Replies

வெள்ளிக்கிழமை, 22 டிசெம்பர் 2006, 05:02 ஈழம் (புதினம் நிருபர்)

இலங்கைத் தமிழர்களுக்கு விரைவில் விடியல் ஏற்படும் என்று தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்துள்ள பாடசாலை மாணவர்கள், தமிழகத்தில் பாடசாலை பரீட்சை எழுதுவதற்கு அனுமதி வழங்கிய முதல்மைச்சர் கலைஞர் கருணாநிதியை 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று வியாழக்கிழமை மாலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

அப்போது அவர்கள் மத்தியில் கருணாநிதி பேசியதாவது:

கடந்த பல ஆண்டுகளாக இலங்கையிலே நடைபெறுகின்ற அமைதிக்கு பங்கம் விளைவிக்கின்ற காரியங்கள் எந்த அளவுக்கு தமிழ்நாட்டிலே உள்ள எங்களையெல்லாம் பாதித்திருக்கிறது என்பதை சொல்லத் தேவையில்லை, உலகமே அறிந்த ஒன்று.

இந்த 10, 15 ஆண்டு காலமாக வந்த உங்களையெல்லாம் வாழ வைப்பதற்கு உங்களுடைய கடமைகளை ஆற்றுவதற்கு உங்கள் எதிர்காலத்தை செதுக்குவதற்கு நாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சி தான் நடைபெற்றிருக்கிறதே அல்லாமல், உங்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி நீங்கள் இங்கே வந்து என்னைப் பார்ப்பதைப் போல நான் அங்கே வந்து உங்களையெல்லாம் பார்க்கின்ற ஒரு காலம் வர வேண்டுமே என்ற கவலை எனக்கு மிகவும் உண்டு. அது என்னவோ இலங்கைக்கு வர நான் பல முறை முயன்றுங்கூட, நடைபெறவில்லை. இயலாமல் போய்விட்டது. ஏன் இயலவில்லை என்றால்இ இலங்கையிலே இருந்த, இருக்கிற - அரசு எனக்கு அனுமதி தரவில்லை.

சில நேரங்களில் அங்கே ஏற்பட்ட குழப்பங்களின் காரணமாக நான் வருவது நல்லதல்ல என்று அங்கிருந்த அரசும் எனக்கு செய்தி அனுப்பியது. இங்குள்ள அரசும் என்னைத் தடுத்து நிறுத்தியது. நான் ஒரு முறை இந்திய பிரதமர் இந்திரா காந்தியிடம் இதைச் சொன்ன போது, நான் ஏற்பாடு செய்யட்டுமா, நீ போய் வருகிறாயா என்று கூடக் கேட்டார்கள். அப்போது இலங்கையிலே இதைவிட அதிகமாகக் கொந்தளிப்பான சூழ்நிலை. எனவே அந்தப் பயணமும் தடைபட்டது.

இலங்கையிலே பல பெரியவர்கள் இலங்கையை அமைதி சூழ் நாடாக ஆக்க வேண்டுமென்று பாடுபட்டிருக்கிறார்கள். தந்தை செல்வாவும், ஜி.ஜி.பொன்னம்பலம், அமிர்தலிங்கம் போன்றவர்களும் எத்தகைய முயற்சிகளிலே ஈடுபட்டார்கள் என்பதெல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும். இலங்கையிலே ஒரு சமஷ்டி அரசு அமைய வேண்டும் என்பதற்காக முதல் குரல் கொடுத்தவர், சந்திரகாசன் தந்தை செல்வா தான் என்பதையும், அவர் சென்னைக்கு வந்து என்னைச் சந்தித்த நிகழ்ச்சியையும் எண்ணிப்பார்க்கின்றேன்.

இலங்கையையே மையமாக வைத்து புதையல்,பாயும் புலி பண்டார வன்னியன் போன்ற கதைகளைக் கூட எழுதியிருக்கின்றேன். உங்களில் ஒரு சிலர் படித்திருக்கக் கூடும். இப்படி இலங்கையோடு இலக்கிய ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் எனக்குள்ள தொடர்பு என்றென்றும் பட்டுப் போகாத ஒன்று, பசுமையான ஒன்று.

இயல்பாகவே எங்களுடைய இரத்த ஓட்டத்திலே உள்ள உணர்வு தான் வெளிப்பட்டிருக்கின்றது என்பதை மாத்திரம் எடுத்துச் சொல்லி, என்றென்றும் உங்களுக்காக நான் என்னுடைய கடமையை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன் என்பதையும் தெரிவித்து விரைவில் விடியல் ஏற்படும் என்ற நம்பிக்கையோடு இங்கே தமிழகத்திற்கு வந்திருந்து படித்து ஓரளவு பயிற்சியும் பெற்றிருக்கின்ற உங்களை வழியனுப்பி வைக்கின்றேன். இப்போது தற்காலிகமாகத் தான் வழியனுப்பி வைக்க முடியும். விரைவில் உங்களையெல்லாம் மகிழ்ச்சிகரமாக தமிழகத்திலிருந்தே வழி அனுப்பி வைக்கின்ற அந்த நாள் வரட்டும் என்றார் அவர்.

நன்றி : புதினம்

உண்மையியேலே கலைஞரின் அண்மைக்கால நடவடிக்கைகள் ஈழத்தமிழர்களின் போராட்டத்திற்கு நம்பிக்கையளிப்பானவாக இருக்கிறது. கலைஞரின் முயற்சியின் விளைவாகவே தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியத் தலைநகரிற்குச் செல்கின்றனர்.

  • தொடங்கியவர்

அவருடைய இந்த மனநிலை எமது துயரங்களுக்கு விடிவு கிடைக்கும் வரை தமிழீழ் மலரும் வரை நீடித்திருக்க வேண்டும்.

நன்றி தமிழக முதல்வர் அவர்களே.

ஈழததிலிருந்து

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசு அனுமதி மறுத்ததால் இலங்கைக்கு நான் செல்ல இயலவில்லை - கருணாநிதி

இலங்கை மாணவர்கள்

இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்துள்ள பள்ளி மாணவர்கள், தமிழகத்தில் பள்ளித் தேர்வு எழுதுவதற்கு அனுமதி வழங்கிய முதல் அமைச்சர் கருணாநிதியை சந்திரகாசன் தலைமையில் 100க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

அப்போது அவர்கள் மத்தியில் கருணாநிதி பேசியதாவது:-

கடந்த பல ஆண்டுகளாக இலங்கையிலே நடைபெறுகின்ற அமைதிக்கு பங்கம் விளைவிக்கின்ற காரியங்கள் எந்த அளவுக்கு தமிழ்நாட்டிலே உள்ள எங்களையெல்லாம் பாதித்திருக்கிறது என்பதை சொல்லத் தேவையில்லை, உலகமே அறிந்த ஒன்று.

அனுமதி தரவில்லை

இந்த 10, 15 ஆண்டு காலமாக வந்த உங்களையெல்லாம் வாழ வைப்பதற்கு உங்களுடைய கடமைகளை ஆற்றுவதற்கு உங்கள் எதிர்காலத்தை செதுக்குவதற்கு நாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சி தான் நடைபெற்றிருக்கிறதே அல்லாமல், உங்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி நீங்கள் இங்கே வந்து என்னைப் பார்ப்பதைப் போல நான் அங்கே வந்து உங்களையெல்லாம் பார்க்கின்ற ஒரு காலம் வர வேண்டுமே என்ற கவலை எனக்கு மிகவும் உண்டு. அது என்னவோ இலங்கைக்கு வர நான் பல முறை முயன்றுங்கூட, நடைபெறவில்லை. இயலாமல் போய்விட்டது. ஏன் இயலவில்லை என்றால், இலங்கையிலே இருந்த, இருக்கிற அரசு எனக்கு அனுமதி தரவில்லை.

சில நேரங்களில் அங்கே ஏற்பட்ட குழப்பங்களின் காரணமாக நான் வருவது நல்லதல்ல என்று அங்கிருந்த அரசும் எனக்கு செய்தி அனுப்பியது. இங்குள்ள அரசும் என்னைத் தடுத்து நிறுத்தியது. நான் ஒரு முறை இந்திய பிரதமர் இந்திரா காந்தியிடம் இதைச் சொன்ன போது, நான் ஏற்பாடு செய்யட்டுமா, நீ போய் வருகிறாயா என்று கூடக் கேட்டார்கள். அப்போது இலங்கையிலே இதைவிட அதிகமாகக் கொந்தளிப்பான சூழ்நிலை. எனவே அந்தப் பயணமும் தடைபட்டது.

பட்டுப் போகாத ஒன்று

இலங்கையிலே பல பெரியவர்கள் இலங்கையை அமைதி சூழ் நாடாக ஆக்க வேண்டுமென்று பாடுபட்டிருக்கிறார்கள். நம்முடைய சந்திரகாசன் தந்தை செல்வாவும், ஜி.ஜி.பொன்னம்பலம், அமிர்தலிங்கம் போன்றவர்களும் எத்தகைய முயற்சிகளிலே ஈடுபட்டார்கள் என்பதெல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும். இலங்கையிலே ஒரு சமஷ்டி அரசு அமைய வேண்டும் என்பதற்காக முதல் குரல் கொடுத்தவர், சந்திரகாசன் தந்தை செல்வா தான் என்பதையும், அவர் சென்னைக்கு வந்து என்னைச் சந்தித்த நிகழ்ச்சியையும் எண்ணிப்பார்க்கின்றேன்.

இலங்கையையே மையமாக வைத்து "புதையல், பாயும் புலி பண்டார வன்னியன்'' போன்ற கதைகளைக் கூட எழுதியிருக்கின்றேன். உங்களில் ஒரு சிலர் படித்திருக்கக் கூடும். இப்படி இலங்கையோடு இலக்கிய ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் எனக்குள்ள தொடர்பு என்றென்றும் பட்டுப் போகாத ஒன்று, பசுமையான ஒன்று.

விரைவில் விடியல்

நான் உங்களுக்காக ஆற்றிய பணிகளை எல்லாம் சந்திரகாசன் எடுத்துக் கூறி, அதற்கு நன்றி கூறி மகிழ்ச்சி தெரிவித்துக் கொண்டார். நன்றியை எதிர்பார்த்து நடைபெற்ற காரியம் அல்ல அவைகள். இயல்பாகவே எங்களுடைய ரத்த ஓட்டத்திலே உள்ள உணர்வு தான் வெளிப்பட்டிருக்கின்றது என்பதை மாத்திரம் எடுத்துச் சொல்லி, என்றென்றும் உங்களுக்காக நான் என்னுடைய கடமையை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன் என்பதையும் தெரிவித்து விரைவில் விடியல் ஏற்படும் என்ற நம்பிக்கையோடு இங்கே தமிழகத்திற்கு வந்திருந்து படித்து ஓரளவு பயிற்சியும் பெற்றிருக்கின்ற உங்களை வழியனுப்பி வைக்கின்றேன். இப்போது தற்காலிகமாகத் தான் வழியனுப்பி வைக்க முடியும். விரைவில் உங்களையெல்லாம் மகிழ்ச்சிகரமாக தமிழகத்திலிருந்தே வழி அனுப்பி வைக்கின்ற அந்த நாள் வரட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

-தினத்தந்தி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம் அண்மைக்கால நிகழ்வுகளையும், தமிழகத்திலிருந்து வரும் செய்திகளையும் பார்க்கும்போது உண்மையில் உள்ளம் மகிழ்கின்றது. கலைஞர் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய பணிகள் பல அதேபோல் ஈழத்தமிழராகிய எமக்கும் தனது இறுதிக்காலத்திலாவது கைகொடுத்து உதவவேண்டும் என்பதே எனது அவா. கைகொடுப்பார் என்ற நம்பிக்கையும் இப்போது பிறந்துள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞர் என்றைக்கும் ஈழத்தமிழரின்பால் பற்றும் பாசமும் கொண்டவர்தான். எங்களில் சிலர்தான் அது புரியாமல் வாய்க்கு வந்தபடி பேசினார்கள்.

கனிவுமிக்க கலைஞர் தனித் தமிழீழத்தை ஆதரித்து வெளிப் படையாகப் பேச வேண்டும். சமஷ்டி கூட்டாட்சி போன்ற வார்த்தைகளைத் தூக்கி குப்பைத் தொட்டியில் போடவேண்டும்.

கல்லைஞரின் கொள்கை முற்றிலும் தனது அரசியலை நோக்கமாகக் கொண்டது. கலைஞரின், இந்தியாவின் பார்வை ஈழத்தமிழர்மீது இருக்கும்போது அதனைப் பயன் படுத்துவதே புத்திசாலித்தனம். மறுபடியும் எப்போது ஈழத்தமிழர் பிரச்சனையில் மௌனமாவார் என்று யாருக்குத் தெரியும் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொறுத்திருந்து பார்ப்போம்! கலைஞர் தமிழீழம் பற்றி இதில் ஒன்றுமே சொல்லவில்லை. என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே...

தனித்த் தமிழ் ஈழம் பற்றி கருணாநிதி பேசமாட்டார், பேசிநால் ஆட்சி கட்டிலில் இருக்க முடியாது. தன்னை தமிழினத்தலைவராக காட்டிக்கொள்ள ஈழத்தமிழர்கள் மேல் பாசம் இருப்பதுபோல் காட்டிக்கொள்ளவேண்டும் அவ்வளவுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.